Jump to content

உயிரணை மனதைத் தொட்ட போராட்ட நாவல்.


Recommended Posts

13041435_1154254181261782_20330201932055

உயிரணை மனதைத்தொட்ட ஒருநாவல். 
(வாசகர் சூரியன் எழுதிய உயிரணை பற்றிய கருத்து)
-------------------------------------------------------------
 உயிரணை நாவல் என் கைகளுக்கு  கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து இடைநிறுத்த மனமில்லாது முழுமையாக படித்துவிட்டே புத்தகத்தை கீழே வைக்க முடிந்தது.

இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பிருந்த எனது போராளிகள் பற்றிய , போராட்டம் பற்றிய எண்ணவோட்டம் வாசித்து முடிந்ததும் முற்றிலுமாய் மாறியிருந்தது. ஏதோ இனம்புரியாத ஓர் உணர்வுச் சுழலுக்குள் நான் சிக்குண்டு தவிப்பது போல உணர்கிறேன்.

ஓரு போராளியின் கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது , அவனது வளர்ச்சி எவ்விதமாய் நாட்டிற்கு உழைத்தான் , இறுதியில் என்னவானான் என நகர்கிறது நாவல்.

மிகச்சிறப்பாகக் கதை சொல்லும் முறையினால் கதையோட்டத்தின் ஊடே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளும் சில சிறப்புப் பயிற்சி முறைகளும் சில தளபதிகளது செயற்பாடுகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

தலைவர் பற்றி நேரடியான துதிபாடலாக அல்லாமல் சம்பவங்களின் ஊடாக சித்தரிப்பதன் மூலம் அவர் பற்றிய பெரிய விம்பமொன்றை ஏற்படுத்தி நிற்கிறது.

'உயிரணை' தலையங்கம் கவிதைத்தனமாக இருக்கிறது. ஆனாலும் வாசிப்பவர்களுக்கு இலகுவான புரிதலைக் கொடுப்பதற்காக நூலாசிரியர் அதை பகுதிகளாக பிரித்திருக்கிறார். 

நீண்டகாலப்பதிவொன்றை எழுதும் போது அந்த விடயத்தின் மீதான ஈர்ப்பைத் தொடர்ந்து பேணுவது சிரமாகும். சிலவேளை இலக்கிய ரசனை குறைந்து கட்டுரைத்தனமாகவும் போவதுண்டு. ஆனால் அவ்வாறான தவறு நிகழாமல் மிகக் கவனமாக காலப்பிரிப்புகளோடு சுவாரசியத்தன்மை குறையாமல் எழுதப்படிருக்கிறது.

இந்த நாவலைப் படிக்கும் போது நுனியில் இருந்து கரும்பை கடித்துச் சுவைப்பது போல படிக்கப்படிக்க இனிமையாகவும் என்னையறியாமலே அந்த உலகத்தினுள் இழுத்துச் சென்றுவிட்டது. இறுதி அத்தியாயம் வாசித்த போது கதைநாயகன் பயணித்த முச்சக்கர வண்டியிலும் பேரூந்துப் பயணங்களிலும் நானும் சேர்ந்து பயணித்தது போல உணர்ந்தேன்.

மேவுதல் , கரைதல் , அவாவுதல் போன்ற உபபிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய காலங்களை இந்த மூன்று பிரிவுகளும் குறிக்கின்றன.

எதிரியை ஓடஓட விரட்டியடித்து உலகத்தின் பார்வையை இலங்கைத்தீவின் மீது திருப்பிய ஓயாத அலைகள் காலத்தை மேவுதலாகவும் , பின்னர் உலகமே திரண்டு அழிக்கும் நிகழ்ச்சி நிரலுடன் வன்னியில் வந்திறங்கிய சமாதான காலத்தை கரைதலாகவும் , இறுதிப்போரும் பின்னரான நாட்களும் அவாவுதலாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேவுதல் பகுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கில் வண்ணாத்திப் பாலத்தில் நிலைகொண்டிருந்த போது எதிரி மேற்கொண்ட முடிறியடிப்புத் தாக்குதலும் அதை எதிர் கொண்ட விதமும் ஓர் ஆங்கிலப்படத்தை நேரில் பார்த்தது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அந்தச் சண்டையில் கதை நாயகன் ஓர் கவசவாகனத்தை தாக்கியழித்தும் எதிரியின் முன்னேற்ற முயற்சியை தடுத்து நிறுத்தியதும் அந்தக்களத்தையே கண்முன் கொண்டு வந்தது.

பின்னொரு தடவை கதைநாயகன் உட்பட சில போராளிகள் எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்டதும் அதனை உடைத்து வெளியேறுவதுமான நிகழ்வை வாசிக்கிற போது காதுகளில் துப்பாக்கி வேட்டோசைகள் கேட்பது போல் உணர்ந்தேன்.

பின்னர் வேவிற்காக எதிரியின் முகாம்களுக்குள் சென்றதும் மூச்சுமுட்டும் தூரங்களுக்குள் எதிரியை எதிர்கொண்டு மீண்டதும் , இன்னொரு வேவின்போது பள்ளிக்காலம் தொடக்கம் உற்ற தோழனாயிருந்த கம்பனை பிரிந்ததும் மனதில் ஏதொவொரு கனதியை ஏற்படுத்துகிறது. மனம் முழவதும் அவர்கள் நடந்த பாதைவழியே பயணப்பட்டது. முன்னணி நிலை கடந்து வேவுக்கு செல்லும் போது அவர்கள் சுமந்து செல்லும் சுமைகளை நானும் சுமப்பது போல உணர்ந்தேன்.

உணவு தண்ணீர் இல்லாமல் தடுமாறுவதும் பாம்பு காட்டெருமை போன்றவற்றின் தாக்குதல்களால் கூட பாதிக்கப்படுவதும் புதியதாரு அனுபவமாயும் அந்தப் போராளிகள் நினைவில் கண்கலங்கவும் வைத்தது.

கடினம் நிறைந்த அவர்களது வாழ்க்கையின் ஊடேயும் மெல்ல அரும்பிய காதலும் மிக துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. ஆவர்களும் சாதாரண மனிதர்களே. தேசத்தின் நிலைதான் அவர்களை போராளிகள் ஆக்கியது என்பதனையும் உணர்த்தி நிற்கிறது.

புத்தகத்தில் எங்கேயும் ஆசிரியர் தனது போதனையையோ அல்லது அரசியல் பரப்புரையையோ செய்யாமல் மிக இயல்பாக சிந்துனைகளைக் கிழறிச் செல்கிறது. கதை சமாதான காலப்பகுதியில் சொல்கின்ற போது 'எங்கடை சனம் சமாதானத்தை நம்புதுகள் ஆனால் சிங்களதேசம் இன்னும் தம்பதீபக் கோட்பாடுகளோடு தான் இருக்குது' எனும் இடமும் மேவுதல் பகுதியில் சண்டையில் மரணமடைந்து போயிருக்கும் படைவீரர்களை பார்த்து கதை நாயகனின் எண்ணத்தில் தோன்றுவதாய் இவர்கள் ஏன் இங்கே வருகிறார்கள் ? என பல கேள்விகளை எழுப்புகிறான். இறுதியில் இவர்களின் வருகைக்கான காரணங்களில் இருக்கின்றன எமது விடுதலைக்கான நியாயங்கள் என்று சொல்லிச் செல்கிறார். இரண்டு இடங்களும் காட்டமான அரசியலை மிக இயல்பாக சொல்லிச் செல்கிறது.

இந்த இடங்களில் எழுத்தாளரது ஆழுமையை தனித்து இனங்காணக்கூடியதாக இருக்கிறது. போர் முடிந்து ஏழு ஆண்டுகள் நிறைவடையும் இந்நாட்களில் இறுதிப்போர் பற்றி பல வெளியீடுகள் வெளிவந்துவிட்டன. போரின் நேரடி பங்காளர்களாக இருந்து கடைசியுத்தகளம் வரை சென்று மீண்ட பலரது படைப்புகளும் வந்திருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை பொறுத்தவரையில் நேரடியாக களத்தை தரிசிக்காமல் விட்டாலும் தான் அறிந்து கொண்ட விடயங்களை மிகச்சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உள்ளக வெளியீடுகளை விடவும் இது மிகவும் உயிரோட்டமாக உள்ளது.

இந்தப்புத்தகத்தில் யரையும் வெளிப்படையாக குற்றம் சாட்டவில்லை. தீர்ப்பிடவும் இல்லை. அனைத்தும் வாசகன் எண்ணத்திற்கே விடப்பட்டிருக்கிறது. சிந்தனையை கிழறுவதாக இருக்கின்றதே தவிர போதனை செய்வதாக இல்லை.

எப்படி ஒரு போராளி ஒப்பனைகள் செய்து கொள்ளாமல் தனது சீருடையில் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியழிப்பானோ அதேபோல் வார்த்தைச் சோடிப்புகள் தேவையற்ற வர்ணனைகள் தத்துவ வியாக்கியானங்கள் எதுவும் இல்லாமல் மிக எளிமையாக ஓர் நதியோட்டம் போல நகர்கிறது.

ஓரு திரைக்கதையை எழுதுவது போல மிகக்கவனமாக ஒவ்வொரு காட்சிகளும் முழமையாக  எழுதப்பட்டிருக்கிறது. இது பேசப்படும் ஒரு நாவலாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பு.  கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் மற்றும் சீனமொழி பெயர்ப்பு நாவலான கூனற்பிறை (எழுதியவர் பெயர் நினைவில் இல்லை) போன்ற நாவல்களை வாசிக்கும் போது ஏற்பட்ட அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தை உயிரணை நாவலும் எனக்குத் தந்தது.

பூவரசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்தப்புத்தகத்தின் பதிப்பும் அட்டைப்படமும் சிறப்பாகவே இருக்கின்றன. உயிரணை உயிர்வரை சென்று தொடும் உணர்வு நிரம்பிய கதை. 

- சூரியன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி...அவுசில் எங்கு வாங்கலாம் என்று அறியத் தாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கிடைக்கும் என்று அறியத் தாருங்கள் சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சாந்தி அக்கா, உங்கள் படைப்பை வாசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

On 15.5.2016 at 1:35 AM, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் சாந்தி...அவுசில் எங்கு வாங்கலாம் என்று அறியத் தாருங்கள்!


உங்கள் நாட்டிலிருந்து புத்தகம் கேட்ட நண்பர்களுக்கு தபாலில் அனுப்பவுள்ளேன். உங்களுக்கும் அப்படி அனுப்பலாம்.

On 16.5.2016 at 9:55 PM, கிருபன் said:

எங்கே கிடைக்கும் என்று அறியத் தாருங்கள் சாந்தி அக்கா.

கிருபன்,
பிரித்தானியாவில் ஆவணிமாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மற்றும் தபால் மூலமும் அனுப்பவுள்ளேன். விபரத்தை தனிமடலிடுங்கோ அனுப்பி வைக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சகோதரி, பிரான்சில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் ....!

Link to comment
Share on other sites

On 18.5.2016 at 5:18 PM, Sasi_varnam said:

வாழ்த்துகள் சாந்தி அக்கா, உங்கள் படைப்பை வாசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறேன்.
 

thank-you_0.jpg

16 minutes ago, suvy said:

 சகோதரி, பிரான்சில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் ....!

பிரான்சிலும் அறிமுகம் செய்யவுள்ளோம். யூலை முதல் வாரம். விபரம் விரைவில் அறியத்தருகிறேன் சுவியண்ணா.

Link to comment
Share on other sites

  • 2 months later...

முகடு சஞ்சிகை மேடையில் பிரான்சில் உயிரணை நாவல் அறிமுகம். 

13737494_574987146039473_547657270056765

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் ஜனாதிபதி சிலோனுக்கு போனது பெரியண்ணனுக்கு துண்டற பிடிக்கேல்லை எண்டது தெரியுது.🤣 ஈரான்.சீனா,ரஷ்யா எண்டதொரு மிக்ஸர் வெஸ்ரேன் குஞ்சுகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவதை ரசிக்கலாம்😂
    • 1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது  3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.
    • நான் ஆட்சிக்கு வந்தால்  ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற  தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா  இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை?  ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.