Jump to content

யாழ் செம்மணிப் பகுதியில் ஆசிரியையை அலங்கோலப்படுத்திய ஆசாமிகள்


Recommended Posts

இன்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.

துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற ஆசிரியையை அப்பகுதியால் வந்தவர்கள் பாதுகாப்பாக வீடுவரை கொண்டு சென்று விட்டதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக ஆசிரியை பொலிசாரிம் முறையிட மறுத்துவிட்டதாகவும் தனது பாதுகாப்புக் கருதி அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

http://kalaiyadinet.com/?p=58591

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1990 மே/1995 ஒக்டோபர் வரை இல் இதே செம்மணி வீதியால்.. நல்லிரவில் கூட பெண்கள் சுதந்திரமாக நடமாடினர். விறகு வெட்டிக் கூட வந்தனர். காரணம் அப்போது இந்த மண்ணை ஆண்டவர்கள் ஒரு உன்னத தலைவனின் கீழ் மண்ணின் மைந்தர்கள். 

இன்று அந்நிய ஆக்கிரமிப்பில் மண்ணும் மண்ணைச் சார்ந்தோரும்.. மக்களுடன் அந்நியப்பட்டவர்களாய்.tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Athavan CH said:

இச் சம்பவம் தொடர்பாக ஆசிரியை பொலிசாரிம் முறையிட மறுத்துவிட்டதாகவும் தனது பாதுகாப்புக் கருதி அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

பொலிசாரிடம் சொன்னால்... நியாயம் கிடைக்காது என்று, அந்த ஆசிரியைக்கு தெரியும்.
இவற்றை செய்வதே... அந்த பொலிசும், ராணுவமும் தான்.
இதற்குள்.. அதிரடியாக தமிழ் காவாலிகள் கைது என்று பொலிஸ் அறிக்கை விட...
அதற்கு வக்காலத்து வாங்க, எங்கடை.... சனம் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் உத்தமர்கள் எங்களை ஆளும்போது மட்டும்தான் நாங்களும் உத்தமர்களாக இருக்கவேண்டுமா? இந்த காவாலிகள் எல்லாம் புலிகளின் ஆட்சியில் விருப்பமின்றிதான் வாழ்ந்தார்களா? அவர்கள் இல்லை என்றதும் மீண்டும் காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்களா? புலிகளின் காலத்தில் இவர்கள் என்னத்தைக் கற்றுக்கொண்டார்கள்? குறுகிய காலமாயிருந்தாலும் அது ஒரு பொன்னான போற்றத்தக்க காலமென்று அந்த வாழ்க்கைமுறையை ஏன் தொடர்ந்தும் பேணவில்லை. இதை நான் தமிழ் இனத்தின் குறைபாடாகவே பார்க்கிறேன். புலிகளின் காலத்தில் தமிழ் இனம் கற்றுக்கொண்டது என்ன? இது போன்ற காட்டுமிராண்டிகள் தங்கள் வீடுகளில் உள்ள பெண்களையும் விட்டுவைப்பார்களா என்பது சந்தேகமே !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அடக்கிக்கொண்டிருந்த காவாலிகளை கட்டவிழ்த்து விட்டுக்கிடக்குது. அதுகளை வழிநடத்துகிறதுகளே இந்தக் காவல்த் தெய்வங்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான்  இப்ப இங்கே நடக்கும் விசயங்கள்  இருந்தாலும் படையினர் இல்லை மக்களே நம்ம தமிழ் பசங்கள் என்று சொன்னால் நம்மவா போறியள்

அண்மையில் யாழ்ப்பாண நீதிபதி இளஞ்செழியன் ஐயா பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பதை நினைவுக்கு கொண்டு வருகிறேன் எப்பவும் அடுத்தவன் மேலே நமது அழுக்கு நிறைந்த கண் பார்வையை மாற்ற வேண்டும் 

இங்கே வந்து பார்க்க கிடைத்தவர்களுக்கு தெரியும் ??

ஆள் ஆளுக்கு ஒரு குறூப் வைத்துக்கொண்டு ஊர்துலாவிக்கொண்டு திரியுகள் இதற்கு இப்ப பொலிசாரின் ரோந்து நடவடிக்கை நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தொடங்க பட்டுள்ளது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புக்காறா காலத்துக்கு முன்னமே ஊரை விட்டு ஓடியந்த ஆக்கள் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படும் இணையங்களை வாசித்துவிட்டு இன்னமும் 80,90 மனநிலையிலேயே ஊர் இருக்கும் என்று நினைப்பதன் விளைவே இன்றும்கூட இந்த காவாலிகளிசடைகளின் சேட்டைகளிற்கு ஆமியையும் பொலிசையும் பழிசாட்டும் அப்பாவித்தனத்தை நினைத்து அவர்கள் மேல் இரக்கம் வருகிறது.(அதற்காக இலங்கை இராணுவம் நல்லவர்கள் என்று சொல்லவில்லை.அவர்களின் சேட்டைகள் முன்னால் போராளிகளுடனும் முகாங்களுக்குள்ளும் இப்ப மட்டுப்பட்டு இருக்கு).80,90 களின் ஞாபகவீதியை விட்டு வெளிவரமுடியவில்லை இவர்களால்.ஊரை இப்பொழுதும் அந்தக்கால ஞாபகங்களுடன் முடிச்சுபோட்டு கற்பனை செய்வதன் விளைவே இவர்களின் இப்படியான குற்றசாட்டுக்கள்.ஒருமுறை ஊர்போய் வருவார்களே ஆனால் இவர்கள் புலம்பெயரும்போது எடுத்துவந்த ஞாபகங்களுடன் தஙகிவிட்ட ஊரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்பொழுது அங்கு இல்லை என்ற உண்மையை உணருவார்கள்.இல்லாவிட்டால் காலம்பூரா இதேபல்லவிதான்.அவர்கள் நிறையவே மாறிவிட்டார்கள். 2009 இற்கு பின் இப்படி ஒரு ஈழம் இருக்கும் என்று நாம் யாரும் கற்பனையே செய்து பாத்திருக்கமாட்டோம்.காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.காலத்தால் அள்ளுண்டுபோய் மாற்றமுடியாமல் தங்கிவிடுபவை ஞாபகங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு அனுபவங்கள். எங்கள் தலைமுறையின் வலியை உணராத ஒரு தலைமுறை யாழில் இருக்கிறது.அது அவர்கள் தவறல்ல.அவர்கள் முன் உள்ள உலகம் சூழல் வேறு எங்கள் முன் இருந்தது வேறு.

Link to comment
Share on other sites

உதில நாலு பிடித்து போஸ்டில கட்டி வெடி வச்சா இங்கிருந்து விசில் அடிக்கலாம் .

இருப்பவர்கள் இருந்தால் அதுதான் செய்வார்கள் .

புலம் பெயர்ந்து ஜனநாயக நாடுகளில் இருந்தாலும் மனப்பாங்கு சவூதி சர்வாதிகாரம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

உதில நாலு பிடித்து போஸ்டில கட்டி வெடி வச்சா இங்கிருந்து விசில் அடிக்கலாம் .

இருப்பவர்கள் இருந்தால் அதுதான் செய்வார்கள் .

அப்ப இவர்களுக்கு கற்ப்பூரம் காட்டி ஆர்த்தி எடுக்கச் சொல்கிறீர்களா? அதுசரி உங்கடை ஆட்கள் செய்ததோட ஒப்பிடக்கை இதெல்லாம் ஜுஜ்ஜுபி என்று நினைக்கிறீர்களாக்கும். ஜென்மத்தில திருந்தாதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கச் செய்யத் தேவையில்ல.இரண்டு பேரின்ட ஆண் உறுப்பினை வெட்டினால் காணும். மிச்சப் பேர் தானாய் அடங்குவினம்.உதை செய்கிறதிற்கு கூட ஊரில நல்ல ஆம்பிள்ளை இல்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, Thirdeye said:

இவர்கள் புலம்பெயரும்போது எடுத்துவந்த ஞாபகங்களுடன் தங்கிவிட்ட ஊரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்பொழுது அங்கு இல்லை என்ற உண்மையை உணருவார்கள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.காலத்தால் அள்ளுண்டுபோய் மாற்றமுடியாமல் தங்கிவிடுபவை ஞாபகங்கள் மட்டுமே. 

நிச்சயமாக. ஊரைவிட்டு புறப்பட்டபோது கொண்டுவந்த ஞாபகங்களுடன் நான் வாழ்கின்றேன். அங்கே, ஊரில் இருந்தவர்களும் மாற்றங்கண்டுவிட்டார்கள், அல்லது வெளியேயோ மேலேயோ சென்றுவிட்டார்கள். இவ்வாறே ஊரும் மாறிவிட்டது. நான் மட்டும் எனக்குள் பழையதைவைத்து பிசைந்துகொண்டு புலம்பி என்ன செய்வது? இன்னும் எமது ஊரில் மக்கள் குடியிருக்காவிட்டாலும் ஒருகாலத்தில் அங்கே சென்று வாழத்தொடங்கும்போது அங்குள்ள புதியவிடயங்களை கண்டுகொள்ளாது பழைய நினைவுகளை மட்டும் சுமந்தபடி நான் ஊருக்கு சென்றால் அங்கேயுள்ளவர்கள் என்னை புதினமாகவே பார்ப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13133287_10153567363497944_4251736870338

வள்ளுவனுக்கே சில சிங்கள சொறீலங்கா விசுவாசிகள் வகுப்பெடுப்பார்கள் போல் உள்ளது. tw_blush:

Link to comment
Share on other sites

6 hours ago, கலைஞன் said:

நிச்சயமாக. ஊரைவிட்டு புறப்பட்டபோது கொண்டுவந்த ஞாபகங்களுடன் நான் வாழ்கின்றேன். அங்கே, ஊரில் இருந்தவர்களும் மாற்றங்கண்டுவிட்டார்கள், அல்லது வெளியேயோ மேலேயோ சென்றுவிட்டார்கள். இவ்வாறே ஊரும் மாறிவிட்டது. நான் மட்டும் எனக்குள் பழையதைவைத்து பிசைந்துகொண்டு புலம்பி என்ன செய்வது? இன்னும் எமது ஊரில் மக்கள் குடியிருக்காவிட்டாலும் ஒருகாலத்தில் அங்கே சென்று வாழத்தொடங்கும்போது அங்குள்ள புதியவிடயங்களை கண்டுகொள்ளாது பழைய நினைவுகளை மட்டும் சுமந்தபடி நான் ஊருக்கு சென்றால் அங்கேயுள்ளவர்கள் என்னை புதினமாகவே பார்ப்பார்கள். 

கலைஞன் நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் புதுமையான சிந்தனைகளுடனும் புதிய மாற்றங்களுடனும் அங்குள்ளவர்கள் இல்லை என்பது எனது கருத்து. இன்னமும் பழைய பத்தாம்பசலித்ததுடனும் அதே மூடப்பழக்கங்களை கட்டிப்பிடித்துக் கொண்டுருக்கும்  பழமை வாதிகளாகவே தமிழர்கள் இன்றும் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில் உள்ளவர்கள் சொல்லத்தேவயில்லை. நாட்டில் நாம் இடம் பெயர்ந்து போனபோது யாழில் தங்கியதுகளும், சிறிது காலத்தில் திரும்பியதுகளும் ஆமி, போலிசோட சேர்ந்து  போட்ட கொட்டம், செய்த களவு கொஞ்சமல்ல. திரும்பி வந்து திருடியவர்க்ளிடம் நம்ம பொருட்களை கேட்டவர்களுக்கு அங்கே இருந்தவர்களெல்லாம் சண்டித்தனம். போலிசுக்குப் போனால் முறைப்பாடு எடுக்க மாட்டார்கள். அல்லது முறையிடப் போனவர்களையே அச்சுறுத்தி அனுப்புவார்கள். பிறகு காவாலிகளை சொல்லத்தேவயில்லை. இதனால் பயந்து யாரும்  போலிசுக்குப் போவதில்லை. சந்திக்கு சந்தி மோட்டர் சைக்கிள் காரரின் வேகக் கட்டுப்பாடு, கெல்மெட் என்பன பரிசோதிப்பார்கள் ஆனால் இந்தக் காவாலிகளுக்கு கட்டுப்பாடும் இல்லை, மறிப்பதும் இல்லை. சல்யூட் அடித்து அனுப்புவார்கள். பார்க்கவே கோமாளித்தனமாக இருக்கும். இதுகள் தங்கட பெயரே தமிழில் எழுதத் தெரியாது. ஆமி, போலிசு சேர் போட்டு அழைப்பதும், சல்யூட் அடிப்பதும். இதற்கு ஒட்டுக்குழுக்களின் ஆசீர்வாதம் வேறு. ஒன்றா, இரண்டா சொல்ல. ஒரு பாதாள உலகத்தையே உருவாக்கி விட்டார்கள். அதுகள் திருந்துமா? அனுபவிக்கும் நமக்குத்தான் அதன் வலி தெரியும். 

Link to comment
Share on other sites

On 5/5/2016 at 1:59 AM, arjun said:

உதில நாலு பிடித்து போஸ்டில கட்டி வெடி வச்சா இங்கிருந்து விசில் அடிக்கலாம் .

இருப்பவர்கள் இருந்தால் அதுதான் செய்வார்கள் .

புலம் பெயர்ந்து ஜனநாயக நாடுகளில் இருந்தாலும் மனப்பாங்கு சவூதி சர்வாதிகாரம் தான் .

அப்ப இவர்களை தாலாட்டுவதா ? மரியாதையை கருதி வார்த்தைகளை அடக்கி எழுதுகிறேன் .....கேடு கேட்ட உலகத்திக்கு ஜனநாயகம் சரிவருமா ? இப்ப எங்க ஜனநாயகம் உள்ளது ? எந்த காலத்தில் உள்ளீர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.