Jump to content

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்


Recommended Posts

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் இத்தாலி

 

யூரோ கோப்பை கால்பந்தில் நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப்படவில்லை. இத்தாலி அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளுக்கு சுவீடன் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

82-வது நிமிடத்தில் இத்தாலி நடுகள வீரர் பரோலோ தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது. அடுத்த 6-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. ஜாஜா உதவியுடன் சுவீடனின் தடுப்பு அரண்களை ஏமாற்றி இந்த கோலை ஈடர் அடித்தார். முடிவில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தாலி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு இத்தாலி முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலி 22-ம் தேதி அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

சுவீடன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் டிரா செய்திருந்த நிலையில் தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பெல்ஜி யத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜெர்மனி ஆட்டம் டிரா

நேற்று முன்தினம் நள்ளிரவு சி பிரிவில் ஜெர்மனி - போலந்து அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவ டைந்தது. உலக சாம்பியனான ஜெர்மனி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளை போலந்து வீரர்கள் முறியடித்தனர். இந்த ஆட்டத்தின் முடிவு ஜெர்மனி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. முதல் ஆட்டத்தில் உக்ரைன் அணியை வீழ்த்திய ஜெர்மனி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி வடக்கு அயர்லாந்தை சந்திக்கிறது.

வடக்கு அயர்லாந்து வெற்றி

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து 2-0 என்ற கோல் கணக் கில் உக்ரைனை வீழ்த்தியது. வடக்கு அயர்லாந்துக்கு இது முதல் வெற்றியாகும். அதே வேளையில் 2-வது தோல்வியை சந்தித்த உக்ரைன் அடுத்த சுற்றுக்கு முன்னே றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

பெல்ஜியம்-அயர்லாந்து

நேரம்: மாலை 6.30

ஐஸ்லாந்து-ஹங்கேரி

நேரம்: இரவு 9.30

போர்ச்சுக்கல்-ஆஸ்திரியா

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-நாக்-அவுட்-சுற்றில்-இத்தாலி/article8744563.ece

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
யூரோ 2016: இறுதிப் 16 அணிகளில் ஸ்பெயின், இத்தாலி
 

article_1466254694-tsjdojcz.jpgபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஸ்பெயினும் இத்தாலியும் தகுதி பெற்றுள்ளன.

ஸ்பெயின், துருக்கி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, ஏற்கெனவே செக் குடியரசையும் தனது முதலாவது குழுநிலைப் போட்டியில் வென்றிருந்த நிலையில், குழு டியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகள்ச சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், ஸ்பெயின் சார்பாக அல்வாரோ மொறாட்டா இரண்டு கோல்களையும் நொலிட்டோ ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, இத்தாலி, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, ஏற்கெனவே தனது முதலாவது குழு நிலைப் போட்டியில் பெல்ஜியத்தை வென்றிருந்த நிலையில், குழு இயிலிருந்து முதலாவது அணியாக, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், இத்தாலி சார்பாக பெறப்பட்ட கோலினை ஈடர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குரோஷியா, செக்.குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியின் நடுவே, எரிசுடர்களை, இரசிகர்கள் மைதானத்துக்குள் எறிந்திருந்த நிலையில், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/175010/ய-ர-இற-த-ப-அண-கள-ல-ஸ-ப-ய-ன-இத-த-ல-#sthash.NU1IZSJm.dpuf
Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் - அயர்லாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்

 
 
யூரோ கால்பந்தில் துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்த ஸ்பெயின் மொராட்டா | படம்: ஏஎப்பி
யூரோ கால்பந்தில் துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்த ஸ்பெயின் மொராட்டா | படம்: ஏஎப்பி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் - துருக்கி அணிகள் நேற்று முன்தினம் மோதின. ஆரம்பம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் அல்வாரா மொராட்டா 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நோலிடோவிடம் பாஸை பெற்று தலையால் முட்டி கோல் அடித்தார் மொராட்டா.

அடுத்த 3-வது நிமிடத்தில் நோலிடோ கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் துருக்கி அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. 25-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹகன் ஃப்ரீகிக் மூலம் அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் உத்வேகத்துடன் விளையாடியது. 48-வது நிமிடத்தில் மொராட்டா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

அதன் பின்னர் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் ஸ்பெயின் வீரர்கள் நழுவ விட்டனர். கடைசி வரை துருக்கியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்பெயின் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் செக் குடியரசை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது. ஸ்பெயின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி நள்ளிரவு குரோஷியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை டிராவில் முடித்தாலே ஸ்பெயின் தனது பிரிவில் முதலிடம் பிடித்து விடும். இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் நட்சத்திரம் இனியெஸ்டா கோல் அடிப்பதற்கு பல்வேறு வாய்ப்பு களை உருவாக்கி கொடுத்தார்.

இவரது துல்லியமான நகர்வு, பாஸ் பல்வேறு தருணங்களில் துருக்கி அணியை நிலைகுலையச் செய்தது.

துருக்கி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய மங்கி விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி செக்குடியரசுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மற்ற பிரிவுகளில் உள்ள அணிகளின் முடிவை பொறுத்தே துருக்கியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து-ரஷ்யா போட்டி யைப் போன்றே இதுவும் ரசிகர்களின் ரகளை நிரம்பிய ஆட்டமாக அமைந்தது, துருக்கி ரசிகர்கள் மைதானத்துக்குள் பட்டாசைத் தூக்கி எறிந்து தங்கள் வெறுப்பைக் காட்டினர். இதனால் துருக்கி அணியே யுஏபாவின் தடைகளை எதிர்நோக்கியுள்ளது.

நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. லுகாஹூ இரு கோல்களும், விட்செல் ஒரு கோலும் அடித்தனர். பெல்ஜியத்துக்கு இது முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியடைந்திருந்தது. அதே வேளையில் அயர்லாந்துக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தை சுவீடனுன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ்
நேரம்: நள்ளிரவு 12.30

ருமேனியா-அல்பேனியா
நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-நாக்-அவுட்-சுற்றில்-ஸ்பெயின்-அயர்லாந்தை-வீழ்த்தியது-பெல்ஜியம்/article8748430.ece

Link to comment
Share on other sites

பெனால்டி வாய்ப்பு உட்பட பலவற்றை நழுவ விட்ட ரொனால்டோ: ஆஸ்திரியாவுடன் போர்ச்சுகல் டிரா

 
பெனால்டி வாய்ப்பை போஸ்டில் அடித்து கோட்டை விட்ட ரொனால்டோ முகத்தை மூடிக் கொண்டார். | படம்: ஏ.பி.
பெனால்டி வாய்ப்பை போஸ்டில் அடித்து கோட்டை விட்ட ரொனால்டோ முகத்தை மூடிக் கொண்டார். | படம்: ஏ.பி.

யூரோ 2016 கால்பந்து போட்டித் தொடரில் 2-வது முறையாக போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொதப்பலாக ஆட ஆஸ்திரியாவுடனும் 0-0 என்று டிரா ஆனது. ஐஸ்லாந்து டிராவுக்குப் பிறகு 2-வது டிராவாகும் இது.

குறிப்பாக கோல் அடிக்கக் கிடைத்த அருமையான ஸ்பாட் கிக் வாய்ப்பில் ரொனால்டோ போஸ்டில் அடித்து விரயம் செய்தது போர்ச்சுகல் அணி நிர்வாகத்திற்கு வெறுப்பைக் கிளப்பியது.

ஃபீகோவின் சாதனையை முறியடித்து 128-வது போட்டியில் ஆடும் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் நிமிடத்திலிருந்து முன்னணி நிலையில் குவாரெஸ்மா, ரொனால்டோ, நானி ஆடினர். ஆனால் குவாரெஸ்மா ஒரு நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை புறக்கணித்து நோக்கமெதுவுமற்று உள்ளுக்குள்ளே விரயமான பாஸ் ஒன்றை அடிக்க ரொனால்டோ அவருக்கு ‘டோஸ்’ கொடுத்தார்.

20 நிமிடங்களுக்குப் பிறகு நானி, ரஃபேல் குரைரோ இணைந்து ஒரு நகர்வை மேற்கொள்ள பந்து ரொனால்டோவுக்கு அடிக்கப்பட ரொனால்டோ பக்கவாட்டு காலில் அதனை கோலாக அடித்திருக்க முடியும் ஆனால் அதனை வைடாக அடித்தார் ரொனால்டோ. சிறிது நேரம் கழித்து நானி, தலையால் அடித்த ஷாட் ஒன்றும் கோலாக மாறவில்லை.

ஆஸ்திரியாவுக்கு 41-வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பும் விரயமானது. அலாபாவின் ஃப்ரீகிக்கை பினிஷ் செய்ய ஆளில்லை. இடைவேளைக்குப் பிறகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரண்டு ஃப்ரீ கிக்குகள் விரயமானது, ஒன்று கிராஸ்பாருக்கு மேல் சென்றது, மற்றொன்று கோலுக்கு வெளியே சென்றது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் மட்டும் ஃப்ரீ கிக் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இது குறித்த புள்ளிவிவரங்களின் படி 36 ஃப்ரீ கிக்குகளில் 13 ஷாட்கள் கிராஸ்பாருக்கு மேல், 12 அவுட்டில் அடிக்கப்பட்டது, 10 கீப்பரால் தடுக்கப்பட்டது.

இப்படியே கோட்டை விடப்பட்ட வாய்ப்புகளாகச் சென்று கொண்டிருக்க ஆட்டம் முடிய 13 நிமிடங்கள் இருந்த போது ரொனால்டோ வேகமாக பாக்ஸிற்குள் பந்துடன் சென்றார். மார்டின் ஹிண்டெரிகருடன் ஏற்பட்ட மோதலில் ரொனால்டோ கீழே தள்ளப்பட பெனால்டி வாய்ப்பு போர்ச்சுகலுக்கு வழங்கப்பட்டது. பெனால்டி மற்றும் ஆஸ்திரிய வீரருக்கு மஞ்சள் அட்டை. ரொனால்டோ ஸ்பாட் கிக்கை அடிக்க அது போஸ்டில் பட்டது, கோலுக்கான அருமையான வாய்ப்பு பறிபோனது. இதற்குச் சில நிமிடங்கள் கழித்து ரொனால்டோ கோல் அடித்தார், ஆனால் மிகச்சரியாக ஆஃப் சைடு என்று கோல் மறுக்கப்பட்டது.

போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

அனைத்திற்கும் மேலாக பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட ரொனால்டோ ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டிராவினால் போர்ச்சுக்கல் இனி வரும் ஆட்டங்களில் வென்றேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/பெனால்டி-வாய்ப்பு-உட்பட-பலவற்றை-நழுவ-விட்ட-ரொனால்டோ-ஆஸ்திரியாவுடன்-போர்ச்சுகல்-டிரா/article8748514.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Ranking of third-placed teams

Pos Grp Team Pld W D L GF GA GD Pts Qualification
1 C 23px-Flag_of_Northern_Ireland.svg.png Northern Ireland 2 1 0 1 2 1 +1 3 Advance to knockout phase
2 B 23px-Flag_of_Slovakia.svg.png Slovakia 2 1 0 1 3 3 0 3
3 F 23px-Flag_of_Portugal.svg.png Portugal 2 0 2 0 1 1 0 2
4 D 23px-Flag_of_the_Czech_Republic.svg.png Czech Republic 2 0 1 1 2 3 −1 1
5 A 23px-Flag_of_Romania.svg.png Romania 2 0 1 1 2 3 −1 1  
6 E 23px-Flag_of_Sweden.svg.png Sweden 2 0 1 1 1 2 −1 1
Updated to match(es) played on 18 June 2016. Source: UEFA

Knockout phase

In the knockout stage, extra time and a penalty shoot-out are used to decide the winner if necessary.[12] All times are local, CEST (UTC+2).

Link to comment
Share on other sites

கால்பந்தாட்ட போட்டிகளில் வன்முறை: பல்வேறு அணிகளுக்கு எதிராக யுஇஃபா ஒழுங்கு நடவடிக்கை

 

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, சனிக்கிழமையன்று நடைப்பெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில், கால்பந்து போட்டிகளை காணவந்த ரசிகர்களுக்கு இடையே நடந்த வன்முறை காரணமாக அங்கேரி, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய அணிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

160618215429_hungry_fan_euro_2016_624x35
 

ஏற்கனவே யுஈஃபா வின் ஒழுங்கு நடவடிக்கை நிர்வாக அமைப்பு துருக்கி மற்றும் க்ரோஷியா ஆகிய அணிகளை விசாரித்து வருகிறது.

மேலும் இங்கிலாந்து மற்றும் ரஷிய கால்பந்து ரசிகர்களின் நடவடிக்கைகளுக்காக அந்த இரு அணிகளையும் அதிகாரபூர்வமாக எச்சரித்துள்ளது.

கடந்த வருடம் இஸ்லாமியவாத திவிரவாதிகளால் பாரிஸில் தாக்குதல் நடைத்தப்பட்டதையடுத்து பெரும் பாதுகாப்பு குறித்த அக்கறைகளுக்கு இடையே இந்த ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.

http://www.bbc.com/tamil/global/2016/06/160619_euro_2016

Link to comment
Share on other sites

யூரோ 2016: இறுதி 16 அணி சுற்றில் சுவிற்ஸர்லாந்து
 
20-06-2016 06:28 PM
Comments - 0       Views - 7

article_1466431170-EuroPiswadars.jpgபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ண போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து ஆகிய போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு சுவிற்ஸர்லாந்து தகுதி பெற்றதுடன், மற்றைய போட்டியில், றோமானியாவை தோற்கடித்த அல்பேனியா, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சுவிற்ஸர்லாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டிக்கான பிரான்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆரம்பித்திருக்காத அந்தோனி கிறீஸ்மன்னும் போல் பொக்பாவும் ஆரம்பித்திருந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில், கோல்களைப் பெற்ற திமித்திரி பயேட் ஆரம்பித்திருக்கவில்லை.

இதேவேளை, அல்பேனியா, றோமானியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மேற்படி போட்டிகளின் முடிவில், குழு ஏயில் முதலிடம் பெற்றுள்ள பிரான்ஸ், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், குழு சி, டி அல்லது இயில் மூன்றாவது இடம்பெற்ற அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) லயோனில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், பெரும்பாலும், வடக்கு அயர்லாந்து அல்லது அயர்லாந்துக் குடியரசை சந்திக்கவுள்ளது.

மறுகணம், இக்குழுவில் இரண்டாமிடம் பெற்றுள்ள சுவிற்ஸர்லாந்து, குழு சியில் இரண்டாமிடம் பெற்ற அணியை இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்க வேண்டுமென்ற நிலையில், தற்போதைய நிலையில், போலந்தை சந்திக்க வேண்டும். எனினும், சந்திக்க வேண்டிய அணியானது ஜெர்மனி அல்லது வடக்கு அயர்லாந்தாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

தவிர, இக்குழுவில் மூன்றாமிடம் பெற்றுள்ள அல்பேனியா, ஏனைய நான்கு, மூன்றாமிடம் பெற்ற அணிகளில் சிறந்த அணியாக இருக்குமானால், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும்.

- See more at: http://www.tamilmirror.lk/175153/ய-ர-இற-த-அண-ச-ற-ற-ல-ச-வ-ற-ஸர-ல-ந-த-#sthash.jgnFx19s.dpuf
Link to comment
Share on other sites

யூரோ கால்பந்து தொடரில் அல்பேனியாவுக்கு முதல் முறையாக வெற்றி: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து

 
 
யூரோ கால்பந்தில் ருமேனியாவுக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் அல்பேனியா வீரர் அர்மான்ட் சடிகு. படம்: கெட்டி இமேஜஸ்.
யூரோ கால்பந்தில் ருமேனியாவுக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் அல்பேனியா வீரர் அர்மான்ட் சடிகு. படம்: கெட்டி இமேஜஸ்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ருமேனியா-அல்பேனியா அணிகள் மோதின. 43-வது நிமிடத்தில் அல்பேனியாவின் அர்மான்ட் சடிகு முதல் கோலை அடித்தார். லெடியன் மெமுஷாஜிடம் இருந்து கிராஸை பெற்ற அர்மான்ட் சடிகு, ருமேனியா கோல்கீப்பர் சிப்ரியனின் தடுப்பை மீறி கோல் அடித்து அசத்தினார்.

பெரிய தொடர் ஒன்றில் அல்பேனியா அடித்த முதல் கோல் இதுதான். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா முன்னிலை வகித்தது.

இதற்கு பதில் கோல் திருப்ப இரண்டாவது பாதியில் ருமேனியா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்றது. பெரிய தொடரில் அல்பேனியா பெற்ற முதல் வெற்றி யாக இது அமைந்தது. இந்த போட்டி யில் 62 சதவீத நேரம் ருமேனியா தான் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனாலும் அர்மான்ட் சடிகு அடித்த கோல் ருமேனியாவை வீழ்த்துவதற்கு போதுமானதாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு அல்பேனியா முன்னேறுவதற்கு சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அல்பேனியா 3 ஆட்டத்தில் இரு தோல்வி, ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து பிரான்ஸ் 7 புள்ளிகளுடனும், சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை அடிப்படையில் அல்பேனியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற மற்ற பிரிவில் உள்ள அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது அல்பேனியா.

சுவிட்சர்லாந்து அசத்தல்

லில்லி நகரில் ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. பிரான்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் ருமேனியா, அல்பேனியா அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. சுவிட்சர்லாந்து அணி டிரா செய்தால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையில் இந்த ஆட்டத்தை சந்தித்தது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கோலின்றி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை பிரான்ஸ் வீணடித்தது. இருமுறை அந்த அணி வீரர்கள் அடித்த பந்து கோல்கம்பத்தின் கம்பியில் பட்டு வெளியே சென்றது. போக்பா அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் தடுத்து நிறுத்தினார். அடுத்த முறை 25 யார்டு தூரத்தில் இருந்து அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

முதல் இரு ஆட்டங்களிலும் கோல் அடித்து அசத்திய பயெட், 63-வது நிமிடத்தில் மவுஸாவிடம் இருந்து பெற்ற பாஸை இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு வெளியே சென்றது.

இந்த போட்டி டிரா ஆனதால் ஏ பிரிவில் 7 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதல் இடத்தையும், 5 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணி முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தற்போது தான் முன்னேறி உள்ளது.

நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி சி, டி அல்லது இ பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் அணியுடன் மோதும். அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி, போலந்து அல்லது வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகளில் ஏதாவது ஒரு அணியை எதிர்கொள்ளும்.

இன்றைய ஆட்டங்கள்

வடக்கு அயர்லாந்து - ஜெர்மனி

நேரம்: இரவு 9.30

உக்ரைன் - போலந்து

நேரம்: இரவு 9.30

குரோஷியா - ஸ்பெயின்

நேரம்: நள்ளிரவு 12.30

செக்குடியரசு-துருக்கி

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

Link to comment
Share on other sites

யூரோவில் வேல்ஸ் அபாரம்: ரஷ்ய கலகக்கும்பல் தலைவன் கைது!

யூரோ கால்பந்து தொடரில் வேல்ஸ் அணி ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் லீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

wales.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், பி பிரிவில் நேற்று டூலாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில்,  ரஷ்ய அணியுடன் வேல்ஸ் மோதியது. இந்த போட்டியில் வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் 11 வது நிமிடத்தில் ஆரான் ராம்சே வேல்ஸ் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து 19வது நிமிடத்தில் டெயிலரும் பிற்பாதியில் 67வது நிமிடத்தில் காரத் பேலும் வேல்ஸ் அணிக்கான கோல்களை அடித்தனர். இதனால் பி பிரிவில் இருந்து வேல்ஸ் 6 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியும் இந்த பிரிவில் இருந்து 5 புள்ளிகள் பெற்று அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது. ரஷ்யா போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது.

‘இதற்கிடையே  கடந்த இரு நாட்களுக்கு முன் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் சங்கத்  தலைவர் அலெக்சான்டர் ஸ்பிரிங்கின்  நேற்று போட்டி நடந்த டூலாஸ் நகரில் பிடிபட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக மீண்டும் பிரான்சுக்குள் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மார்செலி நகரில் நடந்த ரஷ்யா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் போட்டியின் போது ஏராளமான ரஷ்ய ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட, அலெக்சான்டர்தான் காரணமென்று குற்றஞ்சாட்டிய பிரெஞ்சு போலீஸ் அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.

http://www.vikatan.com/news/sports/65375-wales-beat-russia-euro-2016.art

Link to comment
Share on other sites

ஆடுகளத்தில் புகுந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்த ரசிகரை இழுத்து சென்ற போலீஸ் (வீடியோ)

ஐரோப்பா கால்பந்து போட்டியின் போது, போர்ச்சுகல் ரசிகர் ஒருவர் அதிரடியாக மைதானத்திற்குள் நுழைந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்துக் கொண்டார். அவரை காவல்துறையினர் இழுத்து சென்றனர்.

பாரிஸில், போர்ச்சுகல்– ஆஸ்திரியா மோதிய லீக் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டியின் போது, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் தவறவிட்டார். இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார் ரொனால்டோ.



 

இந்தநிலையில் திடீரென ஒரு போர்ச்சுகல் ரசிகர் மைதானத்திற்குள் நுழைந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அந்த ரசிகருடன் செஃல்பி எடுக்க முன்வந்த ரொனால்டோ சிரித்தபடி அவருக்குப் போஸும் கொடுத்தார். ரசிகரும் உற்சாகமாக செஃல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அவரை காவல்துறையினர் இரண்டு பேர் சேர்ந்த இழுத்துச் சென்றனர். மைதானத்தை சுற்றி காவலர்கள் இருந்தபோதும், ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்து செஃல்பி எடுத்துக் கொண்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://www.vikatan.com/news/sports/65397-police-captured-fan-who-too-selfie-with-ronaldo.art

Link to comment
Share on other sites

யூரோ 2016: நொக்-அவுட் சுற்றில் வேல்ஸ், இங்கிலாந்து
 
 

article_1466508432-LEADramyeiba.jpgபிரான்ஸில் இடம்பெற்று வரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு, குழு பியிலிருந்து வேல்ஸும் இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன.

திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ரஷ்யாவுடனான போட்டியில் வேல்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தும் ஸ்லோவாக்கியாவுடனான போட்டியை இங்கிலாந்து சமநிலையில் முடித்துக் கொண்டதை தொடர்ந்துமே, வேல்ஸும் இங்கிலாந்தும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ், ரஷ்யா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் ரஷ்யாவைத் தோற்கடித்த வேல்ஸ், குழு பியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. வேல்ஸ் சார்பாக, ஆரோன் ராம்ஸே, நீல் டெய்லர், கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.

1958ஆம் ஆண்டு உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளின்போது, பீலே பெற்ற கோலினால், பிரேஸிலிடம் தோல்வியடைந்து வெளியேறிய பின்னர், சர்வதேசத் தொடர் ஒன்றின் நொக்-அவுட் சுற்றுக்கு வேல்ஸ் நுழையும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், முதற்தடவையாக யூரோ கிண்ணப் போட்டிகளில் பங்கேற்ற வேல்ஸ், தனது, இறுதி 16 அணிகளுக்‌கான சுற்றுப் போட்டியின்போது, குழு ஏயில் மூன்றாமிடம் பெற்றுள்ள (அல்பேனியா) அல்லது குழு டியில் மூன்றாமிடத்தைப் பெறும் (செக் குடியரசு அல்லது குரோஷியா அல்லது துருக்கி) அல்லது குழு சியில் மூன்றமிடத்தைப் பெறும் (ஜெர்மனி அல்லது போலந்து அல்லது வடக்கு அயர்லாந்தைச் ) எதிர்வரும் சனிக்கிழமை (25)  சந்திக்கவுள்ளது.

மறுகணம், இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் அணித்தலைவர் வெய்ன் ரூனி உள்ளிட்ட ஆறு பேர் மாற்றப்பட்டிருந்த நிலையில், இரண்டு அணிகளும் இப்போட்டியில் கோல்களை பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், குழு பியில் இரண்டாமிடம் பெற்றுள்ள இங்கிலாந்து, குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியை, தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்கவுள்ளது. குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியாக, பெரும்பாலும் போர்த்துக்கல்லே இருக்கும் என்ற நிலையில், 2004ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தின் போதும் 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போதும் போர்த்துக்கல்லே இங்கிலாந்தை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் ஒஸ்திரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய அணிகளும் குழு எஃப்இல் இரண்டாமிடத்தைப் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குழு நிலைப் போட்டிகளுடன் ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் லெயோனிட் ஸ்லூட்ஸ்கி பதவி விலக முன்வந்துள்ளார். இவரினது ஒப்பந்த காலம், யூரோ 2016 உடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குரோஷியா, செக் குடியரசு அணிகளுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில், இரசிகர்கள் குழப்பம் விளைவித்தமைக்காக, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பு, குரோஷியாவுக்கு 100,000 யூரோ அபராதம் விதித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/175231#sthash.8SScE7g7.dpuf
Link to comment
Share on other sites

யூரோவில் ஸ்பெயின் தோல்வி ;

யூரோ கால்பந்து தொடரில் குரோஷிய அணி  ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. யூரோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது.

rams.jpg

 டி பிரிவில் நடந்த இந்த ஆட்டத்தில், 7வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோல் அடித்தது. பெப்ரிகாஸ் கொடுத்த பாசை அல்வாரோ மாரட்டா எளிதாக கோலாக்கினார். இந்த கோலுக்கு 45வது நிமிடத்தில் குரோஷியாவின் கல்நிக் பதிலடி கொடுத்தார். ஸ்பெயினுக்கு 70வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. செர்ஜியோ ரமோஸ் அடித்த இந்த பெனால்டியை குரோஷியா கோல்கீப்பர் டன்ஜெல் அற்புதமாக டைவ் அடித்து தடுத்து விட்டார்.

ஆட்டம் முடியும் தருவாயில் 87வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெர்சிக் நேர்த்தியாக ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் குரோஷியா 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ஸ்பெயின் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்தது. நேற்று நடந்த பிற ஆட்டத்தில் துருக்கி 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசையும் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரேனையும் தோற்கடித்தன.

.

557 ரசிகர்கள் கைது

இதற்கிடையே கடந்த 12ம் தேதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் ஈடுபட்ட இரு  ரஷ்ய ரசிகர்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  30 இங்கிலாந்து ரசிகர்களும், 7 வடக்கு அயர்லாந்து ரசிகர்களும், 5 வேல்ஸ் ரசிகர்களும் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் இதுவரை 557 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/65413-perisic-stuns-champions-with-late-winner.art

Link to comment
Share on other sites

குரேஷியாவிடம் சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி: இறுதி 16-ல் இத்தாலியுடன் மோதல்

ஆர்.முத்துக்குமார்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
பெனால்டி கிக் கோல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ். | படம்: ஏ.எஃப்.பி.
பெனால்டி கிக் கோல் வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ். | படம்: ஏ.எஃப்.பி.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரில் குரேஷியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்ற கடந்த முறை சாம்பியன் ஸ்பெயின் அணி இதனால் இறுதி-16 சுற்றில் இத்தாலியை சந்திக்க நேரிட்டுள்ளது.

பிரிவு டி-யில் ஸ்பெயின் முதலிடம் பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குரேஷிய அணியின் இவான் பெரிசிக் அடித்த கடைசி நேர அதிர்ச்சி கோலினாலும், ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டதாலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்த போது செர்ஜியோ ரேமோஸ் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட, கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது பெரிசிக் கோல் அடித்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

15 போட்டிகளாக தோல்வியடையாத யூரோ சாதனை ஸ்பெயினை பொருத்தவரை முடிவுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் அணியே ஆதிக்கம் செலுத்தியது, 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதுவும் இந்தத் தொடரில் ஸ்பெயின் வீரர்கள் செயல்படுத்தும் அபாரமான துல்லியம் மற்றும் சாதுரியத்துக்கு மற்றொரு உதாரணம், எந்த ஒரு அணியும் ஸ்பெயின் போல் இந்தத் தொடரில் இவ்வளவு துல்லியமான கால்பந்தாட்டத்தை ஆடவில்லை என்றே கூறிவிடலாம், என்ன இந்தப் போட்டி இனியெஸ்டாவின் ஆதிக்கம் கடந்த போட்டிகளை ஒப்பிடும்போது சற்றே குறைந்தது.

டேவிட் சில்வா 7-வது நிமிடத்தில் பந்தை குரேஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார், பிறகு ஒரு சற்றும் எதிர்பாராத ரிவர்ஸ் பாஸ் மூலம் செஸ்க் பேபர்காஸுக்கு அனுப்பினார். அவர் குறுக்காக பந்தை எடுத்துச் சென்றதை யாரும் கவனிக்காதது போல் இருந்தது, கடைசியில் அவர் செய்த கிராஸ் பேக் போஸ்ட்டுக்கு வந்த மொராட்டாவினால் கோலாக மாற்றப்பட்டது. இந்தத் தொடரில் இவரது 3-வது கோலாகும் இது. காரத் பேலுடன் சரிசமமாக நிற்கிறார் மொராட்டா.

ஒரு அணியாகத் திரண்டு ஆடும் தங்கள் திட்டத்தில் சற்றும் சுணக்கம் ஏற்படாத ஸ்பெயின் 2-வது கோலையும் அடித்திருக்கும், ஆனால் இம்முறை சில்வாவின் கிராஸை நொலிட்டோ கோலுக்கு சற்று வெளியே அடித்தார். இன்னொரு புறம் குரேஷியா தனது அச்சுறுத்தல் ஆட்டத்தையும் கைவிடவில்லை, ஸ்பெயின் அணி மீதான ‘பிரபை’ குறித்து கவலைப்படாமல் ஆடியதால் குரேஷியா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடமுடிந்தது.

ஸ்பெயின் தனது 2-வது கோலுக்காக தேடிக்கொண்டிருக்கும் போது குரேசியா சமன் செய்தது. பெரிசிக் கிராஸ் ஒன்று காலினிச்சிடம் வர ரேமோஸைக் கடந்து அவர் பந்தை எடுத்து வந்து ஸ்பெயினின் டி ஜியாவைத் தாண்டி கோலாக மாற்றினார் 1-1.

2-வது பாதியில் குரேஷியா தன்னம்பிக்கையுடன் தொடங்கியது, முதலில் டாரிஜோ ஸ்ரணாவின் கிராஸை ஸ்பெயினின் டேவிட் டி ஜியா தட்டி விட்டார், பிறகு டின் ஜெட்வஜ் அதே பந்தை அடித்ததையும் தடுத்தார்.

ஆனால் 72-வது நிமிடத்தில் தங்களுக்கு எதிராக அநீதி பெனால்டி ஸ்பெயின் சார்பாக வழங்கப்பட்டதாக குரேஷியா வருந்தியிருக்கக் கூடும். இனியெஸ்டா அடித்த அபாரமான தூக்கி அடித்த பாஸை சில்வா விரட்டினார். ஆனால் அவருக்கு குரேஷிய வீரர் சைமி வ்ரசாலிகோ கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார் சில்வா.

இதற்கு ஸ்பாட் கிக் கொடுக்கப்பட்டது. கேப்டன் ரேமோஸ் பெனால்டி ஷாட்டை சரியாக அடிக்கவில்லை, குரேஷிய கோல் கீப்பர் சுபசிச் சுலபமாக தடுத்து விட்டார். கேப்டன் ரேமோஸ் கால்பந்து வாழ்வில் இது பெரிய கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.

இது நடக்கும் போது ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தன. ஆனால் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருக்கும்போது பெரிசிக் அருமையான கோல் ஒன்றை அடிக்க குரேஷியா 2-1 என்று வெற்றி பெற்று குரூப் டியில் முதலிடம் பிடித்து இறுதி 16 சுற்றில் பெரிய அணிகளை சந்திப்பதை தவிர்த்துள்ளது, ஸ்பெயின் இத்தாலி அணிகள் திங்கட்கிழமை மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/குரேஷியாவிடம்-சாம்பியன்-ஸ்பெயின்-அதிர்ச்சித்-தோல்வி-இறுதி-16ல்-இத்தாலியுடன்-மோதல்/article8760198.ece

Link to comment
Share on other sites

செய்தியாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ

Ronaldo

 

போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னிடம் கேள்வி கேட்ட தொலைக்காட்சி செய்தியாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசினார் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்த்ரியா அணியுடனான போட்டியில், பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால், அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மீடியாக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவருக்கு அழுத்தத்தை உருவாக்கி வருகின்றன. தனியார் டிவி ரிப்போர்டர் ஒருவர், ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாரா என்று ரெனால்டோவிடம் கேள்வி கேட்டார். ஆனால் ஆஸ்திரியாவுடனான போட்டி டிராவில் முடிந்த கோபத்தில் இருந்த ரொனால்டோ, ரிப்போர்டரிடம் இருந்து ஆடியோ மைக்கை பிடுக்கி குளத்தில் வீசிவிட்டு சென்றார்.

 

போர்ச்சுகல் அணி தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இதுவரை வெற்றி பெறவில்லை. ஹங்கேரியுடனான போட்டியில் வென்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்தச்சுற்றுக்கு செல்ல முடியும் இல்லாவிட்டால் தொடக்கநிலை சுற்றோடு வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே ஹங்கேரியுடன் வெற்றி பெற்று தங்கள் அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லும் முனைப்பில் ரொனால்டோ தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/sports/10/33783/cristiano-ronaldo-throws-television-reporters-microphone-into-lake

Link to comment
Share on other sites

அடுத்த  சுற்றுக்கு முன்னேறி உள்ள நாடுகளின் போட்டி விபரம்

25.06.     15.00 மணிக்கு      சுவிஸ்லாந்து vs போலந்து

               21.00 மணிக்கு      குரோசியா   vs போர்த்துக்கல்

 

26.06     18.00 மணிக்கு     ஜெர்மனி   vs ஸ்லோவாகியா

 

27.06    18.00 மணிக்கு   இத்தாலி vs ஸ்பெயின்

             21.00 மணிக்கு   இங்கிலாந்து vs ஐஸ்லாந்து

Link to comment
Share on other sites

நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ சாதனை!

நான்கு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோ பெற்றுள்ளார்.

rans.jpg

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில்,  நேற்று போர்ச்சுக்கல் அணி,  ஹங்கேரி அணியை எதிர்கொண்டது. ஐரோப்பிய கோப்பையில் ரொனால்டோ களமிறங்கும் 17வது ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்தப் போட்டியில் ரொனால்டோ 49 மற்றும் 61 வது நிமிடங்களில் என இரு கோல்கள் அடித்தார்.

இதன் மூலம் 4 ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். அதாவது 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் ஜாம்பவான் நுனோ கோம்ஸ், யூரோவில் அதிகபட்சமாக 7 கோல்களை அடித்துள்ளார்.

http://www.vikatan.com/news/sports/65464-ronaldo-sets-new-european-record.art

 

13533015_1190647250954514_43483715577537

Link to comment
Share on other sites

ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ ( காணொளி இணைப்பு)

 

Cristiano-Ronaldo-throws-microphone-into

கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி சமநிலையில் முடிந்தது. 

 

இந்நிலையில் தனியார் தொலைகாட்சிய சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ, ஊடகவியலாளரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/8002

Link to comment
Share on other sites

யூரோ 2016 கால்பந்து: நாக் அவுட் சுற்று அட்டவணை

 
கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயினின் தோல்வியடையாத தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்து முடித்த பிறகு. | படம்: கெட்டி இமேஜஸ்.
கடந்த யூரோ சாம்பியன் ஸ்பெயினின் தோல்வியடையாத தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்து முடித்த பிறகு. | படம்: கெட்டி இமேஜஸ்.

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடர் அதன் இறுதி-16 சுற்று நிலையை எட்டியுள்ளது.

இறுதி 16 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்: பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், வேல்ஸ்.

தகுதி பெற்ற 3-ம் இடம் பிடித்த அணிகள்: நாதர்ன் அயர்லாந்து, போர்ச்சுகல், அயர்லாந்து குடியரசு, ஸ்லோவேக்கியா

வெளியேறிய அணிகள்: அல்பேனியா, ஆஸ்திரியா, செக்.குடியரசு, ருமேனியா, ரஷ்யா, ஸ்வீடன், துருக்கி, உக்ரைன்.

இறுதி 16 சுற்று போட்டி அட்டவணை:

தேதி அணிகள் நேரம்

ஜூன் 25 சுவிட்சர்லாந்து - போலந்து மாலை 6.30

ஜூன் 25 குரோஷியா - போர்ச்சுக்கல் இரவு 9.30

ஜூன் 26 வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து நள்ளிரவு 12.30

ஜூன் 26 ஹங்கேரி - பெல்ஜியம் மாலை 6.30

ஜூன் 26 ஜெர்மனி - ஸ்லோவேக்கியா இரவு 9.30

ஜூன் 27 இத்தாலி - ஸ்பெயின் நள்ளிரவு 12.30

ஜூன் 27 பிரான்ஸ் - அயர்லாந்து இரவு 9.30

ஜூன் 28 இங்கிலாந்து - ஐஸ்லாந்து நள்ளிரவு 12.30

http://tamil.thehindu.com/sports/யூரோ-2016-கால்பந்து-நாக்-அவுட்-சுற்று-அட்டவணை/article8764828.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து; இத்தாலியை வீழ்த்தியது அயர்லாந்து- நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், வெளியேறியது சுவீடன்

 
 
இத்தாலி கோல்கீப்பரின் தடுப்பை மீறி தலையால் முட்டி கோல் அடிக்கும் அயர்லாந்தின் பிராடி. படம்: ஏஎப்பி
இத்தாலி கோல்கீப்பரின் தடுப்பை மீறி தலையால் முட்டி கோல் அடிக்கும் அயர்லாந்தின் பிராடி. படம்: ஏஎப்பி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் நடைபெற்றன. இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இத்தாலி - அயர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 84-வது நிமிடத்தில் அயர்லாந்தின் வெஸ் கூலாகனின் கோல் அடிக்கும் முயற்சியை, இத்தாலி கோல் கீப்பர் சிறிகு தடுத்தார்.

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே அயர்லாந்தின் பிராடி, பந்தை அற்புதமாக தலையால் முட்டி கோல் அடித்தார். இத்தாலி அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இந்த பிரிவில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த அயர்லாந்து, 3-வது நிலையில் சிறந்த அணி என்ற அடிப்படையில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இந்த தோல்வியால் சுவீடன் தொடரில் இருந்து வெளியேறியது.

எப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 1-1 என ஆட்டம் சமனில் இருந்த நிலையில் இஞ்சுரி நேரத்தில் டிராஸ்டாசன் கோல் அடித்து ஐஸ்லாந்துக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ரொனால்டோ சாதனை

எப் பிரிவில் ஹங்கேரி - போர்ச்சுக்கல் இடையிலான ஆட்டம் 3 - 3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து ஆட்டம் டிராவில் முடிவடைய உதவினார். இந்த பிரிவில் ஹங்கேரி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஹங்கேரிக்கு எதிராக கோல்கள் அடித்தன் மூலம் 4 யூரோ கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-இத்தாலியை-வீழ்த்தியது-அயர்லாந்து-நாக்-அவுட்-சுற்றில்-போர்ச்சுக்கல்-வெளியேறியது-சுவீடன்/article8768257.ece

Link to comment
Share on other sites

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்று இன்று தொடக்கம்

 
 
kkkk_2908565f.jpg
 

காலிறுதி முனைப்பில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி, போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, போலந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, குரோஷியா, அயர்லாந்து, சுலோவேக்கியா, ஹங்கேரி, பெல்ஜியம், ஐஸ்லாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அல்பேனியா, ருமேனியா, ரஷ்யா, உக்ரைன், துருக்கி, செக் குடியரசு, சுவீடன், ஆஸ்திரியா ஆகிய அணிகள் வெளியேறின. நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வியை தழுவும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.

சுவிட்சர்லாந்து - போலந்து

நாக் அவுட் சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு செயின்ட் ஈட்டியன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றில் முதல் முறையாக கால் பதித்துள்ள சிறிய அணியான போலந்து லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2-ல் வெற்றி பெற்றது. உலக சாம்பியனான ஜெர்மனிக்கு எதிராக டிரா செய்திருந்தது. இதனால் அந்த அணி சுவிட்சர்லாந்துக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். சுவிட்சர்லாந்து அணியில் நட்சத்திர வீரராக கிரெய்ன்ட் ஹகாவும், போலந்து அணியில் நட்சத்திர வீரராக ராபர்ட் லீவான்டோவ்ஸ்கியும் உள்ளனர்.

கரத் பாலே

பாரிஸ் நகரில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து பலப்பரீட்சை நடத்து கின்றன. இரு அணிகளும் இந்த முறைதான் முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கரத் பாலே பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த தொடரில் அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இன்றும் அவர் அசத்தக்கூடும். வடக்கு அயர்லாந்தை சாதாரண அணி என்று கருதமுடியாது.

நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி கடுமையாக போராடி முன்னேறி உள்ளது. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக கையாளும் வடக்கு அயர்லாந்து இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும்.

போர்ச்சுக்கல்-குரோஷியா

லென்ஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு போர்ச்சுக்கல் - குரோஷியா அணிகள் மோதுகின்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி லீக் ஆட்டத்தில் வெற்றியே பெறாமல் 3 ஆட்டத்தையும் டிரா செய்தது.

முதல் 2 ஆட்டத்தில் 20 முறை இலக்கை நோக்கி பந்தை கொண்டு சென்றபோதிலும் கோல் அடிக்க முடியாமல் திணறிய ரொனால்டோ ஹங்கேரிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அற்புதமாக இரு கோல்கள் அடித்து மிரட்டினார். இதனால் அந்த அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

குரோஷியா லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2 ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. அந்த அணி வீரர்கள் ஆக்ரோஷ மான ஆட்டத்தை வெளிப் படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். இதனால் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற கூடுதலாக மெனக் கெட வேண்டியதிருக்கும். ரொனால்டோ மீண்டும் அசத்தினால் காலிறுதியில் நுழையும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-தொடர்-நாக்-அவுட்-சுற்று-இன்று-தொடக்கம்/article8772372.ece?homepage=true

Link to comment
Share on other sites

குரோஷியா வலுவான அணி: கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து

 
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

யூரோ கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் கிறிஸ்டியானோ ரெனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, குரோஷியாவை எதிர்த்து விளையாடு கிறது. இந்நிலையில் குரோஷியா மிகவும் பலம் வாய்ந்த அணி என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

லீக் சுற்றின் கடைசி ஆட்டத் தில் ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்களை ஆக்ரோஷ மாக அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு கிறிஸ்டி யானோ ரொனால்டோ முற்றுப் புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தை டிரா செய்ய உதவிய அவர் போர்ச்சுக்கல் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவதை தடுத்தார்.

இதனால் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஹங்கேரி ஆட்டத்தில் கோல்கள் அடித்ததன் மூலம் நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் அடித்தால் யூரோ தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி யின் சாதனையை சமன் செய்வார். பிளாட்டினி 9 கோல்கள் அடித்துள்ளார். 8 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோவுக்கு இந்த சாதனையை நெருங்க ஒரு கோல் மட்டுமே தேவையாக உள்ளது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனேனில் குரோஷியா பலம் வாய்ந்த அணி. லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி டி பிரிவில் முதல் இடத்தை குரோஷியா பிடித்திருந்தது.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சிறந்த அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சம அளவில் உள்ளது. குரோஷியா கடினமான அணி, சிறந்த வீரர்களை கொண்டது. மற்ற அணிகள் ஸ்பெயினை சமாளிக்க முடியாத நிலையில், லீக் சுற்றில் ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது. குரோஷியா அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் பலத்தை நாங்கள் அறிவோம்’’ என்றார்.

போர்சுக்கல் பயிற்சியாளர் சான்டோஸ் கூறும்போது, “குரோஷியா அணி சுறா போன்றது. நாங்கள் தவிர்க்க நினைக்கும் அணிகளில் அதுவும் ஒன்று. ஸ்பெயின் அணி உள்ள பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்துள்ளது.

இதில் இருந்தே அந்த அணியை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இரு கோல்கள் அடித்துள்ளதால் ரெனால்டோவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. எப்படியும் ரொனால்டோ நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர் தான், இந்த கோல்கள் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு ஊக்கமளிப் பதாக இருக்கும்’’ என்றார்.

அதிக வலிமையுடன் களமிறங்கும் விதமாக குரோஷியா அணியில் இன்று 5 மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ரியல் மாட்ரிட் கிளப்பில் ரொனால்டோவின் சக வீரரான லுகா மாட்ரிக் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கு கிறார். மேலும் மரியோ மான்ட்ஸூகிக்கும் இன்று களமிறக்கப்படுகிறார்.

http://tamil.thehindu.com/sports/குரோஷியா-வலுவான-அணி-கிறிஸ்டியானோ-ரொனால்டோ-கருத்து/article8772523.ece?homepage=true

Link to comment
Share on other sites

காலுறுதிக்கு முன்னேறியது போலந்து அணி

 

பாரிஸ்: யூரோ கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை 5-4 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி போலந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1550768

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.