Jump to content

பிரித்தானியாவில் இடம்பெற்ற “உலகத் தமிழர் வரலாற்று மைய வளாக புகுவிழா”


Recommended Posts

3841_1462451924_PhototasticCollage-2016-

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01) பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

திரு.இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தமிழகத்தின் பிரபல பாடகர் திரு.டி.எல்.மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு.ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு.சுரேசும், தமிழீழ தேசியக் கொடியினை திரு சாம்ராஜ் ஏற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து பொதுத் தூபிக்கான மலர் மாலையினை திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி அணிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதல் மாவீரர் லெப்டினன்ட் சத்தியநாதன் சங்கரின் திருவுருவப் படத்திற்கு அவரது தந்தை ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார். முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் திருவுருவப் படத்திற்கு திருமதி பிரிக்கேடியர் கடாபி சுதா ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்துள்ளார்.

ஈகைச்சுடர் தியாகி முத்துக்குமாரின் திருவுருவப்படத்திற்கு திரு.கபிலன் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவிக்க, நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு திருமதி.சுகிந்திரா ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்துள்ளார்.

பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைத்து மக்களும் மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கும், நினைவுக்கற்களுக்கும், பொதுத் தூபிக்கும் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

மலர் வணக்கத்தை தொடர்ந்து தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அத்தியாயத்தை பதிவு செய்த உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பெயர்ப்பலகைத் திரைநீக்கத்தினை எமது எதிர்கால சிற்பிகளான சிறார்கள் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்து வைத்தனர்.

பெருந்திரளான பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில், அரங்க நிகழ்வுகளாக வரவேற்பு நடனத்தினை செல்வி ஆர்த்தி, செல்வன் மிதுரன் வழங்க, வாழ்த்துரையினை இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்த பிரபல தமிழக பாடகர் மதிப்பிற்குரிய திரு.ரி.எல்.மகாராஜன் வழங்கியுள்ளார்.

கருத்துரைகளை தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் தற்போதைய சபாநாயகர் திருபாலச்சந்திரன், ஒக்ஸ்போர்ட் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு.மயில்வாகனம் மற்றும் சோபினா ஆகியோர் நிகழ்த்தியதை அடுத்து, சிறப்புரையினை தமிழீழ வைப்பக முன்னாள் மேலாளர் திரு.பாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, மக்கள் மத்தியில் இருந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு தமது வாழ்த்துக்கள், மற்றும் வேண்டுகோள்கள் அடங்கிய வாழ்த்துமடல் ஒன்றும் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை திரு.சுரேசும், மாவீரர் புகழ்பாடும் கவிதையினை கவிஞர் திரு.சிவசுப்ரமணியமும் நிகழ்த்தியுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் கணக்கறிக்கையினை அதன் இயக்குனர் சபை உறுப்பினர் திரு.சத்தியரூபன் வாசித்தார். இறுதியாக உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையினை வழங்க தமிழீழ எழுச்சி பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012  

http://battinaatham.com/description.php?art=3841

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில்.. ஒட்டுக்குழு ஒணான் குழு எல்லாம்.. நினைவஞ்சலி செய்யுது.. காக்கவன்னியன் எல்லாம்.. பண்டாரவன்னியனாக.. பண்டாரவன்னியன் எல்லாம் மறக்கச் செய்யப்படும் இன்றைய காலத்தில்... மக்கள் மனங்களில் சிலதை உறுதியாக இருத்தத் தக்க இத்தகைய நகர்வுகள் அமைவது வரவேற்கத்தக்கது. இதை கட்டினால் மட்டும் போதாது.. பாதுக்காக்கவும்.. பரப்பவும் வேண்டும். tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

ஏன் உங்களிடம் அனுமதி பெறவில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தாயகத்தில்.. ஒட்டுக்குழு ஒணான் குழு எல்லாம்.. நினைவஞ்சலி செய்யுது.. காக்கவன்னியன் எல்லாம்.. பண்டாரவன்னியனாக.. பண்டாரவன்னியன் எல்லாம் மறக்கச் செய்யப்படும் இன்றைய காலத்தில்... மக்கள் மனங்களில் சிலதை உறுதியாக இருத்தத் தக்க இத்தகைய நகர்வுகள் அமைவது வரவேற்கத்தக்கது. இதை கட்டினால் மட்டும் போதாது.. பாதுக்காக்கவும்.. பரப்பவும் வேண்டும். tw_warning:

tw_thumbsup:

உங்கள் கருத்தே எனது கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

tw_thumbsup:

உங்கள் கருத்தே எனது கருத்தும்.

 

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

இவர்களைப்பற்றி அழுக்காறு இன்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதினால், இவர்கள் இந்தப்பட்டத்திற்குப் பொருத்தமானவர்களா இல்லையா என்பதுபற்றி ஏனையவர்களும் தீர்மானிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பதவி என்பது எவ்வளவு சிறப்பானது என்பது தெரியுமா?...புலிகளில்,சிறப்பான போர் ஆற்றலையும்,திறமையும் கொண்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உன்னத பட்டம்...பால்ராஜ் அண்ணா,சு.பானாவுக்கு கூட அவர்கள் இறந்த பின்பு தான் இந்தப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நான் நினைக்கிறேன் நான் மேலே குறிப்பிட்ட பெண்கள் திரு கடாபி,திரு ஆதவன் ஆகியோரின் மனைவிமார்களாக இருக்கலாம்.கடாபிக்கோ,ஆதவனுக்கோ பிரிகேடியர் பட்டம் குடுத்தாலாவது ஏற்கலாம்.அவர்களது மனைவிமாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்.இவர்கள் எந்தப் போர் முனையில் யாரை வழி நடத்தினார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...விதுசாவுக்கோ அல்லது துர்காவுக்கோ இன்னும் பிரிகேடியர் பட்டம் குடுத்ததாக நான் அறியவில்லை.

புலிகள் இல்லை என்டவுடன் எலிகளுக்கு தான் கொண்டாட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இது அவர்களது மனைவிகளது பதவி நிலை அல்ல.

6 minutes ago, ரதி said:

பிரிகேடியர் பதவி என்பது எவ்வளவு சிறப்பானது என்பது தெரியுமா?...புலிகளில்,சிறப்பான போர் ஆற்றலையும்,திறமையும் கொண்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உன்னத பட்டம்...பால்ராஜ் அண்ணா,சு.பானாவுக்கு கூட அவர்கள் இறந்த பின்பு தான் இந்தப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நான் நினைக்கிறேன் நான் மேலே குறிப்பிட்ட பெண்கள் திரு கடாபி,திரு ஆதவன் ஆகியோரின் மனைவிமார்களாக இருக்கலாம்.கடாபிக்கோ,ஆதவனுக்கோ பிரிகேடியர் பட்டம் குடுத்தாலாவது ஏற்கலாம்.அவர்களது மனைவிமாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்.இவர்கள் எந்தப் போர் முனையில் யாரை வழி நடத்தினார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...விதுசாவுக்கோ அல்லது துர்காவுக்கோ இன்னும் பிரிகேடியர் பட்டம் குடுத்ததாக நான் அறியவில்லை.

புலிகள் இல்லை என்டவுடன் எலிகளுக்கு தான் கொண்டாட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,நீங்கள் சொல்கின்ற மாதிரி இருந்தால் சந்தோசம்.நான் மேலே இணைக்கப்பட்ட திரியை அடிப்படையாக வைத்தே என் கருத்தைப் பதிந்தேன்.

Link to comment
Share on other sites

49 minutes ago, ரதி said:

மீரா,நீங்கள் சொல்கின்ற மாதிரி இருந்தால் சந்தோசம்.நான் மேலே இணைக்கப்பட்ட திரியை அடிப்படையாக வைத்தே என் கருத்தைப் பதிந்தேன்.

திறமையான போர் ஆற்றல் கொண்ட புலிகள், பதவிக்குக் கொடுத்த மதிப்பையும் சிறப்பாக வெளியிட்டமைக்கு ஒரு பச்சை தந்தேன். 


பிரிகேடியர் சசிக்குமாரின் மனைவி டிலானி, பிரிகேடியர் கடாபியின் மனைவி சுதா என எழுதவேண்டியதை ஆர்வமிகுதியால் திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி, திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என எழுதியுள்ளனர் என்று எண்ணுகிறேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Paanch said:

திறமையான போர் ஆற்றல் கொண்ட புலிகள், பதவிக்குக் கொடுத்த மதிப்பையும் சிறப்பாக வெளியிட்டமைக்கு ஒரு பச்சை தந்தேன். 


பிரிகேடியர் சசிக்குமாரின் மனைவி டிலானி, பிரிகேடியர் கடாபியின் மனைவி சுதா என எழுதவேண்டியதை ஆர்வமிகுதியால் திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி, திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என எழுதியுள்ளனர் என்று எண்ணுகிறேன்.
 

திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க..  என்பது போல.. பிரிகேடியர் கடாபியின் துணைவியார் என்பதனை..  திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என்று அந்தப் போராளியின் பதவி நிலையோடு பெயரையும் சேர்த்து.. பின் மனைவியின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒரு பெரிய விசயமே அல்ல. 

புலிகளைப் பற்றி தாறுமாறாக எழுதித் தள்ளும் சிலரே இதற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

ஒருவேளை தலைப்பை திசை திருப்பும் நோக்கமாக இருக்கலாம். இவற்றைப் பெரிது படுத்தினால் தான் தப்பு. tw_blush:

(திருமதி கடாபி சுதா.. என்று எழுதாமல்.. கடாபிக்குரிய பதவிநிலையை அவருடைய பெயருக்கு முன் போட்டு எழுதி உள்ளனர் அவ்வளவே. அதுவே திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என்று ஆகிறது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி டிலானி பிரிகேடியர் சசிக்குமார்
திருமதி சுதா பிரிகேடியர் கடாபி

இவ்வாறு எழுதியிருக்கலாம். 

அல்லது 

1 hour ago, Paanch said:

பிரிகேடியர் சசிக்குமாரின் மனைவி டிலானி, பிரிகேடியர் கடாபியின் மனைவி சுதா
 

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

புலிகளைப் பற்றி தாறுமாறாக எழுதித் தள்ளும் சிலரே இதற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

ஒருவேளை தலைப்பை திசை திருப்பும் நோக்கமாக இருக்கலாம். இவற்றைப் பெரிது படுத்தினால் தான் தப்பு. tw_blush:

எமது ஊடகங்கள்.... விடும்  எழுத்துப் பிழைகளால் பொருள் மயக்கம் ஏற்படுவது வழமைதானே,
அதற்கு... ரதி, உணர்ச்சி வசப்பட்டதுதான்.... ஆச்சரியமாக உள்ளது. Smiley
நெடுக்கு கூறிய கருத்து, சிந்திக்க வைத்தது.  Smiley

Link to comment
Share on other sites

On 5/5/2016 at 3:38 AM, ரதி said:

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

பட்டம் அவர்களின் மனைவிகளுக்கல்ல ...அந்த மாவீர்களை தெரியப்படுத்துவதட்கு .... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,எனக்கு உங்கள மாதிரி புலி வேசம் போட்டாச்சு,குலைச்சுத் தான் ஆகனும் என்ட நிலை இல்லை.அதை எல்லாம் உங்கள மாதிரி கணணியில் இருந்து கொண்டு தட்டிக் கொண்டு மட்டும் இருப்பினமே அவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.எது சரி/பிழை,பிழையாயின் அதை ஏற்கும் பக்குவம் எனக்கு இருக்குது சரியா?...உங்கள் மாதிரி வறட்டுக்காக எழுதுகின்ற ஆள் நானில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு இன்னும் சில திரிகளில் ஊடகங்கள் பிழையான செய்தியை வெளியிட்டார்கள் என அவர்களை நீங்கள் திட்டினதும் இதே யாழில் தான் இருக்குது.என்பதையும் மறந்து விட வேண்டாம்

...........................

தமிழ்சிறி,நெடுக்கர் எழுதியதில் எந்த கருத்து உங்களை சிந்திக்க வைத்தது என சொன்னீர்கள் என்டால் எனக்கும்,மற்றவர்களுக்கும் சிந்திக்க உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.