Jump to content

ஒரு திடீர் இலங்கை பயணம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

என்னை தாராளமாக சந்திக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன் - அரசியல் பேசக் கூடாது.

நண்பர்களாக யார் வேணுமெண்டாலும் சந்திக்கலாம்.

அட இப்படித் தொிந்திருந்தால் ஒருக்காச் சந்தித்து இருக்கலாம்.வடை சம்பலோட போச்சே.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தெனாலி said:

அதுக்கு இப்ப என்ன செய்வது? தீர்வு கிடைக்க மட்டும் அங்கிருக்கிற மக்கள் கஷ்டபட வேணுமா? 

மக்கள் கஷ்டப்படுவதை இங்கே யாருமே விரும்பவில்லை. ஆனால் தீர்வு வருமெண்டு 70 வருசமாய் காமெடி பண்ணப்படாது.

ஏதோ இவ்வளவு காலமும் றோட்டுக்கும் ரயிலுக்கும் சண்டை பிடிச்சமாதிரியேல்லெ இஞ்சை சில திரியள்ளை வாசிக்க வேண்டிக்கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அடுத்த வருடம் போக வேண்டும் என்று விருப்பம் இருக்குது பார்ப்பம்

வாங்கோ நான் உங்களுக்கு பாதுகாப்பு ??

10 hours ago, Thirdeye said:

கடைசியாக நான் போனவருசம் போனபோது 18ஆயிரம் முடிஞ்சுது கயஸ் புடிச்சு போனான்.கொஞ்ச பெறுமதியான சாமான் கள் கொன்டுபோனதால் கயஸ்.திரும்பிவரும்போது பஸ்தான்.1500ரூவா. அநியாயகாசு.ஜீவன்சிவா சொல்லேக்க இப்பான் தெரியுது இன்ரசிற்றியில் இதே காசுக்கு இவ்ளா வசதியாபோகலாம் என்டு.இணையத்தில் புக்பண்ணலாம ஜீவன்சிவா? இந்தமுறை வரும்போது நீங்கள் சம்மதித்தால் உங்களை சந்திக்க வாறன்.முனிவர் ஓகேன்னா முனிவரையும் சந்திக்கபோகலாம்.

கிழக்கு பக்கம் வந்தால் தனிமடல் அனுப்பி தொடர்பு கொள்ளுங்கள் நண்பா மூன்றாவது கண் 

அரசியல் எனக்கும் தெரியாது நண்பாகி பழகி மகிழ்வோம் ஜீலை முதற் பகுதியில் கதிர்காமம் பாதயாத்திரை சென்று விடுவேன் அதன் முன்பு அறியத்தரவும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மக்கள் கஷ்டப்படுவதை இங்கே யாருமே விரும்பவில்லை. ஆனால் தீர்வு வருமெண்டு 70 வருசமாய் காமெடி பண்ணப்படாது.

ஏதோ இவ்வளவு காலமும் றோட்டுக்கும் ரயிலுக்கும் சண்டை பிடிச்சமாதிரியேல்லெ இஞ்சை சில திரியள்ளை வாசிக்க வேண்டிக்கிடக்கு

அங்கத்தைய இண்டய நிலைமை, பார்த்த வாறே சொல்வதற்க்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு, அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அங்கத்தைய இண்டய நிலைமை, பார்த்த வாறே சொல்வதற்க்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு, அண்ணை?

நீங்கள் மேற்கோள் காட்டிய கருத்திற்கு நான் உங்கள் திரியை மையப்படுத்தி கருத்தெழுதவில்லை. இதர பின்னோட்டங்களை மனதில் வைத்தே எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் மேற்கோள் காட்டிய கருத்திற்கு நான் உங்கள் திரியை மையப்படுத்தி கருத்தெழுதவில்லை. இதர பின்னோட்டங்களை மனதில் வைத்தே எழுதினேன்.

சுருக்கமா ஆள்பாத்து கருத்தெழுதினன் என்டு சொல்லுங்கோவன்.

நண்பர்கள் ஜீவன் சிவா,முனிவர்ஜீ நான் அரசியல் யாழுடன்மட்fஉம்தான்.அதைதான்டி எனக்கு யதார்த்த வாழ்வில ஊரில இருக்கிற சாதாரண் சனம் மாதிரி வயித்துப்பாட்டுக்கு உழைக்கிற போராட்டம்.இங்கினை யாழில குத்திமுறியிரவ மாரி இல்ல நான்.நான் யதார்த்த மனுசன்.உந்த அரசியல் உதுகளுக்கு நேரமில்ல. கன்டிப்பா நேரில் சந்தித்தால் நல்லா தின்டு குடிச்சு ஞாபகங்களை பகிர்ந்து மகிழலாம் மகிழலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மக்கள் கஷ்டப்படுவதை இங்கே யாருமே விரும்பவில்லை. ஆனால் தீர்வு வருமெண்டு 70 வருசமாய் காமெடி பண்ணப்படாது.

ஏதோ இவ்வளவு காலமும் றோட்டுக்கும் ரயிலுக்கும் சண்டை பிடிச்சமாதிரியேல்லெ இஞ்சை சில திரியள்ளை வாசிக்க வேண்டிக்கிடக்கு

நல்ல ரோடும், ரயிலும் கிடைக்கும் என்றுதானே

போராடாமல் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தனீர்கள்?

அதையே ஊரில் உள்ளவர்களுக்கு கிடைக்கும்

போதும் மட்டும் உங்களுக்கு சுதந்திரம் பற்றிய சிந்தனை

 

இப்படியான எல்லா திரிகளிலும் வந்து தங்கள் சுயநல அரசியலை

பேசி குழப்பி அடித்து

எவரையும் எழுதாமல் விட வைக்க கஷ்டப்படுகின்றீர்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வைரவன் said:

நல்ல ரோடும், ரயிலும் கிடைக்கும் என்றுதானே

போராடாமல் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தனீர்கள்?

அதையே ஊரில் உள்ளவர்களுக்கு கிடைக்கும்

போதும் மட்டும் உங்களுக்கு சுதந்திரம் பற்றிய சிந்தனை

இப்படியான எல்லா திரிகளிலும் வந்து தங்கள் சுயநல அரசியலை

பேசி குழப்பி அடித்து

எவரையும் எழுதாமல் விட வைக்க கஷ்டப்படுகின்றீர்கள்

வைரவரே! நான் நல்ல ரோட்டுக்கும் ரயினுக்கும் புலம்பெயர்ந்தேன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள்? புலம்பெயர்ந்த தமிழருக்கு என்ன காரணத்திற்காக சுயநல அரசியல் தேவைப்படுகின்றது என்பதை ஒருதரம் விளக்குவீர்களா?

பேசி குழப்பியடித்து எவரையும் எழுத விடாமல்..........இது எனக்கு துண்டற விளங்கேல்லை :mellow:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தம்பி ஊர் பக்கம் வந்து போனதை பற்றி எழுதியதற்கு என்ன விமர்சனம் இங்கே ?

இப்ப இருக்கும் ஊர் இதுதான் அந்தக் காலத்தில் இருந்தததை நினைத்து வராதீர்கள்  ஊர் மக்கள் ஒவ்வொருவரும்  மாறிவிட்டார்கள் எப்படி யெல்லாம்  வாழவேண்டும் என்று ஆகவே மக்காள் எல்லோரும் ஊர் பக்கம் சுற்றி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு போங்கள் 

எத்தனை பேர் ஊர்  வந்து சத்தம் இல்லாமல் சென்று இருக்கிறார்கள் என்பது மூஞ்சு புத்தகத்தில் இணைத்த படங்களை பார்த்தே தெரிந்து கொள்ள கூடியதாகள் இருக்கிறது ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 23 May 2016 at 11:25 AM, Nathamuni said:

ஒரு திடீர் இலங்கை பயணம்.

முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன்.

யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான்.

போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய்  பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்)

ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். 

கொழும்பில் மீட்டர் ஆட்டோ பிடித்தால், கட்டணத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனினும் வெள்ளவத்தையில் இருந்து, புறக்கோட்டை செல்ல ஆட்டோ 1000 என்றார்கள். பின்னே வந்த பஸ்ஸில் ஏறினால் 12 ரூபா.

சலூனில் ஷேவ் எடுக்கப் போனால், முதலே எவ்வளவு என்று கேட்டால், லோக்கல் ரேட் 100 ரூபா. முடிஞ்ச பிறகு கேட்டால் 300 முதல் 500 வரை. (ஷேவ் எடுத்துப் பாருங்கள், நெடுக ஸெல்ப் ஷேவ் எண்டு, வறாண்டிக் கொண்டு இருபவர்களுக்கு, நல்ல ஒரு அனுபவம். ஆனால், டிசு பேப்பர் பாவிக்க வேண்டும், ஜெல் கையினால் பூச வேண்டும், முகம் துடைக்க, அவர்களது துவாய் பாவிக்கப் படாது என்று சொல்லி வையுங்கள். அப்படியே ஒரு டிப்ஸ் கொடுத்து விடுங்கள். அடுத்த நாள் இன்னும் அமர்க்களமாய் எடுத்து விடுவார்.).

ஹோட்டல் மிகவும் அதிகமாக அறவிடுகிறார்கள். நேரே போனால் அதிகமாக சொல்வார்கள் (களைப்புடன் வருபவர்கள் அங்க, இங்க போய் மினக்கட மாட்டர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரம்). 

நான் booking.com மூலம், ஒரு ஹோடேலில் இருந்து மறு ஹோட்டலுக்கு போகும் முன்னர் புக் பண்ணிக் கொண்டே போதால், மலிவான டீல்கள் கிடைத்தன. ஆகவே அங்கே இருக்கும் போதே, இவ்வகையில் புக் பண்ணுங்கள். ஆட்டோ, வாடகை கார்களுக்கு, கொண்டு வரும் வாடிக்கை யாளருக்கு, கொமிசனோ, ரெஸ்டாரன்ட் ஆயின், ஒரு சாப்பாடு பார்சலோ கிடைப்பதால், உங்களுக்கு பொருத்தம் இல்லாத இடங்களை காட்டி, கட்டி அடித்து விடுவார்கள்.

நான் booking.com மூலம் எடுத்த அதே $29 ரூம், நேரே சென்ற ஜேர்மன் தமிழருக்கு $70.

ரயில் பயணம் சிறப்பு. அதிகூடிய விலை 1300 ரூபா. அதிகுறைந்த விலை 370 ரூபா. 

பஸ்கள் 1300 ரூபா, ஆனால், அந்த பணத்தினைக் கொடுக்கக் கூடிய வகையில் ஓரிரு நிறுவன பஸ்களே தரமானவையாக உள்ளன. அதாவது எல்லோரும் 1300 ரூபா அறவிடுவதால், பல தரமில்லாத பஸ்களும் ஓடுகின்றன. கொமிசன் அதிகமாக கிடைப்பதால், தரம் இல்லாத பஸ்களை, தரமானதாக சொல்லி விற்பார்கள். அண்மைய மழையில் பஸ்கள் ஒழுகி, மக்கள் பணத்தினைக் திருப்பக் கேட்டதால், சில பஸ்கள் ஓடாமல் இருந்தன. மேலும் இவ்வைகையான பஸ்களில் A/C புல்லாக போட்டு விடுவார்கள். மக்கள் குளிரில் நடுங்கி வெடவெடத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கவலை இல்லை.

மிக முக்கியமாக, கொழும்பு - யாழ், யாழ் - கொழும்பு பஸ் பதிவுகளில் கவனமாக இருங்கள்.  மிகச் சிறந்த பஸ்களை மட்டுமே கேட்டு பதிவு செய்யுங்கள். வெங்கடேஸ்வரா, குணசேகர பஸ்கள் நல்ல தரம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியாக A/C கொன்றோல் பண்ண முடியும். நான் குணசேகர பஸ் லில் வரும் பொது பயணித்தேன்.

எனினும் புறக் கோட்டையில் இருந்து CTB பஸ்கள் மலிவு விலைகளில் செல்கின்றன (ரூபா 370?). பஸ் இலக்கம் 87.

தரமில்லா 1300 ரூபா பஸ்களிலும் பார்க்க, இந்த அரச பஸ்கள் நன்றாக உள்ளன. நீண்ட தூரமாயின், விசேட இருக்கைகள் (சாய்ந்து படுக்கக் கூடியாவாறு) உள்ளன.

நல்ல உணவு விடுதிகள் உண்டு. கொள்பிட்டியில் க்ரீன்கபே நன்றாக இருந்தது. ராஜ போஜன் உணவகம் ரூபா 1950 புபே. மிகவும் அதிக கட்டணம். curry leves வெள்ளவத்தையில் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நான் போக முடியவில்லை. 

யாழ் சந்தையில் பலாப்பழம் ஒரு துண்டு வாங்கி, அந்த பாட்டியம்மா விடமே பேசி, கொஞ்சம் காசு கொடுத்து சுளை ஆய்ந்து வாங்கியதால், ஹோட்டல் கொண்டு போய் சுவைக்கக் கூடியதாக இருந்தது. மாம்பலமும் அவ்வாறே. இன்னும் முழு பலாப் பழ சீசன் வரவில்லை.

யாழ் ரயில் நிலையத்தில் உத்தியோகத்தர்களாக, சிங்கள இளஞர்கள் டிக்கெட் வியாபாரம் செய்கிறார்கள். சிங்களத்தில் கேட்டால், தமிழில் பதில் அளிக்கிறார்கள். ஆச்சரியத்துடன் அவர்களது சூப்பெர்வைசெர் ஆயிருந்த தமிழ் அதிகாரியுடன் கதைத்த போது, இப்போதெல்லாம், அரச வேலைகள் பெறுவதாயின், தமிழர்கள் சிங்களமும், சிங்களவர்கள் தமிழும் சித்தி அடைய வேண்டுமாம். 

யாழ் நீதி மன்று பார்க்க போனேன். வாசில் இருந்த போலிஸ் கார் கூப்பிட்டு, சேட்டினை இன் பண்ணி போங்கோ என்கிறார் தமிழில்.

திரும்பி வரும் போது, கேஸ் முடிந்ததா என்றார். இல்லை, பல ஆண்டுகள் பின்னால் பார்க்க வந்தேன் என்றேன். ஆரவத்துடன் உரையாடினார். நாடு முழுவதுமே யுத்தத்தினால் பாதிக்கப் பட்டது. இன்று முழு நாடுமே நிமதியாக உள்ளது. விரைவில் தீர்வு வர வேண்டும் என்றார். தண்ணீர் போத்தல் ஒன்றையும் தந்தார்.

யாழில் சில இளையோரின் இன்றைய தளம்பல் நிலை, விரைவில் மாறும் என்றார் ஒரு லோயர். அவர்கள் இடையே நோக்கம் இன்றி தடுமாறு கின்றனர். நோக்கம் தெளிவாகும் போது தடுமாட்டம் நீங்கும் என்றார். பல புலம் பெயர்ந்தோர் முதலீடு செய்வதால் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அதே வேலை யாழில் இருந்த திறமையான, ஏலேக்ட்ரிசியன், பிளமேர், மேஸ்திரி மார் கொழும்புக்கு அதிக சம்பளத்துக்கு கடத்தப் பட, அங்குள்ள அப்பிரசெண்டிங்குகள் இங்கே வருகிறார்கள்.  அதனால் வேலைகளில் தரமில்லை.

டியூஷன் சென்டர், அதன் விளம்பரங்கள் மட்டும் எந்த வித வித்தியாசமும் இல்லை.

ஆளில்லா டீக்கடையில், யாருக்கு டீ ஆத்துகிறார்கள் என்ற வகையில், ஆக்களே வராத கோயில்கள் எல்லாம், கோபுரம், குளம், மதில் என்று பிரகாசிகின்றன. வெளிநாட்டார் உபயம். 

அருமையான ரோட்டுக்கள் அமைந்துள்ளன. ஆர்மிக்காரர், தாமும் தம் பாடும். அவர்களுடன் சொறியாவிடில், அவர்கள் ஏனப்பா சொறியப் போகினம் என்றார் ஒரு உறவுப் பெரிசு.

நம்ம ஜீவன் சிவாவை சந்திக்க திட்டம் போட்டு, செவ்வாய் காலை ரயில், வெள்ளம் காரணமாக ரத்தாகியதால், ஒரு நாள் இழந்து, சந்திக்க முடியவில்லை.

பழைய unlock பண்ணிய ஆப்பிள் போன் கொண்டு போய், ஏயர்போட்டில், Dialog இன்ரநெற்றுடன், சிம் வாங்கி, அதை personal hotspot ஆக பாவித்ததால், கொண்டு போன ஆப்பிள் ஐபோன் 6 க்கு எந்த நேரமும் wifi இணைப்பு கிடைத்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் நாதர்...

அரசியல் இல்லை

அரசியல் இல்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தானே ராசா...

இங்க  ஜீவன் சிவா 

அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்கிறார்

ஆனால் அவர் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் திரியிலும் அரசியல் இருக்கிறது....

 

Link to comment
Share on other sites

11 hours ago, விசுகு said:

நல்ல விடயம் நாதர்...

அரசியல் இல்லை

அரசியல் இல்லை என்று சொல்வதே ஒரு அரசியல் தானே ராசா...

இங்க  ஜீவன் சிவா 

அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்கிறார்

ஆனால் அவர் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் திரியிலும் அரசியல் இருக்கிறது....

 

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அரசியல் இருக்கும், வேறுபட்ட பார்வைகள் இருக்கும், அதனை ஏற்றுக்கொள்ள  முடியாதவர்களுடன் முட்டி மோதி நானும் ஒரு சாதாரண வெறியனாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

அப்பு, நான் அரசியல் வேண்டாமென்பது  நண்பர்களாக சந்திக்கும்போது. சந்திப்புகள் சண்டையில் முடியக்கூடாது என்பதால். நான் யாழுக்கு வெளியே அரசியல் கதைப்பது மிகவும் அரிது - எனது நண்பர்கள் குழாம் அதனால்தான் பெரியது, பரந்துபட்டது. என்னை சந்தித்த யாழ் உறவுகளை கேட்டால் சிலவேளைகளில் விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

ஏன் நான் உங்களையே சந்தித்திருக்கிறேன்

நன்றி

வணக்கம்

1-saroja-devi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்னியும் இங்கேதான் ....வாருங்கோ மீட்டிங்கை போடுவோம் ...But NO அரசியல் 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமா சந்திப்பது ...புலத்தவர்களும் ஒரு சந்திப்பை நடத்திட்டால் போச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்னியும் இங்கேதான் ....வாருங்கோ மீட்டிங்கை போடுவோம் ...But NO அரசியல் 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமா சந்திப்பது ...புலத்தவர்களும் ஒரு சந்திப்பை நடத்திட்டால் போச்சு 

ஓ அதுக்கென்ன நடந்துவம் அக்கினி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அரசியல் இருக்கும், வேறுபட்ட பார்வைகள் இருக்கும், அதனை ஏற்றுக்கொள்ள  முடியாதவர்களுடன் முட்டி மோதி நானும் ஒரு சாதாரண வெறியனாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

அப்பு, நான் அரசியல் வேண்டாமென்பது  நண்பர்களாக சந்திக்கும்போது. சந்திப்புகள் சண்டையில் முடியக்கூடாது என்பதால். நான் யாழுக்கு வெளியே அரசியல் கதைப்பது மிகவும் அரிது - எனது நண்பர்கள் குழாம் அதனால்தான் பெரியது, பரந்துபட்டது. என்னை சந்தித்த யாழ் உறவுகளை கேட்டால் சிலவேளைகளில் விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

ஏன் நான் உங்களையே சந்தித்திருக்கிறேன்

நன்றி

வணக்கம்

1-saroja-devi.jpg

 

 மேலே நான் தப்பாக ஏதும் எழுதவில்லை

அவரவர் விருப்பமது

வருபவரை இப்படி என்றால் தான் வரவும் என்பது நாகரீமாகாது..

அதை அவர் தான் தீர்மானிக்கணும்

உறவை தொடர்வதா வேண்டாமா என...

அதைத்தான் எழுதினேன்..

நோர்வேயிலிருந்து என்னை சந்தித்திருக்கின்றீர்கள் என்றால்

உங்களுக்கு உடல் முழுக்கு சனி தான்..:grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தமிழர் தேசத்தின் 0.01% க்கு குறைவான, அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதிகளை மேலோட்டமாக பார்த்துவிட்டு எழுதியுள்ளீர்கள். எழுதிய விடயங்களில் பெரும்பாலானவை உண்மை தான். சில பிழைகளும் உள்ளன. அவை இருக்கட்டும்.

நானும் ஓரிரு வருடங்களின் முன்னர் யாழ் ரொலெக்ஸ் ஹோட்டலில் சாப்பிடச்சென்ற போது முன்னால் வந்து அமர்ந்த சிங்கள போலீஸ்காரருடன் எனக்கு தெரிந்த சிங்களத்தில் சுமூகமாக கதை அளந்துவிட்டு சேதம் இல்லாமல் திரும்பினேன்.

சீருடையில் வந்த அவர் தான் என்னை ஒருமாதிரி பார்த்தவிட்டு சிரிச்சார். பிறகு எந்த ஊர் என்டு கதைக்க தொடங்கினார். இந்த வம்பு வேண்டாம் என்று நினைச்சாலும், ID  ஐ காட்டு என்டு கேக்கமாட்டார் என்ற நம்பிக்கையில், சிங்களமும் கொழும்பும் ஓரளவு தெரியும் என்பதால், ஒரு திரில்லில் ஊர் கொழும்பு என்று சிங்களத்தில் சொல்ல, அவர்  கொஞ்சம் குஷியாக சிங்களத்தில் கதைக்க தொடங்கினார்.

தான் முல்லைத்தீவில் இருந்து 2 மாதங்களுக்கு முன்னர் மாற்றலாகி  யாழ் வந்ததாகவும், யாழ் மக்கள் தங்கமானவர்கள் என்றும் மெய்மறந்து சொன்னார். முல்லைத்தீவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

நெற்றியில் சந்தனப் பொட்டைப் பார்த்து கோவிலுக்கு போய் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, முல்லைத்தீவில் முஸ்லிம்கள் ஒரே பிரச்சினை என்றார். நானும் கொஞ்சம் உசுப்பேத்தி விட்டன். ஏக்கர் கணக்கில் காடழித்து ஒரு குடும்பத்தில் உள்ள 3 பெரியவர்களுக்கும் தனிக் காணிகள் கொடுப்பதாகவும், அவர்களுக்கு புத்தளத்தில் வேறு காணிகளும் வீடுகளும் இருப்பதாக ஆவேசப்பட்டார். மிகப் பெரிய பகல் கொள்ளை நடக்கிறது என்றும் சொன்னார்.  

அரச அமைச்சர்கள் அரச அனுசரணையில் தானே இதை செய்கிறார்கள் என்று நான் சொல்ல, கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், ஓம் ஓம் அரசு மட்டுமல்ல முஸ்லிம் நாடுகளும் தலையிடுகின்றன. அதான் தாங்கள் சட்டத்தை பேணமுடியாமல் இருக்கு என்றார். தமிழ் மக்கள் இப்பிடி ஒருநாளும் கள்ளக் காணி பிடிக்கவில்லை என்றும், அவர்கள் தாங்கள் இழந்த காணிகளைத் தானே கேக்கிறார்கள் என்று அவரே ஒரு உண்மையையும் உளறினார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நானும், நாங்கள் தமிழர், புலிகள் உங்களுடன் நேரடியாக எமது உரிமைகளை கேட்டு நேரடியாக தானே சண்டை போட்டோம். இப்படி கூடவே இருந்து கழுத்தறுக்க இல்லையே என்றதுக்கு, ஓம், ஓம் என்று தலையாட்டினார். நாங்களும் நீங்களும் நேருக்கு நேர் சண்டை பிடிக்க அவர்கள் இடையில் புகுந்து நிறைய சுருடிக்கொண்டிருகிரார்கள் என்றேன். அதற்கு அவர் தமிழர்கள் தங்கமானவர்கள் என்று இப்ப தனக்கு விளங்குவதாகவும் கூறினார். பிரபாகரன் ஐயா வெளிநாட்டுகாரருக்கு நாட்டை அடகுவைக்கவில்லை என்றும் கூறினார். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நம் நாட்டை அந்த கள்ளகாணி பிடிக்கும் மக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

அவர் பிரபாகரனுக்கு "மாத்தையா" என்ற மரியாதை கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.  

அருகில் இருந்தவர்கள், சிங்களம் விளங்கினவர்கள் வியர்க்க விறுக்க எங்கள் சத்தமான உரையாடல்களை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு மேசையில் இருந்த 2 பேர் முஸ்லிம்கள் போல இருந்தனர். நான் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் தலையை குனிந்து கொள்வார்கள்.

சரி எல்லை தாண்டக் கூடாது, என்பதால் சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் ஆசையையும் மறந்து அந்த போலீஸ்காரர் சாப்பிட்டு முடிப்பதற்கு முன் பில்லை கொடுத்துவிட்டு வேக வேகமாக சென்று மறைந்துவிட்டேன்.

ஒரு சிங்கள போலிஸ்காரரிடம் புலிகளின் போராட்டத்தை பகிரங்கமாக நியாயப்படுத்த முடிந்ததால் யாழ் நிலை இப்ப பரவாயில்லை என்று முடிவெடுத்துவிடக் கூடாது. என்னால் அவரிடமிருந்து சுலபமாக தப்பிவிட முடியும் என்ற சந்தர்பங்கள் இருந்தபடியால், கொஞ்சம் முரட்டுத் தைரியமும்  இருந்தபடியால் தான் அன்று அப்படி நடக்க முடிந்தது.

வவுனியாவிலிருந்து யாழ் வரை உள்ள A9 வீதியின் இரண்டு பக்கமும் 2, 3 km துரத்துக்கு மேல் உள்ளே சென்று வருபவர்கள் மட்டும் தான், அங்கு சில நாட்கள், 1-2 வாரங்கள் தங்கினால் மட்டும் தான், தமிழர்கள் இன்னும் நரக வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வார்கள்.

பாடசாலை மாணவிகள், ஆண்கள் இல்லா குடும்பம் நடத்தும் பெண்கள் தினமும் அனுபவிக்கும் திகில் சூழ்நிலைகள், பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல தூண்டப்படும் கொடூரங்களையும் காணலாம், அறியலாம்.  
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.