Jump to content

கருப்பு ஆடு


Recommended Posts

italo.jpg

கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ

தமிழில் ராஜ் கணேசன்.

 

திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது.

ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யாருக்கும் எந்த இழப்பும் குழப்பமும் இல்லை. தங்கள் வீட்டில் ஏதேனும் களவு போனால் அடுத்த வீட்டிலிருந்து திருடிக்கொள்ளலாம் என்கிற மன நிறைவோடு வாழ்ந்து வந்தனர்.

இப்படிப்பட்ட நாட்டில் வியாபாரம் எப்படி நடக்குமெனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வாங்குபவர் விற்பவர் இருவருமே மாறி மாறி ஏமாற்றிக் கொண்டார்கள். அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. குடிமக்களிடம் அரசு கொள்ளையடித்தது. மக்களும் பதிலுக்கு அரசாங்கத்தைத் தங்களால் முடிந்த அளவு ஏமாற்றினர். அந்த நாட்டில் ஏழை பணக்காரன் போன்ற பிரிவுகள் எல்லாம் கிடையாது. அனைவரும் திருடர்களே.

ஒரு நாள் அந்த நாட்டுக்கு எங்கிருந்தோ நேர்மையான மனிதன் ஒருவன் வந்து குடியேறினான். தினமும் இரவுகளில் அவன் திருடப் போகாமல் வீட்டிலேயே அமர்ந்து புகைபிடித்துக் கொண்டு புத்தகங்கள் படித்தான். அவன் வீட்டுக்கு திருட வந்தவர்கள் வீட்டில் ஆள் இருப்பதைக் கவனித்துவிட்டுத் திருடாமல் சென்றுவிட்டனர். இப்படியே சில நாட்கள் போனது. இவன் ஒருவனால் தினமும் யாரேனும் ஒருவருக்குத் திருட வாய்ப்பில்லாமல் போனது.

பொறுத்து பொறுத்துப் பார்த்த மக்கள் அவனிடம் ஒரு நாள் சென்று நிலைமையை எடுத்துக் கூறினர். அவனால் தினமும் ஒரு குடும்பம் திருட முடியாமல் பட்டினியால் வாடுவதை விளக்கினர். தன்னால் ஒரு குடும்பம் பட்டினியால் வாடுவதைக் கேள்விப்பட்டு அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயம் மற்றவர்கள் போலத் திருடவும் அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

தினமும் இரவு வேளையில் வீட்டில் இருந்தால் தானே பிரச்சனை? அதற்குப் பதிலாக அருகில் உள்ள ஆற்றுப்பாலத்திற்குச் சென்று பெருகி ஓடும் ஆற்று நீரை வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென முடிவு செய்தான். இதன் மூலம் அவன் வீட்டில் திருட வருவோருக்கு தடங்கல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான். இப்படி அவன் தினமும் இரவு முழுக்கப் பாலத்தில் நேரம் கடத்திவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் பல பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் தன்னிடமுள்ள அனைத்து செல்வங்களையும் இழந்தான்.

ஆனால் இப்போது பிரச்சனை அதுவல்ல. இவன் ஒருவனால் ஊரில் சமநிலை குலைந்து போனது. எப்படி என்று கேட்கறீர்களா? தினமும் இவன் நேர்மையாகத் திருடாமல் பாலத்திற்குப் போனதால், இவன் திருட வேண்டிய யாரோ ஒருவரது வீடு திருடப்படாமல் அப்படியே இருந்தது. அதே சமயம் காலியான அவன் வீட்டை திருட வந்து தினமும் சிலர் ஏமாந்து போயினர். திருடப்படாமல் விடப்பட்டவர்கள் நாளடைவில் பணக்காரர்கள் ஆயினர்.

தினமும் இவன் வீட்டுக்கு மாறி மாறி திருட வந்து ஏமாந்து போனவர்கள் ஏழைகள் ஆயினர். பணக்காரர்கள் காசு சேர்ந்ததும் அந்த நேர்மையானவன் போல அருகில் உள்ள பாலத்திற்குச் சென்று சுழித்தோடும் ஆறினை ரசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அப்படித் தினமும் பாலத்திற்குச் செல்வதில் அவர்களுக்கு ஒரு சிறு பிரச்சனை இருந்தது. நீரை ரசிக்கும் இரவு வேளைகளில் அவர்களால் திருட முடியாதே என்பது தான் காரணம். என்ன தான் செல்வம் சேர்ந்தாலும் அவர்கள் இன்னும் திருடர்கள் தானே? ஆதலால் அவர்கள் ஒரு யோசனை செய்தனர்.

தாங்கள் பாலத்திற்குச் செல்லும் இரவுகளில் தங்களுக்குப் பதிலாகத் திருட செல்வதற்குச் சில ஏழைகளை வேலைக்கு அமர்த்தினர். அந்த ஏழைகள் திருடி வருவதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டது. சிலருக்கு நிலையான மாதச்சம்பளம் வழங்கப்பட்டது, ஒரு சிலருக்கு அவர்கள் திருடுவதில் குறிப்பிட்ட சதவீதம் சம்பளமாக வழங்கப்பட்டது. இப்படியாகத் திருடாமலேயே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆயினர், அவர்களுக்கு வேலை செய்த ஏழைகள் மேலும் ஏழைகள் ஆயினர்.

ஒரு கட்டத்துக்கு மேல் சொத்துச் சேர்ந்த பின், பணக்காரர்களுக்குத் திருட ஆள் அமர்த்துவது வீண் வேலையாகத் தோன்றியது. அவர்களிடம் சேர்ந்துள்ள செல்வத்தை யாரும் திருடாமல் பாதுகாத்தாலே போதுமெனத் தோன்றியது. எனவே ஏழைகள் சிலரை தேர்ந்தெடுத்துத் தங்கள் வீட்டை பாதுகாக்க வேலைக்கு அமர்த்தினர். யாரேனும் அவர்களிடம் திருடினால் அவர்களைத் தண்டிக்கச் சட்டம்,போலீஸ், சிறைச்சாலை ஆகியவற்றை உருவாக்கினர்.

காலம் உருண்டோடியது. இப்போது அந்த நாட்டில் யாரும் திருடுவதில்லை. மேலும் அந்த நாட்டில் இப்போது இரு பிரிவினர் மட்டுமே வாழ்கின்றனர் – பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்.

வெகு நாட்களுக்கு முன்னர் ஒரு நேர்மையானவன் வந்தான் அல்லவா? அவன் சில நாட்களிலேயே பசியால் வாடி இறந்து போனான்.

**

நன்றி : ராஜ் கணேசன்.

http://www.sramakrishnan.com/?p=5064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவே சொல்கின்றேன் நல்ல ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இந்தக் கதை பரிமளிக்கின்றது..., நிர்வாணம் நிறைந்த ஊரில் துண்டு கட்டியவன் கோமாளி என்பதைப் போல் எல்லோரும் கள்ளர்களாய் இருக்கும்போது எல்லோரும் கள்ளமில்லாமல் வாழ்ந்தார்கள், ஒரு கள்ளமில்லாதவனின் வருகையால் அவர்கள் வாழ்வு களங்கப் பட்டு விட்டது....!

கள்ளருடன் கள்ளர் சேர்ந்திருப்பர்  சேராதோர்

கள்ளருக்குள் கலந்த களை...!

  ---யாரோ ---!

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

கள்ளருடன் கள்ளர் சேர்ந்திருப்பர்  சேராதோர்

கள்ளருக்குள் கலந்த களை...!

கதையும் சுவியின் விமர்சனமும் பிடித்திருக்கு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
    • வணக்கம் வாத்தியார்.........! பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ......! --- கண்ணாளனே எனது கண்ணை ---
    • உண்மைதான். ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக தன்நலத்தின் பால் இதை அவர் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் என்றோ செய்திருக்கலாம்.
    • சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.