Jump to content

திரை விமர்சனம்: மருது


Recommended Posts

திரை விமர்சனம்: மருது

 

 
 
maruthu_2867753f.jpg
 

சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார்.

உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கதையிலாவது புதுமை யைப் புகுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. நாயகன் திரையில் எப்போது தோன்றுவார், நாயகி எப்போது பிரசன்னமாவார் என்பதெல்லாம் எதிர்பார்த்தபடியே நடக்கின்றன. வாயில் கத்தியைக் கடித்தபடி விஷால் ஓடி வரும் காட்சியைப் பார்க்கும்போதே படத்தை நினைத்து கதி கலங்கு கிறது. திருப்பங்களும், காட்சிகளும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த படியே அடுத்தடுத்து வந்துகொண் டிருக்கின்றன. எல்லோரும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக் கிறார்கள். கதாநாயகியைக் காதலிக்க வைக்க நாயகன் எடுக்கும் முயற்சிகள் பார்வையாளர்களை சோகத்தின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன.

கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத் திரங்களையும் பஞ்ச் வசனம் பேசவைக்க மெனக்கெட்டிருக்கும் இயக்குநர், இதில் பாதி கவனத்தை திரைக்கதையில் செலுத்தியிருந்தால், பழைய கதைக் களத்துக்குள் புதுப்பயணம் போய் வந்த அனுபவத்தை சாத்தியப் படுத்தியிருக்கலாம். கற்பனை வளமற்ற காதல் நாடகம் முடிந்து கதைக்குள் வருவதற்குள் இரண்டு மூன்று படங்கள் பார்த்த களைப்பு ஏற்பட்டுவிடுகிறது.

அவ்வளவு வலுவான, கொடூரமான வில்லனை எதிர்த்து ஒரு சாதாரண வக்கீலும் அவரது மகளும் எந்த தைரியத்தில் போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. விஷால் போன்ற யாராவது காப்பாற்ற வருவார்கள் என்ற தைரியமாகத்தான் இருக்கும்!

கதாபாத்திரங்களை வார்த்த விதத்திலும் பெண் கதாபாத்திரங் களுக்குத் தந்த முக்கியத்துவத் திலும் வழக்கமான கதைக்குப் புதிய வண்ணம் காட்ட முயற்சித் திருக்கிறார் இயக்குநர். அவற்றில் முக்கியமானது விஷாலின் பாட்டி யாக நடித்திருக்கும் கொளப்புள்ளி லீலா பாத்திரம். கதாநாயகனின் பாட்டி என்றால், நடைமுறை தெரியாத வெள்ளந்தியான மூதாட்டி என்னும் வழக்கத்தை மாற்றி, பல்வேறு அடுக்குகள் கொண்டதாக இந்தப் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர். நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்துடன் ரசிகர்களை ஈர்க்கும் பாத்திரம் இது. கண்முன் நிகழும் அவலங்களைக் களைய விரும்பும் துணிச்சலான பெண்ணாக வரும் சிலம்பம் மாரியம்மா கதாபாத்திரமும் வலுவானது.

மண் சார்ந்த பண்பாட்டு அம்சங் களிலும் ஒரு சில பாத்திரங்களிலும் வசனங்களிலும் சண்டைக் காட்சி களைப் படமாக்குவதிலும் (சண்டை அமைப்பு: அனல் அரசு) விசேஷ கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர். சில உண்மைச் சம்பவங் களை நினைவூட்டும் விதமாகத் திரைக்கதையை அமைத்திருக் கிறார். திரைக்கதையின் போக்கை வழக்கமான பாதையிலிருந்து திசை திருப்பியிருந்தால் அவரது உழைப்புக்கு மேலும் பலன் கிடைத்திருக்கும்.

சுமை தூக்கும் தொழிலாளி மருதுவாக மாற விஷாலின் உயர மும் உடற்கட்டும் எளிமையான தோற்றமும் உதவியிருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் காட்டும் வேகமும் உழைப்பும் பாராட்டுக் குரியவை. பாத்திர வார்ப்பில் புதுமை இல்லாததால் அவரது நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

மலையாளப் படவுலகில் சிறந்த நகைச்சுவை நடிகையாக விளங்கும் கொளப்புள்ளி லீலா தமிழுக்கு மிகச் சிறந்த வரவு. நாடக அரங்கில் இருந்து வந்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமியும் முத்திரை பதிக்கிறார். திவ்யாவுக்கு நடிப் பதற்கான வாய்ப்பு அமைந்திருக் கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ், ராதாரவி ஆகி யோர் கிடைத்த வாய்ப்பில் கச்சித மாக மின்னுகிறார்கள். அவ்வப் போது சிரிக்கவைக்கும் சூரி தன் னால் உணர்வுபூர்வமான காட்சி களிலும் நடிக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

ராஜபாளையம், அதைச் சுற்றி யுள்ள பகுதிகள் எனக் கிடைக்கும் பசுமை, காரை வீடுகள் அமைந்த ஊர்களின் குறுகலான தெருக்கள் என மதுரை, தேனி வட்டாரச் சூழ்நிலையை தனது ஒளிப்பதிவு மூலம் தத்ரூபமாகக் காட்சிப்படுத்துகிறார் வேல்ராஜ். வீரசமரின் கலை இயக்கமும் கதைக் களத்துக்கு நம்பகத்தன்மையைத் தருவதில் ஒத்துழைக்கிறது. பின் னணி இசையில் உழைத்திருக்கும் இமான், மெட்டுக்கள் புதிதாக இருக்க மெனக்கெடவில்லை.

மின்னும் வீச்சரிவாள்கள், தெறிக் கும் ரத்தம், குடும்ப சென்டிமென்ட், துரத்தித் துரத்திக் காதலிக்கும் நாயகன் ஆகிய வழக்கமான மசாலா சமாச்சாரங்களுடன் தயா ரான வழக்கமான விருந்துதான் முத்தையா விஷால் கூட்டணியின் ‘மருது’. திரைக்கதைப் பயணத் திலும் காட்சிகளிலும் புதுமை கூட்டியிருந்தால் இந்த மசாலா ருசித்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article8644339.ece

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.