Jump to content

லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு


Recommended Posts

12 hours ago, MEERA said:

நீங்கள் முதலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆராயாமல் மொக்குத்தனமாக எழுதுவதை நிறுத்த வேண்டும். 

விளக்கம் இல்லாமல் எழுதி, சுய இன்பம் பெறும் இந்த கூட்டம் எப்ப திருந்தப் போகிறதோ? 

 

இதில் ஆராய என்ன இருக்குது? அடி வாங்கி இரத்தம் சொட்ட வரும் ஒரு மனிதனுக்கு உதவாமல் புலி ஆதரவாளன் இல்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து கடையில் நிக்கும் ஒரு விசுகோத்து நக்கலடிக்குது. அது பெரிய சாதனை போல இங்க காவி வந்து நீங்கள் எழுத அதுக்கும் விசிலடிப்பு நடக்குது. 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
On 21/05/2016 at 6:28 AM, arjun said:

முப்பது வருடமாக உந்த பில்சுகளை போட்டுத்தான் புலிகள் தாக்குதல்கள் செய்தார்கள்.

இப்ப தங்களுக்க தாக்குதல்கள் செய்யினம் .

தாக்குதல் செய்யாமல் உந்த இரசாயனங்கள் இருக்காது .

உலகம் முழுக்க உந்த நச்சு இராசயனங்களை தெளித்துவிட்டு நாட்டில இல்லாமல் போயிட்டினம் 

 

நீங்கள் எப்போதும் எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்கின்றீர்கள். இவ்வாறான பல அமைப்புக்களே புலிகள் அழிவுக்கும் காரணமானது. இந்த இனத்திற்குள் இருந்த நச்சு இரசாயனங்களை புலிகள் குறைவாக எடைபோட்டதன் விழைவே புலிகளின் வேகமான அழிவு. தத்தமது சுயநலத்திற்காக எவரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பலிகொடுககும் பரம்பரை மரபைக்கொண்டது இந்த இனம். புலிகளின் கடைகள் சொத்துக்கள் கோயில்கள் வியாபாரங்கள் என அனைத்துக்காகவுமே இவர்கள் சமயத்தில் புலிகளை கைவிட்டனர். தொடர்ந்தும் மாவீரர்தினம் மற்றும் நினைவுதினங்கள் நிகழ்வுகள் அனைத்தும் வியாபார லாபநோக்கிலேயே நடத்தப்பட்டுவருகின்றது. இங்கே மக்களுக்காக எதுவும் இல்லை. அனைத்தும் வியாபாரமே ! இவர்களைப் பொறுத்தவரை புலிகளும் ஒரு மூலதனம் இருப்பவர்களும் இறந்தவர்களும் அழிவுகளும் அனைத்தும் ஒரு மூலதனம். பல லட்சம் பேர் வெளிநாட்டு வதிவிட உரிமை பெறுவதற்கு போராட்டம் மூலதனமாய் இருந்தது. இனி இவ்வாறு சுருட்டிய கடைகளில் கோதுமை மாவுக்கு கலர்வண்ணமடித்து அரசிமா என்று விற்பதும் சாதாரண அரசியை பாசுமதி என்று கவருக்குள் போட்டு விற்பதும் மூட்டை போட்ட ஓய்ஞ்ச கிழட்டுக்கோழிகளை ஊர் நாட்டுக்கோழி என்று விற்பதும். என்னும் ஏராளமன கலப்படமும் பொய்யும் புரட்டும் ஏமாற்றும் என்று அடிப்படை மனிதாபிமானத்தையும் அறத்தையும் துறந்த சுயநலம் இந்த இனத்தின் பாரம்பரியத்தில் ஊறியது. இதை இடையில் வந்த புலிகள் கற்பித்தது என்பது இந்த இனம் யோக்கியமானது புலிகள் தான் கெடுத்தது என்று எம்மை நாமே தொடர்ந்து ஏமாற்றுவதே. புலிகளின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை ஆனால் இந்த இனத்தின் கேடுகெட்ட குணத்திற்கு புலிகளை சுட்டிக்காட்டுவது எம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தெனாலி said:

இதில் ஆராய என்ன இருக்குது? அடி வாங்கி இரத்தம் சொட்ட வரும் ஒரு மனிதனுக்கு உதவாமல் புலி ஆதரவாளன் இல்லை என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து கடையில் நிக்கும் ஒரு விசுகோத்து நக்கலடிக்குது. அது பெரிய சாதனை போல இங்க காவி வந்து நீங்கள் எழுத அதுக்கும் விசிலடிப்பு நடக்குது. 

நடந்தது என்ன என்று தெரியாமல், நான் இதை இங்கு எழுதிய காரணம் கறுவல் கடையினுள் வைத்து "ஹலோ ரமில் ரைகர்" என்று கூறியதற்காக லூசுத்தனமாக வீதியில் வைத்து கேமை கேட்டு அவனை முதலில் கை ஓங்கி அடித்து விட்டு வருபவருக்கு என்ன செய்வது? அவன் மீண்டுமொரு தடவை கடைக்கு வரும் போது என்னை அப்படி கூப்பிடாதே என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.

பி.கு: அவரை வைத்தியசாலைக்கு கூட்டிப் சென்றது,( A&E இல்  மணிக்கணக்கில் காந்திருந்து, வேலைக்கு போகாமல்) அவர் இருந்தது வேலை செய்தது தென்கிழக்கில் ஆனால் அவரின் பதிவு, குடும்ப வைத்தியர் Wembley இல் அங்கும் கூட்டிச் சென்றது உங்களுக்கு தெரியாது. அவர் தனது அசைல வழக்கில் இந்த சம்பவத்தை "புலிகள் தன்னை ஆள் வைத்து அடித்து விட்டார்கள்" என்று பொய் உரைத்திருந்தார். 

 

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.