Jump to content

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...


Recommended Posts

43 minutes ago, வாத்தியார் said:

 இப்படியான பதிலைத் தான் நான் எதிர்பார்த்தேன்

தமது வாதம் தோற்றவுடன் இப்படி எஸ்கேப் ஆவது தான் இவர்களது வழக்கம்

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
9 hours ago, Eppothum Thamizhan said:

அவர்கள்  உந்தக்கேள்விகளை எல்லாம் அன்றிருந்த அரசாங்கத்திடம் கேட்டு பதில் கிடைக்காததால்தான் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வந்தார்கள், வந்திட்டார் இப்ப ஒருவர் தந்தை செல்வாவிற்கே வகுப்பெடுக்க. உந்த அதிமேதாவித்தனம் தான் தமிழன் அழிய காரணம்.   

தந்தை செல்வா  ஸ்காட்லான்ட்  பற்றியும் க்யூபெக் பற்றியும் கிழக்கு தீமோர் பற்றியும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு அறியும் அளவுக்கு உலக அறிவு குறைத்தவர் என்றா சொல்கிறீர்கள்?  இலங்கை அரசு அவருக்கு பதில் அழிக்காததால் அவர் ஸ்காட்லான்ட்  பற்றியும் க்யூபெக் பற்றியும் கிழக்கு தீமோர் பற்றியும் அறியாமல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார் என்று சொல்கிறீர்கள்?

அந்த அளவுக்கு அவருக்கு அறிவு குறைவாக இருந்திருந்தால் நான் என்ன, இன்றைய பாடசாலை மாணவர்களே வகுப்பு எடுக்க முடிந்திருக்கும். நீங்கள் சொல்வது உண்மை என்றே நானும் நம்புகிறேன். அவரின் கோட்பாடு தான் தமிழ் மக்கள் இந்தனை ஆயிரம் அழிந்து இன்று ஒன்றும் இல்லாமல் போக காரணமானது. அவரது சம காலத்தில் இதேவிதமான பிரச்சினைக்கு மலேசிய பூமி புத்திரருடன் சாதுரியமாக அரசியல் செய்து சிங்கபூரை மீட்டெடுத்து அங்கிருந்த சீன கூலி தொழிலாளருக்கு ஒரு முதலாம் உலக நாட்டை ஆக்கி தந்த லீ குவான் யு உடன் அவரை ஒப்பிடுகையில் நீங்கள் சொல்வது உண்மை என்றே நானும் நினைக்கிறேன். 

7 hours ago, Dash said:

தமது வாதம் தோற்றவுடன் இப்படி எஸ்கேப் ஆவது தான் இவர்களது வழக்கம்

வாதம் இருந்தால் விவாதிக்கலாம். தோற்றவர்கள் வெற்றி விழா கொண்டாடுவதும் உண்டு. வென்றவர்கள் அமைதியாக வெற்றியை அனுபவிப்பதும் உண்டு. நீங்கள் வெற்றி விழா கொண்டாடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அவரது சம காலத்தில் இதேவிதமான பிரச்சினைக்கு மலேசிய பூமி புத்திரருடன் சாதுரியமாக அரசியல் செய்து சிங்கபூரை மீட்டெடுத்து அங்கிருந்த சீன கூலி தொழிலாளருக்கு ஒரு முதலாம் உலக நாட்டை ஆக்கி தந்த லீ குவான் யு உடன் அவரை ஒப்பிடுகையில் நீங்கள் சொல்வது உண்மை என்றே நானும் நினைக்கிறேன். 

மலேசியர்களை ...இனவெறிச் சிங்களவனுகளுடன் ஒப்பிடுகிறீர்களா ....?
லீ குவானிட்கு இருந்த தலையிடி குட்டை மண்டிப்போய் நுளம்பு விதைக்கப்பட்ட நாட்டை முன்னேற்றுவது ...சிங்கப்பூரை மீட்டெடுக்க அவரொன்றும் பெரிய பிரளையம் செய்யவில்லை..அவரும் மலேசியாவுடன் சேர்ந்திருக்க தான் விரும்பியவர்  ...ஆனாலும் மலேசியா கழட்டி விட்ட நாடுதான் சிங்கப்பூர்...அவர் தந்தை செல்வா போன்று இனவெறியர்களுடன் மோதவில்லை ..சும்மா வரலாற்றை உங்களுக்கு விரும்பியது போல (மகாவம்சம் போல ) திரிக்காதீர்கள்  

Link to comment
Share on other sites

On 6/2/2016 at 2:08 AM, அக்னியஷ்த்ரா said:

மலேசியர்களை ...இனவெறிச் சிங்களவனுகளுடன் ஒப்பிடுகிறீர்களா ....?
லீ குவானிட்கு இருந்த தலையிடி குட்டை மண்டிப்போய் நுளம்பு விதைக்கப்பட்ட நாட்டை முன்னேற்றுவது ...சிங்கப்பூரை மீட்டெடுக்க அவரொன்றும் பெரிய பிரளையம் செய்யவில்லை..அவரும் மலேசியாவுடன் சேர்ந்திருக்க தான் விரும்பியவர்  ...ஆனாலும் மலேசியா கழட்டி விட்ட நாடுதான் சிங்கப்பூர்...அவர் தந்தை செல்வா போன்று இனவெறியர்களுடன் மோதவில்லை ..சும்மா வரலாற்றை உங்களுக்கு விரும்பியது போல (மகாவம்சம் போல ) திரிக்காதீர்கள்  

மலேசியர்கள் சிங்கலவர்களிலும் பார்க்க இன வெறி கொண்டவர்கள். மலேசியாவில் இன ரீதியாக மக்கள் பிரிக்கப்பட்டு மலாய் இனத்தவர்களுக்கு எதிலும் முதலிடம் கொடுக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. மேற்படிப்புக்கான புலமைப்பரிசில்கள் மலே இனத்தவருக்கு  மட்டுமே வழங்கப்படும். எந்த வணிக முயற்சிக்கும் ஒரு மலாய் இனத்தவர் பங்குதாரராக இருந்தாலே உரிமை வழங்கப்படும். இலங்கையில் சிங்களவர்கள் இனரீதியாக சிங்களவர் என்ற அடிப்படையில் முதலிடம் பெற்றவர்கள் என்று சட்டத்தில் எழுதப்படவில்லை. மலேசியாவில் மலாய் இனத்தவர்கள் முதல் குடிமக்களாகவும் ஏனையவர்கள் இரெண்டாம் குடிமக்களாகவும் சட்டரீதியாக கணிக்கப்படுகிறார்கள். 

சிங்கபூர் விடுதலை அடைந்த விதம் பற்றியும் லீ குவான் யு எப்படி சிங்கபூர் விடுதலைக்கு துங்கு ரஹ்மானுடன் ஒப்பந்தம் செய்து அவரை மலேசிய பிரதமர் ஆக்குவதற்கு சீனர்களின் வாக்கு பலத்தை பயன்படுத்தினார் என்பதையும் அதன் பின்னர் எப்படி சிங்கபூரை முதலாம் உலக நாடாக்கினார் என்பதையும் உலக வரலாறு நன்கு பதிந்திருக்கிறது. நீங்கள் தான் சிங்கபூர் வரலாற்றை திரித்து இலங்கையில் தோற்றுப்போன தலைமைகளுக்கு சாட்டு போக்கு காட்ட முயலுகிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.