Jump to content

வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் பிரச்சனையை தீர்ந்து இருந்தால் ...


Recommended Posts

வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் பிரச்சனையை தீர்ந்து இருந்தால் ...

 

வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் பிரச்சனையை தீர்ந்து இருந்தால் ...


வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு இருந்தால் இ வேலுப்பிள்ளை பிரபாகரன் அரங்குக்குள் வந்து இருக்க மாட்டார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன் மொழிவு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைக் கட்டடத்தில் வைத்து யாழ்.ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

அந்நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலையே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இ

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அவர்கள் இறைமையுடன் வாழ்ந்த மக்கள். எனவே அவர்கள் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ சமஷ்டியை கோருகின்றார்கள். ஒரு நாட்டுக்குள் தீர்வினை கோருகின்றார்கள்.

சமஷ்டி கோரிக்கையை முதல் முதலாக முன் வைத்தவர்கள் சிங்கள தலைவர்களே. இலங்கையில் சமஷ்டியை உருவாக்க யோசித்த போது இ கண்டிய சிங்கள தலைவர்கள் வடக்குஇ கிழக்கு ஒரு பிராந்தியமாகவும் இ மத்தி ஒரு பிராந்தியமாகவும் இ மற்றும் கரையோரம் ஒரு பிராந்தியமாகவும் இ பிரித்து மூன்று சமஷ்டி பிராந்தியத்தை உருவாக்க யோசனையை முன் வைத்தார்கள். அந்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால் இ 1930ம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டி இருக்கும்.

அதன் பின்னர் 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாக்கிய பின்னர் தந்தை செல்வநாயகத்தால் இ உத்தியோகபூர்வமாக சமஷ்டி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எங்கள் தாயகம் பிரிக்க முடியாதது. உலகில் இல்லாத ஒன்றினை நாங்கள் கோரவில்லை. எனவே இந்த தீர்வினை இனவாத ரீதியாக பார்த்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவோ இ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கருத்துக்களை முன் வைக்காது. தீர்வினை எட்ட வேண்டும்.

சாமூவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுடன் இந்த பிரச்சனை தீர்க்க பட்டு இருந்தால் இ வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த அரங்குக்குள் வந்து இருக்க மாட்டார்.

தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் சி.வி.விக்னேஸ்வரன் காலத்தில் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலும் தீர்வு எட்டபப்டாது விடின் பாரிய விளைவுகள் ஏற்படலாம்.

ஆயுத போராட்டம் மௌனித்து உள்ளது. இந்நிலையில் அடக்கு முறைகள் தொடரும் ஆயின் அதனால் எதிர்காலத்தில் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதனை கடந்த கால வரலாறுகளில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

வடமாகாண சபை சிங்கள உறுப்பினர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு அஞ்சுகின்றார்களா ?

உண்மை கண்டறியப்படாமல் தேசிய நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.

வடக்கு மாகாண சபை தீர்வுத்திட்ட முன் மொழிவு ஊடகவியலாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தேசிய நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும் ஆயின் முதலில் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப் பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட்டாலே தேசிய நல்லிணக்கம் உருவாக முடியும்.

வடமாகாண சபையில் உள்ள இரண்டு சிங்கள உறுப்பினர்கள் கூட சிங்கள பேரினவாதத்திற்கு அஞ்சுகின்றார்களா ? என எண்ண தோன்றுகின்றது.

ஏனெனில் வடமாகாண சபையினால் முன் வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தில் கோரப்பட்ட சமஸ்டி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதனை தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த இரு சிங்கள வடமாகாண சபை உறுப்பினர்களும் தெரிவித்து உள்ளனர்.

அதனால் அந்த இரு உறுப்பினர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு அஞ்சியே அவ்வாறு சமஸ்டி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளனர் என எண்ணுகின்றேன் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132476/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.