Jump to content

எமது போராட்டம் மிக விரைவில் கெளரவ நிலையை எட்டும்; சம்பந்தன்


Recommended Posts

10994_content_sampanthan_thinakkural_03-

எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென நினைப்பதாக   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்
சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 


சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுதினம் நேற்று  திங்கட்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இங்கு அவர் மேலும் கூறியதாவது; 


2005 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்தது. அதனை எவரும் மறுக்க முடியாது. தேர்தல்கள் நடந்துவிட்டால், ஜனநாயகம் மலர்ந்து விட்டது என எவரும் கருத முடியாது. தேர்தல்கள் நடைபெறுவது, ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனால், அது முடிவல்ல. 


குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. தமது கடமையினை சுதந்திரமாக செய்ததன்  காரணத்தால் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 


ஜனநாயகம் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். 
பத்திரிகை சுதந்திரம் அத்தியாவசியம். உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு பாரிய பங்களிப்பாக இருந்துள்ளது.

அவற்றினை அழிக்க முடியாது. எனவே, எமது விடுதலைப் போராட்டம் விரைவில் கௌரவமான நிலைக்கு வரும் என நினைக்கின்றோம். அதனை  நம்புகின்றோம். அவ்வாறான நிலமை ஏற்படும்  போது, உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும். 


உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பினை மறந்துவிட முடியாது. அவ்விதமான சூழலில், அவர்களுக்குரிய கௌரவத்தினையும் மரியாதையினையும் செலுத்த வேண்டியது எம் எல்லோரினதும் கடமை. 


இந்த நிகழ்வினை நடத்தும் இந்த கட்டிடமும் ஒரு சரித்திரம் மிக்க கட்டிடம். ஆசியாவிலேயே சிறந்த நூலகமாக விளங்கிய ஒரு நூலகம். இது அழிக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம். இவை  அனைத்திற்கும் மத்தியில் எமது மக்கள் சலிக்காமல் உறுதியுடன் தமது உரிமைப் போராட்டத்தினை தொடர்ந்து  வந்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும் என்றார். 

http://www.thinakkural.lk/article.php?local/uokvdnmtwp3587aba53da2f618168ow8vy340a8b89dc96d09d0d0430pjclv#sthash.hxeAtFSi.dpuf

Link to comment
Share on other sites

53 minutes ago, Athavan CH said:

10994_content_sampanthan_thinakkural_03-

எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென நினைப்பதாக   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

 

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பதை ஐயா 93 வயதிலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. :shocked: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஏதாவது வருகிறதா??

2016 போய்

விரைவில் என ஒரு பதம் தொங்க தொடங்குகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழ் மக்கள் ஏன் போராட போனவை  ...? என்ற உங்கடை  கேள்விக்கு பதிலை கண்டுபிடித்துவிட்டீர்களா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பதை ஐயா 93 வயதிலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. :shocked: :(

அது கறுப்புக் கண்ணாடிக்கிழவருக்கு தான் 93.. இவருக்கு 83. 

உலகத்தில இந்திய உபகண்டத்தில் தான் கிழடுங்க.. அரசாட்சி செய்வது. அதிலும் எம் தமிழர் இனத்தில்... அரசியலுக்கு வந்திட்டா.. அதுங்க அங்கேயே பாய் போட்டு படுத்திடுங்கள். ஒரு கட்சி சனநாயகமும் கிடையாது. ஆனால் சனநாயகம் என்று வாய் கிழியக் கத்துவது நடக்கும். tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.