Jump to content

மருதடியில் மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன


Recommended Posts

article_1464088430-toilets.jpg

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் பல இடங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை தருவார்கள். அத்துடன், ஆலய வளாகத்தில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்காக திருவிழாக்காலங்களில் தற்காலிக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நிரந்தர மலசலகூடம் அமைப்பதற்கு தீர்மானித்த ஆலய தர்மகத்தா சபையினர் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இருந்து நிதியைப் பெற்றனர்.

அந்நிதியைக் கொண்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாகவுள்ள குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக்குமான நவீன முறையில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. 


http://www.tamilmirror.lk/172983#sthash.P0uwxBBq.dpuf

Link to comment
Share on other sites

24 minutes ago, Athavan CH said:

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நல்ல விடயம்.

அதைவிட முக்கியமானது மலசலகூட பராமரிப்பு. கட்டி முடித்துவிட்டோம் என்று சும்மா இருந்தால் போகமுடியாமல் நாறும். அப்புறம் இது இருப்பதே ஒரு தலைவலியாக மாறும். துப்பரவாக வைத்திருக்க முடிந்தவரை ஏதாவது செய்வார்கள் என்று நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த.... மலசல கூடங்ககள் எமது இனத்துக்கு மட்டுமல்ல  வெள்ளைக்காரனுக்கும்  சரிவராது.
ஒண்டுக்கு இருக்கப் போறவன் 10 ரூபாயும்,
இரண்டுக்கு இருக்கப் போறவன் இருபது ரூபாயும் கொடுத்து.....
போய் வாறவன்... உள்ளே போய்,  அசிங்கம் செய்யிறானா என்று.... கண்காணிக்க வேண்டும்.

மீறி....அசிங்கம், செய்தால்.... ******
அதுக்குப் பிறகு.... தான், மனுசன்  ஒழுங்காக.....  ஒண்டுக்கு,   இருப்பான். 

இரண்டுக்கு வந்தால்....  முதலில் *** வரும்  அந்த வாசத்கதை  வைத்தே....
நாம்... கண்டு பிடித்துவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக்குமான நவீன முறையில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன.

????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி தீர்த்தம் ஆட வேண்டாமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

புலம் பெயர் மக்கள் இதைத்தான் செய்யணும்

ஒவ்வொரு இடமாக  புணருத்தாரணம் செய்துவர

நல்ல நிலைக்கு கொண்டு வரலாம்

அதெநேரம் சிறி எழுதியது போல்

அங்குள்ளவர்களுக்கு இது சார்ந்து கல்வியையும்

அதை பராமரிக்கும் வழிகளையும் சொல்லித்தருவதுடன் நின்றுவிடாது

தாயக மக்களுக்கும் இத சார்ந்து அக்கறையும் பொறுப்பும் வேண்டும்

சில வருடங்களுக்கு முன் இதே போல் எமது ஊர் பாடசாலை ஒன்றுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுத்தோம்

பின்னர் அது எப்படி இயங்குகிறது என எம்மவர் பார்வையிட சென்றபோது

ஆசிரியர்கள் தூர நின்றபடி போய்ப்பாருங்கள் என அனுப்பி வைத்தனர்

உள்ளே எல்லாம் நிரப்பி காய்ந்து

அதன் பின்னர் கனகாலமாக வெளியில் தான் எல்லாம் நடந்திருந்தது.

எவரும் உள்ளே போக விரும்பாதபோதும் இங்கிருந்து போன எம்மவர் உள்ளே சென்று பார்வையிட்டு வந்திருந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகண்டி பிள்ளையார் கோவிலடி மலசல கூடத்தை எப்படி பாராமரிக்கின்றார்கள் என்று அடிக்கடி தாயகம் சென்று வருபவர்கள் எழுதலாம்.....அது வேற கட்டண கழிப்பிடம்.....tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.பாவிக்கும் வழி முறைகளையும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.எதுக்கெடுத்தாலும் நக்கலும் நளினமும் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.பாவிக்கும் வழி முறைகளையும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.எதுக்கெடுத்தாலும் நக்கலும் நளினமும் கூடாது.

இதைதான் நானும் சொல்ல நினைத்து இருந்தது நன்றி பாஸ் 

உன்மையில் சிலருக்கு மல சல கூடத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்பது தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்துக்கு உள்ளே ஓடுகிறவன் தான் போட்டதைத் தானே பார்க்காமல் அதைவிட வேகமாய் வெளியே ஓடிடுவான். உதெல்லாம் சரிவராது...!

ஒரு பணியாளரை நியமித்து காலை மாலை இருதடவை அதைச் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சரியாய் இருக்கும்....! அதில் ஒரு உண்டியல்கூட வைக்கலாம். அதையும் அவரிடமே விட்டு விட்டால் அவரும் ஒழுங்காக வந்து போவார். சாதா நாட்களைவிட திருவிழா நாட்களில் கணிசமான பணம் வரும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

ஒரு பணியாளரை நியமித்து காலை மாலை இருதடவை அதைச் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சரியாய் இருக்கும்....! அதில் ஒரு உண்டியல்கூட வைக்கலாம். அதையும் அவரிடமே விட்டு விட்டால் அவரும் ஒழுங்காக வந்து போவார். சாதா நாட்களைவிட திருவிழா நாட்களில் கணிசமான பணம் வரும்....! tw_blush:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

நான் யாழ்ப்பாணத்தை விட்டுக் கிளம்பி 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது விசுகு. அதனால்தான் ஊர் நிலவரம் புரியவில்லை...!

அப்படியெனில் தானியங்கி சுத்திகரிப்பு யந்திரங்கள் பூட்ட வேண்டும்....!! :unsure:

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

கூலி வேலைக்கு சிங்கள ஆட்கள் வருகிறார்கள்.  வெளிநாடுகளில் இருந்து பணம் இலவசமாக வருவதால் பெருமளவு தமிழர்கள் வேலைக்கு போக வேண்டிய தேவை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

கூலித் தொழிலிற்கே  ஆட்கள் வருவதில்லை என்று நீங்கள் சாதாரணமாக

எழுதியிருக்கின்றீங்கள் விசுகு அண்ணா.
இப்படியான வேலை செய்பவர்களைச்   சாதி என்ற போர்வையில்

ஒதுக்கி வைத்திருந்த மேலாண்மைவாதிகளுக்கு இது பலத்த அடியாகத் தான் இருக்கும்.
வெளி நாடுகளில் மல சல கூடம் துப்பரவு செய்யும் இந்த மேலாண்மைவாதிகள்

ஊர் சென்றதும் காட்டும் பந்தாவை விட ஊரிலிருக்கும் ஒதுக்கப்பட்டவர்கள்
இப்படியான வேலைகளைப் புறக்கணிப்பதை வரவேற்க வேண்டும்.
அப்போது தான் காலப்போக்கிலாவது இன்றும் ஊரில் ஓங்கியிருக்கும்

சாதி என்ற ஒடுக்குமுறை அழிந்து போகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

கூலி வேலைக்கு சிங்கள ஆட்கள் வருகிறார்கள்.  வெளிநாடுகளில் இருந்து பணம் இலவசமாக வருவதால் பெருமளவு தமிழர்கள் வேலைக்கு போக வேண்டிய தேவை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

வேலையே  இல்லாமல் பிசியாக இருக்கிறார்கள் அது தான் புரியமாட்டேன் என்கிறது

அண்மையில் எனது நண்பர்கள் இருவர் ஊருக்கு போயிருந்தனர்

யாழிலிருந்து புங்குடுதீவுக்கு போக (60 ரூபாய்) யாழ் BUS தரிப்பிடத்தில் காத்திருந்தனர்

ஒரு ஆட்டோ வந்து பக்கத்தில் நிற்க அதிலிருந்து ஒருத்தர் இவர்களை அழைக்கிறார்

வாங்கோ நான் ஊருக்குத்தான் போறன் என்று.

இவர்கள் இல்லை நாங்கள் BUS இல் வருகின்றோம் எனச்சொல்ல

நான் ஆட்டோவில் போகின்றேன் என போய் விட்டாராம்.

ஆட்டோவில் ஊருக்குப்போக 1500ரூபாக்கள்.

இத்தனைக்கும் அவர் வாழ்நாளில் வேலைக்கே போனதில்லை என்பதுடன்

இதில் BUS க்கு நின்ற ஒருவர் பிரான்சிலிருந்து போனவுடன் அவருக்கு 25 ஆயிரம்  ரூபாக்களை அன்பளிப்பாக கொடுத்திருந்தாராம்...

இது தான் நிலை.....

 

 

3 hours ago, வாத்தியார் said:

கூலித் தொழிலிற்கே  ஆட்கள் வருவதில்லை என்று நீங்கள் சாதாரணமாக

எழுதியிருக்கின்றீங்கள் விசுகு அண்ணா.
இப்படியான வேலை செய்பவர்களைச்   சாதி என்ற போர்வையில்

அது தான் குறிப்பிட்டேன் 

கூலித்தொழிலுக்கே வரமாட்டார்கள்

இதுக்கு எப்படி வருவார்கள் என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

வேலையே  இல்லாமல் பிசியாக இருக்கிறார்கள் அது தான் புரியமாட்டேன் என்கிறது

அண்மையில் எனது நண்பர்கள் இருவர் ஊருக்கு போயிருந்தனர்

யாழிலிருந்து புங்குடுதீவுக்கு போக (60 ரூபாய்) யாழ் BUS தரிப்பிடத்தில் காத்திருந்தனர்

ஒரு ஆட்டோ வந்து பக்கத்தில் நிற்க அதிலிருந்து ஒருத்தர் இவர்களை அழைக்கிறார்

வாங்கோ நான் ஊருக்குத்தான் போறன் என்று.

இவர்கள் இல்லை நாங்கள் BUS இல் வருகின்றோம் எனச்சொல்ல

நான் ஆட்டோவில் போகின்றேன் என போய் விட்டாராம்.

ஆட்டோவில் ஊருக்குப்போக 1500ரூபாக்கள்.

இத்தனைக்கும் அவர் வாழ்நாளில் வேலைக்கே போனதில்லை என்பதுடன்

இதில் BUS க்கு நின்ற ஒருவர் பிரான்சிலிருந்து போனவுடன் அவருக்கு 25 ஆயிரம்  ரூபாக்களை அன்பளிப்பாக கொடுத்திருந்தாராம்...

இது தான் நிலை.....

 

 

அது தான் குறிப்பிட்டேன் 

கூலித்தொழிலுக்கே வரமாட்டார்கள்

இதுக்கு எப்படி வருவார்கள் என்று....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூலித் தொழிலுக்கு ஆட்கள் வர மாட்டார்கள் என்ற நிலை என்றுமே இல்லை.

கூலித் தொழிலார்கள் கேட்கும் பணத்தினை தரக் கூடிய நிலையில் சாதாரண மக்கள் இல்லை என்பதே உண்மை.

இங்கிருந்து போய் வீடுகள் திருத்தும் வெளிநாட்டுக் காரர்கள், பல் தேசிய நிறுவனங்கள், கொழும்பில் இருந்து வரும் நிறுவனங்கள் பல, உயர் கூலியில், இருக்கும் வேலை செய்பவர்களை வளைத்துக் கொள்வதால், குறைந்த கூலியினைக் கொடுக்கக் கூடிய சாதாரண மக்களுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 

ஆகவே இது போன்ற கடை நிலை வேலைகள செய்ய ஆட்கள் இல்லை என்பதிலும் பார்க்க, அவர்கள் கேட்கும் கூலி கொடுக்கும் நிலையில் அங்குள்ள சாதாரண மக்கள் இல்லை. என்பதே உண்மை.

simply demand and supply... 

ஓய்வூதியம் பெறுவோர், ஆட்டோ, டாக்ஸி ஓடுவதும் அங்கு உண்டு. வயதானோர், இளம் பெண்களை மணமுடிக்கும், ஆண்கள் குறைந்த நிலைமையும் உண்டு. இதுவும் ஒரு demand and supply செயல் பாடு தான்.

இது புரியாம, நீட்டி முழக்குவதை தவிர்ப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அமைக்கப்படும் மலசல கூடங்களை சுத்தமாக பாராமரிப்பது பாவிக்கும் பொதுமக்களிலும், அவற்றை நிர்வகிப்பவர்களிலும் தங்கியுள்ளது.

இந்த இருதரப்பினரும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

On 26/5/2016 at 5:58 PM, putthan said:

முருகண்டி பிள்ளையார் கோவிலடி மலசல கூடத்தை எப்படி பாராமரிக்கின்றார்கள் என்று அடிக்கடி தாயகம் சென்று வருபவர்கள் எழுதலாம்.....அது வேற கட்டண கழிப்பிடம்

முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இரண்டு பக்கமும் இருக்கும் மலசல கூடங்களில்  ரூ 10/- கட்டணம் வசூலிப்பவர் அவ்வப்போது ப்ளீச்சிங் பவுடரை விசிறிவிடுவார். அவ்வளவு தான்.

அவற்றின் வடிவமைப்பு முறையானது அல்ல. அதனால் பராமரிப்பதுவும் இலகுவானதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, போல் said:

அமைக்கப்படும் மலசல கூடங்களை சுத்தமாக பாராமரிப்பது பாவிக்கும் பொதுமக்களிலும், அவற்றை நிர்வகிப்பவர்களிலும் தங்கியுள்ளது.

இந்த இருதரப்பினரும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இரண்டு பக்கமும் இருக்கும் மலசல கூடங்களில்  ரூ 10/- கட்டணம் வசூலிப்பவர் அவ்வப்போது ப்ளீச்சிங் பவுடரை விசிறிவிடுவார். அவ்வளவு தான்.

அவற்றின் வடிவமைப்பு முறையானது அல்ல. அதனால் பராமரிப்பதுவும் இலகுவானதல்ல.

மின்குமிழ் (பல்ப்) சுட்டுப்போயிருந்தது ,புதுசு வாங்கி போடுங்கோ என்று சொல்ல சிரிச்சுப்போட்டு கையை நீட்டினார்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.