Jump to content

நண்பிக்கு ஒரு அட்வைஸ் .........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண்  பாசம் உள்ள யாழ்கள்  உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின்  என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள்   சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில்   உங்கள்  ப வாழ்த்துக்கள்  பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு  எந்த இணைய  தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு  நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும்  இடையில்  நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது  வாசிக்க ( சுவாசிக்க)   வருவதுண்டு...

 

என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல  உள்ளார் ...அவரது தயார்  தனது நோய்  வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார். அவர் ஒரு நீரழிவு நோயாளி இரு  மணி  நேரத்துக்கு ஒருதடவை  கழிப்பிடம் தேவை உண்டு ...பயணம்  சமாளித்து  கொள்வார் .. விமான நிலையத்திலிருந்து தனியான ..தனியார் வாகன் வசதி உண்டு...தாயகத்திலும் கழிப்பிட வசதி ..சகோதரன் வீட்டிலமைத்து உள்ளார்கள்.  போகும் வழியில் ...உயர்த்த் பட்ட  கழிப்பிடம் (கொமேர்ட்  ) .. வசதி பிரபல் உணவகங்களில் உண்டா...?  விமான நிலையதிலிருந்து ஆறு எ...ழுமணி நேரம் எடுக்கும் யாழ் செல்ல முழங்காலில் ச்த்திரசிகிச்சை பெற்ற  இவரது தாயார்  சமாளிப்பாரா என்பது என்   நண்பியின் ...யோசினை ....

 

தாயகம் நோக்கி சென்ற யாழ் உறவுகள் ...அனுபவங்களை  பகிர் ந்து கொள்ளவும். நண்பியும் நீண்டகா லதுக்குமுன் சென்றவர். தற்  போதிய நிலைமை ..தெரியாது . வயதா ன தாயாருக்கு இதைவிட வேறு சந்தர்பம்  கிடைக்காது  சாகும் வரை .....இருபத்திந்து வருடங்களுக்குப்பின் கிடை க்க்போகும் சந்தர்பத்தை எண்ணி இரவில் நி த்தி ரையும் இல்லையாம்....என்  நண்பிக்கு  ஒரு முடிவு எடுக் க   உங்கள் அட்வைஸ் ......பிளீஸ் 

 

மாங்கிளியும்   மரங்  கொத்தியும் கூடு திரும்ப்  தடை இல்லை ....நாங்க ...மட்டும் உலகத்துல ....

Link to comment
Share on other sites

41 minutes ago, நிலாமதி said:

போகும் வழியில் ...உயர்த்த் பட்ட  கழிப்பிடம் (கொமேர்ட்  ) .. வசதி பிரபல் உணவகங்களில் உண்டா...?

சிலாபத்தில் ஒரு PS பேக்கரி இருக்குது, அப்புறம் அனுராதபுரத்தில் mango , முருகண்டியில் இராணுவம் நடத்தும் சிற்றுண்டிச்சாலை போன்றவற்றில் துப்பரவான மலசல கூடங்கள் உண்டு. அனுராதபுரத்தில் உள்ளே mango வில் மேற்கத்தைய தரத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான Foodcity களில் உள்ளது, 

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

சிலாபத்தில் ஒரு PS பேக்கரி இருக்குது, அப்புறம் அனுராதபுரத்தில் mango , முருகண்டியில் இராணுவம் நடத்தும் சிற்றுண்டிச்சாலை போன்றவற்றில் துப்பரவான மலசல கூடங்கள் உண்டு. அனுராதபுரத்தில் உள்ளே mango வில் மேற்கத்தைய தரத்தில் உள்ளது.

இவை செல்லும் பாதையிலேயே உள்ளது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவை, மீண்டும் கண்டது சந்தோசம்.
கடந்த பன்னிரண்டு  வருடங்களுக்கு மேல், ஊர் பக்கம் போகவில்லை என்பதால்... அங்குள்ள நிலைமை தெரியாது.

உங்களது... நண்பியின், ஆசை.... நியாயமானது என்றாலும், 
விமான நிலையத்திலிருந்து வீடு வரை போக.... உணவு பிரச்சினை இல்லை என்று,   ஜீவன் சிவாவும், மீராவும் கூறி விட்டார்கள்.
ஆனால்.... ஒரு நோயாளிக்கு, அதை விட... மருத்துவம், கால நிலை போன்ற புறக் காரணிகளும் நிச்சயம் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.
உண்மையில்.... உங்கள் நண்பி, இக்கட்டான நிலைமையில் உள்ளார் என்பதை, நாம் புரிந்து கொள்கின்றோம்.
அவரின் பயணம், இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தங்கள் வரவுக்கு வாழ்த்தும் வரவேற்பும் நிலாமதி அக்கா.tw_blush:

என்னக்கா இப்படிக் கேட்டுப் புட்டுகள்.. கொமட் 1980 களிலேயே யாழ்ப்பாணம் வந்திட்டுது. இப்ப நாடு பூராவும் வந்திருக்கும். அந்த வகையில்.. நீங்கள் உங்கள் நண்பியிடம்.. உறுதியாகச் சொல்லலாம்.. கொமட் இருக்கு கொலிடே போகலாம் என்று. ஆனால்.. இத்தனை வருசம் போகாதவை.. ஏன் இப்ப போகினம் என்று சிங்களவன் இடையில மறிச்சுக் கேட்டால் அதற்கு நாம் எவரும் பொறுப்பல்ல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை யாழில் கேட்பதை விட கூட்டிக் கொண்டு போகும் சாரதியிடம் கேட்டால் கூடுதல் தகவல் பெறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா...நீண்ட நாட்களின் பின்னர் களத்தில் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

கொஞ்சம் பணத்தைப் பார்க்காமல்.. கொழும்பிலிருந்து செல்லும் விமானமொன்றில் சீட் ஒன்றைப் பெறமுடியுமா என்று பாருங்கள்!

அல்லது ஹெலிகள் மூலமும் செல்லலாம் என்று நினைக்கிறேன்!

பலருடன் பகிர்ந்து சென்றால் அதிகம செலவு ஏற்படாது என்பது எனது கணிப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு வரைக்கும் சீ பிளேன் வருகிறது பாலாலிக்கு உள்ளூர் விமான  சேவை வாரத்தில் ஒரு முறை வந்து போனது முதலில் ஆனால் இப்ப வந்து போகிறதா என்பது தெரியவில்லை  அறிந்தால் உங்களுக்கு இலகுவாக இருக்கும் அக்கா 

கொழும்பில்  நண்பர்கள் இருந்தால் கேட்டு பாருங்கள் நிலாமதி அக்கா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.