Jump to content

கோதபாய ராஜபக்ஸ மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை? – சரத் பொன்சேகா


Recommended Posts

கோதபாய ராஜபக்ஸ மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை? – சரத்

பொன்சேகா

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன் போது முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

'போர் இடம்பெறாத காலத்தில் காவல்துறையினரின் பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்ளத் தேவையில்லை, எனவே மஹிந்த ராஜபக்ச என்ற நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரின்; பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு அதில் திருப்தி அடைய வேண்டும்.'

'இராணுவத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மஹிந்தவின் அருகாமையில் வைத்துக் கொண்டிருக்கும் கெப்டன் நெவில் போன்றவர்கள் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் பயிற்சி பெற்றுக்கொள்ளவில்லை.'

'கோதபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் சர்ச்சை காணப்படுகின்றது. பயங்கரவாதிகள் ஒருபோதும் 25 மீற்றர் தொலைவில் வைத்து குண்டை வெடிக்கச் செய்திருக்க மாட்டார்கள்.'

'குண்டு துளைக்காத வாகனம் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த பயங்கரவாதிகள் முட்டாள்கள் அல்ல.'

'இந்த குண்டுத் தாக்குதல் நிச்சயமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் தாமகேவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.'

'போர் இடம்பெற்ற காலத்திலும் மஹிந்த ராஜபக்சவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை, அதனை புலனாய்வுத் தகவல்களின் மூலம் தெரிந்து கொண்டோம்.'

'மஹிந்த ராஜபக்சவிற்கு இருந்த அச்சுறுத்தல் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பயங்கரவாதியுடன் இணைந்து தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தமையேயாகும்.'

'போரை செய்த இராணுவத் தளபதிக்கு 15 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் இருக்க முடியுமாயின் போர் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதற்கு எவ்வித சிக்கல்களும் இருக்காது.'

'கூட்டு எதிர்க்கட்சியினர் குரங்குகளைப் போன்று கத்துகின்றனர். உண்மைகள் எதுவெனத் தெரிந்து கொள்ளாது இவ்வாறு கூச்சலிடுகின்றனர்' என சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131776/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரில் பார்த்த பல அறிவுஜீவிகள் இங்கு யாழ் களத்தில் இருக்கிறார்கள் 
இவர் இப்படி சொல்கிறார் ???
யாழ் களத்தில் இருந்து இருவரை அங்கு அனுப்ப வேண்டும்போல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

நேரில் பார்த்த பல அறிவுஜீவிகள் இங்கு யாழ் களத்தில் இருக்கிறார்கள் 
இவர் இப்படி சொல்கிறார் ???
யாழ் களத்தில் இருந்து இருவரை அங்கு அனுப்ப வேண்டும்போல் இருக்கிறது.

எங்கடை வேலை சங்கு ஊதுறது மட்டும்தான். மற்றும்படி எங்களுக்கு அடிஅத்திவாரம் தெரியோணுமெண்ட அவசியமில்லை

Link to comment
Share on other sites

சரத் சொல்வதை நம்பும் அளவிற்கு வந்திருக்கினம் இப்ப .:cool:

இதை சாட்டி இனி ஒண்டுமே நாங்கள் செய்யவில்லை ஆனால் உலகம் பிழையாக விளங்கிவிட்டது உங்கட சங்கை ஊதுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருப்பதற்கு காரணம் 
சொல்வதை செய்வது 
செய்வதை சொல்வது 

உலக பத்திரிகை வந்தாலும் அதுதான் 
ராஜீவை கொன்றீர்களா ?
அது ஒரு துன்பியல் சம்பவம்.

சுவிசில் ஒருவரின் அண்ணரை புலிகள் 1986இல் சுட்டிருந்தார்கள் 
இவர் ஒரே புலி எதிர்ப்பு.
கிட்டு வந்து கூட்டம் வைத்தார் நான் இவரை கூட்டி சென்றேன் 
நான் சொன்னேன் வருவதை நான் பார்க்கிறேன் நீ எழுந்து கேள் ஏன் சுட்டீர்கள் என்று?

கிட்டுவின் பதிலில் நான் அதிர்ந்தே போனேன்.
முதாலவது வார்த்தையே .....
நான்தான் அவரை சுட்டேன்.
இன்ன இன்ன காரணங்களால் தான் சுட்டேன் 
நானே நேரடியாக சென்று அவருக்கு இது பற்றி மன்னிப்பு கொடுத்து 
எச்சரிக்கை செய்தேன். உங்கள் சகோதரி அப்போது உடன் இருந்தார் நீங்கள் அவரிடம் கேளுங்கள் என்றார்.
பின்பு கூட்டம்முடிய உங்களிடம் நான் பேச வேண்டும் என்றார்.

நாங்கள் இருவரும் நின்றோம் 
இவரிடம் மன்னிப்பு கேட்டார் உங்கள் சகோதரர் என்ற முறையில் மனவருத்தம் 
ஆனால் அவருடைய செயல்கள் மன்னிப்பை தாண்டி சென்றுவிட்டது 
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றார்.

சரத் பொன்சேக்காவின் வார்த்தைகளில் யார் வரலாறு படிக்கிறவர்கள் என்பது 
பலருக்கு மறந்து போச்சு.
தமிழினியின் பெயரால் வந்த புத்தகத்தில் 6 வருடம் கழித்து முள்ளி வாய்க்காலை படித்த கூட்டம் 
எமக்கு வகுப்பெடுக்க பார்க்கிறது.
அந்த அளவில் மதி மத்தமம் கொண்டிருக்கின்றது. 

புலிகள்  சென்றது தார்மீக பாதை 
அதில் ஒழித்து செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை.
அதனால்தான் வெட்டை வெளியில் நடந்து சென்றார்கள்.

மனைவியை அடுத்தவினிடம் கூட்டி செல்லும் கேவலம் கெட்டவர்கள்தான் 
எதிரியின் முக மூடிக்குள் ஒழிந்து செல்கிறார்கள்.

புலிகளின் வரலாறு என்பது மிகவும் எளிதானது 
சென்றார்கள் 
வென்றார்கள் 
வந்தார்கள் அல்லது இறந்தார்கள் 

இந்த வெளிப்படை அரிப்பு எடுப்பதால்தான் 
இன்று நேற்றல்ல பல காலமாய் பலர் பேய் கதை பூத கதைகளுடன் 
கிளம்பி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.