Jump to content

6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்)


Recommended Posts

6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்)

jaya1a.jpg

 

6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Ministers.jpg

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். ஆளுநரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.


stalin1.jpg

இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் உள்பட 14 பேருக்கும், பின்னர் ராஜேந்திர பாலாஜி உள்பட 14 பேருக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Untitled10.jpg

இந்த விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை ஆதீனம், நடிகர் சரத்குமார், சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் டாக்டர் சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

sasikala.jpg

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பது இது 6வது தடவை. ஏற்கனவே, 1991 முதல் 1996ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையும், 2011 முதல் 2016 வரையும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்துள்ளார். இடையில் 2 முறை அவர் பதவி விலக நேரிட்டு, மீண்டும் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

http://www.vikatan.com/news/politics/64481-jayalalithaa-takes-oath-for-the-6th-time-as-cm.art

Link to comment
Share on other sites

Nelson Xavier
9 hrs · 
 

" பதவியேற்பிற்கு ஓரிரு நாட்களுக்கு முன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்து போகிறார். மாவட்ட செய்தியாளர் தகவலை செய்தியறைக்கு தெரிவிக்கிறார். செய்தி ஒளிபரப்பாகிறது. கட்சி, குடும்பம் என எல்லா தரப்பினரும் அவசரமாக மறுக்கிறார்கள். அவர் சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார்கள். அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள். செய்தி நிறுவனத்துக்கும், மாவட்ட செய்தியாளருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் மரண செய்தியை உறுதி செய்த மருத்துவர் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நான்கு நாட்களாக தவறான செய்தியை வழங்கிவிட்டதாக அவரை வாட்டி எடுக்கிறார்கள். அரசின் பதவியேற்பு வைபவத்திற்கு பிறகு மரணசெய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. இம்முறை அந்த செய்தியாளர் அந்த செய்தியைப் பற்றி பேசவே இல்லை. ஒரே செய்தியை அவரும் எத்தனைமுறைதான் சொல்லுவார்."

தற்போது எழுதிவரும் "பொற்கால ஆட்சியின் தொடக்கத்திலேயே " என்னும் நாவலில் இருந்து ஒரு பகுதி !

***********************************************************************************************************

மேலே உள்ள பதிவைப் போட்டவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணிபுரியும் நெல்சன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.