Jump to content

'இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!' -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள்


Recommended Posts

'இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!' -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள்

vijayakanthlong1aa.jpg

 

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. 'உள்ளாட்சித் தேர்தலில் கௌரவ வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்' எனக் கட்சிக் கூட்டத்தில் வேதனைப்பட்டிருக்கிறார் அவர்.

தே.மு.தி.க.வைத் தொடங்கிய நாள்முதலாக சந்தித்து வரும் தேர்தல்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது இந்த சட்டமன்றத் தேர்தலில்தான். அதிலும், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளும், கிடைத்த மூன்றாவது இடமும் தே.மு.தி.க தலைமையை அதிர வைத்தன. தேர்தல் முடிவில்  அதிலும், கட்சியின் வாக்கு சதவீதம் இரண்டரை சதவீதம் அளவுக்குக் குறைந்துபோகும் எனவும் அவர் நினைத்துப் பார்க்கவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். 'நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். வரும்காலங்களில் எங்கள் கூட்டணி தொடரும்' எனவும் பேட்டியளித்தனர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள்.

ஆனாலும், ' விஜயகாந்த் என்ன மனநிலையில் இருக்கிறார்?' என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. "கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தல் வரையில் மக்கள் நலக் கூட்டணி தொடர்வது சந்தேகம்தான்" என நம்மிடம் விவரித்த தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவர், தொடர்ந்து, " ஐந்து ஆண்டுகளில் கட்சியின் தொண்டர் பலத்தை அதிகரித்தோம். கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் 54 லட்சத்திற்கும் மேல் இருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் பத்து லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது. இதைப் பற்றித்தான் கேப்டன் கவலைப்பட்டார். 'தி.மு.க, அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் ஓட்டுக்களை அப்படியே வாங்குகிறார்கள். நம்மால் ஏன் முடியவில்லை' எனக் கேள்வி எழுப்பினார்.

'2006, 2011 தேர்தல்களில் நல்ல வாக்கு சதவீதத்தை எடுத்திருந்தோம். இந்தமுறை கௌரவமான வாக்குகள்கூட கிடைக்கவில்லை' என வேதனைப்பட்டார் கேப்டன். 'நாம் செய்த தவறு என்ன? மக்கள் மத்தியில் ஏன் எடுபடவில்லை? என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது' என்றும் கேட்டார். எங்களில் பலரும், 'மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணத்தை வாரியிறைத்தார்கள். நாம் எந்த இடத்திலும் பணத்தைச் செலவிடவில்லை. அதுதான் தோல்விக்குக் காரணம்.

2006 தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 400 கவுன்சிலர்களைப் பெற்றோம். தனித்துப் போட்டியிட்டே அவ்வளவு இடங்களை நம்மால் வாங்க முடிந்தது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே நம்மால் அரசியல் செய்ய முடியும். அதையடுத்து, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே அணியோடு நாம் இருந்தால், ஒரு எம்.பி சீட்கூட கிடைக்காது. கட்சி இன்னமும் மோசமான நிலைமைக்குப் போய்விடும். இப்போதே கட்சியின் தேர்தல் அங்கீகாரம் பறிபோய்விட்டது. தேர்தலில் வட்டிக்குப் பணம் வாங்கித்தான் செலவு செய்தோம். பலர் மீள முடியாத கடனாளியாகிவிட்டார்கள்' என நேரடியாகவே சொன்னோம். நாங்கள் சொன்ன கருத்துக்களை அமைதியாக கேட்டுக் கொண்டார்.

ஒரு சிலர், 'தி.மு.க.வோடுதான் நாம் கூட்டணி சேருவோம் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதற்குத் தகுந்தவாறு தி.மு.க தலைவர்களும் பேசி வந்தனர். இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்போம். அவர்களோடு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என மீடியாக்களில் செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. அதற்கு மாறாக, நாம் மக்கள் நலக் கூட்டணியை ஏற்றுக் கொண்டதை மக்கள் விரும்பவில்லை' என்றார்கள். மேலும், பல தொகுதிகளில் மாவட்ட செயலாளர்களின் பேச்சை மதிக்காமல், தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு வேலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பற்றியும் எடுத்துச் சொன்னோம். விரைவில் நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை செய்ய இருப்பதாகச் சொன்னார் கேப்டன். நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்றார் நிதானமாக.

இதுவரையில், தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி வைத்த விஜயகாந்த், வரும் காலங்களில் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே தே.மு.தி.க.வின் எதிர்காலம் அமையப் போகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/64540-dmdk-partyman-dont-like-to-continue-mnk-alliance.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.