Jump to content

பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது லெய்செஸ்டர் சிற்றி


Recommended Posts

பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது லெய்செஸ்டர் சிற்றி
 
 

article_1462268015-LeileagchaLEAD.jpgஇங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் போட்டிகளில், டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை (02) இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி கைப்பற்றியுள்ளது.

கடந்த பருவகாலத்தில் பிறீமியர் லீக்கிலிருந்து ஏறத்தாள வெளியேறும் நிலையிலிருந்த லெய்செஸ்டர் சிற்றி, இந்தப் பருவகாலத்தின் ஆரம்பத்தில், பிறீமியர் லீக் பட்டத்தை அவ்வணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு, 5,000-1 என்ற நிலையிலிருந்து தற்போது பிறீமியர் லீக் பட்டத்தை வென்றமையானது  விளையாட்டு வரலாற்றின் சிறந்ததோறு தருணமாகக் கருதப்படுகிறது.

இந்தப் பருவகாலத்தில் மூன்று பிறீமியர் லீக் போட்டிகளில் மாத்திரமே லெய்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்ததுடன், பிறீமியர் லீக் பட்டத்துக்கான நெருங்கிய போட்டியாளர்களான டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், ஆர்சனல், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் சிற்றி, கடந்த பருவகால சம்பியன்களான செல்சி ஆகியவற்றை விட தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது.

தாய்லாந்தின் கோடீஸ்வரரான விஷாய் ஸ்ரீவத்தனபிரபாஹ்வால் ஆளப்படுகின்ற லெய்செஸ்டர் சிற்றிக்கு இதுவே முதலாவது பிறீமியர் லீக் பட்டம் என்பதோடு முதற்தடவையாக ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே சம்பியன்ஸ்லீக்கின் குழுநிலைப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளது.  

பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி வெல்வதற்கு, 2012ஆம் ஆண்டு ஒரு மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்களவீரரான ஜேமி வர்டியும் 2014ஆம் ஜனவரி மாதம், 400,000 ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட றியாட் மஹ்றேஸூமே முக்கியமான காரணமாக விளங்குகின்றனர்.

இதேவேளை முக்கியமான சுவாரஷ்யமான தரவாக, லெய்செஸ்டர் சிற்றி அணியின் வழமையான விளையாடும் பதினொருவர் குழாமுக்காக 22 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களே செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது, தமது வழமையான விளையாடும் பதினொருவர் அணிக்காக அதிகம் செலவிடுகின்ற மன்செஸ்டர் சிற்றியின் தொகையினது பத்திலொரு மடங்கினை விட குறைவானதாகும். தனது வழமையான விளையாடும் பதினொருவர் அணிக்காக மன்செஸ்டர் சிற்றி 281 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களை செலவழிக்கின்றது. மேலுமொரு சுவாரஷ்யமான தரவாக, லெய்செஸ்டர் சிற்றி அணியின் சாதனை ரீதியிலான ஒப்பந்தமாக 8 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட லியனார்டோ உல்லோவா, மாற்று வீரராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது லெய்செஸ்டர் சிற்றி பிறீமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளமையால், பிறீமியர் லீக் பரிசுப் பணம், சம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்பதற்கான பணம், அனுமதிச்சீட்டு, விருந்தோம்பல் என்பதன் மூலம் போட்டி நாளில் கிடைக்கவுள்ள அதிகரிக்கப்பட்ட வருமானம் உள்ளடங்கலாக ஏறத்தாள 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/171323#sthash.AX7Q64U5.dpuf
Link to comment
Share on other sites

லெய்செஸ்டருக்கு குவியும் வாழ்த்துகள்
 
03-05-2016 03:57 PM
Comments - 0       Views - 7

article_1462271278-LEAD-1Kuvivaaz.jpgஇங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி அணிக்கு பலரிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்துள்ளன.

லெய்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன், இங்கிலாந்து அணியின் முன்னாள் முன்னாள் முன்களவீரரான கரி லினேகர், தனது சொந்த நகர அணியின் அடைவை, தனது வாழ்நாளின் மிகப்பெரிய விளையாட்டு அதிர்ச்சி என வர்ணித்துள்ளார்.

இதேவேளை, கருத்து தெரிவித்த, கால்பந்தாட்ட உலகை நிர்வகிக்கும் பீபாவின் தலைவரான ஜியானி இன்பான்டினோ, லெய்செஸ்டரின் அழகான கதை வியப்பு மிகுந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரோன், தனது வாழ்த்துகளில், இது, அசாதாரணமானது, முற்றிலும் உரித்தான பிறீமியர் லீக் பட்டம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டுவீட் செய்துள்ள உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லியனல் மெஸ்ஸி, தாங்கள் எல்லாரும் கால்பந்தாட்டத்தை விரும்ப இதுதான் காரணம், வாழ்த்துகள் என டுவீட் செய்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/171327/%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-#sthash.Dliq2i04.dpuf
Link to comment
Share on other sites

நான் அடுத்த சனிக்கிழமை லேஸ்செஸ்டர் எதிர் எவேர்டான் மாட்ச் ஆவலுடன் பார்க்க இருக்க அதற்கிடையில் நேற்று செல்சி ஸ்பேர்ஸசை டிரா ஆக்கி சனிக்கிழமைக்கு முதலே லெஸ்செஸ்டரை சம்பியன் ஆக்கிவிட்டார்கள் .

வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.