Jump to content

நல்லாட்சி அரசின் கோமாளித்தனம்--!


Recommended Posts

3835_1462442912_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, சாணாக்கிய இராஐபுத்திரன் என்ற கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராயபக்‌ஷவின் விசுவாசியாக ஐக்கியமக்கள் சுதந்திரகூட்டமைப்பில் போட்டியிட்டு 549வாக்குகளை பெற்று படுதோல்வியைதளுவிக்கொண்ட களுவாஞ்சிகுடியை சேர்ந்த சாணாக்கியன் என்பவருக்கு
நல்லாட்சி ஐனாதிபதியால் வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவிலும் பிரதேச ஒருங்குணைப்பு இணையத் தலைவர் பதவி க்கான நியமனக்கடிதம் கடந்த மேதினத்தில் வழங்கப்பட்டுள்ளது,

ஏற்கனவே வெல்லாவெளிபிரதேச்செயலகபிரிவில் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் பிரதி அமைச்சர் அமிர்அலி,இராஐங்க அமைச்சர் ஹிஷ்புல்லாவும்,பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு இணைத்தலைவர்களாக தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்,பிரதிஅமைச்சர் அமிர்அலி,இராஜாங்கஅமைச்சர் ஹிஷ்புல்லா நியமிக்கப்பட்ட நிலையில் சாதாரண நபர் ஒருவரை இணைத்தலைவராக
ஐனாதிபதி நியமித்துருப்பது தமிழ்தேசியகூட்டமைப்பை இம்சைப்படுத்தும் நடவடிக்கையென அவதானிக்கமுடிகிறது,

இலங்கையில் அமைச்சர் பிரதிஅமைச்சர் இராஐங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மட்டுமே இதுவரை ஒருங்கிணைப்பு தலைவர்பதவிகள் வழங்கப்பட்டது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது சாதாரண ஒருவருக்கு எக்காரணம் கொண்டும்  ஒருங்கிணைப்பு தலைவர் பதவிவழங்கிய வரலாறு இல்லை,
இந்த நல்லாட்சி அரசின் கோமாளித்தனமாக இதை கருதமுடிகிறது. பட்டிருப்பு தொகுதியில் இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவுசெய்யப்படாத நிலையை தமக்கு சாதாகமாக்க பேரினவாத
கட்சிகள் பட்டிருப்பு தொகுதியில் தமிழ்தேசிய அரசியலை சிதைப்பதற்காகவே இவ்வாறு தற்போது சாணாக்கியன் இராஐபுத்திரன் என்பவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதாக அறிகமுடிகிறது.

இதேவேளை பட்டிருப்பு தொகுதி ஐக்கியதேசிய கட்சி அமைப்பாளராக கணேசமூர்தியும் தமிழ்தேசிய அரசியலுக்கு எதிராக செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது,

 

3835_1462442912_IMG_2362.JPG   

http://battinaatham.com/description.php?art=3835

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.