Jump to content

2009 சில நினைவு மீட்டல்கள்


Recommended Posts

 

எமது இனத்தின் அர்பணிப்புக்கள் வீண்போன இரவு.....

இறுதியாக இயங்கிவந்த முள்ளிவாக்கால் வைத்தியசாலையும் இன்று இரவுடன் செயல் இழக்கின்றது..... டாக்ரா் வாமன் நினைவுகளிலிருந்து..

இன்று நடு இரவுடன் எங்கள் மருத்துவமனை செயல் முடங்கி விடப் போகிறது.
இன்று பகல் முடியுமானவர்களை மருத்துவமனையை விட்டு நகர்த்தியிருந்தோம்.
நான் என் சக மருத்துவப் போராளிகளோடு காயமுற்றவனாக ஒரு அறையில் இருக்கிறேன்!
கடமையில் இருந்தபோது நெஞ்சில் ரவை துளைத்து காயமுற்ற பெண் மரத்துவப் போராளி அருகே இருக்கிறாள். அவளுக்காக மருத்துவ மனை அருகே தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவளது அப்பா சில நாட்களின் முன்னர்தான் கொட்டிலில் வீழ்ந்த குண்டால் சிதறிச் செத்து உருக்குலைந்து வீழ்ந்திருந்தார். எனது அணியில் இருந்த அவளிடம் இந்தச் செய்தியைச் சொல்லும் துயரம் எனக்கு வாய்த்தது.
தனக்கு அப்பா வேண்டும் என்று என்னைக் கட்டித் தழுவிக் கதறியவளை என்னை அவளது தந்தையாக ஏற்குமாறு கெஞ்சியிருந்தேன். சிலநாளில் என்னுடைய காயங்களுக்கு சிகிச்சையளித்தவள்
இன்று என்னோடு காயமுற்றவளாய் உயிருக்காகப் போராடியபடி இருக்கின்றாள்.
பக்கத்தில் என்னுடைய மருத்துவக் கவனிப்பில் என்னோடு ஒன்றாகக் காயமுற்ற கேணல் கீர்த்தி ஒட்சிசன் செறிவாக்கி இயந்திரம் செயலிழக்கும் (ஒட்சிசனின்றி உயிர் காக்க முடியாத நெஞ்சதிர்வுக் காயம்) போது சாவதற்காக உயிரை இழுத்துக் கொண்டிருக்கின்றார்.
என் மருத்துவ வாழ்வனைத்தும் ஒன்றாக என்போல் ஒரு காலுடன் வந்த என் சக மருத்துவன் இசைவாணன் தனது மூன்று குழந்தைகளும் சிதறிப் பலியாகிவிட தனது நல்ல காலின் தொடை என்பு முறிவுடன் குப்பி கடிக்க அனுமதி கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாளை அவன் குப்பி கடிப்பான் என்று புரியாமல் பொறுக்கச் சொல்லிக் கேட்கிறேன்.
மூத்த மருத்துவப் போராளி லோலோ இரண்டாம் தடவையாக இன்று நடந்த வயிற்றறுவை சத்திர சிகிச்சை முயற்சி வெற்றியளிக்காததை புரியாமல் அரை மயக்கத்தில் கிடக்கின்றான்.
அதுவரை இருந்த இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் உயிர்வாழப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்து கூறி பாரிய வயிற்றுக்காய தையலோடு மருத்துவ மனையை விட்டு அழைத்துச் செல்லப் படுகின்றார்.
வைத்தியர் வரதராஜா தன் உயிர்மேல் எந்தப் பற்றுதலும் அற்றவராய் தான் காப்பெடுக்க வேண்டிய எண்ணமற்றவராய் வெளியில் நின்றார்.
அவரது இறுதி மருத்துவமனை மூன்றாவது முறை தாக்கப்பட்டு கொல்லப்பட்டோரின் உடல்கள் குவியலாய்க் கிடக்க செயலற்று நின்றார். எங்கள் மருத்துவமனையின் வாசல் வழியில் இரு பக்கமும் உடல்கள் வரம்பு போல அகற்றப்படாமல் கிடக்க
சத்திர சகிச்சையின் பின் எழமுடியாமல் கிடந்தவர்களுக்கு சேலைன் பதிதாக மாற்றிப் போட்டுவிட்டு நடு இரவில் வெளியேறினோம்.


நன்றி் - Dr.வாமன்

 

 

எங்கள் எழுத்தின் முன்னோடிகளுள் ஒருவராகிய ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களது பதிவு இது. 

//ஆனால் அனைத்துமே நான் பிறந்த தாய்மண்ணுக்காக என்ற நெகிழ்வு நிறைவுதருகிறது. இது நான் தெரிவு செய்த பயணப்பாதை. பயணம் இலகுவானதாகவும் சொகுசாகவும் இருந்தபோது துதிபாடியாகவும் , பின்பு வசைபாடியாகவும் என்னை நான் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். என் இலட்சிய எழுத்தின் சத்தியத்தைப் பேணுவேன்.// 

இந்த நேர்மைக்கு தலைதாழ்ந்த வணக்கம்..

................
மே 17. மறக்கமுடியாத இன்றைய நாள்.

2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர்.

நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால் என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன். அது தவறுமில்லை. அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன்.

பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் போராளிக் குடும்பம் ஒன்றுடன் ஒற்றையாய் தங்கியிருந்தேன்.

இனி என்ன சாவு நெருங்கிவிட்டது என்கின்ற நிலை. அதிகாலையில் வெடிப்பு சத்தங்கள் அமந்த நிலையில் அந்த குடும்பம் உண்டியல் சந்தியை நோக்கி புறப்பட்டது. நானும் தனித்துப் போய்விட்ட நிலையில் அவர்களுடன் புறப்பட்டேன். உரசுமாற்போல துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.

காலை ந்ந்திக்கடல் அருகே நவம் அறிவுக்கூடப் போராளிகளுடன் நான் சேர்ந்துகொண்டேன். சமர்க்களங்கள் பலகண்டு விழுப்புண்கள் சுமந்தவர்கள் அவர்கள். என்னை அன்போடும் அக்கறையுடனும் பார்த்தார்கள். 2 அடி அகலமும் 4 அடி நீளமும் உயரம் குறைந்ததுமான பதுங்குகுழியில் குழந்தைகள் உட்பட்ட பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தோம்.

ந்ந்திக்கடல் அருகிலும் குண்டுகள் விழுந்து பனை வடலிகள் மற்றும் பற்றைகள் பற்றிஎரிய தொடங்கின. சாவு ஓலங்கள் கிலியை ஏற்படுத்தின. விறைத்துப்போய் மரணக்களையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். குழந்தைகள் கூட அழமுடியாமல் இறுகிக் கிடந்தன.

இரண்டு நாட்களாய் உணவோ தேனீரோ இல்லை. எனது பையில் நந்தினி தந்த சிறிதளவு சீனி இருந்தது. அதைக்கூட வாயிற்போடும் மனநிலை இருக்கவில்லை. மகனின் தவிப்பு மனதை வருத்தியது.

எங்களை சுற்றி ஒரே புகைமண்டலம். கூக்குரல்கள். இனி உயிர் தப்பமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை எனக்கு. மகனையும் துணைவரையும் பிரிந்து தொடர்பற்ற நிலையில் இனி உயிர்தப்பி என்ன செய்வது என்றும் இருந்தது.

எமக்கு ஒரு பத்து மீற்றர் தள்ளி ஒரு செல் விழுந்து வெடித்தது. அக்கம் பக்கமெல்லாம் கூக்குரல். கட்டுப்போடுங்கோ என்ற போராளிக்குரல்கள். பதுங்குகுழியை விட்டு வெளியேறி ஓடியவர்களுடன் நானும் ஓடினேன். என்பின்னே பார்வைவலுவற்ற போராளி நிமலன் , பயப்பிடாதேங்கோ என எனக்கு ஆறுதல் சொல்லியபடி வந்தார்.

நவம் அறிவுக்கூட போராளியான காவலன் மாஸ்ரர் சில தினங்களுக்கு முன் காயப்பட்டிருக்கவேண்டும். கண்பார்வையையும் இழந்துவிட்டிருந்தார். காயங்களுடன் அவரும் அவரின் மனைவி பிள்ளைகளும் கூட பின்னால் வந்துகொண்டிருந்தனர். ( காவலன் மாஸ்ரர் இறந்துவிட்டதாக அறிந்தேன்).

என் தலையை உரசுமாற்போல வந்த சிறிய குண்டு ஒன்று முன்னால் விழுந்தது. ஆனால் வெடிக்கவில்லை. அதனால் தப்பினேன். எங்கே போவது என தெரியவில்லை. பொழுது மங்கும்வரை அங்கும் இங்குமாக அலைந்தேன். வழி நெடுகலும் இறந்த சிதைந்த உடல்கள். சிறிய பதுங்குகுழி ஒன்றில் இரத்தம் குளமாக நின்றது. நான்கைந்து தலைகள் மட்டும் தெரிந்தன.

முன்னர் இறந்தவர்களின் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசின. நான் அலைந்துகொண்டிருந்த நிலையில் மெல்லிய இருளில்
"ஆதியக்கா. ......"
என்று என் கைகளை பிடித்தாள் நவம்அறிவுக்கூட போராளி ஆசிரியை வித்தகி.
அந்த நெருக்கடியிலும் என்னை இழுத்துக்கொண்டு சென்று தனது அம்மாவிடம், " அம்மா ஆதியக்கா இனி உங்கட பொறுப்பு. உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்......." என கூறிப்போய்விட்டார்.

இரவு முழுவதும் இராணுவத்தினரின் தாக்குதல்கள். நடப்பதும் கைவிடப்பட்ட பதுங்குகுழிக்குள் பதுங்குவதும் என இருந்தோம். மழைகாலம் என்பதால் வெற்றுக்கால்களில் சேறு காய்ந்து குத்தியது.
நிலமெங்கும் காயப்பட்டவர்கள். உயிரற்ற உடல்களே கண்ணிற்பட்டன. கண்ணீர்கூட இல்லை. அழுவதற்கும் எவரிடமும் தென்பில்லை.

பின்னர் வித்தகி குடும்பத்துடனேயே தங்கி இருந்து மே 17 காலை வட்டுவாகலூடாக இராணுவாக்கிரமிப்புக்குள் வந்தோம். கடலென கூடிய மக்களிடையே காயங்களுடன் எனக்கு தெரிந்த பலரும் இருந்தார்கள்.
இன்று அவர்களில் பலர் எங்கே எனத்தெரியாது.

மூன்று ஆண்டுகால பிரிவையும் துயரங்களையும் பல்வேறு நெருக்கடிகளையும் மன உளைச்சல்களையும் தாண்டி துணைவருடன் இணைந்துகொண்ட நான் இறக்கிவைக்கமுடியாத் துயரங்களுடன் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உயிருள்ளவரை மறக்கமுடியாத வலிகள்.

ஆனால் அனைத்துமே நான்பிறந்த தாய்மண்ணுக்காக என்ற நெகிழ்வு நிறைவுதருகிறது. இது நான் தெரிவு செய்த பயணப்பாதை. பயணம் இலகுவானதாகவும் சொகுசாகவும் இருந்தபோது துதிபாடியாகவும் , பின்பு வசைபாடியாகவும் என்னை நான் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். என் இலட்சிய எழுத்தின் சத்தியத்தை பேணுவேன். உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் வாழக்கற்றுத்தந்த என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். அவரே எனக்குள் நாட்டுப்பற்றை நாட்டியவர்.

இறுதிப்போர் எப்படி நடந்தது ? ஏன் இப்படி நசுக்கப்பட்டோம் ?கடைசிவரை என்ன நடந்ததென்பது எல்லோர்க்கும் தெரியும்.

முள்ளிவாய்க்காலில் வதைந்தவர்கள் , காயமுற்றவரகள் , உயிரிழந்தவர்கள், உறுப்பிழந்தவர்கள், காணாமற்போனவர்கள் , என்னைப்போல் உயிர்தப்பி இன்னமும் மனவதைப் படுவோர் எல்லோருக்குமாக இறைவனை இறைஞ்சுகிறேன். எமது அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து மகிழ்வாக வாழவேண்டும். அதற்காக உழைப்போம்.

நன்றி -ஆதிலட்சுமி சிவகுமார்

 

Source முகநூல் 

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.
புலியை எதிருங்கள் ஆதரியுங்கள் அது உங்கள் உங்கள் தனிப்பட்ட மனவெழுச்சியாகும்.
 ரஜனி/கமல் , விஜய்/அஜித் போன்று திரையில் பார்த்து பங்கு பிரித்து பார்த்து விசிலடிப்பது அல்ல எம் நிலமை.  

உங்களைப் போல அல்ல எங்களுக்கு.
இன்றைய நாளில் செத்த எல்லாரையும் நாங்கள் உயிரோடு கண் முன் கண்டவர்கள் ஏன் அவர்கள் செத்தார்கள் என்ற காரணம் தெரிந்தவர்கள்.
இன்றைய நாளில் புலி எதிர்ப்பு என்று நீங்கள் கேவலப்படுத்துவது புலிகளையல்ல உங்களோடு சகோதரமாக பழகும் ஒருவனது அண்ணனை/ தம்பியை /அக்காவை/ தங்கையை / சொந்தக்காரனை.

ஒவ்வொரு மனுசனிட்டை போயும் உனக்கு உயிர் குடுத்தது யார் எண்டால் அம்மா அப்பா என்றிட்டு போய்விடுவான் ஆனால் எங்களுக்கு உயிர் குடுத்ததோட அம்மா அப்பான்ர வேலை முடிஞ்சுது இண்டைக்கு நாங்கள் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் அவங்கள் குடுத்த உயிர் தான்.

எங்கோ ஒரு அரங்கில் இருந்து கொண்டு ஊடகங்களால் மட்டும் எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எம் நிலமை தெரிய வாய்ப்பில்லை தான் அதனால் உங்கள் மேல் எனக்கு கோபமும் இல்லை ஆனால் இந்தப்படத்துக்கு எனக்கு பதில் சொல்லுங்கள் இதில் இருப்பது மீசை அரும்ப முதலே என்னோடு கை கோர்த்து பள்ளி வந்தவனும் ஒன்றாய் படித்தவனும் ஒன்றாய் விளையாடியவனும் ஒன்றாய் தின்று ஒன்றாய் படுத்தவனுமே எனக்கு தெளிவாய் தெரியும் இதில் ஒருத்தனும் முஸ்லீமைக் கொல்ல ஆயுதம் தூக்கவில்லை ஏன் சிங்களவரைக் கூட கொல்ல வேண்டும் என்று ஆயுதம் தூக்கவில்லை. நான் தூக்காவிடில் தன் அக்காவையோ தங்கையையோ குலைத்துவிடுவார்கள் என்று தூக்கியவர்கள்.
யாராவது தன் அழிவுக்கருவியை தானே விரும்பித் தூக்குவானா? அது தெரிந்தும் ஏன் தூக்கினான் என்று ஒரு நிமிடமாவது யாராவது நினைத்துப் பார்த்தால் இந்த உணர்வு இடைவெளிகள் வராது.

இவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தான் புலிகள் எனக்கு என் நிழலோடு வாழ்ந்த சகோதரர்கள், கண்ணால் கண்ட கடவுள்கள் ஏன் அதற்கு மேலே என்று தான் சொல்வேன்....

நன்றி மதிசுதா

முகநூல் வழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை வாசித்து விட்டு  வெறுமனே லைக் செய்துவிட்டு போக என்னால் முடியவில்லை.
நெஞ்சில் அமிலம் நிறைய, நான் நம்பி வணங்கிய கோயில்கள்,கடவுள்களுக்கு வசையும் சாபமும் மட்டுமே என்னிடம்  எஞ்சி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.