Jump to content

தொடருமா புலி வேட்டை?


Recommended Posts

தொடருமா புலி வேட்டை?
 

article_1462335051-handcuff.jpgகருணாகரன்

புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள்.

போரின் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, விசாரணைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகளை எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே கைதாகியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த ராம், சார்ள்ஸ் அன்டனி படையணியின் தளபதியாக இருந்த நகுலன், புலனாய்வுத்துறையில் செயற்பட்ட கலையரசன் உட்பட பலர், கடந்த வாரங்களில் கைதாகியிருக்கின்றனர். இந்தக் கைதுகளுக்கான காரணங்களை அரசாங்கம் தெளிவாகச் சொல்லவில்லை. ரீ.ஐ.டி எனப்படும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இந்தக்கைதுகளைச் செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

இந்தக் கைதுகள் தொடர்பாக பொலிஸிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தக் கைதுகள் தொடர்பாகக் கொழும்பிலே நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'இது குறித்துக் கவனமெடுக்கப்படும்' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார். அது என்னமாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் விளக்கவில்லை. அது எப்படியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரியவில்லை.

இந்தக் கைதுப் படலம் எப்பொழுது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. எதற்காக இந்தக் கைதுகள் நடக்கின்றன என்று தெரியாத மாதிரியே எப்பொழுது இந்தக் கைதுகள் நிற்கும் என்றும் தெரியாது. இப்படி எதுவுமே தெரியாத ஒரு நிலையில் கைதுகள் நடப்பதால் முன்னாள் புலிகளிடத்தில் அச்ச உணர்வு உண்டாகியுள்ளது. போர் முடிந்து, விசாரணைகளை எதிர்கொண்டு, புனர்வாழ்வுக்கும் சிறைத்தண்டனைக்கும் உள்ளாகி, விடுதலை பெற்று வந்தாலும் தங்களைச் சூழ்திருக்கும் துயரம் முடிவுறவில்லை என்பது இவர்களின் கவலை. இந்த நிலை இப்படியே நீடிக்குமானால் தங்களுடைய எதிர்காலம் எப்படியாக அமையும் என்பது முன்னாள் புலிகளின் முன்னால் தோன்றியிருக்கும் பதிலற்ற பெருங் கேள்வி.

உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

'யாரும் எந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. எப்போதும் விழிப்பு நிலையில் நாங்கள் இருக்கிறோம்' என்று உணர்த்துவதற்காக, இந்த மாதிரி நடவடிக்கைகளை படைத்தரப்பு மேற்கொள்கிறது என்று சிலர் சொல்கின்றனர். இந்த அடிப்படையில்தான் கடந்த ஆண்டுகளிலும் சில கைதுகளும் தெய்வீகன், கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் நடந்தது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். போர் முடிந்த பின்னர் இப்படியானதோர் இறுக்க நிலையைப் பேணுவது படைத்தரப்பின் இயல்பு. அதற்கு அது ஒரு தேவை என்பது இவர்களுடைய கருத்து.

அப்படியானால், புலிகள் குறித்த எச்சரிக்கை உணர்வும் அச்சமும் மெய்யாகவே படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. நிச்சயமாகச் சொல்லமுடியும். அப்படியொரு அச்ச உணர்வு படைகளுக்கும் இல்லை. அரசாங்கத்துக்கும் இல்லை. ஆனால், போரில் வெற்றியடைந்த எந்தத் தரப்பும் இந்த மாதிரியான ஒரு முன்னாயத்த நிலையிலும் சந்தேக நிலையிலும் இருப்பதுண்டு. அதில் பலிக்கடாவாகிக் கொண்டிருப்பது தோற்றத் தரப்பு. இதுதான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு சாரார் இதை வேறு விதமாகப் பார்க்கின்றனர்.

இலங்கையைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காக, இலங்கையின் ஸ்திரத்தன்மையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் வெளிச்சக்திகள், இப்படி முன்னாள் புலிகளையும் பயன்படுத்தலாம். ஆகவே, வெளிச்சக்திகளின் தூண்டுதலின் பேரில் முன்னாள் புலிகள் செயற்படக் கூடும் என்ற உணர்வின் விளைவாகவே, இந்தக் கைதுகளை ஓர் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் செய்கிறது. இதன் மூலம் வெளிச்சக்திகளின் கைகளில் சிக்கிவிடாதிருக்கும் ஓர் எச்சரிக்கை உணர்வை முன்னாள் புலிகளிடத்தில் உண்டாக்குவதே நோக்கம். கைது செய்யப்படுவோரின் நிலையைப் பார்க்கும் ஏனையவர்கள், தங்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருப்பர் என்ற எதிர்பார்ப்பை அரசாங்கம் கொண்டுள்ளது. வெளிச்சக்திகளின்

தூண்டுதல்களுக்குள்ளானால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். அந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை உணர்த்துவதே இதன் அடிப்படை என்கின்றனர் இவர்கள்.

இதை விட இன்னொரு விதமாகவும் இதை இன்னொரு தரப்பினர் நோக்குகிறார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, நாட்டின் பொருளாதார நெருக்கடி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்த்தரப்பின் அரசியல் எதிர்ப்புப் போன்றவற்றைத் திசை திருப்புவதற்காக, இந்த மாதிரிப் புலிப் பூச்சாண்டியொன்றை அரசாங்கம் காட்டுகிறது. அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பாக தாம் கரிசனையோடு செயற்படுவதாகவும் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. கூடவே, போரச்சம் இன்னும் முற்றாக நீங்கி விடவில்லை என்ற உணர்வையும் பராமரிக்க முற்படுகிறது என்பது இவர்களுடைய கருத்து.

இந்த மூன்று விதமாக அபிப்பிராயங்களிலும் உண்மைகள் உண்டு. ஆகவே இவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது. இதற்கு அப்பாலான காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால், இந்தக் கைதுகள் முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் ஓர் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் கணக்கின்படி, 12,000 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென்றால், அத்தனைபேருக்கும் இது நெருக்கடியே. இதை விட, புலிகள் இயக்கத்தில் செயற்பட்டு உயிரிழந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடுத்த கட்டங்களில் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு பரவலாக உண்டு. இது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

போர் முடிந்து மிகக் கடினமாக மீள் வாழ்வைக் கட்டியெழுப்பி வரும்போது, இப்படி இன்னொரு விதத்தில் புதிய நெருக்கடிகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள முடியும். அப்படியென்றால் புனர்வாழ்வளித்தல், விடுதலை செய்யப்படுதல் என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம். இப்படி நிச்சயமற்றதொரு வாழ்க்கையில், சந்தேகிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் எப்படி அமைதி கொள்ள முடியும். இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் 12,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தருவது யார், ஜனாதிபதியின் வார்த்தைகள் நம்பிக்கையையும் நீதியான தீர்வையும் தருமா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தப் பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்ளுமா. ஏற்கெனவே அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாகவே கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாதிருக்கும்போது, இந்தக் கைதுகளை அது எப்படிக் கட்டுப்படுத்தும். இந்த விவகாரத்தில் அது எப்படி வெற்றியடையும். அப்படியென்றால், இந்தப் பிரச்சினை இப்படியே தன்போக்கில் போய்த்தான் தீருமா. அதுவரையிலும் பாதிக்கப்படுவோர் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டியதுதானா?

இதைத்தவிர்ப்பதற்கான மனிதாபிமான வழிமுறைகள் பற்றி ஏன் சிந்திக்கப்படவில்லை. ஏனென்றால், அடிப்படையில் இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால். அதற்கப்பால் இது ஒரு சட்டப் பிரச்சினையும் கூட. சரணடைந்து விசாரணைகளுக்கு முகம்கொடுத்து, தண்டனையைப் பெற்று முறைப்படி விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது சட்டரீதியாக அணுகப்பட வேண்டியது. ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு தளத்தில் இது மனித உரிமைகளோடு சம்மந்தப்பட்ட இன்னொரு விவகாரம். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் இயல்பு வாழ்வில் ஈடுபடுவதும் அதற்கான தகுதிகளைப் பெறுவதும் அடிப்படை உரிமை சார்ந்தது.  இதற்கான நெகழ்நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த மாதிரியான கைதுகள் அமைகின்றன. இது சமூகம் இவர்களை விட்டு விலக முற்படும் அபாய நிலையை உண்டாக்குகிறது.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்கள் வேறாகவும் சிங்களவர்கள் வேறாகவும் சிந்திக்கும் போக்கு மாறவில்லை. ஆட்சி மாறினாலும் கூட இதுதான் நிலை. தமிழர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் சிங்களத்தரப்பை நம்பத்தயாரில்லை. அதைப்போலத்தான்  சிங்களத்தரப்பிலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் முயற்சிகள் போதிய அளவில் நிகழவில்லை. இதனால், தமிழர்கள் புலிகளை இன்னும் தங்களுக்கு நெருக்கமான சக்தியாகவே பார்க்கின்றனர். பதிலாகச் சிங்களவர்கள் புலிகளை எதிர்நிலையிலேயே உணர்கின்றனர். புலிகளின் சாயலிலேயே தமிழர்களையும் பார்க்கின்றனர்.  இது மேலும் சிக்கலான புரிதல்களுக்கு வழியேற்படுத்தியுள்ளது.

மாறாக, போருக்குப் பிந்திய ஏழு ஆண்டுகளில் முற்றிலும் ஒரு புதிய பிராந்தியத்தில் இலங்கைச் சமூகங்களின் உணர்கை நிகழத்தொடங்கியிருக்க வேண்டும். கசப்பான அனுபவங்களையும் பேரழிவையும் அனுபவமாகக் கொண்ட இலங்கைச் சமூகங்கள், மெய்யாகவே பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் நகர்ந்திருக்க முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

தொடக்கத்தில், ஒன்றிரண்டு ஆண்டுகளில் பல மட்டங்களிலும் பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்குமான முயற்சிகளும் உரையாடல்களும் நடந்தன. அவையும் போருக்குப் பிந்திய நடவடிக்கைகளின் ஆரம்பம் என்ற அளவில், மேற்குலகின் அனுசரணையிலும் வழிகாட்டலிலும் நடந்தவையே. அதற்கான நிதி ஊட்டங்களையும் மேற்குலகம் வழங்கியிருந்தது. அதைப் பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவனங்களும் புத்திஜீவிகளும் சில தொடக்க நிலைக் காட்சிகளை மட்டும் காண்பித்தனர். அதற்கு அடுத்த புள்ளிகளை யாரும் இடவில்லை. அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ள சக்திகளுக்கும் இதைக்குறித்த அக்கறைகள் இருக்கவில்லை. எனவே, நிலைமை இப்போது மீண்டும் பினோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. பின்னோக்கிச் செல்லும் போக்கின் விளைவுகளாகவே இந்த மாதிரி எதிர்நிலைச் சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன.

படைமுகாம்களை மீளப்பலப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களின் கைதுகளும் அரசியற் கைதிகள் விடுதலைத் தாமதங்களும் இன்ன பிறவும் பினோக்கிச் செல்லும் போக்கின் விளைவுகளே. இது தனியே இந்தக் கைதுகளோடும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களோடும் மட்டும் நிற்காது. அடுத்த கட்டத்தில் மேலும் இறுக்கமான, விரும்பத்தகாத அரசியற் சூழலை உண்டாக்கும்.

இப்பொழுது இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வுக்கெதிரான நெருக்கடிகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. தமிழ், சிங்களத்தரப்புகளின் பின்தளத்தில் நலிந்திருந்த தீவிர நிலைப்பாடுடைய சக்திகள் முன்னரங்குக்கு வந்துகொண்டிருக்கின்றன. அமைதியைக் குறித்த பேச்சுகளை விட, அமைதிக்கெதிரான பேச்சுகளும் செயற்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் அதற்கான தயார்ப்படுத்தல்களைப் பற்றியும் பேசி வருகிறார்கள். தமிழ்தரப்பின் அரசியற் கோரிக்கைக்கான அடிப்படைகளையும் நியாயயத்தையும் மே தின உரையில் கூட ஜனாதிபதி விளக்கியிருக்கிறார். ஆனால், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதே இன்றைய கேள்வி. ஏனென்றால், புற நிலையில் ஏனைய சக்திகள் இனவாதத்தைப் பலமாக்கும் முயற்சிகளில் கடுமையாகச் செயற்பட்டு வருகின்றன.

பரவலான அளவில் மேற்கொள்ளப்படும் புத்திபூர்வமான கூட்டுச் செயற்பாடுகளின் மூலமே, நம்முன்னாலுள்ள சவால்களை முறியடித்து, புதிய களத்தை நோக்கி நகர முடியும். ஆனால், அதற்கு எதிரான இன நிலைப்பட்ட போக்குகளே வலுப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவுகளே புலி உறுப்பினர்களின் இந்தக் கைதுகளும். இது அடுத்த கட்டத்தில் இன்னும் விரிவடைந்து பலரையும் சுற்றி வளைக்கும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறோமா, அதைத்தான் வரவேற்கிறோமா?

பகை மனதை வளர்ப்பது இலகுவானது. அதை வெல்லதோ மிக மிகக் கடினமானது.

- See more at: http://www.tamilmirror.lk/171377/%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.auU7mFAO.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.