Jump to content

தொடருமா புலி வேட்டை?


Recommended Posts

தொடருமா புலி வேட்டை?
 

article_1462335051-handcuff.jpgகருணாகரன்

புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள்.

போரின் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, விசாரணைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகளை எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே கைதாகியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த ராம், சார்ள்ஸ் அன்டனி படையணியின் தளபதியாக இருந்த நகுலன், புலனாய்வுத்துறையில் செயற்பட்ட கலையரசன் உட்பட பலர், கடந்த வாரங்களில் கைதாகியிருக்கின்றனர். இந்தக் கைதுகளுக்கான காரணங்களை அரசாங்கம் தெளிவாகச் சொல்லவில்லை. ரீ.ஐ.டி எனப்படும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இந்தக்கைதுகளைச் செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

இந்தக் கைதுகள் தொடர்பாக பொலிஸிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தக் கைதுகள் தொடர்பாகக் கொழும்பிலே நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'இது குறித்துக் கவனமெடுக்கப்படும்' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார். அது என்னமாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் விளக்கவில்லை. அது எப்படியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரியவில்லை.

இந்தக் கைதுப் படலம் எப்பொழுது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. எதற்காக இந்தக் கைதுகள் நடக்கின்றன என்று தெரியாத மாதிரியே எப்பொழுது இந்தக் கைதுகள் நிற்கும் என்றும் தெரியாது. இப்படி எதுவுமே தெரியாத ஒரு நிலையில் கைதுகள் நடப்பதால் முன்னாள் புலிகளிடத்தில் அச்ச உணர்வு உண்டாகியுள்ளது. போர் முடிந்து, விசாரணைகளை எதிர்கொண்டு, புனர்வாழ்வுக்கும் சிறைத்தண்டனைக்கும் உள்ளாகி, விடுதலை பெற்று வந்தாலும் தங்களைச் சூழ்திருக்கும் துயரம் முடிவுறவில்லை என்பது இவர்களின் கவலை. இந்த நிலை இப்படியே நீடிக்குமானால் தங்களுடைய எதிர்காலம் எப்படியாக அமையும் என்பது முன்னாள் புலிகளின் முன்னால் தோன்றியிருக்கும் பதிலற்ற பெருங் கேள்வி.

உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

'யாரும் எந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. எப்போதும் விழிப்பு நிலையில் நாங்கள் இருக்கிறோம்' என்று உணர்த்துவதற்காக, இந்த மாதிரி நடவடிக்கைகளை படைத்தரப்பு மேற்கொள்கிறது என்று சிலர் சொல்கின்றனர். இந்த அடிப்படையில்தான் கடந்த ஆண்டுகளிலும் சில கைதுகளும் தெய்வீகன், கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் நடந்தது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். போர் முடிந்த பின்னர் இப்படியானதோர் இறுக்க நிலையைப் பேணுவது படைத்தரப்பின் இயல்பு. அதற்கு அது ஒரு தேவை என்பது இவர்களுடைய கருத்து.

அப்படியானால், புலிகள் குறித்த எச்சரிக்கை உணர்வும் அச்சமும் மெய்யாகவே படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. நிச்சயமாகச் சொல்லமுடியும். அப்படியொரு அச்ச உணர்வு படைகளுக்கும் இல்லை. அரசாங்கத்துக்கும் இல்லை. ஆனால், போரில் வெற்றியடைந்த எந்தத் தரப்பும் இந்த மாதிரியான ஒரு முன்னாயத்த நிலையிலும் சந்தேக நிலையிலும் இருப்பதுண்டு. அதில் பலிக்கடாவாகிக் கொண்டிருப்பது தோற்றத் தரப்பு. இதுதான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு சாரார் இதை வேறு விதமாகப் பார்க்கின்றனர்.

இலங்கையைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காக, இலங்கையின் ஸ்திரத்தன்மையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் வெளிச்சக்திகள், இப்படி முன்னாள் புலிகளையும் பயன்படுத்தலாம். ஆகவே, வெளிச்சக்திகளின் தூண்டுதலின் பேரில் முன்னாள் புலிகள் செயற்படக் கூடும் என்ற உணர்வின் விளைவாகவே, இந்தக் கைதுகளை ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் செய்கிறது. இதன் மூலம் வெளிச்சக்திகளின் கைகளில் சிக்கிவிடாதிருக்கும் ஓர் எச்சரிக்கை உணர்வை முன்னாள் புலிகளிடத்தில் உண்டாக்குவதே நோக்கம். கைது செய்யப்படுவோரின் நிலையைப் பார்க்கும் ஏனையவர்கள், தங்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருப்பர் என்ற எதிர்பார்ப்பை அரசாங்கம் கொண்டுள்ளது. வெளிச்சக்திகளின்

தூண்டுதல்களுக்குள்ளானால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். அந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை உணர்த்துவதே இதன் அடிப்படை என்கின்றனர் இவர்கள்.

இதை விட இன்னொரு விதமாகவும் இதை இன்னொரு தரப்பினர் நோக்குகிறார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நாட்டின் பொருளாதார நெருக்கடி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்த்தரப்பின் அரசியல் எதிர்ப்புப் போன்றவற்றைத் திசை திருப்புவதற்காக, இந்த மாதிரிப் புலிப் பூச்சாண்டியொன்றை அரசாங்கம் காட்டுகிறது. அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பாக தாம் கரிசனையோடு செயற்படுவதாகவும் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. கூடவே, போரச்சம் இன்னும் முற்றாக நீங்கி விடவில்லை என்ற உணர்வையும் பராமரிக்க முற்படுகிறது என்பது இவர்களுடைய கருத்து.

இந்த மூன்று விதமாக அபிப்பிராயங்களிலும் உண்மைகள் உண்டு. ஆகவே இவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது. இதற்கு அப்பாலான காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால், இந்தக் கைதுகள் முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் ஓர் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் கணக்கின்படி, 12,000 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென்றால், அத்தனைபேருக்கும் இது நெருக்கடியே. இதை விட, புலிகள் இயக்கத்தில் செயற்பட்டு உயிரிழந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடுத்த கட்டங்களில் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு பரவலாக உண்டு. இது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

போர் முடிந்து மிகக் கடினமாக மீள் வாழ்வைக் கட்டியெழுப்பி வரும்போது, இப்படி இன்னொரு விதத்தில் புதிய நெருக்கடிகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள முடியும். அப்படியென்றால் புனர்வாழ்வளித்தல், விடுதலை செய்யப்படுதல் என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம். இப்படி நிச்சயமற்றதொரு வாழ்க்கையில், சந்தேகிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் எப்படி அமைதி கொள்ள முடியும். இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் 12,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தருவது யார், ஜனாதிபதியின் வார்த்தைகள் நம்பிக்கையையும் நீதியான தீர்வையும் தருமா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தப் பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்ளுமா. ஏற்கெனவே அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாகவே கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாதிருக்கும்போது, இந்தக் கைதுகளை அது எப்படிக் கட்டுப்படுத்தும். இந்த விவகாரத்தில் அது எப்படி வெற்றியடையும். அப்படியென்றால், இந்தப் பிரச்சினை இப்படியே தன்போக்கில் போய்த்தான் தீருமா. அதுவரையிலும் பாதிக்கப்படுவோர் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டியதுதானா?

இதைத்தவிர்ப்பதற்கான மனிதாபிமான வழிமுறைகள் பற்றி ஏன் சிந்திக்கப்படவில்லை. ஏனென்றால், அடிப்படையில் இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால். அதற்கப்பால் இது ஒரு சட்டப் பிரச்சினையும் கூட. சரணடைந்து விசாரணைகளுக்கு முகம்கொடுத்து, தண்டனையைப் பெற்று முறைப்படி விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது சட்டரீதியாக அணுகப்பட வேண்டியது. ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு தளத்தில் இது மனித உரிமைகளோடு சம்மந்தப்பட்ட இன்னொரு விவகாரம். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் இயல்பு வாழ்வில் ஈடுபடுவதும் அதற்கான தகுதிகளைப் பெறுவதும் அடிப்படை உரிமை சார்ந்தது.  இதற்கான நெகழ்நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த மாதிரியான கைதுகள் அமைகின்றன. இது சமூகம் இவர்களை விட்டு விலக முற்படும் அபாய நிலையை உண்டாக்குகிறது.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்கள் வேறாகவும் சிங்களவர்கள் வேறாகவும் சிந்திக்கும் போக்கு மாறவில்லை. ஆட்சி மாறினாலும் கூட இதுதான் நிலை. தமிழர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் சிங்களத்தரப்பை நம்பத்தயாரில்லை. அதைப்போலத்தான்  சிங்களத்தரப்பிலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள் போதிய அளவில் நிகழவில்லை. இதனால், தமிழர்கள் புலிகளை இன்னும் தங்களுக்கு நெருக்கமான சக்தியாகவே பார்க்கின்றனர். பதிலாகச் சிங்களவர்கள் புலிகளை எதிர்நிலையிலேயே உணர்கின்றனர். புலிகளின் சாயலிலேயே தமிழர்களையும் பார்க்கின்றனர்.  இது மேலும் சிக்கலான புரிதல்களுக்கு வழியேற்படுத்தியுள்ளது.

மாறாக, போருக்குப் பிந்திய ஏழு ஆண்டுகளில் முற்றிலும் ஒரு புதிய பிராந்தியத்தில் இலங்கைச் சமூகங்களின் உணர்கை நிகழத்தொடங்கியிருக்க வேண்டும். கசப்பான அனுபவங்களையும் பேரழிவையும் அனுபவமாகக் கொண்ட இலங்கைச் சமூகங்கள், மெய்யாகவே பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் நகர்ந்திருக்க முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

தொடக்கத்தில், ஒன்றிரண்டு ஆண்டுகளில் பல மட்டங்களிலும் பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்குமான முயற்சிகளும் உரையாடல்களும் நடந்தன. அவையும் போருக்குப் பிந்திய நடவடிக்கைகளின் ஆரம்பம் என்ற அளவில், மேற்குலகின் அனுசரணையிலும் வழிகாட்டலிலும் நடந்தவையே. அதற்கான நிதி ஊட்டங்களையும் மேற்குலகம் வழங்கியிருந்தது. அதைப் பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவனங்களும் புத்திஜீவிகளும் சில தொடக்க நிலைக் காட்சிகளை மட்டும் காண்பித்தனர். அதற்கு அடுத்த புள்ளிகளை யாரும் இடவில்லை. அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ள சக்திகளுக்கும் இதைக்குறித்த அக்கறைகள் இருக்கவில்லை. எனவே, நிலைமை இப்போது மீண்டும் பினோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. பின்னோக்கிச் செல்லும் போக்கின் விளைவுகளாகவே இந்த மாதிரி எதிர்நிலைச் சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன.

படைமுகாம்களை மீளப்பலப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களின் கைதுகளும் அரசியற் கைதிகள் விடுதலைத் தாமதங்களும் இன்ன பிறவும் பினோக்கிச் செல்லும் போக்கின் விளைவுகளே. இது தனியே இந்தக் கைதுகளோடும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களோடும் மட்டும் நிற்காது. அடுத்த கட்டத்தில் மேலும் இறுக்கமான, விரும்பத்தகாத அரசியற் சூழலை உண்டாக்கும்.

இப்பொழுது இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வுக்கெதிரான நெருக்கடிகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. தமிழ், சிங்களத்தரப்புகளின் பின்தளத்தில் நலிந்திருந்த தீவிர நிலைப்பாடுடைய சக்திகள் முன்னரங்குக்கு வந்துகொண்டிருக்கின்றன. அமைதியைக் குறித்த பேச்சுகளை விட, அமைதிக்கெதிரான பேச்சுகளும் செயற்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் அதற்கான தயார்ப்படுத்தல்களைப் பற்றியும் பேசி வருகிறார்கள். தமிழ்தரப்பின் அரசியற் கோரிக்கைக்கான அடிப்படைகளையும் நியாயயத்தையும் மே தின உரையில் கூட ஜனாதிபதி விளக்கியிருக்கிறார். ஆனால், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதே இன்றைய கேள்வி. ஏனென்றால், புற நிலையில் ஏனைய சக்திகள் இனவாதத்தைப் பலமாக்கும் முயற்சிகளில் கடுமையாகச் செயற்பட்டு வருகின்றன.

பரவலான அளவில் மேற்கொள்ளப்படும் புத்திபூர்வமான கூட்டுச் செயற்பாடுகளின் மூலமே, நம்முன்னாலுள்ள சவால்களை முறியடித்து, புதிய களத்தை நோக்கி நகர முடியும். ஆனால், அதற்கு எதிரான இன நிலைப்பட்ட போக்குகளே வலுப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவுகளே புலி உறுப்பினர்களின் இந்தக் கைதுகளும். இது அடுத்த கட்டத்தில் இன்னும் விரிவடைந்து பலரையும் சுற்றி வளைக்கும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறோமா, அதைத்தான் வரவேற்கிறோமா?

பகை மனதை வளர்ப்பது இலகுவானது. அதை வெல்லதோ மிக மிகக் கடினமானது.

- See more at: http://www.tamilmirror.lk/171377/%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.auU7mFAO.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.