Jump to content

லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு

BTF இன் நிகழ்வு BTF இன் நிகழ்வு

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால் வன்முறை முடிவிற்கு வந்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து ரீ.சீ.சீ இன் ஊதுகுழல் ஊடங்கள் வழமை போல பொய்யான செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

பீ.ரீ.எப் புலிக்கொடி ஏந்தி முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்தவில்லை என்பதே ரீ.சீ.சீ இன் வன்முறைக்குக் காரணம் என அதன் உறுப்பினர்கள் கூறினார்கள். முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளை சிறீ லங்கா பேரினவாத அரசு நடத்திமுடித்து ஏழு வருடங்களாக புலிக் கொடி வியாபாரச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

image (6)மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் இந்தக் கும்பல்களுக்கு பொருட்டல்ல. தமது வியாபாரத்திற்குப் பயன்படும் அடையாளங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கம். தமது வியாபாரத்திற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் முகவர்களை நியமித்து உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருக்கும் ரீ.சீ.சீ, கடந்த ஏழு வருடங்களில் தமது பணப்பையை மட்டுமே நிரப்பிக்கொண்டார்கள்.
மறு புறத்தில் பீ.ரீ.எப் இன் நடவடிக்கைகள் மக்கள் சார்ந்ததல்ல. ரீ.சீ.சீ கும்பலுக்கு மாற்றாக பீ.ரீ.எப் ஐக் கருத முடியாது. தமக்கான அரசியல் திட்டங்களும், எதிர்காலம் குறித்த மக்கள் சார்ந்த நடவடிக்கைகளுமற்று இந்த இரண்டு அமைப்புக்களும், ஏனைய புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்களும் வட கிழக்கில் வாழும் மக்களிலிருந்து முற்றாக அன்னியப்பட்டு அரசியல் நீக்கம் செய்யப்படுவார்கள்.

 

http://inioru.com/mullivaikkaal-remembrance-day-started-with-tccs-violence/

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவைச் சேர்ந்த ********* எங்க சேறு கிடைக்கும் என்று அலையுறதுகள் போல.

அங்க ஒருத்தர் தமிழீழத்தைக்  கைவிட்டிட்டு.. இந்தா 2016 இல் அதிசயம் நடக்குப் போகுது என்று காத்துக்கிடக்கிறார்.

இங்க பாதிரி கூட்டம் பி ரி எவ்.. எப்ப தங்களுக்கு அழைப்பு வரும் என்றிட்டு.. புலிக்கொடியை கடாசிச்சு காத்துக்கிடக்கினம்.

இதில இன்னொரு இன்னொரு வியாபாரம் பார்க்க கதைவிடுகுது. அதில ஒரு வியாபாரக் கதை வேற.

 

இந்த இன்னொருவை விட IBC எவ்வளவோ திறம் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு மக்களுக்கு ஆக்களை இனங்காட்டினார்கள். பி ரி எவ் வை தவிர இளையோர் அமைப்பினர் உட்பட பிற எல்லா அமைப்பினரும் தேசியக் கொடியை தமிழர்களின் அடையாளமாகப் பயன்படுத்தனும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். பி ரி எவ் சொன்ன காரணத்தை இளையோர் அமைப்பினர் அவர்களுக்கு முன்னாலேயே போட்டுடைத்த போது.. பி ரி எவ்விடம் இருந்து கோபம் தான் வெளிப்பட்டதே தவிர நியாயம் இல்லை.

இப்ப பி ரி எவ் வுக்கு இன்னொரு ******** . பூமாலை சூடுவது ஏனெனில்.. புலிக் காய்ச்சல் போய்.. புலிக்கொடிக் காய்ச்சலில்.

எப்படியாவது தமிழனை தமிழன் அடையாளம்..இல்லாமல் ஆக்கிடுவான். அதுக்கு உந்தச் ******** போதும். tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்.....

TCC,  பீ.ரீ.எப்(BTF) ரீ.சீ.சீ (TCC) ,   பீ.ரீ.எப்(BTF) .....

இதெல்லாம்..... விற்றமின் குளிசைகள்....?
சாப்பிட்டால்.... நல்ல, தூக்கம் வருமா.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழர் ஒற்றுமை அடையாமல் இருப்பது வருத்தமாக உள்ளது

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

லண்டனில்.....

TCC,  பீ.ரீ.எப்(BTF) ரீ.சீ.சீ (TCC) ,   பீ.ரீ.எப்(BTF) .....

இதெல்லாம்..... விற்றமின் குளிசைகள்....?
சாப்பிட்டால்.... நல்ல, தூக்கம் வருமா.....?

 

முப்பது வருடமாக உந்த பில்சுகளை போட்டுத்தான் புலிகள் தாக்குதல்கள் செய்தார்கள்.

இப்ப தங்களுக்க தாக்குதல்கள் செய்யினம் .

தாக்குதல் செய்யாமல் உந்த இரசாயனங்கள் இருக்காது .

உலகம் முழுக்க உந்த நச்சு இராசயனங்களை தெளித்துவிட்டு நாட்டில இல்லாமல் போயிட்டினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல் BTF ஒழுங்குசெய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் TCC ஐச் சேர்தவர்கள் புலிக்கொடி ஏந்தவேண்டும் என்று வாக்குவாதப்பட்டதைப் பார்த்து வெறுத்துப்போய் அதன் பின்னர் இக்குழுக்களால் ஒழுங்குசெய்யப்படும் ஒரு நிகழ்வுகளுக்கும் போவதில்லை.

தமிழர்களுக்காக தன்னையும், தனது குடும்பத்தையும் பலிகொடுத்த தலைவனுக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யும் நிகழ்வை ஏற்பாடு செய்தால் கட்டாயம் போவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2016 at 4:39 PM, nedukkalapoovan said:

இன்னொருவைச் சேர்ந்த ********* எங்க சேறு கிடைக்கும் என்று அலையுறதுகள் போல.

அங்க ஒருத்தர் தமிழீழத்தைக்  கைவிட்டிட்டு.. இந்தா 2016 இல் அதிசயம் நடக்குப் போகுது என்று காத்துக்கிடக்கிறார்.

இங்க பாதிரி கூட்டம் பி ரி எவ்.. எப்ப தங்களுக்கு அழைப்பு வரும் என்றிட்டு.. புலிக்கொடியை கடாசிச்சு காத்துக்கிடக்கினம்.

இதில இன்னொரு இன்னொரு வியாபாரம் பார்க்க கதைவிடுகுது. அதில ஒரு வியாபாரக் கதை வேற.

 

இந்த இன்னொருவை விட IBC எவ்வளவோ திறம் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு மக்களுக்கு ஆக்களை இனங்காட்டினார்கள். பி ரி எவ் வை தவிர இளையோர் அமைப்பினர் உட்பட பிற எல்லா அமைப்பினரும் தேசியக் கொடியை தமிழர்களின் அடையாளமாகப் பயன்படுத்தனும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். பி ரி எவ் சொன்ன காரணத்தை இளையோர் அமைப்பினர் அவர்களுக்கு முன்னாலேயே போட்டுடைத்த போது.. பி ரி எவ்விடம் இருந்து கோபம் தான் வெளிப்பட்டதே தவிர நியாயம் இல்லை.

இப்ப பி ரி எவ் வுக்கு இன்னொரு ******** . பூமாலை சூடுவது ஏனெனில்.. புலிக் காய்ச்சல் போய்.. புலிக்கொடிக் காய்ச்சலில்.

எப்படியாவது தமிழனை தமிழன் அடையாளம்..இல்லாமல் ஆக்கிடுவான். அதுக்கு உந்தச் ******** போதும். tw_angry::rolleyes:

புலிக்கொடியை உருவும் எண்ணத்தில் சிங்களவன் பின்னின்றாலும் 

நக்கிற கூட்டம் நன்றியுடனேயே இருக்கிறது !


புலிக்கொடியை போட்டால் அவன் இனி தமிழனே இல்லை.
அடித்து கலைக்க வேண்டும்.

இனி அது வெறும் கொடியல்ல ...
45ஆயிரம்  உயிர்களின் இரத்த வடு அது !

எனக்கு இந்த கட்டுரையில் பிடித்தது
எழுதியவரின் நடுநிலமைதான்!

தொடக்கும் போது .....
தொடங்கிய விதம் இருக்கே 

ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

புலிக்கொடியை உருவும் எண்ணத்தில் சிங்களவன் பின்னின்றாலும் 

நக்கிற கூட்டம் நன்றியுடனேயே இருக்கிறது !


புலிக்கொடியை போட்டால் அவன் இனி தமிழனே இல்லை.
அடித்து கலைக்க வேண்டும்.

இனி அது வெறும் கொடியல்ல ...
45ஆயிரம்  உயிர்களின் இரத்த வடு அது !

எனக்கு இந்த கட்டுரையில் பிடித்தது
எழுதியவரின் நடுநிலமைதான்!

தொடக்கும் போது .....
தொடங்கிய விதம் இருக்கே 

ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்!

உந்த இன்னொரு கின்னொரு ஆக்கள் தான் புலிக் கொடி காய்ச்சலில்... அரசியல் நீக்கம்.. ஊக்கம் என்று கொண்டு பித்தலாட்டம் காட்டினம். அதுவும் தாயக மக்கள் அடக்குமுறைக்குள் இருப்பதை சாட்டாக வைச்சு.

ஆனால் தாயக மக்கள் அந்த அடக்குமுறைக்குள்ளும்.. தமிழீழம்.. கார்த்திகைப் பூன்னு எது எது சாத்தியமோ அதை அதை எல்லாம் அடையாளமா முன்னிறுத்தத் தவறவில்லை. குறிப்பாக சிவப்பு மஞ்சள் கொடி கூட. அதைக் கூட பி ரி எவ் காரர் கடாசிட்டு தான்.. காத்திருக்கினம்.. சிங்களவனட்ட இருந்து அழைப்பு வருமுன்னு. வந்ததாக் காணேல்ல. tw_blush:

இதில.. இன்னொரு கனவு காணுது தாயக மக்கள்.. அரசியல் நீக்கம் செய்திடுவினமாம்.. சிவப்பு மஞ்சள் கொடியையும்.. தமிழீழத்தையும்.. புலிக்கொடியையும்.. கார்த்திகைப் பூவையும் என்று. இந்த புலிக்காய்ச்சல் பேர்வழிகளுக்கு ஒரு நல்ல குளுசை கண்டிபிடிக்கத்தான் வேண்டி இருக்கு. இல்ல உதுகள் தங்களைத் தாங்களே மக்களா பாவனை பண்ணிக்கிட்டு.. பைத்தியக் கதை பேசிக்கிட்டு.. பைத்தியங்களா அலையப் போகுதுங்க. tw_blush:

Jaffna_Univ_00.jpg

Jaffna_Univ_01.jpg

 

படங்கள்.. யாழ் பல்கலைக்கழக முன்றத்தில் இருந்து...

TNPF_mullivaaykkaal_02.jpg

TNPF_mullivaaykkaal_02.jpg

முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து.. தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்திய பிரார்த்தனையில் இருந்து. 

தாயக மக்கள் கடந்த காலம் குறித்து எப்படி நடக்கனும் என்பதில்... தெளிவான.. மனநிலையில் தான் இருக்கினம்.

ஆனால் இன்னொரு போன்ற புலிக்காய்ச்சல் புலிக்கொடிக் காய்ச்சல் பேர்வழிகள் தான்.. இன்னும் அந்தக் காய்ச்சல்கள்..தீராத ஆக்கள் தான் இன்னும் பைத்தியப் பிடிச்சு எழுதிக்கிட்டு தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதில் எதிரிக்கு சார்ப்பாக இருந்து தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் உங்க புலம்பித் திரியும்.. எதிரியோடு ஒட்டி ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும்.. வாழத்துடிக்கும்.. உந்த ஒட்டுக்குழு கூத்தாடிகளைப் பற்றி பலமுறை பாடம் படித்து விட்டார்கள்.  இவற்றை எல்லாம் கடந்து மக்கள் பயணிப்பார்கள்.. நல்ல தெளிவோடு. 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38264

Link to comment
Share on other sites

தேசிய தலைவரின் படத்தையும் காணோம் புலி கொடியையும் காணோம் மறந்து போனார்களோ என்னவோ ?

கட்டு காசும் கிடைக்காத கோஸ்டிகள் தான் இப்போ உங்கள் தெரிவு .

நாங்கள் நக்குற கோஸ்டிகள் தான் மற்றவர்களின் இரத்தத்தை அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வவுனியாவில் நின்று கட்டுக்காசென்ன எல்லாத்தையும் இழந்து காட்டிக்கொடுத்து சொந்த இனத்தை கருவழிச்சிட்டு.. இப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து பதுங்கிக் கொண்டு.. வெள்ளை வேட்டிக் கட்டுக்கொண்டு.. பூஞ்சிப் போன கண்ணோட வந்து பூத்தூவினாப் போல..  புனிதர்கள் ஆகிட முடியாது.

சித்தார்த்தன் முள்ளிவாய்க்கால் மண்ணில்.. அமைதியாக நின்று அகவணக்கம் செலுத்தக் கூட முடியாத மனப்புழுக்கத்தில் மனச்சாட்சியின் குத்தலில்..இருந்தார் என்பதை காணொளிகள் சாட்சி பகன்றன.

சித்தார்த்தன்.. முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதும் சரி.. கோத்தபாய அங்கு அஞ்சலி செலுத்துவதும் ஒன்று தான். 

நாட்டில்.. நடக்கும் அரசியல் என்பது.. இன்று.. தூய அரசியலுக்குள் ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளும்.. அரசியல் விபச்சாரிகளும் கொண்ட ஒரு போலி அரசியல்... பிளவு அரசியல் என்பது மட்டும் விளங்குது.

ஆமாம்.. புலிக்கொடி.. தேசிய தலைவரின் படம் இவை.. அங்கு வர சிங்கள ஆக்கிரமிப்பு இடமளிக்கும் என்றால்.. சித்தார்த்தனும் என் தம்பியின் படமுன்னு.. சொல்லிக்கிட்டு பிடிச்சிருப்பார். நாம் அதையும் கடந்து வந்திட்டம். ஆனால் சில ஒட்டுக்குழுக்களுக்கு சித்தரின் சித்து அரசியல் செய்யக் கூட லாய்க்கில்ல.. அந்தளவுக்கு வன்மம்.. மனதெங்கும். tw_blush:

Mullivaaykkaal_Genocide_Remembrance_Ecua

Mullivaaykkaal_Genocide_Remembrance_Ecua

Ecuadorian indigenous people universalise Tamil genocide remembrance

 http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38266

உலகம் அகன்றது அண்ணன்களா.. கிணற்றுக்குள் இருந்து கனவு காண்பதை விட்டு வெளில வாங்க. tw_blush:

ஈழத்தில் இருந்து ஈக்குவடோர் வரை சிவப்பு மஞ்சள்.. மலர்ந்திருக்குது. அது எம் மக்களும் மாவீரரும் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.. அவர்களின் தியாகத்தின் கொள்கையின் அடையாளம். அது பேசும் எல்லாம். அதையே கடாசிற சில நக்கிப் பிழைக்க நினைக்கும் கூட்டம் மக்களுக்கு பிரதிநிதிகள் ஆகவே முடியாது. கூட இருந்து.. சூழ்ச்சி தான் செய்யலாம்..! tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பிடிப்பதை பிரித்தானிய அரசாங்கமோ அல்லது வேறெந்த நாடுகளோ எதிர்க்கவில்லை.அப்படி இருக்க பிரிஎப் காரர் எதிர்க்கினம் எண்டா அதுவும் அதன் அமைப்பாளர்கள்  10 போர் எதிர்க்கினம் எண்டா அதுக்கு வேற ஏதோ காரணம் இருக்க வேண்டும்.பிரிஎப்இன் அழைப்பின் பேரில் வந்த மக்களே புலிக்கொடி கொண்டு வந்திருக்கினம்.சிறிலங்காவின் சுதந்திரதினத்தில் கலந்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட சம்சும் கோஸ்டியை தமிழ்மக்களின் பேரவலத்தில் ஒப்புக்கு முதலைக் கண்ணீர் வடிக்கக்கூட வராமல் இருக்கினம். மாவையும்,சரவணபவனும்,சித்தரும் தங்களின் அரியலை கொண்டு நடத்த வந்து முதலைக்கண்ணீர் வடிக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியில்லாமல் தமிழர் தேசியத்தை அடையாளப்படுத்தப்பட முடியாது.  ஆனால் குறுக்கேயிருக்கும் இரண்டு துவக்குகளையும் தற்காலிகமாக நீக்குவதையிட்டுச் சற்றுக் கருத்திலெடுப்பதில் தவறில்லையென எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி தமிழர் தேசியக் கொடியாக வடிவமைக்கப்படவில்லை. தமிழீழ தேசியக் கொடியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலதுக்கு ஒரு அடிப்படையும் தெரியுதில்லை... ஆனால்.. துவக்கு புலி சிவப்பு என்றதும் உதறல் எடுக்குது. ஏன்னா சிங்களவன் உதை தூக்கி வைச்சிருந்தால் எலும்பு போடமாட்டானுன்னு போல.

தமிழீழத் தேசியக் கொடிக்கு உலகில் எங்கும் (சொறீலங்கா தவிர) தடையில்லை. தமிழீழ மக்கள் அதனை பிடிக்க முடிகிறது.. முடியும். தமிழீழ தேசத்தின் தமிழினத்தின்  அடையாளம் தான்.. தமிழீழத் தேசியக் கொடி. அதனை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. அதனை மாற்றியமைக்க வேண்டின் அது மக்களின் கருத்தறிதலோடு தான் நடக்க முடியும். ஒட்டுக்குழுக்களின் தேவைக்கும்.... பல்வேறுபட்ட எதிரிகளின் அடிவருடிகளின் தேவைகளுக்காகவும் அதனை  மாற்றியமைக்க முடியாது. 

அப்படி ஆக்களின் குழுக்களின் தேவைகளுக்காக எல்லாம் உலகில் எங்கும் தேசியக் கொடி மாற்றி அமைக்கப்படுவதில்லை. மக்களின் தேவை ஒன்று தான்.. அங்கு பிரதானம். தமிழீழ.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு புலிக்கொடியாகிய தேசியக் கொடியை மாற்றியமைக்க அவர்கள் எப்போதும் விரும்பியதில்லை. காரணம்.. அந்தக் கொடி பல்லாயிரக் கணக்கானோரின் உயிர்தியாகத்தில் முளைத்த கொடி. வரலாற்றுப் பின்னணி நிறைந்த கொடி. 

உலகத்தை ஆள்வதே கழுகும்.. துவக்கும்.. அணு குண்டும் தான். tw_blush:

Link to comment
Share on other sites

புலிக்கொடி புலிகளின் கொடி மட்டுமே .

பிரபா புலிகளின் தலைவர் மட்டுமே 

அம்புட்டும் தான் .:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லி சுய திருப்தி அடைஞ்சு கொள்ள வேண்டியான். 

எனி புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இருக்கென்று திரும்ப அ னாவில் இருந்து ஆரம்பிக்க ஏலாது. சொல்லியும் விளங்காது.. விளங்கத்தக்க அறிவும் இல்லை.. விளங்கிக் கொள்ளும் நோக்கமும் அற்றவர்களுக்கு அதை விளக்கிப் பயனும் இல்லை. 

ஆனால் மக்கள் எல்லாம் அறிவார்கள். குறிப்பாக இளைய சமூகமும் அறியும். அதுதான் முக்கியம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் வெள்ளையின முதியவரிடம் வழி கேட்க்க வழியை சொன்னப்பின் சிரித்தபடியே சகஜமாக 

எங்கிருந்து எந்த நாட்டில் இருந்து  வருகிறாய் ? ஸ்ரீ லங்கா 

வாட் ?

மீண்டும் சொல்கிறன் தெரியவில்லை 

அது எங்கிருக்கிறது? ஆசியாவில் இந்தியாவுக்கு அருகில் .

அப்படியா எனது காரை கடந்த அந்த வேல்ஸ் பகுதி முதியவர் காரின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் (ஓசி பேப்பர் ?) பழசு அதில் உள்ள புலிக்கொடி படத்தை பார்த்து விட்டு நீ தமிழா ?  கேள்வி ஆம் என்று தலயை ஆட்ட "எனக்கு நன்றாக தெரியும் " 

இதுதான் யதார்த்தம் இதுக்கு மேல் வேறு ஒன்றும் எழுத வேண்டிஇங்கு  இருக்காது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இப்படிச் சொல்லி சுய திருப்தி அடைஞ்சு கொள்ள வேண்டியான். 

எனி புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இருக்கென்று திரும்ப அ னாவில் இருந்து ஆரம்பிக்க ஏலாது. சொல்லியும் விளங்காது.. விளங்கத்தக்க அறிவும் இல்லை.. விளங்கிக் கொள்ளும் நோக்கமும் அற்றவர்களுக்கு அதை விளக்கிப் பயனும் இல்லை. 

ஆனால் மக்கள் எல்லாம் அறிவார்கள். குறிப்பாக இளைய சமூகமும் அறியும். அதுதான் முக்கியம். tw_blush:

30 வருடமா சுய இன்பத்தில் வாழ்ந்து பழகினவர்களை 
திடீரென நிறுத்த சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள் ...........?

இப்ப ஒரு 50 -60 க்குள் நிற்கிறார்கள் 
65 வயது வர நரம்பு தளர்ச்சியால் 
நல்ல மருத்துவர்கள் கிடைத்தால் 
அவர்கள் புத்திமதி சொல்வார்கள் என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வேல்ஸ் வெள்ளையின முதியவரிடம் வழி கேட்க்க வழியை சொன்னப்பின் சிரித்தபடியே சகஜமாக 

எங்கிருந்து எந்த நாட்டில் இருந்து  வருகிறாய் ? ஸ்ரீ லங்கா 

வாட் ?

மீண்டும் சொல்கிறன் தெரியவில்லை 

அது எங்கிருக்கிறது? ஆசியாவில் இந்தியாவுக்கு அருகில் .

அப்படியா எனது காரை கடந்த அந்த வேல்ஸ் பகுதி முதியவர் காரின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் (ஓசி பேப்பர் ?) பழசு அதில் உள்ள புலிக்கொடி படத்தை பார்த்து விட்டு நீ தமிழா ?  கேள்வி ஆம் என்று தலயை ஆட்ட "எனக்கு நன்றாக தெரியும் " 

இதுதான் யதார்த்தம் இதுக்கு மேல் வேறு ஒன்றும் எழுத வேண்டிஇங்கு  இருக்காது .

 

இப்படி வேற்று இன மக்கள் இவர்களையும் பார்த்து சொல்வதுதான் இவர்களின் பிரச்சனை,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

புலிக்கொடி தமிழர் தேசியக் கொடியாக வடிவமைக்கப்படவில்லை. தமிழீழ தேசியக் கொடியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலதுக்கு ஒரு அடிப்படையும் தெரியுதில்லை... ஆனால்.. துவக்கு புலி சிவப்பு என்றதும் உதறல் எடுக்குது. ஏன்னா சிங்களவன் உதை தூக்கி வைச்சிருந்தால் எலும்பு போடமாட்டானுன்னு போல.

உந்த அடிப்படை ஒன்றும் றொக்கட் சயன்சல்ல.  பெரிய ஞானம் இதற்கு வேண்டியதில்லை.  தற்காலிகமாக தமிழர் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் ராஜதந்திர ரீதியில் நிலைப்படுத்துவதற்காக, தமிழீழ தேசக்கொடியை அடையாளப்படுத்தும் கொடியைவிட துவக்குகள் இல்லாத கொடியே கருத்தானதாயிருக்கும்.   அதையிட்டுச் சிந்திப்பது தவறில்லையென்றுதான் கூறியிருக்கிறேன்.  அந்தவகையில் இந்தப் பேரறிவை வைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்க முயல்வதைவிடச் சற்று அறிஞர்கள் கூடி ஆராய்வது  பொருத்தமானதாகும்.  தமிழீழத்தை விடத் தற்போது தமிழ்த் தேசியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பதே  அரசியல், இராஜதந்திர ரீதியில் அவசியமானதும், முக்கியமானதும், யதார்த்தமானதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்கன்னுன்னது காமடி. தமிழ் தேசியம் உலக அங்கீகாரம் பெற வேண்டிய ஒன்றல்ல. அது தமிழர் இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்துக்கு கொடி எல்லாம் அமைக்க முடியாது. ஒரு தேசத்துக்கு ஒரு அமைப்புக்குத் தான் கொடி. நீங்க தமிழ் தேசியம் என்றால்.. ஏதோ புதிசா புத்துக்குள்ளால வாறது என்று நினைக்கிறீங்க போல உங்கட ராக்கெட் சயன்சை வைச்சு. 

ஈழத்தமிழ் மக்களின் அடையாளம்.. தமிழீழம். அதன் தேசியக் கொடியே புலிக்கொடி. அதற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது... எனி.  ஏனெனில் உலகம் ஈழத்தமிழர் இனத்துக்கு புலிக்கொடியை அமைத்துக் கொடுத்துப் பார்த்துவிட்டது. உலகமே ஏற்று நிற்கும் கொடியை.. எதுக்கு சிலர் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கிறார்கள்.

ஏலவே தமிழர் பிராந்தியக் கொடியாக.. ஒரு நந்திக்கொடிபறந்திட்டுத்தான் இருந்தது. அதற்கு உலக அரங்கில் யாரும் எப்போதும் அங்கீகாரம் தேடேல்ல. ஆனால் புலிக்கொடிக்கு தமிழீழ மக்கள் தான் ஒரு அங்கீகாரத்தை உலக அரங்கில் பெற்றுக் கொடுத்திருந்தனர். 

நாங்க உள்ளதைப் பாதுகாக்க வக்கில்லாமல்... இல்லாதத்திற்கு கனவு காண வேண்டிய அவசியமில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் 90இன் இறுதியில் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடையில் புதிதாக ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். ஆள் புலிகளுக்கு எதிரானவர், கடையில் அடிக்கடி அரசியல் விவாதம் நடைபெறும். ஒருநாள் கடைக்கு வரும் கறுவல் இவரை பார்த்து "ஹலோ ரமில் ரைகர்" என்று சொல்லிவிட்டான், இவரும் எள்ளும் கொள்ளும் வெடிக்க செம சூட்டில் இருந்த வேளை கூட வேலை செய்யும் பெடியனும் இவரை செமநக்கல். அடுத்த நாள் அந்த கறுவலை இவர் றோட்டில் கண்டு "நீ எப்படி என்னை ரமில் ரைகர்" என்று சொல்லுவாய் என்று கேமை கேட்க அவன் பிரித்து மேய்ந்து விட்டான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, karu said:

உந்த அடிப்படை ஒன்றும் றொக்கட் சயன்சல்ல.  பெரிய ஞானம் இதற்கு வேண்டியதில்லை.  தற்காலிகமாக தமிழர் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் ராஜதந்திர ரீதியில் நிலைப்படுத்துவதற்காக, தமிழீழ தேசக்கொடியை அடையாளப்படுத்தும் கொடியைவிட துவக்குகள் இல்லாத கொடியே கருத்தானதாயிருக்கும்.   அதையிட்டுச் சிந்திப்பது தவறில்லையென்றுதான் கூறியிருக்கிறேன்.  அந்தவகையில் இந்தப் பேரறிவை வைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்க முயல்வதைவிடச் சற்று அறிஞர்கள் கூடி ஆராய்வது  பொருத்தமானதாகும்.  தமிழீழத்தை விடத் தற்போது தமிழ்த் தேசியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பதே  அரசியல், இராஜதந்திர ரீதியில் அவசியமானதும், முக்கியமானதும், யதார்த்தமானதுமாகும்.

உங்களுடைய சிந்தனையில் தவறு ஏதும் இல்லை 
இன்னமும் சொல்லபோனால் விட்ட தவறுகளில் இருந்து கற்றுகொள்வது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இதை ஒரு சிறு வட்டத்திற்குள் நின்றுதான் நீங்கள் பார்கிறீர்கள்.
உலக வெளியில் குனிய குனிய குட்டுவார்களே தவிர 
குனிந்தவனை தட்டி எழுப்பியதாக உதாரனத்திட்கு சொல்ல கூட ஒரு உவமை இல்லை.

கோவில்களில் ஆடுகளைத்தான் கொண்டு சென்று வெட்டுகிறார்கள் 
சிங்கங்களை யாரும் வெட்டுவதில்லை.
ஆடு இன்னமும் குனி குறுகினால் அவர்கள் தமது வேலை இயல்பாகி விட்டது என்றுதான் 
எண்ணுவார்கள் இது ஒரு இயல்பு நிலை. 

பலஸ்தீனத்தை ஐநாவில் ஏற்கும் நிலைமை அமெரிக்க எதிர்ப்பையும் தாண்டி 
வந்ததற்கு காரணம் தொடர்ந்த விட்டுகொடாமைதான்.
அதை காரணம் காட்டி ஓவரு நாளும் கொல்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று.

எதை விடுகிறோம் ...?
விடுவதால் இந்த பலன் என்று எப்படி உறுதியாக கூற முடியும்?

இவளவு காலமும் புலிகள் 
சர்வதிகாரி பிரபாகரன் என்றார்கள் 
எம்மிலும் ஒரு 50 வீதம் அதை நம்பித்தான் இருக்கிறது.
இப்போ அவர்கள் இல்லை ..... 

இனி நாங்கள் தமிழை விட்டால் 
அடையலாம் என்றும் தொடங்குவார்கள் 
அப்பட்டமான பொறுக்கித்தனம் என்பதால் வெளியில் சொல்கிறார்கள் இல்லை. 

*********


அடுத்தவன் என்ன எழுதுவான்
 கொப்பி அடிக்கலாம் என்று திரிவார்கள். 

இந்த லட்சணத்தில் .......
அரசியல் வேறு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியத்துக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்கன்னுன்னது காமடி. தமிழ் தேசியம் உலக அங்கீகாரம் பெற வேண்டிய ஒன்றல்ல. அது தமிழர் இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்துக்கு கொடி எல்லாம் அமைக்க முடியாது. ஒரு தேசத்துக்கு ஒரு அமைப்புக்குத் தான் கொடி. நீங்க தமிழ் தேசியம் என்றால்.. ஏதோ புதிசா புத்துக்குள்ளால வாறது என்று நினைக்கிறீங்க போல உங்கட ராக்கெட் சயன்சை வைச்சு......

உலக அங்கீகாரமென்பது ஐநா போன்ற யாராவது தரும் சேட்டிபிக்கேற் அல்ல.  உலக அரங்கில் அதற்குக் கிடைக்கக்கூடிய மதிப்பு மரியாதை.  இங்கு  புலி அடையாளத்தைப் பற்றி எதையும் கூறவில்லையே!  புலி புலியாகவேயிருக்கும்.  அதற்குமுன் இரண்டு துவக்குகளைப் போட்டுவிடுவதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டுமென்கிறேன்.  தமிழீழமென்னும் நாடு மலரும்போது அதன்கொடியாக அந்த இரண்டுதுவக்கும் புலியும் இருக்கட்டுமென்று வேண்டுமானால் முடிவு செய்யலாம்.  இது வீட்டு மதிலில் கள்ளர்கள் ஜாக்கிரதையென்று போட்டு இரண்டு காவல்காரர்களைத் துவக்கோடு வரைந்து வைப்பதைப் போன்றது.  திருடர்கள் அதைப் பார்த்துப் பயப்படமாட்டார்கள்.   தமிழர்களின் அடையாளத்தை உலகில் நிறுவியவர்கள் புலிகளே!   அவர்கள் போட்டிருந்த துவக்குகள் தமிழீழத்தை அடைவதற்கான வழியைக் காட்டுவனவேயன்றி அதில் பெரிய கருத்தேதுமில்லை.  இன்றைய அரசியல், ராஜதந்திர அணுகுமுறைகளுக்குள் இந்தத் துவக்குகள் பெரிதாக எந்தவொரு அர்த்தத்தையும் தரப்போவதில்லை.    தற்காலிகமாக அதையிட்டுச் சிந்திப்பதில் தவறேதுமில்லை யென்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் அதுதான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.