Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் இத்தாலி

 

யூரோ கோப்பை கால்பந்தில் நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப்படவில்லை. இத்தாலி அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளுக்கு சுவீடன் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

82-வது நிமிடத்தில் இத்தாலி நடுகள வீரர் பரோலோ தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது. அடுத்த 6-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. ஜாஜா உதவியுடன் சுவீடனின் தடுப்பு அரண்களை ஏமாற்றி இந்த கோலை ஈடர் அடித்தார். முடிவில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தாலி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு இத்தாலி முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலி 22-ம் தேதி அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

சுவீடன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் டிரா செய்திருந்த நிலையில் தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பெல்ஜி யத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜெர்மனி ஆட்டம் டிரா

நேற்று முன்தினம் நள்ளிரவு சி பிரிவில் ஜெர்மனி - போலந்து அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவ டைந்தது. உலக சாம்பியனான ஜெர்மனி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளை போலந்து வீரர்கள் முறியடித்தனர். இந்த ஆட்டத்தின் முடிவு ஜெர்மனி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. முதல் ஆட்டத்தில் உக்ரைன் அணியை வீழ்த்திய ஜெர்மனி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி வடக்கு அயர்லாந்தை சந்திக்கிறது.

வடக்கு அயர்லாந்து வெற்றி

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து 2-0 என்ற கோல் கணக் கில் உக்ரைனை வீழ்த்தியது. வடக்கு அயர்லாந்துக்கு இது முதல் வெற்றியாகும். அதே வேளையில் 2-வது தோல்வியை சந்தித்த உக்ரைன் அடுத்த சுற்றுக்கு முன்னே றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

பெல்ஜியம்-அயர்லாந்து

நேரம்: மாலை 6.30

ஐஸ்லாந்து-ஹங்கேரி

நேரம்: இரவு 9.30

போர்ச்சுக்கல்-ஆஸ்திரியா

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-நாக்-அவுட்-சுற்றில்-இத்தாலி/article8744563.ece

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
யூரோ 2016: இறுதிப் 16 அணிகளில் ஸ்பெயின், இத்தாலி
 

article_1466254694-tsjdojcz.jpgபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஸ்பெயினும் இத்தாலியும் தகுதி பெற்றுள்ளன.

ஸ்பெயின், துருக்கி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, ஏற்கெனவே செக் குடியரசையும் தனது முதலாவது குழுநிலைப் போட்டியில் வென்றிருந்த நிலையில், குழு டியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகள்ச சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், ஸ்பெயின் சார்பாக அல்வாரோ மொறாட்டா இரண்டு கோல்களையும் நொலிட்டோ ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, இத்தாலி, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, ஏற்கெனவே தனது முதலாவது குழு நிலைப் போட்டியில் பெல்ஜியத்தை வென்றிருந்த நிலையில், குழு இயிலிருந்து முதலாவது அணியாக, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், இத்தாலி சார்பாக பெறப்பட்ட கோலினை ஈடர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குரோஷியா, செக்.குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியின் நடுவே, எரிசுடர்களை, இரசிகர்கள் மைதானத்துக்குள் எறிந்திருந்த நிலையில், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/175010/ய-ர-இற-த-ப-அண-கள-ல-ஸ-ப-ய-ன-இத-த-ல-#sthash.NU1IZSJm.dpuf
Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் - அயர்லாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்

 
 
யூரோ கால்பந்தில் துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்த ஸ்பெயின் மொராட்டா | படம்: ஏஎப்பி
யூரோ கால்பந்தில் துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்த ஸ்பெயின் மொராட்டா | படம்: ஏஎப்பி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் - துருக்கி அணிகள் நேற்று முன்தினம் மோதின. ஆரம்பம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் அல்வாரா மொராட்டா 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நோலிடோவிடம் பாஸை பெற்று தலையால் முட்டி கோல் அடித்தார் மொராட்டா.

அடுத்த 3-வது நிமிடத்தில் நோலிடோ கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் துருக்கி அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. 25-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹகன் ஃப்ரீகிக் மூலம் அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் உத்வேகத்துடன் விளையாடியது. 48-வது நிமிடத்தில் மொராட்டா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

அதன் பின்னர் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் ஸ்பெயின் வீரர்கள் நழுவ விட்டனர். கடைசி வரை துருக்கியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்பெயின் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் செக் குடியரசை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது. ஸ்பெயின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி நள்ளிரவு குரோஷியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை டிராவில் முடித்தாலே ஸ்பெயின் தனது பிரிவில் முதலிடம் பிடித்து விடும். இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் நட்சத்திரம் இனியெஸ்டா கோல் அடிப்பதற்கு பல்வேறு வாய்ப்பு களை உருவாக்கி கொடுத்தார்.

இவரது துல்லியமான நகர்வு, பாஸ் பல்வேறு தருணங்களில் துருக்கி அணியை நிலைகுலையச் செய்தது.

துருக்கி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய மங்கி விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி செக்குடியரசுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மற்ற பிரிவுகளில் உள்ள அணிகளின் முடிவை பொறுத்தே துருக்கியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து-ரஷ்யா போட்டி யைப் போன்றே இதுவும் ரசிகர்களின் ரகளை நிரம்பிய ஆட்டமாக அமைந்தது, துருக்கி ரசிகர்கள் மைதானத்துக்குள் பட்டாசைத் தூக்கி எறிந்து தங்கள் வெறுப்பைக் காட்டினர். இதனால் துருக்கி அணியே யுஏபாவின் தடைகளை எதிர்நோக்கியுள்ளது.

நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. லுகாஹூ இரு கோல்களும், விட்செல் ஒரு கோலும் அடித்தனர். பெல்ஜியத்துக்கு இது முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியடைந்திருந்தது. அதே வேளையில் அயர்லாந்துக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தை சுவீடனுன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ்
நேரம்: நள்ளிரவு 12.30

ருமேனியா-அல்பேனியா
நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-நாக்-அவுட்-சுற்றில்-ஸ்பெயின்-அயர்லாந்தை-வீழ்த்தியது-பெல்ஜியம்/article8748430.ece

Link to comment
Share on other sites

பெனால்டி வாய்ப்பு உட்பட பலவற்றை நழுவ விட்ட ரொனால்டோ: ஆஸ்திரியாவுடன் போர்ச்சுகல் டிரா

 
பெனால்டி வாய்ப்பை போஸ்டில் அடித்து கோட்டை விட்ட ரொனால்டோ முகத்தை மூடிக் கொண்டார். | படம்: ஏ.பி.
பெனால்டி வாய்ப்பை போஸ்டில் அடித்து கோட்டை விட்ட ரொனால்டோ முகத்தை மூடிக் கொண்டார். | படம்: ஏ.பி.

யூரோ 2016 கால்பந்து போட்டித் தொடரில் 2-வது முறையாக போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொதப்பலாக ஆட ஆஸ்திரியாவுடனும் 0-0 என்று டிரா ஆனது. ஐஸ்லாந்து டிராவுக்குப் பிறகு 2-வது டிராவாகும் இது.

குறிப்பாக கோல் அடிக்கக் கிடைத்த அருமையான ஸ்பாட் கிக் வாய்ப்பில் ரொனால்டோ போஸ்டில் அடித்து விரயம் செய்தது போர்ச்சுகல் அணி நிர்வாகத்திற்கு வெறுப்பைக் கிளப்பியது.

ஃபீகோவின் சாதனையை முறியடித்து 128-வது போட்டியில் ஆடும் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் நிமிடத்திலிருந்து முன்னணி நிலையில் குவாரெஸ்மா, ரொனால்டோ, நானி ஆடினர். ஆனால் குவாரெஸ்மா ஒரு நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை புறக்கணித்து நோக்கமெதுவுமற்று உள்ளுக்குள்ளே விரயமான பாஸ் ஒன்றை அடிக்க ரொனால்டோ அவருக்கு ‘டோஸ்’ கொடுத்தார்.

20 நிமிடங்களுக்குப் பிறகு நானி, ரஃபேல் குரைரோ இணைந்து ஒரு நகர்வை மேற்கொள்ள பந்து ரொனால்டோவுக்கு அடிக்கப்பட ரொனால்டோ பக்கவாட்டு காலில் அதனை கோலாக அடித்திருக்க முடியும் ஆனால் அதனை வைடாக அடித்தார் ரொனால்டோ. சிறிது நேரம் கழித்து நானி, தலையால் அடித்த ஷாட் ஒன்றும் கோலாக மாறவில்லை.

ஆஸ்திரியாவுக்கு 41-வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பும் விரயமானது. அலாபாவின் ஃப்ரீகிக்கை பினிஷ் செய்ய ஆளில்லை. இடைவேளைக்குப் பிறகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரண்டு ஃப்ரீ கிக்குகள் விரயமானது, ஒன்று கிராஸ்பாருக்கு மேல் சென்றது, மற்றொன்று கோலுக்கு வெளியே சென்றது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் மட்டும் ஃப்ரீ கிக் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இது குறித்த புள்ளிவிவரங்களின் படி 36 ஃப்ரீ கிக்குகளில் 13 ஷாட்கள் கிராஸ்பாருக்கு மேல், 12 அவுட்டில் அடிக்கப்பட்டது, 10 கீப்பரால் தடுக்கப்பட்டது.

இப்படியே கோட்டை விடப்பட்ட வாய்ப்புகளாகச் சென்று கொண்டிருக்க ஆட்டம் முடிய 13 நிமிடங்கள் இருந்த போது ரொனால்டோ வேகமாக பாக்ஸிற்குள் பந்துடன் சென்றார். மார்டின் ஹிண்டெரிகருடன் ஏற்பட்ட மோதலில் ரொனால்டோ கீழே தள்ளப்பட பெனால்டி வாய்ப்பு போர்ச்சுகலுக்கு வழங்கப்பட்டது. பெனால்டி மற்றும் ஆஸ்திரிய வீரருக்கு மஞ்சள் அட்டை. ரொனால்டோ ஸ்பாட் கிக்கை அடிக்க அது போஸ்டில் பட்டது, கோலுக்கான அருமையான வாய்ப்பு பறிபோனது. இதற்குச் சில நிமிடங்கள் கழித்து ரொனால்டோ கோல் அடித்தார், ஆனால் மிகச்சரியாக ஆஃப் சைடு என்று கோல் மறுக்கப்பட்டது.

போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

அனைத்திற்கும் மேலாக பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட ரொனால்டோ ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டிராவினால் போர்ச்சுக்கல் இனி வரும் ஆட்டங்களில் வென்றேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/பெனால்டி-வாய்ப்பு-உட்பட-பலவற்றை-நழுவ-விட்ட-ரொனால்டோ-ஆஸ்திரியாவுடன்-போர்ச்சுகல்-டிரா/article8748514.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Ranking of third-placed teams

Pos Grp Team Pld W D L GF GA GD Pts Qualification
1 C 23px-Flag_of_Northern_Ireland.svg.png Northern Ireland 2 1 0 1 2 1 +1 3 Advance to knockout phase
2 B 23px-Flag_of_Slovakia.svg.png Slovakia 2 1 0 1 3 3 0 3
3 F 23px-Flag_of_Portugal.svg.png Portugal 2 0 2 0 1 1 0 2
4 D 23px-Flag_of_the_Czech_Republic.svg.png Czech Republic 2 0 1 1 2 3 −1 1
5 A 23px-Flag_of_Romania.svg.png Romania 2 0 1 1 2 3 −1 1  
6 E 23px-Flag_of_Sweden.svg.png Sweden 2 0 1 1 1 2 −1 1
Updated to match(es) played on 18 June 2016. Source: UEFA

Knockout phase

In the knockout stage, extra time and a penalty shoot-out are used to decide the winner if necessary.[12] All times are local, CEST (UTC+2).

Link to comment
Share on other sites

கால்பந்தாட்ட போட்டிகளில் வன்முறை: பல்வேறு அணிகளுக்கு எதிராக யுஇஃபா ஒழுங்கு நடவடிக்கை

 

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, சனிக்கிழமையன்று நடைப்பெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில், கால்பந்து போட்டிகளை காணவந்த ரசிகர்களுக்கு இடையே நடந்த வன்முறை காரணமாக அங்கேரி, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய அணிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

160618215429_hungry_fan_euro_2016_624x35
 

ஏற்கனவே யுஈஃபா வின் ஒழுங்கு நடவடிக்கை நிர்வாக அமைப்பு துருக்கி மற்றும் க்ரோஷியா ஆகிய அணிகளை விசாரித்து வருகிறது.

மேலும் இங்கிலாந்து மற்றும் ரஷிய கால்பந்து ரசிகர்களின் நடவடிக்கைகளுக்காக அந்த இரு அணிகளையும் அதிகாரபூர்வமாக எச்சரித்துள்ளது.

கடந்த வருடம் இஸ்லாமியவாத திவிரவாதிகளால் பாரிஸில் தாக்குதல் நடைத்தப்பட்டதையடுத்து பெரும் பாதுகாப்பு குறித்த அக்கறைகளுக்கு இடையே இந்த ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.

http://www.bbc.com/tamil/global/2016/06/160619_euro_2016

Link to comment
Share on other sites

யூரோ 2016: இறுதி 16 அணி சுற்றில் சுவிற்ஸர்லாந்து
 
20-06-2016 06:28 PM
Comments - 0       Views - 7

article_1466431170-EuroPiswadars.jpgபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ண போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து ஆகிய போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு சுவிற்ஸர்லாந்து தகுதி பெற்றதுடன், மற்றைய போட்டியில், றோமானியாவை தோற்கடித்த அல்பேனியா, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சுவிற்ஸர்லாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டிக்கான பிரான்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆரம்பித்திருக்காத அந்தோனி கிறீஸ்மன்னும் போல் பொக்பாவும் ஆரம்பித்திருந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில், கோல்களைப் பெற்ற திமித்திரி பயேட் ஆரம்பித்திருக்கவில்லை.

இதேவேளை, அல்பேனியா, றோமானியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மேற்படி போட்டிகளின் முடிவில், குழு ஏயில் முதலிடம் பெற்றுள்ள பிரான்ஸ், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், குழு சி, டி அல்லது இயில் மூன்றாவது இடம்பெற்ற அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) லயோனில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், பெரும்பாலும், வடக்கு அயர்லாந்து அல்லது அயர்லாந்துக் குடியரசை சந்திக்கவுள்ளது.

மறுகணம், இக்குழுவில் இரண்டாமிடம் பெற்றுள்ள சுவிற்ஸர்லாந்து, குழு சியில் இரண்டாமிடம் பெற்ற அணியை இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், தற்போதைய நிலையில், போலந்தை சந்திக்க வேண்டும். எனினும், சந்திக்க வேண்டிய அணியானது ஜெர்மனி அல்லது வடக்கு அயர்லாந்தாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

தவிர, இக்குழுவில் மூன்றாமிடம் பெற்றுள்ள அல்பேனியா, ஏனைய நான்கு, மூன்றாமிடம் பெற்ற அணிகளில் சிறந்த அணியாக இருக்குமானால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும்.

- See more at: http://www.tamilmirror.lk/175153/ய-ர-இற-த-அண-ச-ற-ற-ல-ச-வ-ற-ஸர-ல-ந-த-#sthash.jgnFx19s.dpuf
Link to comment
Share on other sites

யூரோ கால்பந்து தொடரில் அல்பேனியாவுக்கு முதல் முறையாக வெற்றி: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து

 
 
யூரோ கால்பந்தில் ருமேனியாவுக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் அல்பேனியா வீரர் அர்மான்ட் சடிகு. படம்: கெட்டி இமேஜஸ்.
யூரோ கால்பந்தில் ருமேனியாவுக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் அல்பேனியா வீரர் அர்மான்ட் சடிகு. படம்: கெட்டி இமேஜஸ்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ருமேனியா-அல்பேனியா அணிகள் மோதின. 43-வது நிமிடத்தில் அல்பேனியாவின் அர்மான்ட் சடிகு முதல் கோலை அடித்தார். லெடியன் மெமுஷாஜிடம் இருந்து கிராஸை பெற்ற அர்மான்ட் சடிகு, ருமேனியா கோல்கீப்பர் சிப்ரியனின் தடுப்பை மீறி கோல் அடித்து அசத்தினார்.

பெரிய தொடர் ஒன்றில் அல்பேனியா அடித்த முதல் கோல் இதுதான். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா முன்னிலை வகித்தது.

இதற்கு பதில் கோல் திருப்ப இரண்டாவது பாதியில் ருமேனியா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்றது. பெரிய தொடரில் அல்பேனியா பெற்ற முதல் வெற்றி யாக இது அமைந்தது. இந்த போட்டி யில் 62 சதவீத நேரம் ருமேனியா தான் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனாலும் அர்மான்ட் சடிகு அடித்த கோல் ருமேனியாவை வீழ்த்துவதற்கு போதுமானதாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு அல்பேனியா முன்னேறுவதற்கு சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அல்பேனியா 3 ஆட்டத்தில் இரு தோல்வி, ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து பிரான்ஸ் 7 புள்ளிகளுடனும், சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை அடிப்படையில் அல்பேனியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற மற்ற பிரிவில் உள்ள அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது அல்பேனியா.

சுவிட்சர்லாந்து அசத்தல்

லில்லி நகரில் ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. பிரான்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் ருமேனியா, அல்பேனியா அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. சுவிட்சர்லாந்து அணி டிரா செய்தால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையில் இந்த ஆட்டத்தை சந்தித்தது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கோலின்றி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை பிரான்ஸ் வீணடித்தது. இருமுறை அந்த அணி வீரர்கள் அடித்த பந்து கோல்கம்பத்தின் கம்பியில் பட்டு வெளியே சென்றது. போக்பா அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் தடுத்து நிறுத்தினார். அடுத்த முறை 25 யார்டு தூரத்தில் இருந்து அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

முதல் இரு ஆட்டங்களிலும் கோல் அடித்து அசத்திய பயெட், 63-வது நிமிடத்தில் மவுஸாவிடம் இருந்து பெற்ற பாஸை இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு வெளியே சென்றது.

இந்த போட்டி டிரா ஆனதால் ஏ பிரிவில் 7 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதல் இடத்தையும், 5 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணி முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தற்போது தான் முன்னேறி உள்ளது.

நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி சி, டி அல்லது இ பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் அணியுடன் மோதும். அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி, போலந்து அல்லது வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகளில் ஏதாவது ஒரு அணியை எதிர்கொள்ளும்.

இன்றைய ஆட்டங்கள்

வடக்கு அயர்லாந்து - ஜெர்மனி

நேரம்: இரவு 9.30

உக்ரைன் - போலந்து

நேரம்: இரவு 9.30

குரோஷியா - ஸ்பெயின்

நேரம்: நள்ளிரவு 12.30

செக்குடியரசு-துருக்கி

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

Link to comment
Share on other sites

யூரோவில் வேல்ஸ் அபாரம்: ரஷ்ய கலகக்கும்பல் தலைவன் கைது!

யூரோ கால்பந்து தொடரில் வேல்ஸ் அணி ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் லீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

wales.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், பி பிரிவில் நேற்று டூலாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில்,  ரஷ்ய அணியுடன் வேல்ஸ் மோதியது. இந்த போட்டியில் வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் 11 வது நிமிடத்தில் ஆரான் ராம்சே வேல்ஸ் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து 19வது நிமிடத்தில் டெயிலரும் பிற்பாதியில் 67வது நிமிடத்தில் காரத் பேலும் வேல்ஸ் அணிக்கான கோல்களை அடித்தனர். இதனால் பி பிரிவில் இருந்து வேல்ஸ் 6 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியும் இந்த பிரிவில் இருந்து 5 புள்ளிகள் பெற்று அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது. ரஷ்யா போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது.

‘இதற்கிடையே  கடந்த இரு நாட்களுக்கு முன் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் சங்கத்  தலைவர் அலெக்சான்டர் ஸ்பிரிங்கின்  நேற்று போட்டி நடந்த டூலாஸ் நகரில் பிடிபட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக மீண்டும் பிரான்சுக்குள் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மார்செலி நகரில் நடந்த ரஷ்யா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் போட்டியின் போது ஏராளமான ரஷ்ய ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட, அலெக்சான்டர்தான் காரணமென்று குற்றஞ்சாட்டிய பிரெஞ்சு போலீஸ் அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.

http://www.vikatan.com/news/sports/65375-wales-beat-russia-euro-2016.art

Link to comment
Share on other sites

ஆடுகளத்தில் புகுந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்த ரசிகரை இழுத்து சென்ற போலீஸ் (வீடியோ)

ஐரோப்பா கால்பந்து போட்டியின் போது, போர்ச்சுகல் ரசிகர் ஒருவர் அதிரடியாக மைதானத்திற்குள் நுழைந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்துக் கொண்டார். அவரை காவல்துறையினர் இழுத்து சென்றனர்.

பாரிஸில், போர்ச்சுகல்– ஆஸ்திரியா மோதிய லீக் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டியின் போது, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் தவறவிட்டார். இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார் ரொனால்டோ.



 

இந்தநிலையில் திடீரென ஒரு போர்ச்சுகல் ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அந்த ரசிகருடன் செஃல்பி எடுக்க முன்வந்த ரொனால்டோ சிரித்தபடி அவருக்குப் போஸும் கொடுத்தார். ரசிகரும் உற்சாகமாக செஃல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அவரை காவல்துறையினர் இரண்டு பேர் சேர்ந்த இழுத்துச் சென்றனர். மைதானத்தை சுற்றி காவலர்கள் இருந்தபோதும், ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்து செஃல்பி எடுத்துக் கொண்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://www.vikatan.com/news/sports/65397-police-captured-fan-who-too-selfie-with-ronaldo.art

Link to comment
Share on other sites

யூரோ 2016: நொக்-அவுட் சுற்றில் வேல்ஸ், இங்கிலாந்து
 
 

article_1466508432-LEADramyeiba.jpgபிரான்ஸில் இடம்பெற்று வரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு, குழு பியிலிருந்து வேல்ஸும் இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன.

திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ரஷ்யாவுடனான போட்டியில் வேல்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தும் ஸ்லோவாக்கியாவுடனான போட்டியை இங்கிலாந்து சமநிலையில் முடித்துக் கொண்டதை தொடர்ந்துமே, வேல்ஸும் இங்கிலாந்தும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ், ரஷ்யா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் ரஷ்யாவைத் தோற்கடித்த வேல்ஸ், குழு பியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. வேல்ஸ் சார்பாக, ஆரோன் ராம்ஸே, நீல் டெய்லர், கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.

1958ஆம் ஆண்டு உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளின்போது, பீலே பெற்ற கோலினால், பிரேஸிலிடம் தோல்வியடைந்து வெளியேறிய பின்னர், சர்வதேசத் தொடர் ஒன்றின் நொக்-அவுட் சுற்றுக்கு வேல்ஸ் நுழையும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், முதற்தடவையாக யூரோ கிண்ணப் போட்டிகளில் பங்கேற்ற வேல்ஸ், தனது, இறுதி 16 அணிகளுக்‌கான சுற்றுப் போட்டியின்போது, குழு ஏயில் மூன்றாமிடம் பெற்றுள்ள (அல்பேனியா) அல்லது குழு டியில் மூன்றாமிடத்தைப் பெறும் (செக் குடியரசு அல்லது குரோஷியா அல்லது துருக்கி) அல்லது குழு சியில் மூன்றமிடத்தைப் பெறும் (ஜெர்மனி அல்லது போலந்து அல்லது வடக்கு அயர்லாந்தைச் ) எதிர்வரும் சனிக்கிழமை (25)  சந்திக்கவுள்ளது.

மறுகணம், இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் அணித்தலைவர் வெய்ன் ரூனி உள்ளிட்ட ஆறு பேர் மாற்றப்பட்டிருந்த நிலையில், இரண்டு அணிகளும் இப்போட்டியில் கோல்களை பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், குழு பியில் இரண்டாமிடம் பெற்றுள்ள இங்கிலாந்து, குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியை, தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்கவுள்ளது. குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியாக, பெரும்பாலும் போர்த்துக்கல்லே இருக்கும் என்ற நிலையில், 2004ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தின் போதும் 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போதும் போர்த்துக்கல்லே இங்கிலாந்தை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் ஒஸ்திரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய அணிகளும் குழு எஃப்இல் இரண்டாமிடத்தைப் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குழு நிலைப் போட்டிகளுடன் ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் லெயோனிட் ஸ்லூட்ஸ்கி பதவி விலக முன்வந்துள்ளார். இவரினது ஒப்பந்த காலம், யூரோ 2016 உடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குரோஷியா, செக் குடியரசு அணிகளுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில், இரசிகர்கள் குழப்பம் விளைவித்தமைக்காக, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பு, குரோஷியாவுக்கு 100,000 யூரோ அபராதம் விதித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/175231#sthash.8SScE7g7.dpuf
Link to comment
Share on other sites

யூரோவில் ஸ்பெயின் தோல்வி ;

யூரோ கால்பந்து தொடரில் குரோஷிய அணி  ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. யூரோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது.

rams.jpg

 டி பிரிவில் நடந்த இந்த ஆட்டத்தில், 7வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோல் அடித்தது. பெப்ரிகாஸ் கொடுத்த பாசை அல்வாரோ மாரட்டா எளிதாக கோலாக்கினார். இந்த கோலுக்கு 45வது நிமிடத்தில் குரோஷியாவின் கல்நிக் பதிலடி கொடுத்தார். ஸ்பெயினுக்கு 70வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. செர்ஜியோ ரமோஸ் அடித்த இந்த பெனால்டியை குரோஷியா கோல்கீப்பர் டன்ஜெல் அற்புதமாக டைவ் அடித்து தடுத்து விட்டார்.

ஆட்டம் முடியும் தருவாயில் 87வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெர்சிக் நேர்த்தியாக ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் குரோஷியா 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ஸ்பெயின் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்தது. நேற்று நடந்த பிற ஆட்டத்தில் துருக்கி 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசையும் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரேனையும் தோற்கடித்தன.

.

557 ரசிகர்கள் கைது

இதற்கிடையே கடந்த 12ம் தேதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் ஈடுபட்ட இரு  ரஷ்ய ரசிகர்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  30 இங்கிலாந்து ரசிகர்களும், 7 வடக்கு அயர்லாந்து ரசிகர்களும், 5 வேல்ஸ் ரசிகர்களும் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் இதுவரை 557 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/65413-perisic-stuns-champions-with-late-winner.art

Link to comment
Share on other sites

குரேஷியாவிடம் சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி: இறுதி 16-ல் இத்தாலியுடன் மோதல்

ஆர்.முத்துக்குமார்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
பெனால்டி கிக் கோல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ். | படம்: ஏ.எஃப்.பி.
பெனால்டி கிக் கோல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ். | படம்: ஏ.எஃப்.பி.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரில் குரேஷியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்ற கடந்த முறை சாம்பியன் ஸ்பெயின் அணி இதனால் இறுதி-16 சுற்றில் இத்தாலியை சந்திக்க நேரிட்டுள்ளது.

பிரிவு டி-யில் ஸ்பெயின் முதலிடம் பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குரேஷிய அணியின் இவான் பெரிசிக் அடித்த கடைசி நேர அதிர்ச்சி கோலினாலும், ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டதாலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்த போது செர்ஜியோ ரேமோஸ் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட, கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது பெரிசிக் கோல் அடித்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

15 போட்டிகளாக தோல்வியடையாத யூரோ சாதனை ஸ்பெயினை பொருத்தவரை முடிவுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் அணியே ஆதிக்கம் செலுத்தியது, 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதுவும் இந்தத் தொடரில் ஸ்பெயின் வீரர்கள் செயல்படுத்தும் அபாரமான துல்லியம் மற்றும் சாதுரியத்துக்கு மற்றொரு உதாரணம், எந்த ஒரு அணியும் ஸ்பெயின் போல் இந்தத் தொடரில் இவ்வளவு துல்லியமான கால்பந்தாட்டத்தை ஆடவில்லை என்றே கூறிவிடலாம், என்ன இந்தப் போட்டி இனியெஸ்டாவின் ஆதிக்கம் கடந்த போட்டிகளை ஒப்பிடும்போது சற்றே குறைந்தது.

டேவிட் சில்வா 7-வது நிமிடத்தில் பந்தை குரேஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார், பிறகு ஒரு சற்றும் எதிர்பாராத ரிவர்ஸ் பாஸ் மூலம் செஸ்க் பேபர்காஸுக்கு அனுப்பினார். அவர் குறுக்காக பந்தை எடுத்துச் சென்றதை யாரும் கவனிக்காதது போல் இருந்தது, கடைசியில் அவர் செய்த கிராஸ் பேக் போஸ்ட்டுக்கு வந்த மொராட்டாவினால் கோலாக மாற்றப்பட்டது. இந்தத் தொடரில் இவரது 3-வது கோலாகும் இது. காரத் பேலுடன் சரிசமமாக நிற்கிறார் மொராட்டா.

ஒரு அணியாகத் திரண்டு ஆடும் தங்கள் திட்டத்தில் சற்றும் சுணக்கம் ஏற்படாத ஸ்பெயின் 2-வது கோலையும் அடித்திருக்கும், ஆனால் இம்முறை சில்வாவின் கிராஸை நொலிட்டோ கோலுக்கு சற்று வெளியே அடித்தார். இன்னொரு புறம் குரேஷியா தனது அச்சுறுத்தல் ஆட்டத்தையும் கைவிடவில்லை, ஸ்பெயின் அணி மீதான ‘பிரபை’ குறித்து கவலைப்படாமல் ஆடியதால் குரேஷியா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடமுடிந்தது.

ஸ்பெயின் தனது 2-வது கோலுக்காக தேடிக்கொண்டிருக்கும் போது குரேசியா சமன் செய்தது. பெரிசிக் கிராஸ் ஒன்று காலினிச்சிடம் வர ரேமோஸைக் கடந்து அவர் பந்தை எடுத்து வந்து ஸ்பெயினின் டி ஜியாவைத் தாண்டி கோலாக மாற்றினார் 1-1.

2-வது பாதியில் குரேஷியா தன்னம்பிக்கையுடன் தொடங்கியது, முதலில் டாரிஜோ ஸ்ரணாவின் கிராஸை ஸ்பெயினின் டேவிட் டி ஜியா தட்டி விட்டார், பிறகு டின் ஜெட்வஜ் அதே பந்தை அடித்ததையும் தடுத்தார்.

ஆனால் 72-வது நிமிடத்தில் தங்களுக்கு எதிராக அநீதி பெனால்டி ஸ்பெயின் சார்பாக வழங்கப்பட்டதாக குரேஷியா வருந்தியிருக்கக் கூடும். இனியெஸ்டா அடித்த அபாரமான தூக்கி அடித்த பாஸை சில்வா விரட்டினார். ஆனால் அவருக்கு குரேஷிய வீரர் சைமி வ்ரசாலிகோ கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார் சில்வா.

இதற்கு ஸ்பாட் கிக் கொடுக்கப்பட்டது. கேப்டன் ரேமோஸ் பெனால்டி ஷாட்டை சரியாக அடிக்கவில்லை, குரேஷிய கோல் கீப்பர் சுபசிச் சுலபமாக தடுத்து விட்டார். கேப்டன் ரேமோஸ் கால்பந்து வாழ்வில் இது பெரிய கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.

இது நடக்கும் போது ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தன. ஆனால் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருக்கும்போது பெரிசிக் அருமையான கோல் ஒன்றை அடிக்க குரேஷியா 2-1 என்று வெற்றி பெற்று குரூப் டியில் முதலிடம் பிடித்து இறுதி 16 சுற்றில் பெரிய அணிகளை சந்திப்பதை தவிர்த்துள்ளது, ஸ்பெயின் இத்தாலி அணிகள் திங்கட்கிழமை மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/குரேஷியாவிடம்-சாம்பியன்-ஸ்பெயின்-அதிர்ச்சித்-தோல்வி-இறுதி-16ல்-இத்தாலியுடன்-மோதல்/article8760198.ece

Link to comment
Share on other sites

செய்தியாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ

Ronaldo

 

போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னிடம் கேள்வி கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசினார் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்த்ரியா அணியுடனான போட்டியில், பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால், அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மீடியாக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவருக்கு அழுத்தத்தை உருவாக்கி வருகின்றன. தனியார் டிவி ரிப்போர்டர் ஒருவர், ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாரா என்று ரெனால்டோவிடம் கேள்வி கேட்டார். ஆனால் ஆஸ்திரியாவுடனான போட்டி டிராவில் முடிந்த கோபத்தில் இருந்த ரொனால்டோ, ரிப்போர்டரிடம் இருந்து ஆடியோ மைக்கை பிடுக்கி குளத்தில் வீசிவிட்டு சென்றார்.

 

போர்ச்சுகல் அணி தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இதுவரை வெற்றி பெறவில்லை. ஹங்கேரியுடனான போட்டியில் வென்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்தச்சுற்றுக்கு செல்ல முடியும் இல்லாவிட்டால் தொடக்கநிலை சுற்றோடு வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே ஹங்கேரியுடன் வெற்றி பெற்று தங்கள் அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் ரொனால்டோ தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/sports/10/33783/cristiano-ronaldo-throws-television-reporters-microphone-into-lake

Link to comment
Share on other sites

அடுத்த  சுற்றுக்கு முன்னேறி உள்ள நாடுகளின் போட்டி விபரம்

25.06.     15.00 மணிக்கு      சுவிஸ்லாந்து vs போலந்து

               21.00 மணிக்கு      குரோசியா   vs போர்த்துக்கல்

 

26.06     18.00 மணிக்கு     ஜெர்மனி   vs ஸ்லோவாகியா

 

27.06    18.00 மணிக்கு   இத்தாலி vs ஸ்பெயின்

             21.00 மணிக்கு   இங்கிலாந்து vs ஐஸ்லாந்து

Link to comment
Share on other sites

நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ சாதனை!

நான்கு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோ பெற்றுள்ளார்.

rans.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில்,  நேற்று போர்ச்சுக்கல் அணி,  ஹங்கேரி அணியை எதிர்கொண்டது. ஐரோப்பிய கோப்பையில் ரொனால்டோ களமிறங்கும் 17வது ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்தப் போட்டியில் ரொனால்டோ 49 மற்றும் 61 வது நிமிடங்களில் என இரு கோல்கள் அடித்தார்.

இதன் மூலம் 4 ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். அதாவது 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் ஜாம்பவான் நுனோ கோம்ஸ், யூரோவில் அதிகபட்சமாக 7 கோல்களை அடித்துள்ளார்.

http://www.vikatan.com/news/sports/65464-ronaldo-sets-new-european-record.art

 

13533015_1190647250954514_43483715577537

Link to comment
Share on other sites

ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ ( காணொளி இணைப்பு)

 

Cristiano-Ronaldo-throws-microphone-into

கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி சமநிலையில் முடிந்தது. 

 

இந்நிலையில் தனியார் தொலைகாட்சிய சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ, ஊடகவியலாளரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/8002

Link to comment
Share on other sites

யூரோ 2016 கால்பந்து: நாக் அவுட் சுற்று அட்டவணை

 
கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயினின் தோல்வியடையாத தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்து முடித்த பிறகு. | படம்: கெட்டி இமேஜஸ்.
கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயினின் தோல்வியடையாத தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்து முடித்த பிறகு. | படம்: கெட்டி இமேஜஸ்.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடர் அதன் இறுதி-16 சுற்று நிலையை எட்டியுள்ளது.

இறுதி 16 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்: பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், வேல்ஸ்.

தகுதி பெற்ற 3-ம் இடம் பிடித்த அணிகள்: நாதர்ன் அயர்லாந்து, போர்ச்சுகல், அயர்லாந்து குடியரசு, ஸ்லோவேக்கியா

வெளியேறிய அணிகள்: அல்பேனியா, ஆஸ்திரியா, செக்.குடியரசு, ருமேனியா, ரஷ்யா, ஸ்வீடன், துருக்கி, உக்ரைன்.

இறுதி 16 சுற்று போட்டி அட்டவணை:

தேதி அணிகள் நேரம்

ஜூன் 25 சுவிட்சர்லாந்து - போலந்து மாலை 6.30

ஜூன் 25 குரோஷியா - போர்ச்சுக்கல் இரவு 9.30

ஜூன் 26 வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து நள்ளிரவு 12.30

ஜூன் 26 ஹங்கேரி - பெல்ஜியம் மாலை 6.30

ஜூன் 26 ஜெர்மனி - ஸ்லோவேக்கியா இரவு 9.30

ஜூன் 27 இத்தாலி - ஸ்பெயின் நள்ளிரவு 12.30

ஜூன் 27 பிரான்ஸ் - அயர்லாந்து இரவு 9.30

ஜூன் 28 இங்கிலாந்து - ஐஸ்லாந்து நள்ளிரவு 12.30

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-கால்பந்து-நாக்-அவுட்-சுற்று-அட்டவணை/article8764828.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து; இத்தாலியை வீழ்த்தியது அயர்லாந்து- நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், வெளியேறியது சுவீடன்

 
 
இத்தாலி கோல்கீப்பரின் தடுப்பை மீறி தலையால் முட்டி கோல் அடிக்கும் அயர்லாந்தின் பிராடி. படம்: ஏஎப்பி
இத்தாலி கோல்கீப்பரின் தடுப்பை மீறி தலையால் முட்டி கோல் அடிக்கும் அயர்லாந்தின் பிராடி. படம்: ஏஎப்பி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் நடைபெற்றன. இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இத்தாலி - அயர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 84-வது நிமிடத்தில் அயர்லாந்தின் வெஸ் கூலாகனின் கோல் அடிக்கும் முயற்சியை, இத்தாலி கோல் கீப்பர் சிறிகு தடுத்தார்.

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே அயர்லாந்தின் பிராடி, பந்தை அற்புதமாக தலையால் முட்டி கோல் அடித்தார். இத்தாலி அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இந்த பிரிவில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த அயர்லாந்து, 3-வது நிலையில் சிறந்த அணி என்ற அடிப்படையில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இந்த தோல்வியால் சுவீடன் தொடரில் இருந்து வெளியேறியது.

எப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 1-1 என ஆட்டம் சமனில் இருந்த நிலையில் இஞ்சுரி நேரத்தில் டிராஸ்டாசன் கோல் அடித்து ஐஸ்லாந்துக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ரொனால்டோ சாதனை

எப் பிரிவில் ஹங்கேரி - போர்ச்சுக்கல் இடையிலான ஆட்டம் 3 - 3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து ஆட்டம் டிராவில் முடிவடைய உதவினார். இந்த பிரிவில் ஹங்கேரி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஹங்கேரிக்கு எதிராக கோல்கள் அடித்தன் மூலம் 4 யூரோ கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-இத்தாலியை-வீழ்த்தியது-அயர்லாந்து-நாக்-அவுட்-சுற்றில்-போர்ச்சுக்கல்-வெளியேறியது-சுவீடன்/article8768257.ece

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்று இன்று தொடக்கம்

 
 
kkkk_2908565f.jpg
 

காலிறுதி முனைப்பில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி, போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, போலந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, குரோஷியா, அயர்லாந்து, சுலோவேக்கியா, ஹங்கேரி, பெல்ஜியம், ஐஸ்லாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அல்பேனியா, ருமேனியா, ரஷ்யா, உக்ரைன், துருக்கி, செக் குடியரசு, சுவீடன், ஆஸ்திரியா ஆகிய அணிகள் வெளியேறின. நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வியை தழுவும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.

சுவிட்சர்லாந்து - போலந்து

நாக் அவுட் சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு செயின்ட் ஈட்டியன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றில் முதல் முறையாக கால் பதித்துள்ள சிறிய அணியான போலந்து லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2-ல் வெற்றி பெற்றது. உலக சாம்பியனான ஜெர்மனிக்கு எதிராக டிரா செய்திருந்தது. இதனால் அந்த அணி சுவிட்சர்லாந்துக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். சுவிட்சர்லாந்து அணியில் நட்சத்திர வீரராக கிரெய்ன்ட் ஹகாவும், போலந்து அணியில் நட்சத்திர வீரராக ராபர்ட் லீவான்டோவ்ஸ்கியும் உள்ளனர்.

கரத் பாலே

பாரிஸ் நகரில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து பலப்பரீட்சை நடத்து கின்றன. இரு அணிகளும் இந்த முறைதான் முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கரத் பாலே பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த தொடரில் அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இன்றும் அவர் அசத்தக்கூடும். வடக்கு அயர்லாந்தை சாதாரண அணி என்று கருதமுடியாது.

நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி கடுமையாக போராடி முன்னேறி உள்ளது. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக கையாளும் வடக்கு அயர்லாந்து இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும்.

போர்ச்சுக்கல்-குரோஷியா

லென்ஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு போர்ச்சுக்கல் - குரோஷியா அணிகள் மோதுகின்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி லீக் ஆட்டத்தில் வெற்றியே பெறாமல் 3 ஆட்டத்தையும் டிரா செய்தது.

முதல் 2 ஆட்டத்தில் 20 முறை இலக்கை நோக்கி பந்தை கொண்டு சென்றபோதிலும் கோல் அடிக்க முடியாமல் திணறிய ரொனால்டோ ஹங்கேரிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அற்புதமாக இரு கோல்கள் அடித்து மிரட்டினார். இதனால் அந்த அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

குரோஷியா லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2 ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. அந்த அணி வீரர்கள் ஆக்ரோஷ மான ஆட்டத்தை வெளிப் படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். இதனால் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற கூடுதலாக மெனக் கெட வேண்டியதிருக்கும். ரொனால்டோ மீண்டும் அசத்தினால் காலிறுதியில் நுழையும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-தொடர்-நாக்-அவுட்-சுற்று-இன்று-தொடக்கம்/article8772372.ece?homepage=true

Link to comment
Share on other sites

குரோஷியா வலுவான அணி: கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து

 
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

யூரோ கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் கிறிஸ்டியானோ ரெனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, குரோஷியாவை எதிர்த்து விளையாடு கிறது. இந்நிலையில் குரோஷியா மிகவும் பலம் வாய்ந்த அணி என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

லீக் சுற்றின் கடைசி ஆட்டத் தில் ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்களை ஆக்ரோஷ மாக அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு கிறிஸ்டி யானோ ரொனால்டோ முற்றுப் புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தை டிரா செய்ய உதவிய அவர் போர்ச்சுக்கல் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவதை தடுத்தார்.

இதனால் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஹங்கேரி ஆட்டத்தில் கோல்கள் அடித்ததன் மூலம் நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் அடித்தால் யூரோ தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி யின் சாதனையை சமன் செய்வார். பிளாட்டினி 9 கோல்கள் அடித்துள்ளார். 8 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோவுக்கு இந்த சாதனையை நெருங்க ஒரு கோல் மட்டுமே தேவையாக உள்ளது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனேனில் குரோஷியா பலம் வாய்ந்த அணி. லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி டி பிரிவில் முதல் இடத்தை குரோஷியா பிடித்திருந்தது.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சிறந்த அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சம அளவில் உள்ளது. குரோஷியா கடினமான அணி, சிறந்த வீரர்களை கொண்டது. மற்ற அணிகள் ஸ்பெயினை சமாளிக்க முடியாத நிலையில், லீக் சுற்றில் ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது. குரோஷியா அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் பலத்தை நாங்கள் அறிவோம்’’ என்றார்.

போர்சுக்கல் பயிற்சியாளர் சான்டோஸ் கூறும்போது, “குரோஷியா அணி சுறா போன்றது. நாங்கள் தவிர்க்க நினைக்கும் அணிகளில் அதுவும் ஒன்று. ஸ்பெயின் அணி உள்ள பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்துள்ளது.

இதில் இருந்தே அந்த அணியை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இரு கோல்கள் அடித்துள்ளதால் ரெனால்டோவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. எப்படியும் ரொனால்டோ நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர் தான், இந்த கோல்கள் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு ஊக்கமளிப் பதாக இருக்கும்’’ என்றார்.

அதிக வலிமையுடன் களமிறங்கும் விதமாக குரோஷியா அணியில் இன்று 5 மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ரியல் மாட்ரிட் கிளப்பில் ரொனால்டோவின் சக வீரரான லுகா மாட்ரிக் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கு கிறார். மேலும் மரியோ மான்ட்ஸூகிக்கும் இன்று களமிறக்கப்படுகிறார்.

http://tamil.thehindu.com/sports/குரோஷியா-வலுவான-அணி-கிறிஸ்டியானோ-ரொனால்டோ-கருத்து/article8772523.ece?homepage=true

Link to comment
Share on other sites

காலுறுதிக்கு முன்னேறியது போலந்து அணி

 

பாரிஸ்: யூரோ கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை 5-4 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி போலந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1550768

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.