Jump to content

திரை விமர்சனம்: மனிதன்


Recommended Posts

திரை விமர்சனம்: மனிதன்

 

 
manithan_2837043f.jpg
 

சில்லறை வழக்கில் சிக்கியவருக்கு பெயில் வாங்கித்தரக்கூட வக்கற்ற ஒரு கற்றுக்குட்டி வழக்கறிஞர், இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞரைத் தோற்கடிக்க நடத்தும் தர்ம யுத்தம்தான் ‘மனிதன்’.

பொள்ளாச்சி வழக்கறிஞர் சக்தியின் (உதயநிதி ஸ்டாலின்) திறமையின்மையை மீறி அவரைக் காதலிக்கிறார் முறைப்பெண் ப்ரியா (ஹன்சிகா). சக்தியின் அசட்டுத்தனங்களும் தோல்விகளும் அவரது காதலில் நெருடலை ஏற்படுத்த, தன்னை நிரூபித்துக்காட்டச் சென் னைக்கு வருகிறார் சக்தி. இவர் வந்த நேரத்தில் மாநிலமே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு பரபரப்பா கிறது. குற்றம் சுமத்தப்பட்ட பெரிய இடத்துப் பையன் விடுவிக்கப்படுகிறார். தனது வாதத் திறமையால் அவரை விடுவித்தவர் இந்தியா வின் முன்னணி வழக்கறிஞரான ஆதிசேஷன் (பிரகாஷ்ராஜ்). நடைபாதைவாசிகள் ஐந்து பேர் மீது கார் ஏற்றிக் கொன்ற அவ்வழக்கைக் கையில் எடுக்கிறார் சக்தி. வழக்கு மறுபடியும் சூடுபிடிக்கிறது. அனுபவஸ்தர் ஆதிசேஷனுக் கும் கற்றுக்குட்டி சக்திக்கும் ஏற்படும் மோதல் தான் மீதிக்கதை.

‘ஜாலி எல்.எல்.பி.’ என்னும் இந்திப் படத்தில் சிற்சில மாற்றங்கள் செய்து ‘மனிதன்’ ஆக்கி யிருக்கிறார் இயக்குநர் ஐ.அகமது. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் பணபல மும் செல்வாக்கும் இருந்தால் ஆதாரங்களை யும் சாட்சியங்களையும் அழித்துவிட்டுத் தப்பிவிட வழிவகுக்கும் ஊழல் புரையோடிய அமைப்பின் மீதான விமர்சனத்தை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது படம்.

பெரிய வக்கீல் எனப் பெயரெடுத்தவரும் நமது அமைப்பின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டே வெல்கிறார்கள் என்பதை அப்பட்ட மாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கற்றுக்குட்டி வக்கீல் கொஞ்சம் கொஞ்சமாக வலுப் பெறும் விதம் நம்பும்படி இருக்கிறது. வழக்கின் திருப்பங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. பிரகாஷ் ராஜின் சாட்சியை உதயநிதி உடைக்கும் காட்சி யும் கமலக்கண்ணனிடம் நடக்கும் விசாரணையும் நீதிமன்றத்தைப் பின்புலமாகக் கொண்ட படத்துக்கான சிறப்பு முத்திரைகள்.

காவல் துறையில் உயர் பதவி ஏலம் விடப் படும் காட்சி, அத்துறையின் அபாயகரமான பரிணாமத்தை அம்பலப்படுத்துகிறது. வழக் கறிஞர் தொழிலின் அல்லாட்டத்தைச் சொல் லும் இந்தப் படம், அதே வழக்கறிஞர் பிரபல மாகிவிட்டால் தந்திரமாகப் பணம் பிடுங்கலாம் என்பதைக் காட்சியாக்கிய விதம் நெத்தியடி. நீதிபதிகளின் அணுகுமுறையை வடிவமைத்த விதத்தில் நேர்த்தி.

நீதி விசாரணையையும் அதற்கு இடமளிக் கும் நீதிமன்ற வளாகத்தையும் கதைக்களமாகக் கொண்ட ஒரு திரைக்கதையில், நாயகன் தனது சட்ட அறிவாலும் வாதத் திறமையாலும் வென்றிருக்க வேண்டும். நாயகன் வெல்வது புலனாய்வுத் திறமையால்தான். சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்யும் இடம் தவிர மற்ற இடங்களில் வாதத் திறமைக்கு இடமில்லை. எனினும் அஜயன் பாலாவின் அழுத்தமான வசனங்களும் சுவையான காட்சிகளும் இந்தக் குறையை மறக்கக்கடிக்கின்றன.

“நீதி தேவதை கண்ணைக் கட்டியிருக்க லாம். ஆனால் நீதிபதி கண்களைத் திறந்துதான் வைத்திருக்கிறார்” என்னும் வசனம் முக்கிய மானது. வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போதே என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால், சட்டத்தின் ஓட்டைகளால் உண்மை அம்பலம் ஏற முடியாமல் போகிறது என்பதை நீதிபதியின் வாயாலேயே சொல்லவைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

தனக்குப் பொருந்தக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் உதயநிதி நன் றாகவே தேறிவிட்டார். அலட்டலோ மிரட்டலோ இல்லாத மிதமான நடிப்பால் கவர்கிறார். நாய கனிடம் நேர்மையையும் தன்னம்பிக்கையை யும் எதிர்பார்க்கும் பாத்திரத்தில் ஹன்சிகா தேறுகிறார். பிரகாஷ்ராஜின் வசன உச்சரிப்பும் முக பாவங்களும் உடல் மொழியும் அபாரம். மிடுக்கும் அலட்டலுமாக பிரகாஷ்ராஜ் கவர, அமைதியான பாத்திரத்தில் அலட்டிக்கொள்ளா மல் நடித்துக் கவர்ந்துவிடுகிறார் ராதாரவி.

நீதிமன்ற வளாகத்தில் ஆவக்காய் ஊறுகாய் விற்கும் விலைபோகாத வக்கீல் கதாபாத்திரத்தில் வரும் விவேக், உடல் பருமன் கொண்டவர்களைப் பரிகசிக்கும் அவலத்தை இதிலும் தொடர்கிறார். தொலைக்காட்சி செய்தியாளர் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.

மதியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்த அளவுக்கு சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை உதவவில்லை. பாடல்கள் கவர்ந்தாலும் ஒரே சாயலுடன் ஒலிக்கின்றன.

உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும் கதையைத் திரைக்கதையாகத் தந்த விதத்தில் முதல் பாதி சுணக்கம். இரண்டாம் பாதி விறு விறுப்பு. பணப் பையிலிருந்து பெருச்சாளிகள் ஓடுவது, ஸ்நூக்கர் மேஜையில் சிதறியிருக்கும் பந்துகள் பிரகாஷ்ராஜ் கண்களுக்கு எலிகளாகத் தெரிவது போன்ற காட்சிகளில் ஜொலிக்கும் இயக்குநர், முதல் பாதியின் இழுவையைக் குறைத்திருந்தால் ‘மனிதன்’ இன்னும் மரியாதைக்குரியவனாக மாறியிருப்பான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/article8546349.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வரும் படங்களிலும் பார்க்க இது கொஞ்சம் நல்லாய் இருக்கு....! ( கதாநாயகனின் அலட்டல்கள் இல்லை.).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.