Jump to content

வாதுமை மரம் தான் என்னை வாழவைக்கும் தெய்வம்; வாதுமை பருப்புகளை சேகாித்து விற்பனை செய்யும் விஜேபால கூறுகிறார்


Recommended Posts

அண்மையில் காலை நேரத்தில் பொரளை ஆனந்த மாவத்தையின் நடை பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தோம். சித்திரை மாத கடும் வெயில் எங்களின் உடலை சுட, வீதியோரத்தின் நிழல் படிந்த மரத்தின் அடியில் நின்றோம்.

 

153DSCF2953.jpg

 

அதே மரத்தின் அடியில் பரட்டைத் தலையுடன் அழுக்கு படிந்த சட்டை, சாரம் உடுத்திய நிலையில் ஒருவர் வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்து அட்டகாசமாய் சிரிக்க நாங்களும் எங்களின் கேள்விக் கொக்கியை அவர் மீது ஏவி விட்டோம்.

 

எங்களுக்கு நிழல் தந்த அந்த மரம் ஒரு வாதுமை மரமாகும். அம் மரத்தை ஆங்கிலத்தில் Almond Tree எனவும் சிங்கள மொழியில் கொட்டங்கா எனவும் அழைப்பர். தமிழர்கள் இம் மரத்தின் விதை களுக்குள் உள்ள பருப்பை வாதாங் பருப்பு அல்லது வாதுமை பருப்பு என்பார்கள்.

 

இதன் சுவை முந்திரி மா பருப்பை போன்று சுவையாக இருக்கும். வாதுமை மா விதைகளை ஒரு கருங்கல்லின் மீது வைத்து மற்று மொரு சிறு கல்லால் உடைத்து பருப்பை வெளியே எடுத்து அம் மரத்து இலைகளினால் பொதி செய்து கொண்டு இருந்த அந்த நபர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க மறுத்தார். 

 

பின்னர் அவரே பேச்சைத் தொடர்ந்தார். “என்னைப் பார்க்கையில் உங்களுக்கு வித்தியாசமான மனிதனாகத் தெரிகிறது தானே. சிறிது நேரம் இந்த இடத்திலேயே நில்லுங்கள். என்னைத் தேடி வருபவர் களை நீங்கள் பார்க்கையில் பிரமிப்படைவீர்கள்.

 

அந்த அதிர்வில் இந்த வெயில் சூடும் உங்களை விட்டுப் பறந்து விடும். அப்போது தான் எனது பெறுமதி உங்களுக்குத் தெரிய வரும்” என்றார் அந்த 52 வயது நபர். அவரின் அவ் அதட்டல் வார்த்தைகள் எம்மை பல விதத்திலும் யோசிக்க வைத்தது.

 

அடி மனதில் விழுந்திருந்த கீறல்களை நீக்கிக் கொண்டு அவரின் பெயரைக் கேட்டோம்.

 

“எனது பெயர் விஜயபால. எனது சொந்த ஊர் எல்பிட்டிய...” என எமக்கு அவர் தன்னைப் பற்றி கூற ஆரம்பித்த வேளையில்,  சுமார் என்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஜப்பானிய ஜீப் வாகனத்தில் அவ் இடத்துக்கு வந்து இறங்கிய பெண்ணைக் கண்டதும் நாமும் திகைத்துப் போய் விட்டோம்.

 

153DSCF2947.jpg

 

நவநாகரீக உடையுடன் காணப்பட்ட அப் பெண், புத்தம் புது நூறு ரூபாய் நோட்டை நீட்ட, பதிலுக்கு இரண்டு வாதுமை பருப்பு பொதி களை இவர் வழங்க, அப் பெண் வாகனத்தில் ஏறி பறந்தார்.

 

அப் பெண் போனதும் வெறித்து வீராதி வீரனைப் போல் எம் மீது பார் வையைச் செலுத்தினார் விஜயபால.

 

அப் பெண்ணுக்கு வயது 35 தான் இருக்கும். அவர் உடலில் ஒரு அழகும் மெருகும் ஏறியிருந்தன.  அவர் அவ்விடத்துக்கு வாகனத்தில் வந்தறங்கி வாதுமை பருப்பை கொள்முதல் செய்து சென்ற காட்சியைக் கண்டதும் எமது உடம்பு சில்லிட்டு ரத்தமே உறைந்தது. அக்காட்சியை என்றும் மறக்க இயலாது.

 

“இப்போது என்ன சொல்கிறீர்கள்? எனது வியாபாரம் எவ்வாறு நடை பெறுகிறது. இதுதான் எனது தொழில். இங்கு ஏ.சி. இல்லை. மின் விளக்கு இல்லை. மின்காற்றாடி இல்லை. 
 

மேசையோ கதிரையோ இல்லை. நான் எழுந்து சென்று வியாபாரம் செய்யவும் மாட்டேன். என்னைத் தேடித்தான் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். சிரிக்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன்” என விஜயபால அட்டகாசமாய் கூறினார்.

 

அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிள்களில் விதவிதமான கார்களில் மற்றும் கால்நடையாகவும் என பலரும் தானாக வந்து வாதுமை பருப்பை விஜயபாலவிடம் கொள்முதல் செய்வதற்கு வந்து போனார்கள். 

 

இதைப் பார்த்ததும் எமக்கே வியப்பாக இருந்தது. அவரின் வார்த்தை களின் நம்பகத் தன்மையைக் கண்டு வியந்து போனோம்.

 

153DSCF2945.jpg

 

“விஜயபால ஐயா வாதுமை விதைகளை எப்படி சேகரிக் கிறீர்கள்” என மீளவும் அவர் மீது கேள்வி கொக்கியை போட்டோம்.

 

இந்த நிழல் தரும் மரத்திலிருந்து தானாக காய்ந்த விதைகள் கீழே விழும். அல்லது அந்த  இரும்பு கொக்கியின் மூலமாக காய்ந்த விதைகளை பறிப்பேன். எனக்கு இம் மரம் தான் தெய்வம். என்னை வாழ வைப்பதும் இம் மரமேயாகும்.

 

இம் மரமே எனக்கு மூன்று வேளையும் உண்ண உணவையும் கொடுக்கின்றது” என்றார். இப்போது அவரின் கண்கள் இரண்டும் காந்தக் கல்லாய் இருந்தன. 

 

“நீங்கள் திருமணம் செய்யவில்லையா?” எனக் கேட்டோம். “நான் இப்போது நிம்மதியாக இருப்பது உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா? என எம்மை வார்த்தைகளால் அதட்டினார்.

 

“நான் திருமணம் செய்யவில்லை. இந்த மரத்தைப் போன்று நானும் தனி மரம் தான். திருமணம் முடித்திருந்தால் பல தொல்லைகளுடன் நான் வாழ வேண்டி இருந்திருக்கும்.

 

153DSCF2949.jpg

 

திருமணம் முடித்தவர்கள் படும் அவஸ்த்தைகள் எனக்கும் தெரியா மல் இல்லை. திருமண வாழ்க்கையானது என்னைப் பொறுத்தவரை பெரிய நரகம்.

 

இப்போது தனிக்கட்டையாக இருந்தாலும் சுதந்திர மனிதன். கை நிறைய எனது முயற்சியின் பலன் விளைச்சலைத் தருகின்றது.

 

என்னை முதலில் அடையாளம் கண்டதும் என்னைப்பற்றி வித்தியாசமாக எண்ணியிருப்பீர்கள். வெளியே தான் அழுக்குடன் இருக்கின்றேன். உள்ளே இருக்கும் எனது மனசு சுத்தமானது.

 

நிலத்தை உடைத்துக் கொண்டு வெளிவரும் நீர் ஊற்றைப் போன்று எனது மனதும் சுத்தமானது. மனதில் அழுக்கு இல்லை” என ஒரு போடு போட்டார் விஜயபால. அவர் மனம் திறந்து பேசுவதைக் கண்டு நாமும் சிதறிப் போய் விட்டோம்.

 

உங்களுக்கு கிராமத்தில் சொத்துக்கள் உள்ளதா? என சற்று பயத்தோடு கேள்வியை எழுப்ப எனக்கு கிராமத்தில் வயல் நிலம் உள்ளது. அதை எனது அக்காவின் பார்வையில் விட்டுள்ளேன்.

 

எனது சேமிப்பையும் எனது அக்காவுக்கே தருகின்றேன். பணம், சொத்து எல்லாம் எனக்கெதற்கு. நான் தனி மரம். அதனால் தான் இந்த மரத்தை நம்பி வாழ்கின்றேன்.

 

இம் மரம் ஒரு தகப்பனை பாதுகாப்பது போன்று என்னை பாதுகாக் கின்றது. மூச்சுவிடும் மனிதனை நம்ப இயலுமா? கூட இருந்தே குழியைப் பறிப்பார்கள்.

 

வாழவே விடமாட்டார்கள். ஆனால் வாயே பேச இயலாத இம் மரத்தை நம்பி நான் வாழ்கின்றேன்” என்றார் விஜயபால.  இவரின் இத் தத்துவ வார்த்தைகள் எம்மையும் கொஞ்சம் சுடத்தான் செய்தது. 

 

“இவ் வியாபாரம் பற்றி சொல்ல இயலுமா?” என அடுத்த கேள்வியை  கேட்டதும் தான் மூச்சை இரைத்தவாறு எம்மை கூர்மை யாகப் பார்த்தார் விஜயபால.

 

“என்னப்பா காலையிலேயே நொய் நொய்யென கேள்விகளை கேட்கிறீர்கள். இப்போது பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.

 

எப்படி பெரிய பெரிய பணக்கார பெண்கள், ஆண்கள் வருகிறார்கள்? 

 

பெண்கள் வீட்டுச் சுவருக்கு பெயின்ட் பூசிய மாதிரி முகம் முழுவதும் மேக்கப் போட்டுக் கொண்டு உடல் முழுவதும் வாசனைத் திரவியங் களை தெளித்துக் கொண்டு சிற்பி செதுக்கிய சிலையாக என்னிடம் வாதுமைப் பருப்புக்களை கொள்முதல் செய்ய வருகிறார்கள். 

 

நான் நோனா, மாத்தையா என கூவுவதும் இல்லை. கெஞ்சுவதும் இல்லை. பணத்தை நீட்டுவார்கள். வாதுமைப் பருப்பு பார்சலை கொடுத்து விடுகிறேன்.

 

நீங்கள் கடை வீதிகளுக்கு சென்று பாருங்கள். கடைகளில் பத்து ரூபாய் லேடிஸ் கைக்குட்டையை விற்க எவ்வளவு பேசுகிறார்கள். நான் ஐந்து வருடமாக இந்த தொழிலை வெற்றிகரமாக செய்து வரு கின்றேன். பாடசாலை இடம்பெறும் நாட்களில் விற்பனை அதிக மாகும். மாணவ சமூகமும் எனது வாடிக்கையாளர்களே” என்றார் அவர்.

 

நீங்கள் தங்குவது எங்கே? என்றதும் இரவில் நடை பாதையில் தங்குவேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பேன். குளிப்பதற்கு குணசிங்கபுர வாளிக் கிணற்றுக்கு செல்வேன். இதுதான் என் வாழ்க்கை” என விஜயபால பதிலளித்தார். 

 

“பொழுது போக்கு ஏதும் உண்டா?” 

 

“ஏனையோரைப் போன்று பொழுதுபோக்கு எனக்கும் உண்டு. குதி ரைப் பந்தய விளையாட்டில் ஈடுபடுவேன். பெரிய செல்வந்தர்களும் மனைவிகளுக்கு தெரியாமல் குதிரை பந்தய விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

 

அவர்களும் எனது அருகிலேயே உட்கார்ந்து பந்தயத்தில் ஈடுபடு வார்கள். பணம் என்றதும் அந்தஸ்த்து, மானம், மரியாதை எல்லாம் ஓடி விடுகிறது. எப்படிப்பட்ட மாய உலகம் இது” என்றார் விஜயபால. 

 

153almond1.jpg

 

“இவ்வளவு எல்லாம் பேசும் உங்களுக்குள் பெண் ஆசை இல் லையா” எனவும் கேட்டோம் சற்று பயத்துடன். 

 

“பெண் ஆசை யாருக்கு இல்லை? பெண் ஆசை இல்லையென எவராவது சொல்வார்களேயானால் அவன் ஏதோ ஒரு வித நோயாளி யாவான்.

 

என்னிடம் அழகான பெண்கள் பருப்பு கொள்முதலுக்கு வரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எனது வாடிக்கையாளர்கள். நேர்மையாக அவர்களிடம் நான் நடந்து கொள்வேன். 

 

எதையும் ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்காகத் தான் இயற்கை யையும் அழகையும் படைத்த இறைவன் அதனை ரசிக்க மனிதனை படைத்துள்ளான்.

 

ரசிக்கத்தான் மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம். பெண் ஆசை இருக்கத் தான் வேண்டும். அது அளவுடன் இருப்பது நல்லது. அளவு மீறினால் அது வெறியாகும்.

 

அந்த வெறி பல தவறுகளை செய்யத் தூண்டும். இறுதியில் அவ் ஆசை நம்மை நாசப்படுத்திவிடும். பெண் இல்லா ஊரில் யாராலும் வாழ முடியுமா? 

 

இங்கு வரும் பெண்கள் என்னை ரசிக்கமாட்டார்கள். இது இரகசிய மல்ல. ஆனால் நான் இயற்கையை ரசிப்பது போன்று அனைத்தையும் ரசிப்பவன். நானும் மனிதன் தானே. எனக்கும் ஆசை இல்லாமல் இல்லை” என படார் என பதிலளித்தார் விஜயபால.

 

அவரின் வெளிப்படையான பேச்சும் வார்த்தைகளின் தெளிவும் மன உறுதியும் எம்மையும் மிரட்டின. எங்களுக்கும் விஜயபாலவுக்கும் இடையே இடம்பெற்ற வெளிப்படையான பேச்சை முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கினோம்.

 

அப்போது வாதுமை கொட்டைகளை கருங்கல்லில் வைத்து மற்றுமொரு கல்லால் தட்டும் சத்தம் எமது காதுகளில் சங்கீதமாய் விழுந்தது. 

 

(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா)

http://metronews.lk/feature.php?feature=153&display=0#sthash.QRnZmeqK.dpuf

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஆதவன். சின்ன வயதில் கொட்டங்காயை ஒரு முறையேனும் சாப்பிடாதவர்கள் இலங்கையில் குறைவாகத்தான் இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

விஜேபால குறிப்பிட்டு இருக்கும் குணசிங்க புர வாளிக் கிணற்றில் நானும் பல தடவை குளித்து இருக்கின்றேன். அருமையான அனுபவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  எங்களின் சின்ன வயது பாதம் பருப்பும் தான் இதுதான் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான புதிதில் பாலுக்குள் பாதாம் பருப்பை போட்டு ஊற வைத்து காலையில் எடுத்து சாப்பிட்டால் ஆண்மை குறையாமல் இருக்கும் என்பார்கள்.
 
தகவலுக்கு நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

  எங்களின் சின்ன வயது பாதம் பருப்பும் தான் இதுதான் ?

 

எனக்குத்தெரியும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/05/2016 at 8:56 PM, குமாரசாமி said:

எனக்குத்தெரியும் tw_blush:

ம்கும் நீங்களே பழம் திண்டு கொட்டை போட்ட ஆட்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கத்தாப்புக்காய்தானே? என்ன வாதுமை கோதுமை என்டுகொன்டு.நாங்கள் பள்ளிக்கூட வெள்ளைச் சேட்டு கனக்கத்த நாசமாக்கினது இந்த கத்தாப்புக்காயாலதான்.பசியில வெயிலுக்கால வீட்ட வரேக்க கத்தாப்புமரம் தேடி பழுத்த கத்தாப்புக்காய எடுத்து வெளித்தோல வடிவா கடிச்சு தின்டிட்டு உள் கொட்டய பெரிய ஒரு கல்லு கீழ வைக்கிறதுக்கும் அளவான ஒருகல்லு மேல குத்துறதுக்கும் தேடி எடுத்து குத்தி உளபருப்பு எடுத்து சாப்பிட்டால் என்ன சுவை.பச்சைக்காய் என்டால் குத்தி உள் பருப்பு மட்டும்தான்.குத்தேக்க சிலது அப்பிடியே சளிஞ்சுபோம் அதுக்குள்ள கின்டி கிளறி பருப்பெடுத்து சாப்பிட்டிட்டு வைரவர் கொயிலடியால மத்தியானத்தில போனால் பேய்பிடிக்கும் என்டதை நம்பி மற்ற ஒழுங்கையால சுத்தி சின்னத்தம்பீன்ர கடிநாய்க்கு பயந்து அந்தாள் வீட்டுக்கு கிட்ட வர சத்தம் கேட்டிடும் என்டு செருப்பை கழட்டி கையில புடிச்சுகொன்டு சுடுபுழுதிக்க கால மாத்திமாத்தி வச்சு வந்து மூலை திரும்பினோன்ன செருப்ப போட்டுக்கொன்டு ஓடிவந்து வீட்ட காச்சட்டய கழட்ட நாளைக்கு பள்ளிக்குடத்தில இன்ரேவலுக்கு குத்தி தின்னுவம் என்டு எடுத்து வச்ச கத்தாப்புக்காய் மிச்சத்துணியில ரெயிலர் மூட்டிதச்ச உள்பக்க வெள்ள பொக்கற்று துணி முழுக்க கயர்பிரன்டுபோய்க் கிடக்கும். உஜால நீலம் நீலக்கலர் பிளாஸ்டிக் போத்திலுக்க வந்திருக்கும்.அதில ஊறவச்சு பின்னேரம் கிணத்தடியில கல்லில வச்சு அம்மா திட்டி திட்டி தப்பி தோச்சு தருவா. நூறுகத்தாப்புக்கா தினடமாரி இருக்கு ஞாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.