Jump to content

தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வாழ்த்து !


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

tgte-logo-739203.jpg

தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்வதாகவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.
 
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுமையான வடிவம் : 
 
மே மாதம் 16 ஆம் நாள் 2016 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டி மீண்டும் தமிழக முதல் அமைச்சராகப் பதவியேற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் நாம் நிறைவடைகிறோம்.
 
தேர்தலின் முன்னர் ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்த பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன் வைத்;து அவற்றைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கி, இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்குமாறு நாம் கோரியிருந்தோம். இக் கோரிக்கைகள் பின்வருமாறு:
 
1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும்.
 
2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக் குற்றவியல் நீதீமன்றம் அல்லது அதற்கு நிகரான அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையின் ஊடாக விசாரணைக்குட்படுத்தி, பரிகார நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்குரிய நீதி வழங்கப்பட வேண்டும்.  
 
3. தமிழ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழ் மக்களின் நலன்கள் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் பேணப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் விரும்பும் பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை நிலையும் (dual citizenship) ஏற்றுக் கொள்ளப்;பட வேண்டும். 
 
முதல்வர் ஜெயலிலதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையின் 40வது பகுதியில் ஈழத் தமிழ் மக்கள் குறித்து பின்வரும் உறுதிமொழியினை மக்கள் முன் வைத்திருந்தது. 
 
«• இலங்கை தமிழர் இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
• பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதன் பயனாக அவர்கள் தங்கு தடையின்றி வேலைவாய்ப்பு பெற இயலும்.»
 
இவ் உறுதி மொழி மூலம் தமிழீழ மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அன்பையும் அக்கறையினையும் வெளிப்படுத்தியதோடு ஈழத் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமக்கெனத் தனி அரசினை அமைத்திடுவதற்குத் தமிழகம் துணையாக நிற்கும் என்பதனையும் எடுத்துக் காட்டியது.
 
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த தவணை ஆட்சியின் போது ஈழத் தமிழ் மக்களது நிலை குறித்து முக்கியமான தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இத் தடவையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் ஜெயலலிதா அவர்கள் அதே அக்கறையுடன் செயற்படுவார் என்பதே எமது எதிர்பார்ப்பு.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தீர்மானங்களையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களையும் நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுதல் அவசியமாகும். ஈழத் தமிழர் பிரச்சனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் வெறுமனே வெளியுறவுக் கொள்கை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்க்கப் படாமல் அது தமிழ் நாட்டின் உணர்வுரீதீயிலான உள்நாட்டுப் பிரச்சனையும்கூட என்பதனை முதல்வர் அவர்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பது எமது வேண்டுதல் ஆகும்;. 
 
கொழும்புவைத் திருப்திப்படுத்துவதா அல்லது சென்னையின் நிலைப்பாட்டை மதிப்பதா எனும் கேள்விக்கு சென்னையின் நிலைப்பாட்டை மதிக்கும் தன்மையே மத்திய அரசிடம் மேலோங்கி நிற்கும் நிலையினை தமிழக மக்கள் சார்பில் ஏற்படுத்த வேண்டும். அதனைச் சாதிப்பற்குரிய துணிச்சலும் தமிழக மக்களின் அரசியல் பலமும் ஜெயலலிதா அவர்களிடம் உண்டு. 
 
மீண்டும் பெருவெற்றியீட்டி சாதனை படைத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவ் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார் எனும் நம்பிக்கையுடனும் தமிழக மக்களதும் தமிழகத்தினதும் மேம்பாட்டுக்கு உழைப்பார் என்ற எதிர்பார்ப்புடனும் அவருக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நன்றி
 
தமிழரின் தாகத் தமிழீழத் தாயகம்
 
விசுவநாதன் ருத்ரகுமாரன் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.