Jump to content

விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு புலனாய்வுப் பொறுப்பாளர் பிரபா கைது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு புலனாய்வுப் பொறுப்பாளர் பிரபா கைது?

[ Monday,2 May 2016, 04:21:12 ]   
arrest.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற கலைநேசனை அங்கு பதிவு செய்துவிட்டு, மேலதிக விசாரணைக்காக கல்முனைக்கு கொண்டு செல்வதாக தெரிவத்து அழைத்து சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தினரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததுடன், கடந்த 2013 ஆம் ஆண்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததாக மனைவி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை ஐ.பி.சி தமிழ் தொடர்புகொண்டு வினவியபோது அவ்வாறான ஒரு கைது இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

http://ibctamil.com/news/index/23024

Link to comment
Share on other sites

புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கைது
 
02-05-2016 11:12 AM
Comments - 0       Views - 5

article_1462167899-index.jpg-வா.கிருஸ்ணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் (வயது 46) இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனது வீட்டுக்கு இன்றையதினம் காலை 6.30 மணிக்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைதுசெய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/171190/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.D5dJWwl9.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பு சும்: எனி புனர்வாழ்வு பெற்றவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்.

சிங்கள அரசுப் பேச்சாளர்: முன்னாள் போராளிகள் மே தினக் கொண்டாட்டத்துக்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கக் கூடும்.

-------------------------

ஒருவேளை அடுத்த மே தினத்துக்குப் பிடிக்கினமோ...??! 

மக்கள் மந்தைகள் என்று நினைக்கிறார்கள் மக்களின் வாக்குகளாலேயே அதிகார உச்சிக்கு வரும் மனிதர்கள். சனநாய் அகம்.. வாக்கு வாங்கும் வரை சனநாயம்.. அதன் பின் சனத்தை  நாய் ஆ பார்க்கிற..அக (மனசின்) வெளிப்பாடு என்பதுதான் இன்றைய மேற்குலக சனநாயகம் உலகெங்கும் வியாபித்திருக்கும் கொள்கை. குறிப்பாக இந்திய உபகண்டத்தில். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சும் மின் வாக்குறுதி???? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.