Jump to content

நாட்டில் இனியொரு யுத்தம் உருவாகுமானால் அது கிழக்கு மாகாணத்திலிருந்தே ஆரம்பிக்கும்! - கிழக்கு முதலமைச்சர்


Recommended Posts

நாட்டில் இனியொரு யுத்தம் உருவாகுமானால் அது கிழக்கு மாகாணத்திலிருந்தே ஆரம்பிக்கும்!

கிழக்கு மாகாணம் இன்னமும் அதிகார அடக்குமுறையின் கீழே உள்ளதாகவும், பலர் பேரினவாத அதிகார மனப்பான்மையுடனே நடந்துகொள்வதாகவும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் ஒரு செயல் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மீள் குடியேறிய சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணினிப் பிரிவு என்பவற்றை கடந்த சனிக்கிழமையன்று திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்கவேண்டிய பொறுப்பை கிழக்குமாகாண சபை சுமந்துநிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சயமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்து முடிக்கும். பாதிக்கப்பட்ட மக்களை சொந்தக்காலில் நிற்கச் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தி சம்பூரை நகரமாக மாற்றும் பொறுப்பை நாம் செய்துகாட்டுவோம். இதற்கெல்லாம் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறுவது அவசியம்.

கிழக்குமாகாணம் பேரினவாத சக்திகளின் மமதையிலிருந்து விடுபடவேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 2 இலட்சம் பேர் எந்தவொரு வேலைவாய்ப்புமின்றி நாளாந்தம் போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக நாளாந்தம் எம்மைச் சூழ்ந்துகொள்கின்றார்கள். இவற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமானால் எமது மாகாணசபைக்கு அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும் நிதியும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

அரசியலமைப்பில் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ளது. எமது பிராந்தியத்திலுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் ஆளுநர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அடக்கி ஆள்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் 95 வீதமான பாடசாலைகள் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தின்கீழே காணப்படுகின்றன. கல்வி நிலையில் கிழக்கு மாகாணம் 8ஆவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு கல்விக்கான நிதியில் 8 வீதம் கூட மத்திய அரசு ஒதுக்குவதில்லை. இது கவலையளிக்கும் விடயம். அத்துடன் இந்தநிலை மாற்றப்படாவிட்டால் நாட்டில் சமாதானத்தை அடையமுடியாது.

இந்த நாட்டில் இனியொரு புரட்சி வெடிக்குமாக இருந்தால் அது கிழக்குமாகாணத்தில் வேலையில்லாமல் நாள்தோறும் அலைந்து திரியும் 2 இலட்சம் பேரால்தான் ஆரம்பிக்கப்படும் என்பதை இந்த நாட்டுக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=27599

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய தீவீரவாதம் விரைவில் வரப்போவதை மறைமுகமாக கூறுகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெரியார் said:

வேலையில்லாதோர் புரட்சி போல.

ஆயுதம் தேவையில்லை இதற்கு.

இப்படிப்பட்ட புரட்சிகளை அலட்சியப்படுத்துவதும், அடக்குவதும், நளினப்படுத்துவதும் ஆயுதத்துக்கு வழிவகுக்கலாம். 

Link to comment
Share on other sites

கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் வேலையில்லாப் பட்டதாரிகள் இருப்பதை, கிழக்கின் முதலமைச்சர் மறந்து பேசுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப்புண்ணும் மருந்து தேடித்தான்  வலிக்குது. அவனவன் தனது வலி பெரிதென்று  முதல் மருந்து போட முயற்சிக்கிறான். பெருத்த புண்காரன் வலிபட்டுப்பட்டு மரத்துப்போய் இருக்கிறான். 

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

இப்படிப்பட்ட புரட்சிகளை அலட்சியப்படுத்துவதும், அடக்குவதும், நளினப்படுத்துவதும் ஆயுதத்துக்கு வழிவகுக்கலாம். 

இப்படி அலட்சியப்படுத்தி. அடிமைப்படுத்தி. நளினப்படுத்தும் எண்ணங்கங்கள் தமிழர்கள் மனங்களில் மிதமிஞ்சி வளர்க்கப்பட்டதால் இன்று அதன் சுமைதாங்க முடியாது மண்ணிற்குள் கிடக்கிறார்கள் தமிழர்கள். :(

Link to comment
Share on other sites

22 hours ago, பெரியார் said:

கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் வேலையில்லாப் பட்டதாரிகள் இருப்பதை, கிழக்கின் முதலமைச்சர் மறந்து பேசுகிறார்.

நிச்சயமாக வடக்கு கிழக்கை விடை குறைவாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.அரசு, தமிழர், முஸ்லிம்களை பாராமுகமாக இருக்கிறார்கள் என்ற கூற்று எப்படி பிழையாகும் என கூற முடியுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் (கிழக்கு) வியாழேந்திரன் அவர்களின் சில உரைகளை கேட்டால் கிழக்கு தமிழரின் நிலை புரியும்.

http://www.tradingeconomics.com/sri-lanka/unemployment-rate

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

நிச்சயமாக வடக்கு கிழக்கை விடை குறைவாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.அரசு, தமிழர், முஸ்லிம்களை பாராமுகமாக இருக்கிறார்கள் என்ற கூற்று எப்படி பிழையாகும் என கூற முடியுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் (கிழக்கு) வியாழேந்திரன் அவர்களின் சில உரைகளை கேட்டால் கிழக்கு தமிழரின் நிலை புரியும்.

http://www.tradingeconomics.com/sri-lanka/unemployment-rate

வட, கிழக்கிற்கு அப்பாலும் தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள்  வேலையின்றி இருக்கிறார்கள்.

அவர்களின் நிலைமையையும் கிழக்கின் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு பேசினால் நல்லது. 

Link to comment
Share on other sites

5 hours ago, பெரியார் said:

வட, கிழக்கிற்கு அப்பாலும் தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள்  வேலையின்றி இருக்கிறார்கள்.

அவர்களின் நிலைமையையும் கிழக்கின் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு பேசினால் நல்லது. 

கிழக்கு முதலமைச்சருக்கு அடுத்த மாகாணங்களில் என்ன வேலை?

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

கிழக்கு முதலமைச்சருக்கு அடுத்த மாகாணங்களில் என்ன வேலை?

வேலை இல்லைதான்.  

வேறு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர் பேசுவது நல்லது.

Link to comment
Share on other sites

5 hours ago, பெரியார் said:

வேலை இல்லைதான்.  

வேறு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர் பேசுவது நல்லது.

கிழக்கு மாகாணா அமைச்சரின் வேலை கிழக்கு மாகாணத்தை கவனிப்பது.மற்றயவற்றை கவனிக்க அந்தந்த மாகாண அமைச்சர்கள் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் கவனிக்கிறாரா?...அவரை விட இவர் எவ்வளவோ மேல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் அதிசயம் நிகழ இருக்கிறது அதைக் குழப்பும் வகையில் இப்படி எல்லாம் சொற்பதங்களை பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் - சம் சும் கும்பல்.

அட இது எங்கட நானாவ.. நீங்க சொல்லலாம் நானா.. நாங்க நினைச்சம் வடக்கு முதல்வராக்கும் என்று.. நீங்க நல்லா பேசுங்க நானா - சும் அடுத்த வினாடியில்.. பல்டி அடி. tw_blush:

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

கிழக்கு மாகாணா அமைச்சரின் வேலை கிழக்கு மாகாணத்தை கவனிப்பது.மற்றயவற்றை கவனிக்க அந்தந்த மாகாண அமைச்சர்கள் உள்ளார்கள்.

 

கிழக்கு முதல்வராயிருந்தாலும் அல்லது வேறு எந்த முதல்வராயிருந்தாலும்,  மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலின்படித்தான் செயலாற்ற வேண்டும். 

வேலையில்லாப் பட்டதாரிகளை உள்வாங்குவதும் மத்திய அரசின் தீர்மானத்தின்படிதான்.

Link to comment
Share on other sites

31 minutes ago, nedukkalapoovan said:

2016 இல் அதிசயம் நிகழ இருக்கிறது அதைக் குழப்பும் வகையில் இப்படி எல்லாம் சொற்பதங்களை பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் - சம் சும் கும்பல்.

அட இது எங்கட நானாவ.. நீங்க சொல்லலாம் நானா.. நாங்க நினைச்சம் வடக்கு முதல்வராக்கும் என்று.. நீங்க நல்லா பேசுங்க நானா - சும் அடுத்த வினாடியில்.. பல்டி அடி. tw_blush:

:grin::grin:

17 minutes ago, பெரியார் said:

 

கிழக்கு முதல்வராயிருந்தாலும் அல்லது வேறு எந்த முதல்வராயிருந்தாலும்,  மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலின்படித்தான் செயலாற்ற வேண்டும். 

வேலையில்லாப் பட்டதாரிகளை உள்வாங்குவதும் மத்திய அரசின் தீர்மானத்தின்படிதான்.

 

2 minutes ago, ஜீவன் சிவா said:

 

34 minutes ago, nedukkalapoovan said:

2016 இல் அதிசயம் நிகழ இருக்கிறது அதைக் குழப்பும் வகையில் இப்படி எல்லாம் சொற்பதங்களை பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் - சம் சும் கும்பல்.

அட இது எங்கட நானாவ.. நீங்க சொல்லலாம் நானா.. நாங்க நினைச்சம் வடக்கு முதல்வராக்கும் என்று.. நீங்க நல்லா பேசுங்க நானா - சும் அடுத்த வினாடியில்.. பல்டி அடி. tw_blush:

:grin::grin:

 

 நானே சிரிச்சுட்டு போறன். சில மாதங்களில் நீங்களும் சிரிச்சுட்டு போவீங்கள்.

Link to comment
Share on other sites

35 minutes ago, ஜீவன் சிவா said:

:grin::grin:

 

 நானே சிரிச்சுட்டு போறன். சில மாதங்களில் நீங்களும் சிரிச்சுட்டு போவீங்கள்.

சிலரின் சிரிப்பும், நாளடைவில் அவர்களுக்கே எதிராகத் திரும்பும் வகையில்  இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெரியார் said:

சிலரின் சிரிப்பும், நாளடைவில் அவர்களுக்கே எதிராகத் திரும்பும் வகையில்  இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

கதைச்ச நானா ...மண்டையில மதப்பு அதிகமாகி நேவி ஆபிசருக்கு ஆங்கிலத்தில் கிழிக்க போய் 
முகப்புத்தகத்தில் கந்தல் கந்தலாய் தொங்கிறார் ...போய் சிங்களவர்களின் கமண்ட்ஸ்களை வாசியுங்கள் 
இவர்களுக்காகவா நாண சொன்னோம் என்று நீங்கள் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது 

Link to comment
Share on other sites

12 hours ago, அக்னியஷ்த்ரா said:

கதைச்ச நானா ...மண்டையில மதப்பு அதிகமாகி நேவி ஆபிசருக்கு ஆங்கிலத்தில் கிழிக்க போய் 
முகப்புத்தகத்தில் கந்தல் கந்தலாய் தொங்கிறார் ...போய் சிங்களவர்களின் கமண்ட்ஸ்களை வாசியுங்கள் 
இவர்களுக்காகவா நாண சொன்னோம் என்று நீங்கள் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது 

அவருக்கும், கடற்படைக்கும் உள்ள பிரச்சனை அது.

சிங்களவர்களின் கமெண்ட்ஸ் பண்ணத்தான் செய்வார்கள்.

இதனால், நமக்கு என்ன இலாபம்?

அவர்கள் வாய்த்தர்க்கத்தில்  கடுமையாக நடந்து கொள்வார்கள்.

அடுத்த நாள், கடற்படை முகாமில் முதலமைச்சருடன் Dinner அடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2016 at 0:25 PM, colomban said:

இஸ்லாமிய தீவீரவாதம் விரைவில் வரப்போவதை மறைமுகமாக கூறுகின்றார்.

இனித்தானா???

அது வந்து  ஒரு நூற்றாண்டாகப்போகுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

அவருக்கும், கடற்படைக்கும் உள்ள பிரச்சனை அது.

சிங்களவர்களின் கமெண்ட்ஸ் பண்ணத்தான் செய்வார்கள்.

இதனால், நமக்கு என்ன இலாபம்?

அவர்கள் வாய்த்தர்க்கத்தில்  கடுமையாக நடந்து கொள்வார்கள்.

அடுத்த நாள், கடற்படை முகாமில் முதலமைச்சருடன் Dinner அடிப்பார்கள்.

ஒரு இலாபமும் இல்லை ...மேற்கே சூரியன் உதித்தாலும் சிங்களவனை மாற்றவோ ,திருத்தவோ முடியாது என்பதையாவது விளங்க்கிக்கொள்ளலாம் 

Link to comment
Share on other sites

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு இலாபமும் இல்லை ...மேற்கே சூரியன் உதித்தாலும் சிங்களவனை மாற்றவோ ,திருத்தவோ முடியாது என்பதையாவது விளங்க்கிக்கொள்ளலாம் 

நம்ம தமிழனையே திருத்த ஏலாது.  ஆளுக்கொரு கொள்கை.

இன்னொரு இனத்தைத் திருத்தப் போகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

நம்ம தமிழனையே திருத்த ஏலாது.  ஆளுக்கொரு கொள்கை.

இன்னொரு இனத்தைத் திருத்தப் போகிறீர்களா?

அப்ப ...சிங்களவன் நாண நன்னயம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு வகுப்பெடுத்தது ....? ஓ தமிழனை முதலில் திருத்துகிறீர்கள் 
அப்படி எல்லா தமிழனும் திருந்தியும் ..சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன செய்வீர்கள் ....? சுவருடன் மண்டையை கொண்டுபோய் மோதினாலும் சுவரை கொண்டுவந்து மண்டையுடன் மோதினாலும் சேதம் மண்டைக்கு தான் ...
 

Link to comment
Share on other sites

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அப்ப ...சிங்களவன் நாண நன்னயம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு வகுப்பெடுத்தது ....? 
 

வகுப்பெடுக்க நானென்ன வாத்தியா?

எனது கருத்தைச் சொன்னேன். 

நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென்பது இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.