Jump to content

'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CjRrh7eXIAEsUeZ.jpg

'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை!

சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #க்ப்ட்கொஉன்டமனி என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

http://tamil.filmibeat.com/

 

 

 

Link to comment
Share on other sites

கவுண்டமணியின் ‘ஆஃப் ஸ்க்ரீன்’ கிண்டல்கள்! #NothingButgoundamani

collage.jpg

வுண்டமணி!

இவருடைய பிறந்தநாள் குறித்து பல கருத்துக்கள் இருந்தன. தனக்கு மார்ச் 18 பிறந்தநாள் என்று தவறாக  நினைத்து பலர் அன்று வாழ்த்து சொல்லியதாக ஒரு திருமண விழாவில் கூறியுள்ளார். இன்று (மே 25) இவருக்கு 77ஆவது பிறந்தநாள்!

‘சும்மா தலைவன் - ரசிகன்னு எல்லாம் சொல்லி ஏமாத்திக்காதீங்க’ என்று இவர் சொன்னது உட்பட  இவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றைப் படித்திருப்பீர்கள்.  திரையில் இவர் கலாய்த்ததை விட, திரைக்கு வெளியே இவரது கலாய்ப்புகள் துறையில் மிகப் பிரபலம். அவற்றில் சில:

1. வீரநடை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் உதவி இயக்குனர்  ஷாட் ரெடி என்ற அழைக்க, வர முடியாது என்று கோபப்பட்டு சொல்லியிருக்கிறார் இவர். அவரோ பதறிப்போய் என்னவென்று கேட்க, "கையில இருக்கிறது இது ஒரே படம். இதையும் நடிச்சு தீர்த்துட்டா  எப்படி?"  என்று சீரியஸாக காமெடி செய்திருக்கிறார். கையில் படமே இல்லை என்றாலும் அதை நகைச்சுவையாக காட்டிக்கொள்ள இவரால் மட்டுமே முடியும்.

2. சத்யராஜும், இவரும் அமர்ந்திருக்க ஒரு டைரக்டர் வந்து ‘அடுத்த படத்துல நான் ஹீரோவா நடிக்கப்போறேன். ஒரு ஸ்கூல் விழால எல்லாரும் என்னை பார்த்து ஹீரோ மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னாங்க’ என்றிருக்கிறார். ஒருநொடிகூட தாமதிக்காமல் இவர் கேட்டாராம்:  ‘ப்ளைண்ட் ஸ்கூலா?”

3. ரம்பா ஒருமுறை மேக் அப் மேன் வராமல் காத்திருந்தபோது, கவுண்டமணி ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு மேக்கப் மேன் ஆழ்வார்ப்பேட்டைல இருக்காரு. செமயா மேக்கப் போடுவார்.. வரச்சொல்லவா?’ என்று சொல்லியிருக்கிறார். யூனிட் மொத்தமும் அதிர்ந்து சிரிக்க, ரம்பா புரியாமல் விழித்தாராம். பிறகு கமலைத் தான் சொல்கிறார் என்றதும் அவர் சிரித்த சிரிப்பில் ஷூட்டிங் அரை மணி நேரம் தாமதமானதாம்.

4. மலையாள இயக்குநர் ஒருவர் தமிழில் முதன்முதலாக படம் இயக்குகிறார். கவுண்டமணியிடம் வந்து ஒரு காட்சியை விளக்கி. ‘இந்த ஒரு ஷாட்ல நான் பாரதிராஜாவைத் தாண்டிடுவேன்ல?” என்று கேட்டிருக்கிறார். ‘எப்ப? அவரு குனிஞ்சுட்டிருக்கறப்பவா?” என்று கவுண்ட்டர் கொடுத்திருக்கிறார் மகான்!

5. கவுண்டமணி வீட்டுக்கு பத்திரிகை கொடுக்கச் சென்றிருக்கிறார் டைரக்டர் ராமதாஸ். நாய் ஒன்று வர, ‘என்னண்ணே பேரு?” என்று கேட்டிருக்கிறார். “நாய்தான். வேற என்ன? அதுக்கெல்லாம் பேரு வெச்சுட்டு அத ஞாபகம் வெச்சுட்டு.. அடப்போப்பா” என்றாராம் இவர்.

6. ஒரு பிரபல நடிகையின் தம்பி நடிக்க வந்தபோது, அவர் கவுண்டமணியிடம் கேட்டிருக்கிறார். ‘அண்ணே.. எப்டிண்ணே.. என் தம்பி நல்லா வருவாப்டியா?’

கவுண்டமணி: ‘கண்டிப்பா வருவான்ம்மா.. ஷூட்டிங் முடிஞ்ச உடனே வீட்டுக்கு வந்துடுவான்’

7. ஓர் இயக்குனர் பேன்ட்டை நெஞ்சுவரை போடுவார். அவரைப் பார்த்ததும் இவர் அருகிலிருந்த சத்யராஜிடம் சொன்னாராம்: ‘இந்தாளு சட்டைத்துணி அரை மீட்டரும், பேன்ட் ரெண்டரை மீட்டரும் எடுப்பார் போல’

8. ஒரு  படத்தின் டப்பிங்கில் அந்தப் படத்தின் ஹீரோ கலந்து கொண்ட செய்தி வருகிறது. பேப்பரைப் பார்த்ததும் அருகிலிருந்தவரிடம் கேட்டாராம்: ‘அவரு படத்துக்கு அவர்தான்யா டப்பிங் குடுக்கணும். இதுல என்னத்தக் கண்டாங்க!”

 9. தேவர்மகன் ப்ரிவ்யூ காட்சிக்கு கவுண்டமணியும் சென்றிருக்கிறார். படம் முடித்ததும் சிவாஜி, ‘அந்த மணியைக் கூப்டு. எதுனா கிண்டல் பண்ணுவாரே’ என்றிருக்கிறார். கவுண்டமணியும் போய் நின்று ‘படம் நல்லாருக்குங்கய்யா’ என்றிருக்கிறார். சிவாஜியும் விடாமல், ‘நான் கேக்கறேன்னு சொல்றியா.. எதுனா நக்கல் விடுவியே?’ என்று கேட்க, ‘எல்லாஞ்சரிங்கய்யா.. அவ்ளோ கெத்தா படம் முச்சூடும் வந்துட்டு, கடசீல ஒரு பச்சக் கொழந்த மிதிச்சதுல பொசுக்னு போய்ட்டீங்களேய்யா’ என்றாராம்.

ஹேப்பி பர்த்டே மகான்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/64550-goundamani-off-screen-comedy.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CjSeuLvWgAAkyio.jpg

 

CjRi5OnWEAEgTeG.jpg

 

"வீட்டுல எல்லாரும் சவுக்கியமாண்ணே.."

"நாயே.. வீடே இல்ல. அப்புறம் எப்டிர்றா சவுக்கியமா இருக்கிறது"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.