Jump to content

முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்: த.தே.கூ


Recommended Posts

முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்: த.தே.கூ
 
 

article_1461918305-SumanthiranMP.jpg-சொர்ணகுமார் சொரூபன்

'அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பொன்றை முடித்த பின்னர் வெளியில் வந்த சுமந்திரன் எம்.பி, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாங்கள் அரசாங்கத்தைச் சந்தித்தமையால் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் எந்த கைதுகளும் இடம்பெறவில்லை. சந்தேககத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்படலாம். ஆனால் அதற்குரிய காரணம், கைது செய்யப்படுவர்களின் உறவினர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்பட வேண்டும். மீண்டும் இங்கு கடத்தல்கள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது' என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்றின் போது கருத்து தெரிவித்த வனஜீவராசிகள் அமைச்சர் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம, 'இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தவது தொடர்பான பிரச்சினை இலங்கை முழுவதிலும் உள்ளது. அது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்ட பின்னர் தீர்வு காணப்படும்' என்றார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'சுண்டிக்குளம் பகுதி தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இடவரைபு 3 மாதகாலத்துக்குள் வரையப்படும். அதன் பின்னர் பொதுமக்களின் காணிகள் மற்றும் அவர்களது விவசாய காணிகள் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களிடம் வழங்கப்படும். அதுவரையில் அதிகாரிகள் காணி சுவீகரிப்பு என மக்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம், அந்த இடத்தில் தேவையானதா இல்லையா, முன்னர் அங்கு இருந்ததா? என ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள். அது தொடர்பில் நான் கருத்துக் கூறமுடியாது. இராணுவத்தினர் ஹோட்டல் நடத்தும் பிரச்சினை அங்கு மட்டுமல்ல காங்கேசன்துறை தொடக்கம் தென்னிலங்கை வரையில் உள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் கொள்கை வரைபு செய்ததின் பின்னர் அதற்கான தீர்வு எடுக்கப்படும்' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/171001/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-#sthash.KTc48IZu.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது உங்கடை தனிப்பட்ட கருத்து இல்லைதானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:

'சுண்டிக்குளம் பகுதி தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கோஷ்டிகளே! இதை விட இனி என்ன தீர்வு வேணுமெண்டு கேக்கிறன்???

19 hours ago, நவீனன் said:

சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம், அந்த இடத்தில் தேவையானதா இல்லையா, முன்னர் அங்கு இருந்ததா? என ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள். அது தொடர்பில் நான் கருத்துக் கூறமுடியாது. இராணுவத்தினர் ஹோட்டல் நடத்தும் பிரச்சினை அங்கு மட்டுமல்ல காங்கேசன்துறை தொடக்கம் தென்னிலங்கை வரையில் உள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் கொள்கை வரைபு செய்ததின் பின்னர் அதற்கான தீர்வு எடுக்கப்படும்' என்றார்.

இதை உங்கடை வாயாலை கேட்கவே தமிழ்ச்சனம் உங்களுக்கு வோட்பண்ணினது? உப்பிடியெண்டால் தமிழ்ச்சனம் நேரடியாகவே மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாக்களித்திருக்கலாமெல்லொ?????? இடையிலை என்ன சம்பந்தனும் நீங்களும் தரகர் வேலை பார்க்கோணும்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கோஷ்டிகளே! இதை விட இனி என்ன தீர்வு வேணுமெண்டு கேக்கிறன்???

இதை உங்கடை வாயாலை கேட்கவே தமிழ்ச்சனம் உங்களுக்கு வோட்பண்ணினது? உப்பிடியெண்டால் தமிழ்ச்சனம் நேரடியாகவே மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாக்களித்திருக்கலாமெல்லொ?????? இடையிலை என்ன சம்பந்தனும் நீங்களும் தரகர் வேலை பார்க்கோணும்?????

உங்களது மனக் குமுறலை ....   மிக ஆழமாக பதிந்தமைக்கு,  நன்றி குமாரசாமி அண்ணா.
இதற்குப் பிறகும்... இவர்கள்  அரசியல் விபச்சாரம் செய்வதை...  கடவுள் கூட விரும்ப மாட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.