Jump to content

வாதுமை மரம் தான் என்னை வாழவைக்கும் தெய்வம்; வாதுமை பருப்புகளை சேகாித்து விற்பனை செய்யும் விஜேபால கூறுகிறார்


Recommended Posts

அண்மையில் காலை நேரத்தில் பொரளை ஆனந்த மாவத்தையின் நடை பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தோம். சித்திரை மாத கடும் வெயில் எங்களின் உடலை சுட, வீதியோரத்தின் நிழல் படிந்த மரத்தின் அடியில் நின்றோம்.

 

153DSCF2953.jpg

 

அதே மரத்தின் அடியில் பரட்டைத் தலையுடன் அழுக்கு படிந்த சட்டை, சாரம் உடுத்திய நிலையில் ஒருவர் வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்து அட்டகாசமாய் சிரிக்க நாங்களும் எங்களின் கேள்விக் கொக்கியை அவர் மீது ஏவி விட்டோம்.

 

எங்களுக்கு நிழல் தந்த அந்த மரம் ஒரு வாதுமை மரமாகும். அம் மரத்தை ஆங்கிலத்தில் Almond Tree எனவும் சிங்கள மொழியில் கொட்டங்கா எனவும் அழைப்பர். தமிழர்கள் இம் மரத்தின் விதை களுக்குள் உள்ள பருப்பை வாதாங் பருப்பு அல்லது வாதுமை பருப்பு என்பார்கள்.

 

இதன் சுவை முந்திரி மா பருப்பை போன்று சுவையாக இருக்கும். வாதுமை மா விதைகளை ஒரு கருங்கல்லின் மீது வைத்து மற்று மொரு சிறு கல்லால் உடைத்து பருப்பை வெளியே எடுத்து அம் மரத்து இலைகளினால் பொதி செய்து கொண்டு இருந்த அந்த நபர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க மறுத்தார். 

 

பின்னர் அவரே பேச்சைத் தொடர்ந்தார். “என்னைப் பார்க்கையில் உங்களுக்கு வித்தியாசமான மனிதனாகத் தெரிகிறது தானே. சிறிது நேரம் இந்த இடத்திலேயே நில்லுங்கள். என்னைத் தேடி வருபவர் களை நீங்கள் பார்க்கையில் பிரமிப்படைவீர்கள்.

 

அந்த அதிர்வில் இந்த வெயில் சூடும் உங்களை விட்டுப் பறந்து விடும். அப்போது தான் எனது பெறுமதி உங்களுக்குத் தெரிய வரும்” என்றார் அந்த 52 வயது நபர். அவரின் அவ் அதட்டல் வார்த்தைகள் எம்மை பல விதத்திலும் யோசிக்க வைத்தது.

 

அடி மனதில் விழுந்திருந்த கீறல்களை நீக்கிக் கொண்டு அவரின் பெயரைக் கேட்டோம்.

 

“எனது பெயர் விஜயபால. எனது சொந்த ஊர் எல்பிட்டிய...” என எமக்கு அவர் தன்னைப் பற்றி கூற ஆரம்பித்த வேளையில்,  சுமார் என்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஜப்பானிய ஜீப் வாகனத்தில் அவ் இடத்துக்கு வந்து இறங்கிய பெண்ணைக் கண்டதும் நாமும் திகைத்துப் போய் விட்டோம்.

 

153DSCF2947.jpg

 

நவநாகரீக உடையுடன் காணப்பட்ட அப் பெண், புத்தம் புது நூறு ரூபாய் நோட்டை நீட்ட, பதிலுக்கு இரண்டு வாதுமை பருப்பு பொதி களை இவர் வழங்க, அப் பெண் வாகனத்தில் ஏறி பறந்தார்.

 

அப் பெண் போனதும் வெறித்து வீராதி வீரனைப் போல் எம் மீது பார் வையைச் செலுத்தினார் விஜயபால.

 

அப் பெண்ணுக்கு வயது 35 தான் இருக்கும். அவர் உடலில் ஒரு அழகும் மெருகும் ஏறியிருந்தன.  அவர் அவ்விடத்துக்கு வாகனத்தில் வந்தறங்கி வாதுமை பருப்பை கொள்முதல் செய்து சென்ற காட்சியைக் கண்டதும் எமது உடம்பு சில்லிட்டு ரத்தமே உறைந்தது. அக்காட்சியை என்றும் மறக்க இயலாது.

 

“இப்போது என்ன சொல்கிறீர்கள்? எனது வியாபாரம் எவ்வாறு நடை பெறுகிறது. இதுதான் எனது தொழில். இங்கு ஏ.சி. இல்லை. மின் விளக்கு இல்லை. மின்காற்றாடி இல்லை. 
 

மேசையோ கதிரையோ இல்லை. நான் எழுந்து சென்று வியாபாரம் செய்யவும் மாட்டேன். என்னைத் தேடித்தான் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். சிரிக்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன்” என விஜயபால அட்டகாசமாய் கூறினார்.

 

அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிள்களில் விதவிதமான கார்களில் மற்றும் கால்நடையாகவும் என பலரும் தானாக வந்து வாதுமை பருப்பை விஜயபாலவிடம் கொள்முதல் செய்வதற்கு வந்து போனார்கள். 

 

இதைப் பார்த்ததும் எமக்கே வியப்பாக இருந்தது. அவரின் வார்த்தை களின் நம்பகத் தன்மையைக் கண்டு வியந்து போனோம்.

 

153DSCF2945.jpg

 

“விஜயபால ஐயா வாதுமை விதைகளை எப்படி சேகரிக் கிறீர்கள்” என மீளவும் அவர் மீது கேள்வி கொக்கியை போட்டோம்.

 

இந்த நிழல் தரும் மரத்திலிருந்து தானாக காய்ந்த விதைகள் கீழே விழும். அல்லது அந்த  இரும்பு கொக்கியின் மூலமாக காய்ந்த விதைகளை பறிப்பேன். எனக்கு இம் மரம் தான் தெய்வம். என்னை வாழ வைப்பதும் இம் மரமேயாகும்.

 

இம் மரமே எனக்கு மூன்று வேளையும் உண்ண உணவையும் கொடுக்கின்றது” என்றார். இப்போது அவரின் கண்கள் இரண்டும் காந்தக் கல்லாய் இருந்தன. 

 

“நீங்கள் திருமணம் செய்யவில்லையா?” எனக் கேட்டோம். “நான் இப்போது நிம்மதியாக இருப்பது உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா? என எம்மை வார்த்தைகளால் அதட்டினார்.

 

“நான் திருமணம் செய்யவில்லை. இந்த மரத்தைப் போன்று நானும் தனி மரம் தான். திருமணம் முடித்திருந்தால் பல தொல்லைகளுடன் நான் வாழ வேண்டி இருந்திருக்கும்.

 

153DSCF2949.jpg

 

திருமணம் முடித்தவர்கள் படும் அவஸ்த்தைகள் எனக்கும் தெரியா மல் இல்லை. திருமண வாழ்க்கையானது என்னைப் பொறுத்தவரை பெரிய நரகம்.

 

இப்போது தனிக்கட்டையாக இருந்தாலும் சுதந்திர மனிதன். கை நிறைய எனது முயற்சியின் பலன் விளைச்சலைத் தருகின்றது.

 

என்னை முதலில் அடையாளம் கண்டதும் என்னைப்பற்றி வித்தியாசமாக எண்ணியிருப்பீர்கள். வெளியே தான் அழுக்குடன் இருக்கின்றேன். உள்ளே இருக்கும் எனது மனசு சுத்தமானது.

 

நிலத்தை உடைத்துக் கொண்டு வெளிவரும் நீர் ஊற்றைப் போன்று எனது மனதும் சுத்தமானது. மனதில் அழுக்கு இல்லை” என ஒரு போடு போட்டார் விஜயபால. அவர் மனம் திறந்து பேசுவதைக் கண்டு நாமும் சிதறிப் போய் விட்டோம்.

 

உங்களுக்கு கிராமத்தில் சொத்துக்கள் உள்ளதா? என சற்று பயத்தோடு கேள்வியை எழுப்ப எனக்கு கிராமத்தில் வயல் நிலம் உள்ளது. அதை எனது அக்காவின் பார்வையில் விட்டுள்ளேன்.

 

எனது சேமிப்பையும் எனது அக்காவுக்கே தருகின்றேன். பணம், சொத்து எல்லாம் எனக்கெதற்கு. நான் தனி மரம். அதனால் தான் இந்த மரத்தை நம்பி வாழ்கின்றேன்.

 

இம் மரம் ஒரு தகப்பனை பாதுகாப்பது போன்று என்னை பாதுகாக் கின்றது. மூச்சுவிடும் மனிதனை நம்ப இயலுமா? கூட இருந்தே குழியைப் பறிப்பார்கள்.

 

வாழவே விடமாட்டார்கள். ஆனால் வாயே பேச இயலாத இம் மரத்தை நம்பி நான் வாழ்கின்றேன்” என்றார் விஜயபால.  இவரின் இத் தத்துவ வார்த்தைகள் எம்மையும் கொஞ்சம் சுடத்தான் செய்தது. 

 

“இவ் வியாபாரம் பற்றி சொல்ல இயலுமா?” என அடுத்த கேள்வியை  கேட்டதும் தான் மூச்சை இரைத்தவாறு எம்மை கூர்மை யாகப் பார்த்தார் விஜயபால.

 

“என்னப்பா காலையிலேயே நொய் நொய்யென கேள்விகளை கேட்கிறீர்கள். இப்போது பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.

 

எப்படி பெரிய பெரிய பணக்கார பெண்கள், ஆண்கள் வருகிறார்கள்? 

 

பெண்கள் வீட்டுச் சுவருக்கு பெயின்ட் பூசிய மாதிரி முகம் முழுவதும் மேக்கப் போட்டுக் கொண்டு உடல் முழுவதும் வாசனைத் திரவியங் களை தெளித்துக் கொண்டு சிற்பி செதுக்கிய சிலையாக என்னிடம் வாதுமைப் பருப்புக்களை கொள்முதல் செய்ய வருகிறார்கள். 

 

நான் நோனா, மாத்தையா என கூவுவதும் இல்லை. கெஞ்சுவதும் இல்லை. பணத்தை நீட்டுவார்கள். வாதுமைப் பருப்பு பார்சலை கொடுத்து விடுகிறேன்.

 

நீங்கள் கடை வீதிகளுக்கு சென்று பாருங்கள். கடைகளில் பத்து ரூபாய் லேடிஸ் கைக்குட்டையை விற்க எவ்வளவு பேசுகிறார்கள். நான் ஐந்து வருடமாக இந்த தொழிலை வெற்றிகரமாக செய்து வரு கின்றேன். பாடசாலை இடம்பெறும் நாட்களில் விற்பனை அதிக மாகும். மாணவ சமூகமும் எனது வாடிக்கையாளர்களே” என்றார் அவர்.

 

நீங்கள் தங்குவது எங்கே? என்றதும் இரவில் நடை பாதையில் தங்குவேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பேன். குளிப்பதற்கு குணசிங்கபுர வாளிக் கிணற்றுக்கு செல்வேன். இதுதான் என் வாழ்க்கை” என விஜயபால பதிலளித்தார். 

 

“பொழுது போக்கு ஏதும் உண்டா?” 

 

“ஏனையோரைப் போன்று பொழுதுபோக்கு எனக்கும் உண்டு. குதி ரைப் பந்தய விளையாட்டில் ஈடுபடுவேன். பெரிய செல்வந்தர்களும் மனைவிகளுக்கு தெரியாமல் குதிரை பந்தய விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

 

அவர்களும் எனது அருகிலேயே உட்கார்ந்து பந்தயத்தில் ஈடுபடு வார்கள். பணம் என்றதும் அந்தஸ்த்து, மானம், மரியாதை எல்லாம் ஓடி விடுகிறது. எப்படிப்பட்ட மாய உலகம் இது” என்றார் விஜயபால. 

 

153almond1.jpg

 

“இவ்வளவு எல்லாம் பேசும் உங்களுக்குள் பெண் ஆசை இல் லையா” எனவும் கேட்டோம் சற்று பயத்துடன். 

 

“பெண் ஆசை யாருக்கு இல்லை? பெண் ஆசை இல்லையென எவராவது சொல்வார்களேயானால் அவன் ஏதோ ஒரு வித நோயாளி யாவான்.

 

என்னிடம் அழகான பெண்கள் பருப்பு கொள்முதலுக்கு வரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எனது வாடிக்கையாளர்கள். நேர்மையாக அவர்களிடம் நான் நடந்து கொள்வேன். 

 

எதையும் ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்காகத் தான் இயற்கை யையும் அழகையும் படைத்த இறைவன் அதனை ரசிக்க மனிதனை படைத்துள்ளான்.

 

ரசிக்கத்தான் மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம். பெண் ஆசை இருக்கத் தான் வேண்டும். அது அளவுடன் இருப்பது நல்லது. அளவு மீறினால் அது வெறியாகும்.

 

அந்த வெறி பல தவறுகளை செய்யத் தூண்டும். இறுதியில் அவ் ஆசை நம்மை நாசப்படுத்திவிடும். பெண் இல்லா ஊரில் யாராலும் வாழ முடியுமா? 

 

இங்கு வரும் பெண்கள் என்னை ரசிக்கமாட்டார்கள். இது இரகசிய மல்ல. ஆனால் நான் இயற்கையை ரசிப்பது போன்று அனைத்தையும் ரசிப்பவன். நானும் மனிதன் தானே. எனக்கும் ஆசை இல்லாமல் இல்லை” என படார் என பதிலளித்தார் விஜயபால.

 

அவரின் வெளிப்படையான பேச்சும் வார்த்தைகளின் தெளிவும் மன உறுதியும் எம்மையும் மிரட்டின. எங்களுக்கும் விஜயபாலவுக்கும் இடையே இடம்பெற்ற வெளிப்படையான பேச்சை முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கினோம்.

 

அப்போது வாதுமை கொட்டைகளை கருங்கல்லில் வைத்து மற்றுமொரு கல்லால் தட்டும் சத்தம் எமது காதுகளில் சங்கீதமாய் விழுந்தது. 

 

(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா)

http://metronews.lk/feature.php?feature=153&display=0#sthash.QRnZmeqK.dpuf

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஆதவன். சின்ன வயதில் கொட்டங்காயை ஒரு முறையேனும் சாப்பிடாதவர்கள் இலங்கையில் குறைவாகத்தான் இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

விஜேபால குறிப்பிட்டு இருக்கும் குணசிங்க புர வாளிக் கிணற்றில் நானும் பல தடவை குளித்து இருக்கின்றேன். அருமையான அனுபவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  எங்களின் சின்ன வயது பாதம் பருப்பும் தான் இதுதான் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான புதிதில் பாலுக்குள் பாதாம் பருப்பை போட்டு ஊற வைத்து காலையில் எடுத்து சாப்பிட்டால் ஆண்மை குறையாமல் இருக்கும் என்பார்கள்.
 
தகவலுக்கு நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

  எங்களின் சின்ன வயது பாதம் பருப்பும் தான் இதுதான் ?

 

எனக்குத்தெரியும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/05/2016 at 8:56 PM, குமாரசாமி said:

எனக்குத்தெரியும் tw_blush:

ம்கும் நீங்களே பழம் திண்டு கொட்டை போட்ட ஆட்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கத்தாப்புக்காய்தானே? என்ன வாதுமை கோதுமை என்டுகொன்டு.நாங்கள் பள்ளிக்கூட வெள்ளைச் சேட்டு கனக்கத்த நாசமாக்கினது இந்த கத்தாப்புக்காயாலதான்.பசியில வெயிலுக்கால வீட்ட வரேக்க கத்தாப்புமரம் தேடி பழுத்த கத்தாப்புக்காய எடுத்து வெளித்தோல வடிவா கடிச்சு தின்டிட்டு உள் கொட்டய பெரிய ஒரு கல்லு கீழ வைக்கிறதுக்கும் அளவான ஒருகல்லு மேல குத்துறதுக்கும் தேடி எடுத்து குத்தி உளபருப்பு எடுத்து சாப்பிட்டால் என்ன சுவை.பச்சைக்காய் என்டால் குத்தி உள் பருப்பு மட்டும்தான்.குத்தேக்க சிலது அப்பிடியே சளிஞ்சுபோம் அதுக்குள்ள கின்டி கிளறி பருப்பெடுத்து சாப்பிட்டிட்டு வைரவர் கொயிலடியால மத்தியானத்தில போனால் பேய்பிடிக்கும் என்டதை நம்பி மற்ற ஒழுங்கையால சுத்தி சின்னத்தம்பீன்ர கடிநாய்க்கு பயந்து அந்தாள் வீட்டுக்கு கிட்ட வர சத்தம் கேட்டிடும் என்டு செருப்பை கழட்டி கையில புடிச்சுகொன்டு சுடுபுழுதிக்க கால மாத்திமாத்தி வச்சு வந்து மூலை திரும்பினோன்ன செருப்ப போட்டுக்கொன்டு ஓடிவந்து வீட்ட காச்சட்டய கழட்ட நாளைக்கு பள்ளிக்குடத்தில இன்ரேவலுக்கு குத்தி தின்னுவம் என்டு எடுத்து வச்ச கத்தாப்புக்காய் மிச்சத்துணியில ரெயிலர் மூட்டிதச்ச உள்பக்க வெள்ள பொக்கற்று துணி முழுக்க கயர்பிரன்டுபோய்க் கிடக்கும். உஜால நீலம் நீலக்கலர் பிளாஸ்டிக் போத்திலுக்க வந்திருக்கும்.அதில ஊறவச்சு பின்னேரம் கிணத்தடியில கல்லில வச்சு அம்மா திட்டி திட்டி தப்பி தோச்சு தருவா. நூறுகத்தாப்புக்கா தினடமாரி இருக்கு ஞாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.