Jump to content

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில்


Recommended Posts

3756_1461991171_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தற்பொழுது தமிழ் பேசும் பணியாளர்களுக்குப் பதிலாக பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பணியாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக பிரயாணச்சிட்டினை பெற்றுக்கொள்ளும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். பொதுவாக தமிழ் பேசும் மக்கள் அதிகமாக பிரயாணத்தை மேற்கொள்ளும் இவ் புகையிரத நிலையத்தின் ஊடாக சிங்கள மொழியை மாத்திரம் பேசும் பணியாளர்களை நல்லாட்சி அரசாங்கத்திலே சேவையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.இதனை எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் இதற்கான சிறந்த தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://battinaatham.com/description.php?art=3756

Link to comment
Share on other sites

10 hours ago, Athavan CH said:

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தற்பொழுது தமிழ் பேசும் பணியாளர்களுக்குப் பதிலாக பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பணியாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண  புகையிரத நிலையத்திலும் இதுதான் நிலை. இவர்களுக்கு தமிழும் சுத்தமா புரியாது, ஆங்கிலம் அதவிட சுத்தம். சில மாதங்களுக்கு முன் சில டிக்கட்டை எடுத்துவிட்டு அதனை வேறு நாளுக்கு மாத்தப்போய் நான் பட்ட பாடு இருக்கே - சொல்லி மாளாது. தண்டத்திற்கு 3 டிக்கட்டுக்கு 1200 ரூபா. 

இதையெல்லாம்  கவனிக்க நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

யாழ்ப்பாண  புகையிரத நிலையத்திலும் இதுதான் நிலை. இவர்களுக்கு தமிழும் சுத்தமா புரியாது, ஆங்கிலம் அதவிட சுத்தம். சில மாதங்களுக்கு முன் சில டிக்கட்டை எடுத்துவிட்டு அதனை வேறு நாளுக்கு மாத்தப்போய் நான் பட்ட பாடு இருக்கே - சொல்லி மாளாது. தண்டத்திற்கு 3 டிக்கட்டுக்கு 1200 ரூபா. 

இதையெல்லாம்  கவனிக்க நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரம்  

ரிஷாத் இடம் சொன்னால் காக்கா ஒருவரை அமர்த்தி விடுவார்.

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

ரிஷாத் இடம் சொன்னால் காக்கா ஒருவரை அமர்த்தி விடுவார்.

காக்கா இருக்கோ கொக்கு இருக்கோ பிரச்சனை இல்லை - தமிழ் பேசினால் காணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மட்டும் வேலைக்கு விண்ணப்பித்தால் சிங்களம் ஆங்கிலம் தெரிய வேண்டும், மற்றயவர்களுக்கு அல்ல. 

6 minutes ago, ஜீவன் சிவா said:

காக்கா இருக்கோ கொக்கு இருக்கோ பிரச்சனை இல்லை - தமிழ் பேசினால் காணும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தமிழ் பேசினால் காணும், தமிழாக இருக்க வேண்டும் என்பது எனது

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

உங்களுக்கு தமிழ் பேசினால் காணும், தமிழாக இருக்க வேண்டும் என்பது எனது

வெள்ளவத்த புகையிரத நிலையத்தில அழகான தமிழ், ஆங்கிலம் பேசுறாங்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை தமிழ் பிரதேசம் யாழ் சிங்கள பிரதேசம் உங்களுக்கு தெரியாதா? 

1 minute ago, ஜீவன் சிவா said:

வெள்ளவத்த புகையிரத நிலையத்தில அழகான தமிழ், ஆங்கிலம் பேசுறாங்களே 

 

Link to comment
Share on other sites

50 minutes ago, MEERA said:

வெள்ளவத்தை தமிழ் பிரதேசம் யாழ் சிங்கள பிரதேசம் உங்களுக்கு தெரியாதா? 

 

ஹற்றனில்   கூட அழகாக தமிழில் டிக்கட்  வாங்க முடிந்ததே - அதுவும் தமிழ் பிரதேசம்தானே.  இதுக்குதான் சொன்னேன் எமது அரசியல்வாதிகளிற்கு நேரமில்லை எண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

காக்கா இருக்கோ கொக்கு இருக்கோ பிரச்சனை இல்லை - தமிழ் பேசினால் காணும் 

எனது தாய்மண் பறி போனாலும் சரி....எனக்கு பருப்பும் சோறும் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இந்தப் பிரச்சனையை தீர்க்க அர்ப்பணிப்போடுதான்    இருக்கிறோம். எல்லாம் அந்தந்த நேரம், அந்தந்த திட்டப்படி நடக்கும். சும்மா வீணாக கேள்விகள் கேட்டு எல்லாத்தையும் குழப்பிப் போடாதேங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் விட முக்கியமான பிரச்சனைகள் மறைமுகமாக நடக்குது அதையெல்லாம் கவனிக்க ஆள் 

நாளைக்கு வேற ஒருவர் மாறினால் இந்த பிரச்சனை தீர்ந்து விட போகிறது ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.