Jump to content

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி


Recommended Posts

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி
 
 

InshantestLEAD-2.jpg

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்காம் திகதி  இங்கிலாந்து பயணமாகவுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பயிற்சிப் போட்டிகள் எட்டாம் திகதியும், 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன.

இந்த தொடருக்கான இலங்கை அணி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக மாற்றம் என்பன இந்த எதிர்பார்ப்புக்கு காரணங்கள். சரி அவை எவ்வாறு அமைந்தாலும் இந்த அணி பற்றி வீரர்கள் பற்றி அவர்களின் தெரிவுகள் பற்றி இந்தக் கட்டுரை அலசப்போகின்றது.

இங்கிலாந்து  ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல்  இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாகவும் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாகவும் என்ற அடிப்படையில் அணி உள்ளது. துடுப்பாட்டவீரர்களில் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களும் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களுமே அதிக இடம் பிடித்துள்ளனர். மத்திய வரிசை இலங்கை அணியை பொறுத்தளவில் இறுக்கமாக இருந்தாலும் பின் மத்திய வரிசை மிக மோசமாக உள்ளது.

குறிப்பாக ஆறாமிடம், ஏழாமிடம் என்பன நிச்சய தன்மையற்ற நிலை. இந்த இடத்துக்கான மேலதிக வீரர்கள் தெரிவு செய்யப்படவில்லை. உள்ளூர்ப் போட்டிகளில் முன்வரிசை வீரர்களாக துடுப்பாடும் வீரர்களே பின் மத்திய வரிசையில் துடுப்பபாடப் போகின்றனர் என்றே நம்பலாம். சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என்பன எதிர்பார்க்கப்பட்டது போன்றே அமைந்துள்ளது. 17 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் மேலதிக இரு வீரர்கள் அணியில் உள்ளனர் எனக் கூற முடியும்.

அணி விபரம்

அஞ்சலோ மத்தியூஸ் – தலைவர்

டினேஷ் சந்திமால் – உபதலைவர்

தனஞ்சய டீ சில்வா

தசூன் ஷானக்க

தம்மிக்க பிரசாத்

டில்ருவான் பெரேரா

டிமுத் கருணாரட்ன

துஷ்மந்த சமீர

கௌஷால் சில்வா

குஷால் மென்டிஸ்

லஹிரு திரிமான்ன

மிலிந்த சிரிவர்த்தன

நிரோஷன் டிக்வெல்ல

நுவான் பிரதீப்

ரங்கன ஹேரத்

சமின்ட எரங்க

சுரங்க லக்மால்

துடுப்பாட்ட வரிசைப் படி பார்த்தல் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கௌஷால் சில்வா, திமுத் கருணாரட்ன ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர். இந்த ஜோடி நிரந்தர ஜோடி. இவர்களுக்கு அதிக மேலதிக வீரர்கள் தேவை இல்லை  என்றே கூற முடியும். ஒரு வீரர் தேவை என்று பார்த்தல் ஒருவரை தாண்டி பலர் உள்ளனர்.  கௌஷால் சில்வா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் விளையாடி இருக்கவில்லை.  திமுத் கருணாரட்னவுடன் குஷால் மென்டிஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். பெரியளவில் எதனையும் செய்யாத போதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இவர் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஆனால் அந்த தொடரில் மூன்றாமிலக்கத்தில் களமிறங்கிய உதரா ஜயசுந்தர ஆரம்ப வீரர். அப்போது உள்ளூர்ப் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரர். டெஸ்ட் அறிமுகம் மோசமாக அமைந்தது. ஆனாலும் மீண்டும் நாடு திரும்பிய இவர் ஓட்டங்களை அள்ளி குவித்து வருகின்றார். இந்த வருடத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில் 631 ஓட்டங்களை பெற்றுள்ளார். இறுதியாக விளையாடிய போட்டியில் 318 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் நியூசிலாந்து தொடருக்கு இணைக்கப்படும் முன்னரும் கூட சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போதும் அவர் வேண்டுமென்றே விலக்கப்பட்டுள்ளதாகவே நம்ப தோன்றுகின்றது.

குஷால் மென்டிஸ், உதார ஜயசுந்தர உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல முறையில் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் விக்கெட் காப்பாளாரக அணியில் இடம் பிடித்து இருக்கிறார் என்றால் நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கெட் காப்பாளர். ஒரே ரக வீரர்கள் இருவர் அதுவும் மேலதிக வீரர்களாக அணியில் தேவைதானா?  தினேஷ் சந்திமாலுக்கு உபாதை ஏற்பட்டால் இன்னுமொரு விக்கெட் காப்பாளர் தேவை என்று எடுத்துக்கொண்டாலும் கௌஷால் சில்வாவும் விக்கெட் காப்பாளரே.

கௌஷால் சில்வா உபாதையில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஆனாலும் பயிற்சிகளின் போது தலையில் பந்து அடிபட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மீண்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் நல்ல போர்மில் உள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் இரு இரட்டைச்சதங்கள் அடங்கலாக 4 போட்டிகளில் 97 என்ற சராசரியில் 582 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். திமுத் கருணாரட்ன சராசரியான போர்மில் உள்ளார். நிரந்தர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற நிலையில் இவரின் இடம் கேள்வியில் இல்லை.

ஆரம்ப வீரர்களாக பல வீரர்கள் அணியில் சேர்க்கப்படுள்ள போதும் 2015/16 உள்ளூர் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களை பெற்றுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் தரங்க பரணவித்தான அணியில் இணைக்கப்படவில்லை. 34 வயதான இவர் 10 போட்டிகள் 953 ஓட்டங்களை 79.41 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.

விக்கெட் காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான பானுக்க ரணசிங்ஹ 901 ஓட்டங்களை 64.35 என்ற சராசரியில் 10 போட்டிகளில் பெற்றுள்ளார். 342 ஓட்டங்கள் கூடுதலான ஓட்டங்கள். நிரோஷன் டிக்வெல்ல 5 போட்டிகளில் 388 ஓட்டங்களை பெற்றுள்ளார். தனஞ்சய டி சில்வா ஆரம்ப துடுப்பாட்ட வீரர். சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர். இவருடைய பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டுமே பலமானது. 10 போட்டிகளில் 868 ஓட்டங்களை 51.82 என்ற சராசரியிலும் 34 விக்கெட்களை 14.23 என்ற சராசரியிலும் பெற்றுள்ளார். ஆக இந்த வீரர்களின் ஒப்பீடுகளை பார்க்கும் போது குஷால் மென்டிஸ் மற்றும் நிரோஷன்  டிக்வெல்ல ஆகியோரின் தெரிவு திருப்தியளிப்பதாக இல்லை என்றே கூற முடியும்.

மூன்றாமிடத்துக்கு மீண்டும் லகிரு திரிமான்ன இணைக்கப்பட்டுள்ளார். இவரின் இறுதி வாய்ப்பு இதுவென்றே கூற முடியும். முன்னாள் வீரர்கள் இவருக்கு சரியான வாய்ப்பு வழங்குங்கள். இவர் எங்கள் எதிர்கால வீரர் என்று சிபாரிசு செய்துள்ளமை இவருக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் இவரும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவது இன்னுமொரு விடயம். உள்ளூர்ப்போட்டிகளில் போர்மில் உள்ளார். மற்றைய வீரர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கடந்த மூன்று போட்டிகளில் 2 சதங்களை பெற்றுள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பாவித்து கடந்த காலங்களில் இவரை ஓரங்கட்டியவர்களுக்கு சரியான அடியை இவர் வழங்க வேண்டும். இவர் ஒரு வேளை பயிற்சிப்போட்டிகளிலோ அல்லது ஆரம்ப போட்டிகளிலே சோபிக்கத் தவறினால் இருக்கும் மேலதிக ஆரம்ப வீரர்களில் ஒருவர் அந்த இடத்தை பிடிப்பார்.

நான்காமிடம் டினேஷ் சந்திமால். இவர் சர்வதேச ரீதியில் அந்தஸ்தை பெற்றுள்ளார். உபதலைவர், விக்கெட்காப்பாளர். டெஸ்ட் போட்டிகளில் 45.28 என்ற சிறந்த சராசரியைப்பெற்றுள்ளார். ஐந்தாமிடம் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். இவரின் துடுப்பாட்டம் சிறப்பானது. 50.18 என்ற உயரிய சராசரியைப் பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இவரின் பந்து வீச்சு அதிகம் பாவிக்கப்படுவதில்லை. இங்கிலாந்து ஆடுகளங்களில் இவர் அதிகம் பந்து வீசுவது இலங்கை அணிக்கு பலமாக அமையும். இவரின் பந்து வீச்சு பாணி நிச்சயம் கை கொடுக்கும். ஆனால் உபாதைப் பயம், அதிக அழுத்தம் என்பன மத்தியூசை டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவதில் இருந்து தள்ளி வைத்துள்ளது.

அடுத்த இரு இடங்கள் மிக முக்கியமானவை. இரு சகலதுறை வீரர்களுக்கான இடமாக தென்படுகின்றது. மிலிந்த சிறிவர்த்தன ஏழாமிடத்தில் துடுப்பாடி நம்பிக்கையை தந்துள்ளார். இனி இவர் ஆறாமிடத்தில் துடுப்பாடுவார். இவரின் சுழற்பந்து வீச்சு கைகொடுக்கும். நியூசிலாந்து தொடரில் அதிகம் பந்து வீசவில்லை. ஆனால் அறிமுக மேற்கிந்திய தொடரில் சிறப்பாக பந்து வீசியவர். இந்த தொடரில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையவுள்ளது. இவரை நம்பித்தான் பின்மத்திய வரிசையில் மேலதிக வீரர்களை சேர்க்கவில்லையோ தெரியவில்லை.

அடுத்த இடம் யாருக்கு? தசூன் ஷானகவுக்கே என்றே கூற முடியும். இது ஒரு சிறந்த தெரிவு என கூற முடியும். இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவரின் துடுப்பாட்டமும் பந்து வீச்சும் கைகொடுக்கும். அண்மைய பிறீமியர் லீக் உள்ளூர்ப் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 6 போட்டிகளில் கைபப்ற்றியுள்ளார்.  இந்த வருடத்தில் இவர் உள்ளூர்ப்போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை. இவரின் துடுப்பாட்டம் சராசரியானதாக அமைந்துள்ளது. 38.12 என்ற சராசரியில் 1258 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவரின் இடத்துக்கு போட்டியாக அமையக்கூடியவர் தனஞ்சய டி சில்வா எனக் கூற முடியும். இலங்கை அணி ஒரு சுழற் பந்து வீச்சாளருடன் மாத்திரமே களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி பார்த்தால் அடுத்த பலமான சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் தேவை என கணித்தால் தனஞ்சய டி சில்வாவினை இந்த இடத்தில பாவிக்கலாம். இவரின் துடுப்பாட்டம் மேலதிகமாக அணிக்கு பலத்தை சேர்க்கும்.

சுழற்பந்து வீச்சாளர் இடம் ரங்கன ஹேரத்துக்கு மட்டுமே. இங்கிலாந்து ஆடுகளங்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது சாத்தியமற்ற விடயம். ஹேரத் உபாதை சிக்கல் இல்லாவிடால் முழுமையாக மூன்று போட்டிகளிலும் விளையாடுவார். டில்ருவான் பெரேரா மேலதிக வீரராகவே இருப்பார்.

வேகப்பந்து வீச்சில் இலங்கை அணி முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள் மூவருடன் விளையாடும் வாய்ப்புகளே உள்ளன. நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அஞ்சலோ மத்தியூஸ் அணியில் உள்ளார். இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படின் தசூன் ஷானக அணியால் நீக்கப்பட வேண்டும். அல்லது அந்த இடத்தில இடம் பிடிப்பவர் நீக்கப்படுவார். தசூன் ஷானக சேர்க்கப்பட்டால் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற நிலை இல்லாமல் ஸ்விங் பந்துவீச்சாளர் என்ற இடத்தை அவருக்கு வழங்க முடியும்.

வேகப்பந்து வரிசையில் தம்மிக்க பிரசாத் உபாதையில் இருந்து மீண்டு அணிக்குள் இடம் பிடித்துள்ளார். கடந்த வருடத்தின் சர்வதேச டெஸ்ட் வேகப்பந்துவீச்சில் இரண்டாமிடத்தில் உள்ளவர். இவரின் வேகம் அணிக்கு கைகொடுக்கும்.   துஷ்மந்த சமீர கேள்விகள் அற்ற இரண்டாம் தெரிவு. இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் வீரர். இவர்கள் இருவரும் நடைபெற்று வரும் பிறீமியர் லீக் தொடரில் விளையாடவில்லை. விளையாடாமலே அணியில் இடம் பிடிக்கலாம் என்ற நிலையில் உள்ளவர்கள். அடுத்த ஒரு இடத்துக்கு சுரங்க லக்மால், நுவன் பிரதீப், சமின்ட எரங்க ஆகியோர் போட்டியிடப்போகின்றனர். சமின்ட எரங்க விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை மற்ற இருவரிலும் பார்க்க சிறப்பாக கைப்பற்றியுளர். அடுத்த தெரிவாக சுரங்க லக்மால் இருப்பார்.

இலங்கை அணி சார்பாக அதிகம் விளையாடும் வீரர்கள் என்ற கணிப்பில் பார்த்தல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள். மூன்று சகலதுறை வீரர்கள். நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள். ஆகா இப்படி ஒரு அணி கிடைக்குமா? நிச்சயம் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த அணியில் ஒரு நம்பிக்கை தோன்றுகின்றது. விளையாடும் 11 பேரிலேயே இந்த நம்பிக்கை அதிகம் உள்ளது. வெளியே உள்ள வீரர்களில் அல்ல என்றும் சொல்ல தோன்றுகின்றது.

இங்கிலாந்தில் தொடர் நடைபெற்றுகின்றது. இங்கிலாந்து பலமான அணி. இலங்கை அணியோ மீண்டும் அணியை கட்டியெழுப்பும் நிலையில் உள்ளது. வெற்றி தோல்விகளை தாண்டி இலங்கை அணி இந்த தொடரில் வீரர்களை இனங்கண்டு சரியாக தயார்ப்படுத்தல்களை செய்ய வேண்டும். தோற்றாலும் நன்றாக விளையாடினார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினாலே போதுமானது. அடுத்து இலங்கைக்கு அவுஸ்திரேலியா வரும் போது வெற்றி பற்றி யோசிக்கலாம்.

- See more at: http://www.tamilmirror.lk/171246/%E0%AE%87%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3-#sthash.opxUro1v.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.