Jump to content

யாழ். நகர அபிவிருத்தி, தமிழரசுக்கட்சியைத் தவிர முதலமைச்சர் உட்பட அனைத்துத் தமிழ்கட்சிகளும் புறக்கணிப்பு!


Recommended Posts

யாழ். நகர அபிவிருத்தி, தமிழரசுக்கட்சியைத் தவிர முதலமைச்சர் உட்பட அனைத்துத் தமிழ்கட்சிகளும் புறக்கணிப்பு!

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது.

55மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நகர அபிவிருத்தி சபையினூடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே வடக்கு மாகாணசபையில் கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், இன்று இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய வடக்குமாகாண சபையினரும் புறக்கணித்திருந்தனர். ஆனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியயை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://thuliyam.com/?p=27833

Link to comment
Share on other sites

ஆளுநர் அலுவலகத்தில் நடந்த கூட்டம் கண்டீரோ!

யாழ்ப்பாண நகர அபிவிருத்தி என்ற பெயரில் ஆளுநர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. கூட்டத்தின் நோக்கம், திட்டம் என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்து கொள்வராயினும் அதற்கு யாழ்ப்பாண நகர அபிவிருத்திக்கூட்டம் என்பது கொடுக்கப்பட்ட தலையங்கம்.
 
பரவாயில்லை. நகர அபிவிருத்தி தொடர்பில் கூட்டம் வைப்பது நல்லது தானே என்றால் அந்தக் கூட் டத்திற்கு முதலமைச்சர் செல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. 
இது தவிர யாழ்ப்பாண நகர அபிவிருத்தி  தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் கூட்டப்பட்ட தின் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே. 
 
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி பற்றிப் பேசும் போது அதில் வடக்கு முதலமைச்சரின் பிரசன்னம் மிகவும் அவசியம் என்பதுடன் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொண்டிருக்க வேண்டும். 
ஆனால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் மட்டுமே அக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 
 
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி என்பது எங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டியது. எனவே அது சார்ந்த கூட்டத்தை ஆளுநர் அலுவலகத்தில் நடத்துவது ஏன்? என்று வடக்கின் முதலமைச்சர் எழுப்புகின்ற வினாவை எவரும் எளிதில் புறக்கணித்து விட முடியாது. 
 
ஆக, வடக்கின் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் சில இடங்களில் இருக்கக் கூடிய கருத்து ஒவ்வாமையைப் பயன்படுத்தி முதலமைச்சருக்கு எதிரானவர்கள் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
 
இதன் மூலம் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தி, வடக்கு மாகாண அரசின் இயங்கு நிலைக்குப் பாதகம் செய்வது,
இவ்வாறு செய்வதன் மூலம் வடக்கு மாகாண சபை செம்மையாக இயங்கவில்லை என்றொரு குற்றச்சாட்டை முதலமைச்சர் மீது சுமத்த முடியும் என்பது கூட்டத்தை நடத்தியவர்களின் நோக்கம். 
ஐயா! அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுவார்களாயின் நல்லது அதை ஏற்கலாம். 
 
ஆனால் நமக்கு எழும் சந்தேகம் எல்லாம் முதலமைச்சர் இல்லாமல்; வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய 38 உறுப்பினர்களில் 31 பேர் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டியது ஏன்? என்பதுதான். 
யாழ்ப்பாண நகரத்தின் அபிவிருத்தியில் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் வடக்கின்  முதலமைச்சரையும் ஆளுநரையும் ஒற்றுமைப்படுத்தி வடக்கின் அனைத்து மாகாண சபை உறுப்பி னர்களும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர்களும் யாழ். அரச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள் உள்ளடங்கியதான கூட்டத்தை கூட்டியிருந்தால், அந்தக் கூட்டத்தால் நன்மை விளைந்திருக்கும். இதைச் செய்யாதது ஏன்? 
 
வடக்கின் முதல்வரையும் ஆளுநரையும் ஒற்று மைப்படுத்தி அவர்களை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவது நல்லதல்லவா? இதை விடுத்து முதலமைச்சரைப் புறம் தள்ளி, ஏழு மாகாண சபை உறுப்பினர்களுடனும் நான்கு எம்.பிக்களுட னும் கூட்டத்தை நடத்தியதை நகர அபிவிருத்திக் கூட்டம் என்று சொல்வதா? அல்லது முதல்வரை யும் ஆளுநரையும் கடுமையாகப் பகைக்கவைக் கும் கூட்டம் என்று சொல்வதா? என்பதை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.   

 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10254&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர் அபிவிருத்தி அடையுதோ இல்லையோ.. அரசியல்வாதிகள் அபிவிருத்தி அடைஞ்சிடுவாங்கள். முன்னம் ஈபிடிபி ஒட்டுக்குழு யாழ் நகர முதல்வர் அம்மா.. வரும் போது உடுத்த சேலையோடு வந்தா... போகும் போது ஊழல்வாதியாப் போனா. புரியுதில்ல.. அபிவிருத்தின்னா என்னென்னு. இதெல்லாம் சொறீலங்காவில் சகஜமப்பா. tw_blush:

Link to comment
Share on other sites

ஆளுநரிடம் அபிவிருத்திக் கூட்டம் கூட்டுமாறு சொன்னவர்கள் யார்? அனுமதிக் கடிதம் எங்கே? (வடக்கு அமர்வில் விக்னேஸ்வரன் கேள்வி )

யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினர் எம்முடன் முழுவதுமாக கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக கூறிச் சென்ற நிலையில், மேற்படி விடயத்தை வடக்கு ஆளுநர் தலைமையில் மீண்டும் கூடி ஏன் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்விலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர அபிவிருத்தி தொட ர்பாக நகர அபிவிருத்தி சபை, மாநகர சபை, மாவட்டச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் எம்முடன் சேர்ந்து உலக வங்கியின் அலுவலர்களுடன் நன்றாக பேசி 
விவாதித்துள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர்கள் தற்போது குறிப்பிட்ட வலயமைப்பு தொடர்பாகவும் சகல விடயங்களையும் கலந்தாலோசித்து உலகவங்கியிடம் அந்த விபரங்களை அனுப்பியுள்ளோhம். அது அவர்களுக்கு கிடைத்ததும் எதிர்வரும்  யூன் மாதமளவில் பதில் தருவதாக கூறியுள்ளார்கள். 

இந்தநிலையில் சில உறுப்பினர்கள் கூறுவதுபோன்று நகர அபிவிருத்திசபையால் ஆளுநருக்கு அப் படியொரு கூட்டத்தை இம் மாதம் 24ஆம் திகதி நடத்துவதற்காக கடிதம் அனுப்பப்பட்டு அவர் ஊடாக எம்மிடம் இருந்துகருத்தறிந்து சொல்லுமாறு கூறியதாக எமக்கு எவரும் சொல்லவில்லை. அவ்வாறான கடிதத்தைஅனுப்பியதனால் தான் அவர்அவ்வாறுசெய்தார் என்றும் எமக்குத் தெரியாது. 

உலகவங்கியோ, நகர அபிவிருத்திசபையோ எம்முடன் சேர்ந்து தான் கூட்டங்களை வைத்துள்ளார்கள். 
அதன் பின்னர் ஆளுநரிடம் கூட்டம் கூடுங்கள் என்றுசொன்னதற்கு காரணம் விளங்கவில்லை. 16 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் அந்த கூட்டம் தள்ளப்போடப்பட்டதாக கூறினார்கள். எப்போதுமறுபடி யும் கூட்டம் என்பதுதொடர்பாக ஆளு நரிடம் இருந்துஎந்தபதிலும் வர வில்லை. 23 ஆம் திகதிகாலை குறிப்பிட்ட கூட்டத்துக்கு வருமாறு எழுதிஅனுப்பினார். அதனால்தான் அன்றையதினம் சமுகமளிக்க முடியாதுள்ளதாக பதில் அனுப்பியிருந்தோம். 

இது எமக்குரியதா அரசாங்கத்துக்குரிய விடயமா என்பதை ஆராய் வது தேவையற்றவிடயம். மத்திய அரசாங்கம் எமக்கு அறிவித்து உலகவங்கியில் இருப்பவர்களை  அனுப்பி அவர்களுடன் நாம் பல தடவைகள்  கலந்தாலோசித்து முழுமையாக இது தொடர்பாக பேசிய பிற்பாடு எமக்கு யூன் மாதத்தில் பதில் தருவதாக கூறிவிட்டு போனார்கள். 

இந்த நேரத்தில் ஆளுநர்  இப்படியான  கூட்டம் வைப்பதற்கன காரணம் எமக்குபுரியவில்லை. கூட்டத்திற்கு கொழும்பில் இருந்து வருகிறார்கள் சிலர் என்ற அவசியமும் எமக்கு தெரியவில்லை நகர அபிவிருத்தி சபையின் கோரிக்கையின் பேரில் இந்த கூட்டம் கூடி யது என்றால் அக் கடிதத்தை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன் என முதலமைச்சர் தெரிவித்தார். 
அதற்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின், ஆளுநர் அலுவல கத்தில் இருந்துவந்தகடிதத்தை  வாசித்துக்காட்டினார்.

அதை கடுமையாக மறுத்த முதலமைச்சர் நகர அபிவிருத்தி  சபை ஆளுநரிடம் இப்படியானதொரு கூட்டத்தை வைக்குமாறு கோரினார்களா என்பது தொடர்பான கடிதத்தை தான் நான் கேட்கிறேன் அதைக் காட்டுங்கள் என கடும்தொனியில் கூறினார்.            

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10267&ctype=news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.