Jump to content

தாண்டிக்குளம் விவசாயபண்ணையை தாரை வார்த்தது யார்?


Recommended Posts

தாண்டிக்குளம் விவசாயபண்ணையை தாரை வார்த்தது யார்?

வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து மாகாண சபைக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து அப்பிரதேசத்தில் விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டு அங்கிருந்துதான் மக்களுக்குத் தேவையான விதைகள் மற்றும் பழமரக்கன்றுகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு நாடுபூராகவும் விநியோகிக்கப்பட்டுவருகின்றது. இதைவிட இங்கு விவசாயம் சம்பந்தமான ஆராய்ச்சி வேலைகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக இலங்கை மத்தியவங்கி இதனை ஒரு விவசாய நிலமாகவே பிரகடணப்படுத்தியுமுள்ளது.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் சாள்ஸ் என்பவர் அரசாங்க அதிபராக இருந்தசமயத்தில் பொருளாதார வர்த்தக மையம் அமைப்பதற்காக ஓமந்தைப் பகுதியில் அரசாங்க உத்தியோகத்தர் வீட்டுத்திட்டத்திற்கு அண்மையில் நிலம் ஒதுக்கியிருந்தார்.

ஆனால், வவுனியா மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 2000 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார வர்த்தக மையம் அமைப்பதற்கு மத்திய அரசு கோரியுள்ள தாண்டிக்குளம் காணியை வழங்காவிட்டால், இந்த நிதியானது வேறு மாவட்டத்திற்குச் செல்வதை தவிர்க்கமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.வி;க்னேஸ்வரன் அவர்கள் இது ஒரு விவசாய நிலமாகையால் இதனை பொருளாதார வர்த்தக மையத்துக்கு வழங்கமுடியாதெனவும், பொருளாதார வர்த்தக மையத்திற்குரிய காணி ஓமந்தையில் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிக்கையில், தான் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் இது தொடர்பில் கதைத்ததாகவும் அவர் பொருளாதார வர்த்தக மையத்துக்கு ஓமந்தைக் காணியைவிட தாண்டிக்குளம் காணியே பொருத்தமானது எனவும் அப்படி தாண்டிக்குள காணியைத் தராவிட்டால் குறிப்பிட்ட நிதியானது வேறு மாவட்டத்திற்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மையம் அமைப்பதற்குரிய நிலம் தொடர்பில் இழுபறி நிலை காணப்படுவதால், இது தொடர்பில் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவர்களை தான் சந்திக்கவிருப்பதாகவும், இதன்போது பொருளாதார வர்த்தக மையத்திற்குரிய காணிதொடர்பில் அவருடன் கதைப்பதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தாண்டிக்குள விவசாயப் பண்ணையானது பொருளாதார வர்த்தக மையமாக மாற்றப்பட்டால், வடக்கு மாகாண விவசாயத்தின் ஆதாரமான ஒரு தொகுதி நிலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும்.

தாண்டிக்குள விவசாயப் பண்ணையில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைக்கப்படாவிட்டால் நிதியானது வேறு மாவட்டத்திற்குக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதிலிருந்து இந்த நிதியை வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்காமல் ஒரு சிங்களப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கமாகவும் கருதலாம். (அதற்கு இது ஒரு காரணமாகவும் தெரிவிக்கப்படலாம்)

வடக்கு மாகாணத்துக்கு உரிமையுள்ள ஒரு காணியை வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சுகாதார அமைச்சர் எவ்வாறு மத்திய அரசுக்கு அந்தக் காணியை எழுதிக் கொடுக்கமுடியும்? இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துபவர்கள் யார்?

http://tamilleader.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு விவசாயம் தேவையில்லை பொருளாதார மையம் தான் தேவை. 

சுகாதார அமைச்சிற்கும் பொருளாதார மையத்திற்கும் என்ன தொடர்பு? இது தொடர்பாக ஐங்கரநேசன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

Link to comment
Share on other sites

வடமாகாணத்தில் ஒரூ இஸ்ல்லாமிய சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டு வருகிறது, இன்னும் சில வருடங்களில் வட மாகாணமும் ஒரு முழுமையான முஸ்லிம் மாகாணமாகவே இருக்கும், இழித்தவாய் தமிழன் கொலிடே போவான் அவ்வளவு தான்.
  
மீதிப் பேர் அசைலம் அடிக்க தமிழன் கதி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Dash said:

வடமாகாணத்தில் ஒரூ இஸ்ல்லாமிய சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டு வருகிறது, இன்னும் சில வருடங்களில் வட மாகாணமும் ஒரு முழுமையான முஸ்லிம் மாகாணமாகவே இருக்கும், இழித்தவாய் தமிழன் கொலிடே போவான் அவ்வளவு தான்.
  
மீதிப் பேர் அசைலம் அடிக்க தமிழன் கதி.

 

ISS வரப்போகுது என்று சொல்லுறீயள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.