Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

  • Replies 163
  • Created
  • Last Reply

யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் ‛சாம்பியன்'

 

 

செயின்ட் டெனிஸ் : யூரோ கோப்பை தொடரின் பைனலில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

 

ஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், பிரான்சில் நடைபெறுகிறது. மொத்தம் பங்கேற்ற 24 அணிகளில் ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட 22 அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டிக்கு உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.

 

ரெனால்டோ ‛அவுட்' :

 

சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25வது நிடத்திலேயே போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்த அழுதபடியே வெளியேற, அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு அணிகளும், அடிக்கடி எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலை வகித்தது.

 

கோல் கீப்பர்கள் அசத்தல் :

 

இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மாறி, மாறி வீணாக்கினர். இரு அணி கோல் கீப்பர்களும் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தொடர்ந்து தடுத்தனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில்(90வது நிமிடத்தில்) பிரான்ஸ் வீரர் கிக்னாக், 6 அடி தொலைவிலிருந்து அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேற பிரான்ஸ் ரசிகர்கள் மவுனமாயினர். ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

 

‛ஹரோ' ஈடர்:

 

கூடுதல் நேரத்தில் 109வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் ஆன்டனியோ ஈடர் அசத்தலாக கோல் அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல், யூரோ கோப்பையை முதன்முறையாக வென்று வரலாறு படைத்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1561575

WR_20160711033451.jpeg

வெற்றிக்கான கோலினை அடித்த ஈடரை பாராட்டும் போர்ச்சுகல் அணி வீரர்கள்.

WR_20160711033714.jpeg

போர்ச்சுகல் அணியில் வெற்றியை கொண்டாடும் அந்நாட்டு ரசிகர்கள்.

WR_20160711032843.jpeg

யூரோ கோப்பையை முதன்முறையாக வென்ற மகிழ்ச்சியில், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியினர்.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய கால்பந்து போட்டி... முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல்!

f4.jpg

பாரீஸ்: ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி.

f3.jpg

15வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன. லக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் இறுதுப்போட்டிக்கு முன்னேறியது.

f2.jpg

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ரொனால்டோவின் வெளியேற்றத்தால், அந்த அணியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்துடனேயே இருந்தது. அதனால், பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் உயர்ந்திருந்தது.

f1.jpg

ஆனாலும், முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த பிரான்ஸ் வீரர்களால், போர்ச்சுகல்லின் தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை. இராண்டாம் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் பரபரப்பாக விளையாடின. வீரர்களின் காலில் உதைப்பட்டு பறந்த பந்து, கோல் வலையில் சிக்காமல் கம்பத்தில் மட்டுமே பட்டு திரும்பியதால் அரங்கமே பதட்டத்துடன் காணப்பட்டது.

இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது. சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மேலும் ஆக்ரோஷமாக இரு அணி வீரர்களும் விளையாடினர். இந்நிலையில், ஆட்டத்தின் 109வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய ஈடர், கோல் அடித்து அசத்தினார்.

 

இதை தொடர்ந்து, பதில் கோல் அடிக்க கடைசி நேரத்தில் முயன்ற பிரான்ஸ் அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/66009-portugal-win-1-0-with-eder-goa-in-euro-2016-final.art

Link to comment
Share on other sites

ஒரு கோலுக்கு பின்னால் எத்தனை சோக கதை !

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ காயம்  காரணமாக வெளியேறினார். பிரான்ஸ் வீரர் பேயட், ரொனால்டோவின் காலைத்  தாக்க அவரால் தொடர்ந்து  விளையாட  முடியாமல் போனது.

rons.jpg

முகத்தை பொத்திக் கொண்டு ரொனால்டோ களத்தைவிட்டு வெளியேற போர்ச்சுகலே அழத் தொடங்கியது. இனிமேல் எங்கே கோப்பை கிடைக்கப்போகிறது என  லிஸ்பனில் அகன்ற திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இதற்கு முன் கடந்த 2004 ஆம் ஆண்டு  நடந்த ஐரோப்பிய கோப்பைத் தொடரில் போர்ச்சுகல் அணியில் டீன்ஏஜ் ரொனால்டோ இடம் பெற்றிருந்தார். போர்ச்சுகலில்தான் இந்த தொடரும்  நடந்தது. சொந்த நாட்டில் நடந்த உற்சாகத்தில் இறுதி ஆட்டம்  வரை முன்னேறிய போர்ச்சுகல்,  கிரீஸ் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு கோப்பையை நழுவவிட்டது.

 உண்மையில் கிரீஸ் அணியும் அதுவரை எந்த கோப்பையையும் வென்றது கிடையாது. அந்த அணிக்கும் அதுதான் முதல் கோப்பை. சொந்த மண்ணிலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை போர்ச்சுகல் அணி தவற விட்டது.

யூரோவில் அதற்கு பிறகு இப்போதுதான் போர்ச்சுகல் அணி  இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவும் காயம் காரணமாக வெளியேற, கோப்பை கைநழுவி விட்டது என்றே போர்ச்சுகல் ரசிகர்கள் கருதத் தொடங்கினர்.

ஆனால் பெப் தலைமையிலான தடுப்பாட்டம்  போர்ச்சுகல் அணியை காப்பாற்றியது. இதனால் பிரான்ஸ் அணியின்  ஜிரார்ட், கிரீஸ்மேன் ஆகியோரின் கோல் முயற்சிகள் எளிதாக முறியடிக்கப்பட்டன.

rons1.jpg

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்தது. கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதில் 109வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஈடர், 25 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து பிரான்ஸ் கோல்கீப்பர் லோரீசின் வலப்புறமாக சரியாக கோல் கம்பத்தின் கார்னர் பகுதிக்குள் சென்று கோலானது. இந்த ஒரு கோல்தான் போர்ச்சுகல் அணியை முதன் முறையாக ஐரோப்பிய கோப்பையை வெல்ல வைத்துள்ளது.  இந்த ஒரு கோலுக்கு பின்னால் எத்தனை சோகம் மறைந்திருக்கிறது தெரியுமா?

கால்பந்து உலகை பொறுத்தவரை, போர்ச்சுகல் சில உன்னத கால்பந்து வீரர்களை உருவாக்கியிருக்கிறது.  எஸ்பையோ, லூயீஸ் ஃபிகோ, ராய் கோஸ்ட்டா, டெக்கோ போன்றவர்கள் ரொனால்டோவுக்கு முன்னதாக போர்ச்சுகலின் நட்சத்திரங்கள்.

ஆனால் உலகக் கோப்பை, ஐரோப்பிய கோப்பைத் தொடர்களில் கோப்பையை வெல்லும் அளவுக்கு போர்ச்சுகல் அணி பலம் வாய்ந்ததாக இருக்காது. அணியில் ஒரு நட்சத்திர வீரர் இருப்பார். அவரை நம்பி அணியும் விளையாடும். இந்த முறையும் கேப்டன் ரொனால்டோதான் அந்த நட்சத்திர வீரர்.

rons3.jpg

இதனால், முக்கியத்  தொடர்களில்  போர்ச்சுகல் அணி தொடர்ந்து  தோற்றுக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக பிரான்ஸ் அணியிடம் கடைசியாக 10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக போர்ச்சுகல் தோல்வி கண்டுள்ளது.

இதில் 1984, 2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை அரையிறுதி ஆட்டங்களும் 2006 ஆம் ஆண்டு உலக் கோப்பை அரையிறுதி ஆட்டமும் கூட அடங்கும். தற்போது ஈடர் அடித்த இந்த கோல் போர்ச்சுகலின் அத்தனை சோகத்தையும் மறக்க செய்துவிட்டது.

 

மைதானத்தைவிட்டு, அழுதபடி வெளியேறிய ரொனால்டோகூட,  இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்!

http://www.vikatan.com/news/sports/66014-cristiano-ronaldo’s-sadness-turn-to-joy.art

Link to comment
Share on other sites

யூரோ கிண்ண செம்பியனானது போர்த்துக்கல் : சொந்த மண்ணில் வீழ்ந்தது பிரான்ஸ் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-11 11:25:28

 

யூரோ கிண்ண  கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற போர்த்துக்கல் அணி செம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது.

2390596_w2.jpg

ஐரோப்பிய  நாடுகள்  மாத்திரம் பங்கேற்ற இந்தத் தொடரில் கிரிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அணி சிறப்பான வெற்றியொன்றை பதிவு செள்துள்ளது.

2390561_w2.jpg

இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 1-0 என வீழ்த்தி செம்பியன் பட்டத்ததை வென்று போர்த்துக்கல் ரசிகர்களுக்கு மாபெறும் விருந்து படைத்துள்ளது போர்த்துக்கல் அணி.

2390529_w2.jpg

நேற்று (10) இடம்பெற்ற இறுதிப்போட்டி  ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

2390550_w2.jpg

கோல் போஸ்டிற்கு அருகில் பந்துகள் பறக்க, கோல் கீப்பர்களின் தடு்ப்பு ஒரு பந்தினைக் கூட கோலினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

2390493_w2.jpg

இவ்வாறு இரு அணிகளும் கோல் அடிக்க முற்பட்ட போதிலும் முதல் பாதி இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் நிறைவு செய்தது.

2390551_w2.jpg

இந்நிலையில் முதல் பாதியில் காயம் காரணமாக அணித்தலைவர் ரொனால்டோ கண்ணீர் சிந்தியபடி மைதானத்தில் இருந்து வெளியேற போர்த்துக்கல் அணி ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாய் தோன்றியது.

2390428_w2.jpg

2390412_w2.jpg

2390422_w2.jpg

1892539-39846620-2560-1440.jpg

அணித்தலைவர் வெளியேறினாலும் அணியின்  வீரர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் அமைந்தது போர்த்துக்கள் அணியின் வீரர்களின் சிறப்பான செயற்பாடுகள்.

2390577_w2.jpg

இந்நிலையில் இரண்டாவது சுற்றும் விறுவிறுப்பாக செல்ல  இரண்டு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில் நேரம் முடிவடைந்தது.

2390562_w2.jpg

இதன் காரணமா இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இறுதி நேரத்தில் போர்த்துக்கல்  அணியின் சார்பில் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட ஆன்டனியோ ஈடர் 109 நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதியில் போர்த்துக்கல் அணி 1-0 என செம்பியன் பட்டத்தை வெற்றிக்கொண்டது.

2390607_w2__1_.jpg2390516_w2.jpg2390530_w2.jpg2390496_w2.jpg2390494_w2.jpg2390492_w2.jpg2390491_w2.jpg2390490_w2.jpg2390490_w2.jpg2390476_w2.jpg2390463_w2.jpg2390461_w2.jpg2390457_w2.jpg2390455_w2.jpg2390447_w2.jpg2390431_w2.jpg2390437_w2.jpg2390427_w2.jpg2390420_w2.jpg2390357_w2.jpg2390356_w2.jpg2390651_w2.jpg2390653_w2.jpg2390654_w2.jpg2390655_w2.jpg2390659_w2.jpg

http://www.virakesari.lk/article/8792

Link to comment
Share on other sites

பதிலி வீரர் எடெர் கோல் தந்த கொண்டாட்டம்: போராடிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் 'யூரோ' சாம்பியன்

ஆர்.முத்துக்குமார்

Comment (2)   ·   print   ·   T+  
 
 
 
 
 
2016 யூரோ சாம்பியன் போர்ச்சுக்கல் | படம்: கெட்டி இமேஜஸ்
2016 யூரோ சாம்பியன் போர்ச்சுக்கல் | படம்: கெட்டி இமேஜஸ்

நட்சத்திர வீரர், கேப்டன் ரொனால்டோ ஆட்டத்தின் அரைமணி நேரத்துக்குள்ளாகவே காயத்தின் காரணமாக ஸ்ட்ரெச்சரில் கண்ணீருடன் வெளியேறினார். ஆனால், அவரது கண்ணீர்... ஆனந்தக் கண்ணீராகப்போவதை அவர் அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

109-வது நிமிடத்தில் பதிலி வீரர் எடெர் அடித்த எதிர்பாராத கோலே வெற்றிகோலாக மாற, பிரான்ஸை போர்ச்சுக்கல் வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன் ஆனது.

30 நாட்கள் 50 போட்டிகள் 107 கோல்கள் என்ற நிலையில் யூரோ இறுதிப் போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது.

அன்று ஜெர்மனிக்கு என்ன நடந்ததோ இன்று பிரான்ஸுக்கு நடந்தது. பந்தை அதிகம் தங்கள் வசம் வைத்திருந்ததும் பிரான்ஸ், கோல் நோக்கி அதிக ஷாட்களை அடித்ததும் பிரான்ஸ், பாஸ்களிலும் சிறந்து விளங்கியது பிரான்ஸ், ஆனாலும் ரொனால்டோ இல்லாத போர்ச்சுக்கல் சாம்பியன்!

இதற்காக எடெர் அடித்த அந்த அபாரமான கோலின் தரத்தை குறைத்து எடை போட முடியாது. அன்று ஜெர்மனி ஆட்டத்தையும் கடந்து சென்று ஆடியது. ஆனாலும் தோல்வி. பிரான்ஸ் அன்று ஜெர்மனி ஆடிய அளவுக்கு ஆடவில்லை என்றாலும், போர்ச்சுக்கலை விட நன்றாகவே ஆடியது. ஆனாலும் தோல்வி! இதுதான் கால்பந்தாட்டத்துக்கே உரிய தனித்தன்மை என்று கூறுகிறோம்.

ஆனாலும் பார்த்ததை எழுதும்போது கூட 'சாக்கர்' என்று எழுதி ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடும் அன்பர்கள் 'நியூட்ரல் ப்ளீஸ் ப்ரோ' என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆட்டத்தை வர்ணிக்கும்போது நியூட்ரலாக எழுதுவது 'நியூட்ரல் ஆகாது ப்ரோ' என்று மட்டும் கூறிக்கொண்டு மேலே செல்வோம்.

வலியில் துடித்த ரொனால்டோ

ரொனால்டோ 25 நிமிடங்கள் கூட ஆட முடியவில்லை. பிரான்ஸ் அவரை 'கவனித்துக் கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர், கூறியபடியே 'கவனித்தனர்'. ஆனால் காயமடைந்தும் சிகிச்சை பெற்று விளையாட முயற்சி செய்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அவரால் தொடர முடியாமல் போனது, கண்ணீருடன் வெளியேறினார்.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் முதல் வாய்ப்பு போர்ச்சுக்கலுக்கே கிடைத்தது. 5-வது நிமிடத்தில் செட்ரிக் அடித்த லாங் பாஸை நானி விறுவிறுவென எடுத்துச் சென்று ஓரளவுக்கு அருகிலிருந்து ஷாட்டை அடிக்க பந்து கோல் பாருக்கு மேலே சென்றது.

மறுமுனையில் பிரான்ஸ் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அந்த அணியின் மவுசா சிசோகோ அடித்த ஷாட்டும் கோல் போஸ்டுக்கு மேலே சென்றது. முன்னதாக ஆண்டாய்ன் கிரீஸ்மேன் மேற்கொண்ட முயற்சியும் கோலுக்கு நன்றாக வெளியே சென்றது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கடும் போராட்டம் ஒன்றில் ரொனால்டோவும், டிமிட்ரி பயேட்டும் மோதிக்கொண்டனர். முழங்கால்கள் மோதிக்கொள்ள ரொனால்டோ வலியால் துடித்தார். சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில் பெபே பந்தை நழுவ விட இடது புறத்தில் பயேட் பந்தை பெற்றார். அவர் போர்ச்சுக்கல் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து ஒரு அருமையான ஷாட்டை அடிக்க, அங்கு கிரீஸ்மேன் அருகிலிருந்து தலையால் முட்டினார். பந்து கோலா என்று அனைவரும் ஆவலாகப் பார்க்க, பந்து கிராச் பாருக்கு சற்று கீழே கோலுக்குள் செல்லும்போது போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ எம்பி தள்ளிவிட்டார், மிக அருமையான 'சேவ்' அது. இதனால் விளைந்த கார்னர் ஷாட்டை ஜிரோட் தலையால் முட்ட அதனை சுலபமாகப் பிடித்தார் பேட்ரீசியோ.

17-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் வலியால் துடிக்க, சிகிச்சை அளிக்கப்பட்டு 3 நிமிடங்களில் மீண்டும் மைதானம் திரும்பினார். இதன் பிறகு பிரான்ஸ் வீரர் சிஸோகோ செய்த கோல் முயற்சி வீணானது, அட்ரியன் சில்வா அடித்த மற்றொரு ஷாட்டும் வலது புறம் கோலை தவற விட்டது.

இந்நிலையில்தான் 25-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் மைதானத்தில் வலியினால் விழுந்தார். இம்முறை அவரால் மீள முடியவில்லை, மீண்டும் கண்ணீர், ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். இவருக்குப் பதில் ரிக்கார்டோ குரேஸ்மா களமிறங்கினார். ரொனால்டோவைக் கொண்டு செல்லும் போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

ஓர் அரிதான தாக்குதல்...

ரொனால்டோ போனவுடன் பிரான்ஸின் ஆட்டத்திலும் சற்றே தொய்வு ஏற்பட்டது. போர்ச்சுகல் ஆட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது, ஆனால் பிரான்ஸ் வீரர் சிஸாகோ மீண்டும் ஒருமுறை கோல் கீப்பர் பேட்ரீசியோவை சோதித்தார். அடித்த ஷாட்டை பேட்ரீசியோவும் சம திறமையுடன் முறியடித்தார்.

37-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் ஓர் அரிதான தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் கடைசியில் ரஃபேல் குரைரோ அடித்த ஷாட் வைடாகச் சென்றது. மற்றொரு கார்னர் ஷாட்டை ஃபாண்ட் தலையால் அடித்தது கோலுக்கு மேலே சென்றது. முதல் பாதி இதன் பிறகு பெரிய அளவில் சம்பவங்கள் இல்லாமல் சென்றது.

இரண்டாவது பாதியில் 8-வது நிமிடத்தில் போக்பா தூரத்திலிருந்து ஓர் அடி அடித்துப் பார்த்தார். பந்து மேலே சென்றது. பிறகு செட்ரிக், கிரீஸ்மேன் இடையே கடும் போட்டியில் கிரீஸ்மேன் அடித்த ஷாட்டில் வலுவில்லை. பேட்ரீசியோ சுலபமாக பிடித்தார். பிரான்ஸ் பயிற்சியாளர் பயெட்டை வெளியே அழைத்து கொண்டு கிங்ஸ்லி கோமனை களமிறக்கினார்.

ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியது. இடது புறத்திலிருந்து கோமான் ஒரு கிராஸ் செய்ய அங்கு 6 அடி தூரத்தில் கோல் அருகே மார்க் செய்யப்படாமல் இருந்தா கிரீஸ்மேன் ஆனால் பந்தை தலையால் முட்டும்போது வெளியே சென்றது. இது உண்மையான ஒரு கோல் வாய்ப்பு. 90 நிமிட ஆட்டம் முடிய 12 நிமிடங்களே இருந்த போது மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆட்டம் சரியாக அமையாத ஜிரோட் திருப்பி அழைக்கப்பட்டு கிக்நாக் களமிறக்கப்பட்டார்.

போர்ச்சுக்கலுக்கு இதனையடுத்து ஒரு கோல் வாய்ப்பு கிட்டியது. நானியின் கிராஸ் வலது புறத்திலிருந்து கோல் நோக்கிச் சென்றது. ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை தட்டி விட்டார். ஆனால் பந்தை குரேஸ்மா மீண்டும் அடிக்க லோரிஸ் கைக்குச் சென்றது. பிறகு 25 அடியிலிருந்து நானி செய்த முயற்சியும் வீணானது. உடனேயே பிரான்ஸின் இன்றைய சிறந்த ஆட்டக்காரர் சிசோகோ நடுக்களத்திலிருந்து அருமையாக பந்தை வேகமாக எடுத்துச் சென்று பிரமாதமான ஷாட் ஒன்றை கோல் நோக்கி அடிக்க அங்கு பேட்ரீசியோ வலது புறம் பாய்ந்து தள்ளிவிட்டார்.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் பிரான்ஸ் வீரர் கிக்னாக் கோல் அடித்திருப்பார். பெபேவுக்கு போக்குக் காட்டி 6 அடியிலிருந்து அடித்த ஷாட் உண்மையில் கோல் சென்றிருக்க வேண்டியதுதான், ஆனால் போர்ச்சுகலின் அதிர்ஷ்டம் அது போஸ்டில் பட்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

உற்சாகப்படுத்திய ரொனால்டோ

கூடுதல் நேரத்தில் முதல் ஷாட் ரொனால்டோ பதிலி வீரர் குரேஸ்மவின் முயற்சியாக இருந்தது. வலது புறத்திலிருந்து ஒரு அருமையான ஷாட்டை ஆட பந்து பிரான்ஸ் கோல் அருகே 6 அடி தூரத்திலிருந்த எடெர் நோக்கி வர அவர் எழும்பி தலையால் முட்டியது லோரிஸைத் தாண்டவில்லை.

கூடுதல் நேர ஆட்டத்தின் போது ரொனால்டோ விங்கிலிருந்து வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தா, அவ்வப்போது 'கட்டிப்பிடி' வைத்தியமும் மேற்கொண்டார்.

போர்ச்சுக்கல் அணிக்கு பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து சென்று கோல் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாதது போல் தெரிந்தது, பிரான்சும் மெல்ல மங்கிக் கொண்டிருந்த்து.

ஓர் அரிய கோல்... சாம்பியன்!

இந்நிலையில்தான் பதிலி வீரர் எடெர் ஓர் அரிய கோலை அடிக்க, அது வெற்றி கோலாக மாறியது. ஆட்டத்தின் 109-வது நிமிடத்தில் இடது புறத்தில் எடெரிடம் பந்து வந்தது, இவரை லாரன்ஸ் கோசியெல்னி மார்க் செய்திருந்தார். ஆனால் அந்தத் தடையைக் கடந்து இன்ஃபீல்டிற்குள் நுழைந்த எடெர் 25 அடியிலிருந்து மிக அருமையான, சக்தி வாய்ந்த ஓர் உதை உதைக்க பந்து பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸுக்கு வலது புறம் கோலாக மாறியது.

ஸ்வன்சீ சிட்டி அணிக்காக கடந்த சீசனில் 15 ஆட்டங்கள் ஆடிய எடெர் ஒரு கோலை கூட அடிக்க முடியாத நிலையில் இன்று போர்ச்சுகலின் ஹீரோவானார். ஆனால் எடெர் பதிலி வீரராகக் களமிறங்கியது முதல் உற்சாகமாகவே ஆடினார், சில பல அச்சுறுத்தல் நகர்வுகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால் அவர் கோல் அடிக்கும் கணமும் எதிர்பாராத ஒன்று, அவர் கோல் அடிப்பார் என்பதும் எதிர்பாராத ஒன்று. பிரான்ஸ் வீரர் சிசோகோ ஆடிய ஆட்டத்திற்கு பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நன்றாக ஆடும் அணி வெற்றி பெறும் என்பது கால்பந்தை பொறுத்தவரை எப்போதும் உண்மையாகி விடாது.

உற்சாகக் கடல்

லாங் விசில் ஊதப்பட்டவுடன் கேப்டன் ரொனால்டோ உற்சாகக் கடலில் மிதந்தார். ஒவ்வொரு வீரரையும் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். போர்ச்சுகல் கால்பந்தில் ஒரு பொன்னான கணமாகும் இது.

பிரான்ஸுக்கு எதிராக 10 போட்டிகள் தோல்வியடைந்ததை போர்ச்சுகல் தற்போது முடிவுக்குக் கொண்டுவந்தது.

2004-ம் ஆண்டு யூரோ கோப்பையை நடத்திய போர்ச்சுகல் அணி கிரீஸிடம் 0-1 என்று தோல்வி தழுவியது, அதே வலியை இன்று பிரான்ஸுக்கு அளித்தது போர்ச்சுகல். அப்போது கிரீஸ் வென்ற ஆட்டத்தில் 19 வயது ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர் சிந்தினார். இன்று ஸ்ட்ரெச்சரில் எடுத்து செல்லும் போது அழுது கொண்டேதான் சென்றார் ரொனால்டோ, ஆனால் கூடுதல் நேரத்தில் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியத்துடன், சில டிப்ஸ்களையும் அளித்து கடைசியில் முக்கியமான தொடர் ஒன்றில் முதல் முறையாக வெற்றி பெறும் ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தார்.

http://tamil.thehindu.com/sports/பதிலி-வீரர்-எடெர்-கோல்-தந்த-கொண்டாட்டம்-போராடிய-பிரான்ஸ்-அணியை-வீழ்த்தி-போர்ச்சுக்கல்-யூரோ-சாம்பியன்/article8834339.ece?homepage=true

Link to comment
Share on other sites

கவலையையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்: ரொனால்டோ
 
11-07-2016 11:39 AM
Comments - 0       Views - 194

article_1468235435-LEAD-Near-1dojodnjfms2004ஆம் ஆண்டு, அப்போது பதின்ம வயதானவராக இருக்கும் போது, கிரேக்க அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போர்த்துக்கல் அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த இறுதிப் போட்டிக்கு முன்பு கருத்துத் தெரிவிக்கும் போது, போட்டியின் முடிவில் மகிழ்ச்சியால் அழ விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

அவரது விருப்பம், நிறைவேறியிருந்தது, ஆனால் வேறு விதமாக.
தனது நாட்டுக்கான முதலாவது சர்வதேசப் பட்டத்தை வென்று கொடுப்பதற்குத் தயாராகக் நட்சத்திர வீரராகவும் அணித்தலைவராகவும் களமிறங்கிய ரொனால்டோ, 24ஆவது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற வேண்டியேற்பட்டது.

அணித்தலைவருக்கான கைப்பட்டியைக் கழற்றிய ரொனால்டோ, கண்ணீருடன் தூக்குப்படுக்கையில் மைதானத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார். போட்டியில் பங்குபற்றி, நேரடியான பங்களிப்பை வழங்க முடியாத நிலையில், மைதானத்துக்கு வெளியே இருந்து, ஊக்குவிப்பு வழங்க வேண்டியேற்பட்டது.

90ஆவது நிமிடத்தில், மேலதிக நேரத்துக்கு முன்னரான இடைவெளியில், களைப்படைந்த தனது சக வீரர்களிடம் சென்று, அவர்களை ஊக்கப்படுத்திய ரொனால்டோ, போட்டியில் கோல் பெறப்பட்டு, இறுதி விசில் அடிக்கப்பட்டதும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த அவரது கால்கள், அவரது மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கவில்லை. தனது அணியின் வெற்றிக் கிண்ணத்தை, அவரே தூக்கியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ரொனால்டோ, "கவலையையும் மகிழ்ச்சியையும் நான் இன்று உணர்ந்தேன். எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இது ஒன்று என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். நான் அழுதேன்" என்றார்.

எதிர்பாராத விதமாக, மாற்று வீரரான ஈடரே, போர்த்துக்கல்லின் நாயகனாக மாறியிருந்த நிலையில், அதை எதிர்பார்த்திருந்ததாகவும் ரொனால்டோ தெரிவித்தார். "மேலதிக நேரத்தில் போட்டியை முடிக்கக்கூடியவர் அவரே என நான் உணர்ந்தேன். நான் மந்திரவாதியோ அல்லது எதிர்காலத்தைக் கணிக்கக்கூடியவனோ அல்லன், ஆனால் எனது உணர்வுகளை நான் எப்போதும் பின்பற்றுபவன்" எனத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/176761/கவல-ய-ய-ம-மக-ழ-ச-ச-ய-ய-ம-உணர-ந-த-ன-ர-ன-ல-ட-#sthash.RadQJy56.dpuf
Link to comment
Share on other sites

போர்ச்சுகல் சாம்பியன்: பாரீசில் கலவரம்!

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனதையடுத்து, பிரான்சில்  கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக  40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

france.jpg

 

நேற்றிரவு ஸ்டேட் டி பிரான்சில் நடந்த யூரோ இறுதியாட்டத்தில் , போர்ச்சுகல் அணி ஒரு கோல் அடித்து  பிரான்சை வென்று முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது. பாரீஸ் நகரில், ஈஃபிள் டவரில் உள்ள  பகுதியில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள், அகன்றத் திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். பிரான்ஸ் தோற்றதையடுத்து அங்கிருந்தவர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

டயர்களுக்கு  தீ வைத்தனர்.  போர்ச்சுகல் ரசிகர்கள் மீது பாட்டில்களை எறிந்து தாக்கினர். போர்ச்சுகல் தேசியக் கொடியையும் எரித்தனர். கார்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக பாரீசில் 31 பேரும் லியோனில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/sports/66036-40-arrested-in-paris-over-euro-2016-violence.art

Link to comment
Share on other sites

போர்த்துக்கல் விளையாடிய விளையாட்டைப் பார்த்தபோது அவர்கள் 12 பேருடன் விளையாடி வந்தது தெரிய வந்தது. :unsure: அந்த 12 ஆவது நபரின் பெயர் அதிர்ஷ்டமாம்.. :D:

அதுபோக, ரொனால்டோ அணித்தலைவர் பட்டையை நானியிடம் குடுத்துவிட்டு கடைசியில் கோப்பையை மட்டும் முதல் ஆளாக வந்து எப்படி வாங்கினார்? :unsure:

Link to comment
Share on other sites

நிறைவுக்கு வந்தது 2016 யூரோ கிண்ணம்.ஓர் முழுமையான அலசல். 

 

 

 

fraaaa

நிறைவுக்கு வந்தது 2016 யூரோ கிண்ணம்.ஓர் முழுமையான அலசல்.

யூரோ கிண்ண தொடரின் 15 ஆவது தொடர் நேற்றைய இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இதில் போர்த்துக்கல் வெற்றி பெற்று முதல் முறையாக ஐரோப்பாவின் சம்பியன்களாக முடி சூடியுள்ளது.

FB_IMG_1468188294944

 

1960 ஆம் ஆண்டு தொடங்கப்படட யூரோ கிண்ணம்  ஐரோப்பிய அணிகளுக்கிடையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 15 ஆவது யூரோ கிண்ண தொடர் இந்த ஆண்டு ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை பிரான்சில் நடைபெற்றது.

பிரான்சில் நடைபெறும் 3 ஆவது யூரோ கிண்ண தொடராக அமைந்தது. 3 ஆவது முறை யூரோ தொடரை நடத்தும் முதல் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.

இம்முறை தொடரில் 24 அணிகள் பங்குபெற்றன. யூரோ கிண்ண தொடரில் 24 அணிகள் பங்குபற்றுவது இதுவே முதல் முறையாகும். 1960 4 அணிகளுடன் ஆரம்பித்த தொடர் 1980 ஆம் ஆண்டில் 8 அணிகளாக விருத்தியடைந்து 1996 ஆம் ஆண்டு 16 அணிகளாக உருவெடுத்து இம்முறை 24 அணிகளாக மாற்றம் பெற்றுள்ளது. தொடர்ந்தும் யூரோ தொடரில் 24 அணிகளே பங்குபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

euro 1

இம்முறை பங்குபெற்ற 24 அணிகளில் 5 அணிகள் யூரோ கிண்ண போட்டிகளில் முதல் முறையாக பங்குபெற்றன. யூரோ கிண்ண தொடரில் 5 அணிகள் அறிமுகம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அல்பானிய, ஐஸ்லாந்து, வட அயர்லாந்து, ஸ்லோவாகிய, வேல்ஸ் ஆகிய அணிகள் இத்தொடரில் அறிமுகம் பெற்றன. இவற்றில் அல்பானிய தவிர்ந்த மற்றைய அணிகள் குழு நிலைப் போட்டிகளில் இருந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. அதிலும் வேல்ஸ் அரை இறுதி வரை முன்னேறி அசத்தியிருந்தது.

euro 16

இம்முறை 24 அணிகள் பங்கு பற்றி இருந்தாலும் முன்னாள் யூரோ சம்பியன்களான நெதர்லாந்து, டென்மார்க், கிரீஸ் போன்ற அணிகள் இம்முறை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக சில போட்டியின் முடிவுகள் ரசிகர்களை ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளன.

குழு நிலை போட்டிகளில் அறிமுக அணிகள் மற்றைய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்தன. குறிப்பாக ஐஸ்லாந்து ,போர்த்துக்கல் மற்றும் ஹங்கேரி அணிகளுக்கு எதிரான போட்டிகளை சமநிலையாக்கி ஆஸ்திரியா அணிக்கெதிரான போட்டியில் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றிபெற்று அசத்தியது. வட அயர்லாந்து உக்ரைனுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. வேல்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ரஷ்யாவை  வீழ்த்தியிருந்தன.

அல்பானிய ரோமானிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. கத்துக்குட்டி அணிகள் அசத்தல் வெற்றிகளை பெற்ற வேளையில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்த சில அணிகள் இத்தொடரில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. குறிப்பாக முன்னாள் சாம்பியன் ரஷ்யா ஒரு போட்டியை மாத்திரம் சமன்செய்து மற்றைய இரு போட்டிகளிலும் தோற்று தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்வீடன் அணி ஒரே  ஒரு போட்டியில் மாத்திரம் சமநிலை பெற்று வெற்றி இல்லாமல் விடைபெற்றது. இம்முறை சாம்பியனான போர்த்துக்கல்லும் குழு நிலைப்போட்டிகளில் ரசிகர்களை ஏமாற்றியிருந்தது.

FB_IMG_1468188288171

குழுநிலை போட்டிகளில் தான் விளையாடிய 3 போட்டிகளையும் சமன் செய்து ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் அடுத்த சுற்றுக்கு நுழைந்திருந்தது.

நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தன. Round of 16 இல் இத்தாலி, ஸ்பெய்ன் அணிகள் மோதின. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வெளியேற்றியது இத்தாலி. அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் ஏமாற்றியது நடப்பு சாம்பியன் ஸ்பெய்ன்.

இன்னொரு போட்டியில் இங்கிலாந்து ஐஸ்லாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்களை சிதைத்தது ஐஸ்லாந்து.

தகுதி சுற்றுக்களில் சிறப்பாக விளையாடி கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணியான இங்கிலாந்து, ஐஸ்லாந்திடம் தோற்று வெளியேறியமை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தது. காலிறுதி போட்டிகளில் இத்தாலி ,ஜெர்மனி அணிகள் மோதிய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. காற்பந்து ஜாம்பவான்களான இரு அணிகளும் மோதிய போட்டியில் பெனல்ட்டி முறையில் வெற்றி பெற்றிருந்தது உலக சம்பியன்களான ஜெர்மனி.

அரை இறுதி போட்டியில் ஜெர்மனி, பிரான்ஸை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜெர்மனி சொதப்பலாக விளையாடி பிரான்சிடம் தோற்று வெளியேறியிருந்தது.

காலிறுதி போட்டியில் ஜெர்மனி இத்தாலி அணிகள் மோதிய ஆட்டத்தில் ஆட்டம் மேலதிக நேரத்திலும் சமநிலையில் முடிவடைய பெனல்ட்டி கிக் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் 120 ஆவது நிமிடத்தில் இத்தாலி சாசா வினை மாற்று வீரராக களமிறக்கியது. பெனல்ட்டி வாய்ப்பில் பங்கு பெறுவதற்காக மாத்திரம் களமிறக்கப்பட்ட சாசா தனக்கு கிடைத்த பெனல்ட்டி வாய்ப்பை கோல் கம்பத்தை விட்டு வெளியில் அடித்து இத்தாலி இன் நம்பிக்கையை வீணடித்தார்.

இப்போட்டியில் இத்தாலி தோற்று தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

இம்முறை முதல் முறையாக யூரோ தொடரில் இரு சகோதரர்கள் வெவேறு அணிகளுக்காக களமிறங்கியிருந்தன. கிரானிட் ஸ்க்க சுவிற்சர்லாந்து அணிக்காவும் அவரது மூத்த சகோதரர் டலன்ட் ஸ்க்க அல்பானிய அணிக்காகவும் விளையாடினர்.

இத்தொடரில் தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனைகளை படைத்திருந்தனர். இத்தொடரில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியுள்ளார் பிரான்ஸின் கிரெய்ஸ்மன்.FB_IMG_1467926478667

1984 பிளாட்டினி 9 கோல்கள் அடித்ததே ஒரு தொடரில் தனிப்பட்ட வீரரால் பெறப்பட்ட அதிக கோல்களாகும். இந்த பட்டியலில் கிரெய்ஸ்மன் தற்போது 6 கோல் களுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். கிரெய்ஸ்மன் அடித்த 6 கோல்களில் 5 கோல்கள் நொக் அவுட் சுற்றுக்களில் பெறப்பட்டன. இதன் மூலம் நொக் அவுட் சுற்றுக்களில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரெய்ஸ்மன்.

FB_IMG_1468189614468போர்த்துக்கல்லின் நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடரில் 3 கோல்கள் அடித்து யூரோ தொடரின் அதிக கோல் அடித்த பிளாட்டினியின்(9 கோல்கள்) சாதனையை சமப்படுத்தினார். மேலும் ஒரு கோல் அடித்து பிளாட்டினியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டியில் 25 ஆவது நிமிடத்திலேயே காயம் காரணமாக வெளியேறி சாதனையை தவறவிட்டார் ரொனால்டோ.

ஆனாலும் வேல்ஸ் அணிக்கெதிரான அரை இறுதி போட்டியில் கோல் அடித்து 1964 ஆம் ஆண்டிற்கு பின் 2 வெவ்வேறு அரை இறுதி போட்டிகளில் கோல் அடித்த வீர என்ற பெருமையைப் பெற்றார் ரொனால்டோ.

இம்முறை தொடரில் 108 கோல்கள் பதிவு செய்யாப்பட்டுள்ள்ளன. அத்துடன் 205 மஞ்சள் அட்டைகளும் 3 சிவப்பு அட்டைகளும் பதிவாகியுள்ளன. இவ் எண்ணிக்கை மற்றைய தொடர்களிலும் பார்க்க அதிகம் என்றாலும் மற்றைய தொடர்களிலும் பார்க்க இத்தொடரில் அதிகமான போட்டிகள்(51) நடாத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் இறுதி போட்டி போர்த்துக்கல் பிரான்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் போர்த்துக்கல் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. போர்த்துக்கல் இறுதி போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் பிரான்ஸ் யூரோ இறுதி போட்டியில் தோற்பது  இது முதல்  முறையாகும்.

இத்தொடரில் போர்த்துக்கல் 4 போட்டிகளை சமன் செய்திருந்தது. அதிக போட்டிகளை சமன் செய்து  சாம்பியனான அணி மற்றும் அதிக போட்டிகளில் வெற்றியின்றி சாம்பியனான அணி என்ற பெருமையைப் பெற்றது போர்த்துக்கல். பிரான்ஸ் அணி தொடரில் 5 வெற்றிகளை பெற்று சாம்பியன் இல்லாமல் அதிக வெற்றி பெற்ற அணியாக திகழ்கிறது.

யூரோ 2016 இந்த பின் பல வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தமது ஓய்வை அறிவித்துள்ளனர்.இவர்களுள் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் இனியெஸ்டா காசிலஸ் யூரோ கிண்ணத்தில் இருந்து ஸ்பெய்ன் வெளியேறியதும் தமது ஓய்வை அறிவித்துள்ளனர்.

ரசிகர்களின் பேராதரவைப்பெற்ற யூரோ தொடர் இம்முறையும் பல சுவாரஷ்யங்களுடன் நடந்து முடிந்துள்ளது. அடுத்த யூரோ கிண்ண தொடர் 2020 ஆம் ஆண்டில் யூரோ தொடரின் 60 ஆண்டு நிறைவை ஒட்டி  13 நாடுகளின் 13 நகர்களில் இடம்பெறவுள்ளது.

#வைகரன் ஆனந்த்மூர்த்தி

பொறியியல் பீடம்.

மொரட்டுவை பல்கலைக்கழகம்.

france FB_IMG_1468221796564 FB_IMG_1468221800240FB_IMG_1468221803625 FB_IMG_1468221811141

http://vilaiyattu.com/நிறைவுக்கு-வந்தது-2016-யூரோ-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/07/2016 at 5:34 PM, இசைக்கலைஞன் said:

போர்த்துக்கல் விளையாடிய விளையாட்டைப் பார்த்தபோது அவர்கள் 12 பேருடன் விளையாடி வந்தது தெரிய வந்தது. :unsure: அந்த 12 ஆவது நபரின் பெயர் அதிர்ஷ்டமாம்.. :D:

அதுபோக, ரொனால்டோ அணித்தலைவர் பட்டையை நானியிடம் குடுத்துவிட்டு கடைசியில் கோப்பையை மட்டும் முதல் ஆளாக வந்து எப்படி வாங்கினார்? :unsure:

எனக்கு தனிப்பட்ட முறையில் போத்துக்கலை பிடிக்காது.காரனம் அந்த நாட்டினர் இங்கு நடந்து கொள்ளும் விதத்தால்.குறிப்பாக வேலை விடையத்தில் எம்மவருக்கும் அவர்களுக்கும்  எக்கச்சக்க பிடுங்குப்பாடு.பொது ரீதியாகப்பார்த்தால் பணக்கார நாடுகள் அவர்கள்( போத்கீயர்)கூலி வேலைக்குததான் லாய்க்கு விளையாடி கப் எடுக்க அல்ல என்று பகிரங்கமாகவே கதைத்தார்கள்.இந்தக் கேலி என்னை மாதிரி கூலி வேலை செய்யும் எம்மவருக்கும் பொருந்தும்.அது தான் எனக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதல்.மற்றும் படி ரொனால்டோ கப் வாங்கியது அவமாணங்களால் பாதிக்கப்பட்ட நாடு அந்த வீரனுக்கு வழஙகிய நன்றி அல்லது கொளரவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.