Jump to content

வாசகர் திருவிழா 2016: கவனிக்க வேண்டிய புத்தகங்கள்


Recommended Posts

book_2866325f.jpg

 

பெண் விடுதலை இன்று

ஆசிரியர்: க.வி.இலக்கியா

விலை: ரூ.60

விடியல் பதிப்பகம்

பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளியப் பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில், இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட அடிமை நிலையே பெண் விடுதலை என்று நம்பப்படுகிறது என்று பேசும் நூல் இது.

*****

எங்கள் ஐயா - பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்

பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகிந்திரன்,

ப.குமரேசன், விலையடக்கப் பதிப்பு ரூ. 250 காலச்சுவடு பதிப்பகம்

எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பயின்ற மாணவர்கள் அவரைப் பற்றி எழுதிய அனுபவங்கள், மதிப்பீடுகளின் தொகுப்பு. ஆசிரியர் மாணவர் இடையிலான ஆரோக்கியமான உறவு அரிதாகிவரும் சூழலில் மிக முக்கியமான பதிவு. ஒரு ஆசிரியரால் மாணவர்களின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஆவணமாகவும் விளங்குகிறது.

*****

அதிகாரமும் தமிழ்ப் புலமையும் - தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

ஆசிரியர்: ந.கோவிந்தராஜன்

விலை: ரூ. 280 க்ரியா பதிப்பகம்

தமிழ் இலக்கியப் படைப்புகள் மீது ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு ஈர்ப்பு உண்டானது. கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்தவர். நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி எனும் அதிகாரி. ‘இந்து இலக்கிய மாதிரிகள்’ என்ற நூலை எழுதிய கிண்டர்ஸ்லிதான் காலனிய தமிழ்ப் புலமை வரலாற்றின் தொடக்கப்புள்ளி. இந்நூல், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய விரிவான ஆவணம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-1-%E0%AE%95%E0%AE%B5%E

பரிந்துரை 2 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book_2867545g.jpg

ஏழு நதிகளின் நாடு

சஞ்சீவ் சன்யால்

தமிழில்: சிவ.முருகேசன்

விலை: ரூ.315

சந்தியா பதிப்பகம்

இந்திய இதிகாசங்கள், நில அமைப்பு, வணிகக் கப்பல்களின் தோற்றம், பயணங்கள் தொடங்கி, ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இந்நூல். இந்தியாவைப் பற்றிய கருத்தாடல்களின் உண்மைத் தன்மை பற்றியும் இந்நூல் பேசுகிறது.

***

கடவுள் உருவான கதை

டாக்டர் அஜய் கன்ஸால்

தமிழில்: கி.ரமேஷ்

விலை: ரூ. 170

பாரதி புத்தகாலயம்

மனித இன வரலாறு பற்றிய ஆராய்ச்சி, கடவுள், மதங்களின் உருவாக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை இணைக்கும் வகையில், மருத்துவரும், உடற்கூறு இயல் நிபுணருமான பேராசிரியர் அஜய் கன்சால் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். மனித இனம் எதிர்கொண்ட சவால்கள், அதில் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை இந்நூல் பட்டியலிடுகிறது.

***

அருந்ததியர்களாகிய நாங்கள்..

ம.மதிவண்ணன்

விலை: ரூ.30

கருப்புப் பிரதிகள்

சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின் உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் குழுவின் முன் ஒரு சாட்சியமாக இந்நூல் முன்வைக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2-

சென்ற நூற்றாண்டின் இலக்கியம்: சாரு நிவேதிதா பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்
படம்: பிரபு காளிதாஸ்

மூத்த படைப்பாளிகளின் படைப்புகள், தவறவிடக் கூடாத புத்தகங்களை இளைய வாசகர் களுக்குப் பரிந்துரைக்குமாறு எழுத்தாளர் சாரு நிவேதாவிடம் கேட்டோம்.

இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை. ஐரோப்பாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு மொழிகள் தெரிந்திருக்கின்றன.

ஒரு ஃப்ரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர்கள் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃப்ரெஞ்ச் மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை.

இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பியுங்கள் என்று உத்தரவு போடவில்லை என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!

இந்த நிலையில், ஒரு மொழியை எப்படி நாம் தக்க வைத்துக்கொள்வது? சிலர் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற (நல்ல) நோக்கத்தில் தவறான வழியில் செல்வதையும் பார்க்கிறேன். குளம்பியகம், ஆகத்து (ஆகஸ்ட் மாதமாம்!) என்றெல்லாம் தமிழைச் சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மடி ஆச்சாரமெல்லாம் தமிழைக் காப்பாற்றாது. ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள் பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைதான்.

ஆக, ஒரு மொழி நிலைத்து நிற்பதற்காக நாம் செய்யக்கூடியது, அம்மொழியில் உள்ள இலக்கியத்தைக் கற்பது மட்டுமே. மேலும், அது ஒன்றும் மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்ய வேண்டிய கடமை அல்ல. பட்சிகளுக்கு உணவிடுவது பட்சிகளுக்காக மட்டும் அல்ல என்பதுபோல. பட்சிகளுக்கு உணவிட்டால் பூமி வாழும்; பூமி குளிரும். பூமியின் மரணத்தை இன்னும் பல கோடி ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு விருட்சம் வேண்டும்; வனம் வேண்டும்; மழை வேண்டும்; இந்தப் புவிச் சமநிலையைக் காப்பாற்றுவது பட்சிகள். அதேபோல் நாமும் நம் வாழ்வும் மேன்மையுற, அறம் தழைக்க நாம் செய்ய வேண்டிய அடிப்படையான காரியம், இலக்கியத்தை வாசித்தல். அதற்கு நான் பரிந்துரைக்கக் கூடிய பத்துப் புத்தகங்கள்:

1. சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம்.

நம்முடைய பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுதான் இன்றைய வாழ்வை மேலும் செழுமைப்படுத்திக்கொள்வதற்கு இருக்கும் எளிய வழி. பதிப்பாளர்: வெளி ரங்கராஜன்.

2. ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.

என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல். இதன் சில பக்கங்களை நம் குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பித்தால் போதும்; சமுதாயம் இப்போது இருப்பதுபோல் இருக்காது. நற்றிணை பதிப்பகம்.

3. தி.ஜானகிராமனின் செம்பருத்தி. காலச்சுவடு பதிப்பகம்.

4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.

இந்த இரண்டு நூல்களும் தமிழைச் சங்கீதம்போல் மாற்றிக் காட்டியவை. டிஸ்கவரி புக் பேலஸ்.

5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.

உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று இது இப்போது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்திருப்பது திருத்தப்படாத பதிப்பு.

6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.

இடைவெளிக்குச் சொன்னதையே இதற்கும் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகம்.

7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.

நற்றிணைப் பதிப்பகம்.

8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.

குறுநாவல் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்.

9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.

தமிழில் தஞ்சை ப்ரகாஷுக்கு இணையாக தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை யாரும் எழுதவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ்.

10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.

க்ரியா பதிப்பகம். முக்கியமான சிறுகதையாளரான ந.முத்துசாமியின் பழைய கதைகளும் புதிய கதைகளும் கலந்த முக்கியமான புத்தகம்.

ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை. இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்த சமூகமே உயர்வுறும்!

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%

Link to comment
Share on other sites

நாவல்களின் காலம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சமகாலத்தின் முக்கியமான நாவல்கள் எவை? இன்றைய நாவல்களின் போக்கு எப்படி இருக்கிறது? ‘உபபாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘யாமம்’, ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவரும் குறிப்பிடத்தகுந்த விமர்சகருமான எஸ்.ராமகிருஷ்ணனிடம் இது குறித்துக் கேட்டோம்.

நம் காலம் நாவல் களின் காலம். உலகெங்கு ம் நாவல்கள் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்துவருகின்றன. ஹாரிபாட்டர் நாவல் 107 மில்லியன் விற்றிருக்கிறது. லார்டு ஆஃப் தி ரிங்ஸ் நாவல் 150 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. உலகில் எந்தக் கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் இவ்வளவு விற்றதில்லை. தமிழிலும் நாவலுக்கெனத் தனி வாசக வட்டம் எப்போதும் இருந்துவருகிறது. நாவல் விற்பனையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் நாவல் உலகம் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது. ஆரம்ப காலத் தமிழ் நாவல்களில் கதாசிரியரே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவார். அனுபவங்கள் மட்டுமே கதையாக உருமாறின. புனைவின் சாத்தியங்கள் அறியப்படவேயில்லை. நவீனத்துவத்தின் வருகையால் நாவல்களில் ஆசிரியரின் குரல் மறைந்துபோனது, அனுபவங்களை மட்டும் விவரிக்காமல் அவற்றுக்குக் காரணமாக உள்ள அரசியல் சமூக பொருளாதார உளவியல் காரணங்களை நாவல் ஆராயத் துவங்கியது.

இரண்டாயிரத்துக்குப் பிறகே தமிழ் நாவல்கள் பாலின்பம் குறித்த திறந்த உரையாடல்கள், அடையாளச் சிக்கல், நகர்மயமாதலின் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் அக உலகம் எனப் புதிய திசை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. இன்றைய நாவல் என்பது ஒரு சிம்பொனிபோல பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த கூட்டு வடிவம் என்பார் மிலன் குந்தேரா. அது தமிழ் நாவலுக்கும் பொருந்தக்கூடியதே.

மறைக்கப்பட்ட வரலாறு, புதிய வாசிப்புக்குள்ளான தொன்மம், இதிகாசம் பற்றிய புனைவெழுத்து, இனவரவியல் கூறுகள் கொண்ட நாவல் என இன்றைய நாவலின் இயங்குதளங்கள் விரிவுகொள்கின்றன.

புத்தாயிரத்துக்குப் பிறகான சிறந்த நாவல்கள்

1. சயந்தனின் ‘ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.

2. முருகவேளின் ‘மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.

3. நக்கீரனின் ‘காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புதுவகை நாவல்.

4. லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்த நாவல்.

5. ஜாகிர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.

6. சுகுமாரனின் ‘வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.

7. இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்

8. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.

9. யூமாவாசுகியின் ‘ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.

10. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவுசெய்த நாவல்.

 

http://tamil.thehindu.com/opinion/columns/நாவல்களின்-காலம்/article8653450.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

பரிந்துரை 3 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book_2869051g.jpg

book1_2869052g.jpg

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

வெண்டி டோனிகர்

தமிழில் : க. பூரணச்சந்திரன்

விலை ரூ : 750 எதிர் வெளியீடு

தொடர்புக்கு: 98650 05084

இந்து மரபின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் எழுதப்பட்ட விரிவான நூல் இது. சிறந்த பகுப்பாய்வு கொண்ட இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளாகப் பரந்துகிடக்கும் தலங்கள், சடங்குத் தருணங்கள், நேசத்திற்குரிய நூல்கள் ஆகியவற்றினூடே பயணம் செய்யும் அனுபவத்தைத் தருகிறது. அமர்த்யா சென், டேவிட் ஷூல்மன் போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

********

பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தமிழில்: பூ.கொ.சரவணன்

பிரக்ஞை வெளியீடு

தொடர்புக்கு: 99400 44042

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனை யாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியனால் 1990-ல் ‘தி இமேஜ் டிராப்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். நடிகர், அரசியல் தலைவர் என்று இயங்கிய எம்.ஜி.ஆர். எனும் பிம்பத்தை கறாரான விமர்சனப் பார்வையுடன் இந்நூல் அணுகுகிறது. தமிழ்த் திரையுலகுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு இதில் பதிவாகியிருக்கிறது.

********

நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850-1956

ராஜ் சேகர் பாசு தமிழில் அ. குமரேசன்

விலை ரூ.500, கிழக்கு வெளியீடு

தொடர்புக்கு: 044-42009601

பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த ஆய்வுநூல் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை ஆதாரபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறது. பிரிட்டிஷ் காலனியாதிக் கத்துக்கு முன்பும் பின்பும் அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன.

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-3-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8648901.ece

பரிந்துரை 4 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

books_2870756f.jpg
 

அந்தோனியோ கிராம்சி- தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

தமிழில்: வான்முகிலன்

விலை: ரூ.600

அலைகள் பதிப்பகம் - 9444431344

இத்தாலியின் மார்க்ஸிய அறிஞர் அந்தோனியோ கிராம்சி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் எழுதிய குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். கல்வி, அரசியல், தத்துவம், குடிமைச் சமூகம் போன்றவற்றைப் பற்றிய கிராம்சியின் விரிவான விவாதங்கள் அடங்கிய நூல் இது.

*******

அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

வெ.வெங்கடாசலம்

விலை: ரூ.120

புலம் பதிப்பகம் 9840603499

ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை வரலாற்றுப் பின்புலத்துடன் மீட்டெடுத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர். அவரது வரலாற்றையும் சிந்தனையையும் விரிவான தரவுகளோடும் காலப் பின்னணியுடனும் ஆராயும் நூல் இது. பல்வேறு தளங்களிலும் இயங்கிய அவரது சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியிருக்கிறது.

*******

நலம் காக்க வாங்க பழகலாம்..

மருத்துவர் கு.சிவராமன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,- 044 - 26251968

விலை: ரூ. 275

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் பேசும் நூல். இன்றைய நவீன யுகத்தில் மக்களின் நலவாழ்வுக்குத் துணைபுரியும் அம்சங்கள் அடங்கியது சித்த மருத்துவம் என்று இந்நூல் பேசுகிறது. அறிவியலின் ஆய்வுக் கண்களுக்குப் புலப்படாத, ஆனால் முழுப் பயனளிக்கும் மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தை முன்னிறுத்துகிறது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-4-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8653499.ece

பரிந்துரை 5 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

books_2872185f.jpg
 

சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு 
ராமச்சந்திர குஹா 
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன் 
ரூ : 250/- 
எதிர் வெளியீடு: 9865005084

சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் அடிப்படையில், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது. சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்களால் தமது நிலங்களை இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா.

 

ஏ.கே.செட்டியார் படைப்புகள் 
அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி 
பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம் 
சந்தியா பதிப்பகம் - தொடர்புக்கு: 044-24896979 
விலை: ரூ.900

ஏ.கே.செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு தொகுதிகளாக வெளியாகியிருக்கின்றன. அவர் எழுதி இதுவரை நூல் வடிவம் பெறாத 30 கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

 

உலக மக்கள் வரலாறு 
ஹரிஸ் ஹார்மன் 
தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் 
விலை: ரூ.1,100 
விடியல் பதிப்பகம் - தொடர்புக்கு: 9789457941

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக் குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.

 

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்
மா.பா.குருசாமி 
விலை: ரூ. 300 
சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746

காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் என்று கருதப்படும் ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகள் அடங்கிய நூல் இது. ஜே.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாறு, பரவல்முறை உற்பத்தி, விநியோகம், குடிசைத் தொழிகள் பற்றிய அவரது பார்வை என்று பல விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.

 

http://tamil.thehindu.com/general/literature/பரிந்துரை-5-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8658848.ece

பரிந்துரை 6 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

books_2873382f.jpg
 

கதை மழை 
பிரபஞ்சன் 
நற்றிணை பதிப்பகம் - 9486177208 
விலை: ரூ.80

உலகச் சிறுகதைகளுடன் ஒப்பிடும் வகையில் தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன என்று குறிப்பிடும் பிரபஞ்சன், தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகளும் பேசியிருப்பதன் அடிப்படையில் இரண்டையும் இணைத்து எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது.

 

இஸ்லாம்: ஒரு பார்வை 
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது 
விலை: ரூ.120 
கிழக்குப் பதிப்பகம் 
தொடர்புக்கு : 044 - 42009603

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு என்ன? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதமா? பெண்களுக்கு எத்தகைய சுதந்திரத்தை அளிக் கிறது? மாற்று மதங்களை எப்படி அணுகுகிறது? போன்ற கேள்விகளை முன்வைத்து இஸ்லாத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல்.

 

சாதியை அழித்தொழித்தல் 
பி.ஆர்.அம்பேத்கர் 
தமிழில்: பிரேமா ரேவதி 
காலச்சுவடு பதிப்பகம் - 9677778863 
விலை: ரூ. 295

அம்பேத்கர் எழுதிய ‘அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ எனும் புகழ்பெற்ற கட்டுரையின் தமிழ் வடிவம். இதற்கு அருந்ததி ராய் எழுதிய மிக நீண்ட முன்னுரையும் தமிழ்வடிவம் பெற்றிருக்கிறது. இவற்றுடன், நவயானா பதிப்பகத்தின் ஆசிரியர் ஆனந்த் வரலாற்றுத் தரவுகளுடன் எழுதிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-6-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8662946.ece

பரிந்துரை 7 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book_2874520f.jpg
 

இடக்கை

எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம் (044-24993448)

விலை: ரூ. 375

பேரரசர்களின் வீழ்ச்சிகளுக்கு ஊடே எளிய மனிதர்களுக்கு நேரும் பேரவலத்தைப் பதிவுசெய்திருக்கும் நாவல். அடித்தட்டு மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. சாமர் எனும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாயகனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

*********

நறுமணம் சிறுகதைத் தொகுப்பு

இமையம்

க்ரியா பதிப்பகம் (9789870307)

விலை: ரூ. 195

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் உறவுகளையும் மதிப்பீடுகளையும் தகர்க்கும் விதம் பற்றியும், இதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும் சொல்லும் கதைகள் இவை.

*********

அறிவியலில் பெண்கள்

ஒரு சமூக - வரலாற்றுப் பார்வை

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

அடையாளம் பதிப்பகம் (9443768004)

விலை: ரூ. 280

உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். வீடுகளிலும் நிறுவனங்களிலும் உள்ள பல்வேறு பணிச் சுமைகளை அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-7-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8665705.ece

பரிந்துரை 8 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

bo_2875720g.jpg

bo1_2875719g.jpg

அகிம்சையை நோக்கி புனித யாத்திரை

வினோபா பாவே

சர்வோதய இலக்கியப் பண்ணை (9894642007)

விலை: ரூ.100

காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவரும் ‘பூமிதான இயக்க’த்தின் தந்தையுமான ஆசார்ய வினோபா பாவேவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.

*************

எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்

எஸ்.வி.ராஜதுரை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,( 044- 26251968)

விலை: ரூ.300

மார்க்ஸியக் கண்ணோட்டத்துடனும் அம்பேத்கர், பெரியார் பார்வையின் வழியாகவும் தனது கருத்துகளை முன்வைக்கும் எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூல். சிந்தனைக் களஞ்சியமாக இருக்கும் நூல்கள் அழிக்கப்பட்ட நிகழ்வுகள், கருத்துரிமை மறுக்கப்படும் சூழலை விவரிக்கிறது.

*************

தேர்தலின் அரசியல்

அ.வெண்ணிலா

அகநி வெளியீடு (9842637637)

விலை: ரூ.80

கொள்கைகளைப் பின்னுக்குத் தள்ளி, வெறும் ஓட்டு அரசியலாக மாறிப்போன தற்கால அரசியலைச் சமூக விமர்சனப் பின்னணியில் அணுகியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சமகால அரசியலின் போக்கைப் பற்றித் தீவிரமாக அலசும் நூல் இது.

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-8-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8671413.ece

Link to comment
Share on other sites

பரிந்துரை 9 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

book1_2876864g.jpg

மக்கள் தெய்வங்கள்

பேராசிரியர் கோ.பழனி

புலம் பதிப்பகம் (98406 03499)

விலை: ரூ.140

வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்தால், அதை எதிர்ப்பது, அவர்களைக் கொலை செய்வது என்று வெறித்தனம் காட்டியச் சமூகத்தில், அப்படிக் கொல்லப்பட்டவர்களைத் தெய்வங்களாக்கி வழிபடும் விநோதமும் நடந்திருக்கிறது. இந்தப் போக்குகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல்.

******

மனித உடலின் கதை

(பரிணாமம், ஆரோக்கியம், நோய்)

டேனியல் இ. லிபர்மேன்

தமிழில்: ப்ரவாஹன்

பாரதி புத்தகாலயம் (044 - 24332424)

விலை: ரூ. 470

ஆரோக்கியம், நோய் என்ற வாழ்க்கையின் இன்றியமையாத மிகவும் முக்கியமான இரண்டு அங்கங்களின் பரிணாமம் ஒரு உடலின் கதையாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மானுடவியல், உயிரியல், மரபு வழிப் பண்பியல் என்று பல்வேறு தளங்களின் வழியே மனித உடல் தொடர்பான விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.

*******

அழகிய மரம் - 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

தரம்பால் (தமிழில் பி.ஆர். மகாதேவன்)

தமிழினி வெளியீடு(9344290920)

விலை: ரூ. 450

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பதை காந்தியவாதியான தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்து எழுதியிருக்கும் நூல். சாதிப் பாகுபாடுகள் கல்வி கற்கத் தடையாக இருக்கவில்லை எனவும் தரம்பால் நிறுவுகிறார். ஐரோப்பாவுடனான ஒப்பீடும் இந்த நூலில் உள்ளது.

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-9-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8676202.ece?ref=relatedNews

1_2879846f.jpg
 

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

விலை: ரூ.150

முனைவர் தி.சுப்பிரமணியன் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு.

அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

விலை: ரூ.120

எம்.வெங்கடாசலம்

புலம் பதிப்பகம்

பாணர் - இனவரைவியல்

விலை: ரூ.220

பக்தவத்சல பாரதி

அடையாளம் பதிப்பகம்

அளவீடற்ற மனம்

ரூ.225

ஜே.கிருஷ்ணமூர்த்தி

தமிழில்: எஸ்.ராஜேஸ்வரி

நர்மதா பதிப்பகம்

மரியாதைக்குரிய ஐ.டி. நண்பனுக்கு..

விலை: ரூ. 50

கதிரவன்

சிற்றுளி பதிப்பகம்

 

http://tamil.thehindu.com/opinion/blogs/பரிந்துரை-10-கவனிக்க-வேண்டிய-புத்தகங்கள்/article8685691.ece?ref=relatedNews

நான் என்ன வாங்கப்போகிறேன்?

இடமிருந்து வலம்: ப்ரேமா ரேவதி, சரவணன் சந்திரன், சமுத்திரக்கனி, ஜென்ராம்.
இடமிருந்து வலம்: ப்ரேமா ரேவதி, சரவணன் சந்திரன், சமுத்திரக்கனி, ஜென்ராம்.

ப்ரேமா ரேவதி - செயல்பாட்டாளர்

எல்வின் கண்ட பழங்குடி மக்கள்

மீள்பார்வை - பக்தவச்ல பாரதி

கருத்தாயுதம்

பாலகோபால் தமிழில் - க.மாதவ்

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - கவின்மலர்

சரவணன் சந்திரன் - எழுத்தாளர்

சிமோனிலா சிரஸ்த்ரா

மாதவன் ஸ்ரீரங்கம்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

ம.ராஜேந்திரன்

ஆரஞ்சு மிட்டாய்

கார்த்திக் புகழேந்தி

சமுத்திரக்கனி - இயக்குநர், நடிகர்

ஏழாவது ஊழி

ஐங்கரநேசன்

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

சாம்ராஜ்

கதா காலம்

வேகாந்தன்

ஜென்ராம் - ஊடகவியலாளர்

உருவாகும் உள்ளம்

- வி.எஸ்.ராமச்சந்திரன் தமிழில்: ஆயிஷா இரா.நடராசன்

பா.செயப்பிரகாசம் சிறுகதைகள்

தியூப்ளே வீதி

இரா.முருகன்

 

http://tamil.thehindu.com/opinion/blogs/நான்-என்ன-வாங்கப்போகிறேன்/article8680480.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.