Jump to content

நச்சு கலப்பு? தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த முடிவு


Recommended Posts

நச்சு கலப்பு?
தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும்
மாவட்டம் தோறும் மாதிரி ஆய்வு நடத்த முடிவு

டில்லியில் நடத்திய ஆய்வில், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

 

Tamil_News_large_1528816_318_219.jpg

எனவே, 'தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத்துறை இது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன.

டில்லியில் விற்பனையாகும், 'பிராண்டட்' வகை, 'பிரெட்'களை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஆய்வு செய்ததில், புற்றுநோயை உருவாக்க அதிகம் வாய்ப்புள்ள, 'பொட்டாசியம் புரோமேட்' என்ற, ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு வேதிப்பொருளான பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வு டில்லியில் மட்டுமே நடந்துள்ளது. தமிழகத்திலும், டில்லியில் விற்பனையாகும் பல பிராண்ட்களின், பிரெட், பன் வகைகள் விற்கப்படுகின்றன. இதுதவிர, மூலை  முடுக்குகளில் எல்லாம் பேக்கரிகள் உருவாகி விட்டன. இங்கு விற்கப்படுபவைகளில், அதுபோன்ற நச்சு உள்ளதா என, ஆய்வு செய்ய, தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், வழக்கமான ஆய்வுகள் நடக்கின்றன.பிரத்யேக ஆய்வுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. பிரெட், பன் குறித்த சர்ச்சை வந்துள்ளதால், அரசின் ஒப்புதல் பெற்று, மாவட்டம் தோறும், பிரெட், பன் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம்' என்றனர்.

இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறுகையில், ''பிரெட் மட்டுமல்ல, அனைத்து உணவுப்பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகங்களில், போதிய வசதி இல்லை; ஆட்கள் இல்லை; மேம்படுத்தப் படவில்லை. அப்புறம் எப்படி பரிசோதனை செய்ய முடியும்? அரசு ஆய்வகங்களை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

'நுாடுல்ஸ் போல் ஆகாதே?':''நுகர்வோருக்கு தரமான பொருள் கிடைக்கவே, உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இது, கேரளாவில் சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அரசியல் கட்சிகள்,வியாபாரிகள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை. இதை செயல்படுத்தினால், கலப்பட, நச்சு உணவுகளை தடுக்க முடியும். இதற்கு முன், 'நுாடுல்சில்' நச்சு உள்ளதாக பிரச்னை பெரிதாகி அடங்கியது போல், பிரட் விவகாரமும் போய்விடக் கூடாது.

- டி.சடகோபன் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம்
'
ஆராய்ச்சியில் முன்னேற்றம்' பிரெட், பன் வகைகளில் உணவு சேர்மான பொருட்கள் போல், வேதி சேர்மான பொருட்களுக்கும் அனுமதி உண்டு. மிருதுவாக்குதல், பெரிதாக்குதல் என்ற தேவைக்காக, பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் சேர்க்கப்படுகின்றன. இவை, 50 பி.பி.எம்., வரை, அதாவது, 10 லட்சம் உணவு துகள்களில், 50 துகள்கள் இருக்கலாம்.
டில்லி ஆய்வில், 22.54 துகள்கள் என்பது, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் தான் உள்ளது. ஆராய்ச்சிகள் மேம்பட்டு வரும் நிலையில், இந்த அளவு கூட, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால், உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என, வலியுறுத்தப் படுகிறது; வேறு எந்த சிக்கலும் இல்லை.

- தலைமை ஆராய்ச்சியாளர் தேசிய வேளாண் நிறுவனம்

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1528816

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.