Jump to content

மரண சான்றிதழ் வழங்குவதா பரணகம குழுவின் நோக்கம்? நாட்கள் கடத்தப்படுவதாக உறவுகள் விசனம்


Recommended Posts

9932.jpg

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நாட்களை கடத்தும் நோக்கிலும் மரணச்சான்றிதழை வழங்கி விடுவதிலுமே அதீத அக்கறை காண்பிப்பதாக கவலையுடன் தெரிவித்த காணாமல் போனோரது உறவினர்கள், நட்டஈட்டையும் மரணச் சான்றிதழையும் மட்டுமா இந்த ஆணைக்குழுவினரால் கண்டறிந்து தரமுடியும் எனவும் விசனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.      

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர் கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு வின் 16ஆவது அமர்வு 4 நாட்களாக கிளி நொச்சி மாவட்டத்தில் நடைபெற்று நேற்றைய தினத்துடன் நிறைவடைந்திருந்தது. 

இந்த நிலையில் இதுவரை காலமும்  ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ள ப்பட்டு வந்த விசாரணைகளில் பொதுமக்க ளுக்கு இருக்கும் நம்பிக்கை முற்று முழுதாக குறைவடைந்து வருகின்றமையை அவர்க ளது சாட்சியமளிப்புக்கள் நிரூபித்துள்ளன. 
விசாரணைகள் மட்டுமே மேற்கொள்ளப் பட்டு வருகின்றதே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவில்லை எனவும் சாட்சிய மளித்த உறவுகள் விசனம் தெரிவித்தனர். 

இந்த ஆணைக்குழு ஆரம்பித்த காலத் தில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த நம்பிக்கை யுடனும் ஆவலுடனும் சென்று தமது சாட்சிய ங்களை பதிவு செய்தனர். தமது உறவுகள் மீண்டும் கிடைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவிலேயே மக்களிடம் காணப்பட்டிருந்தது. 
ஆனால் மக்கள் தற்போது மிகவும் மனம் சோர்ந்த நிலையிலேயே தமது சாட்சியங்களை பதிவு செய்ய செல்கிறார்கள். கடிதம் வந்ததால் போகிறோம் என்ற கட்டாயத்தில் ஆணை க்குழுவிடம் சாட்சியமளிக்க செல்கிறார்கள். 

ஆணைக்குழு முழு மூச்சாக மரணச் சான்றிதழ் மற்றும் நிவாரணம் வழங்குவதி லேயே ஆவலாக உள்ளது என குற்றம் சாட்டி யுள்ள சாட்சியமளித்த மக்கள், இவர்களால் எம் உறவுகளைத் தேடி கண்டறிய முடியாதா எனவும் விரக்தியுடனும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

அத்துடன் சிலமொழி பெயர்ப்பாளர்கள் துறை சார்ந்த வல்லுனர்களாக இல்லை. உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விசாரணை செய்பவர்களும் இல்லை. ஆணைக்குழுவில் உள்ள அதிகாரி கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்ப தற்கு முயற்சி செய்வதாக கூறினாலும் இது வரை அதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொண்டதாக தெரியவில்லை எனவும் பாரிய அளவில் குறைகள் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்களைக் கடத்துவதற்காகவே குறித்த அமர்வுகள் நடைபெற்று வருகின்றன என்று சந்தேகிக்கப்படவைக்கின்ற நிலையில் இவ ர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என வும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக காணாமல் போன வரு டைய தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத் தின் போது எனது மகன் இராணுவத்திடம் சரணடைந்தார். 2013ஆம் ஆண்டு காணா மல் போனவர்களை கண்டறியும் ஆணைக் குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்து உறவுகளை கண்டு பிடிக்க முடியும் எனஅறி விக்கப்பட்டபோது உடனடியாக எனது மக னின் விபரங்களை ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தேன். அத்துடன் பல்வேறுபட்ட அமைப்புக்களிலும் பதிவுகளைமேற் கொண் டிருந்தேன். ஆனால் முதற்கட்டமாக இம் முறைதான் என்னை விசாரணைக்காக அழைத்துள்ளார்கள்.

ஆனால் 2010ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டுவரை என்னை பலர் விசார ணை செய்து கொண்டே இருந்தார்கள் அந்த வகையில் எனது மகன் உயிருடன் உள்ளார் என்பது உறுதி.
இருக்கிறார்களா? இல்லயா? என்ற உரிய பதிலை எமக்குதர வேண்டும். அதன் பின்னர் தான் மரணசான்றிதழ் நஷ்ட ஈடுபற்றிபேச வேண்டும். ஆனால் அவர்கள் வெந்தபுண் ணில் வேலைபாய்ச்சுவது போல் ஆரம்பத் திலேயே தேடவேண்டுமா? எனக் கேட்கிறார் கள். எம்மால் சாட்சிசொல்ல முடியவில்லை.
தற்போதும் பரவலாக காரணம் தெரியா மல் கைதுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு சாட்சி சொல்லும் நாங்களும் இனிவரும் காலத்தில் கைது செய்யப்படலாம். ஆனால் எமது உறவுகள் கிடைக்கும் வரை நாங்கள் தேடிக்கொண்டே இருப்போம்.

மனநிலை பாதிக்கப்பட்டு தெரு நாய்கள் போல அலைந்து திரிகிறோம். காலக்கெடு முடிந்த பின்னரும் எம் உறவுகளை தேடிதரு வதாக வந்துள்ளார்கள் அதை புறக்கணிக்க கூடாது என்பதற்காக சாட்சியம் அளிக்கவருகி றோம். 

இந்த ஆணைக்குழு மீண்டும் எம்மை ஏமாற்றும் செயலை செய்ய மாட்டார்கள் என்று எமக்கு  நம்பிக்கைவரும் வகையில் காணா மல் போனஒருவரையாவது கண்டு பிடித்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இத் தோடே இவர்களின் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவி த்தார்.          

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9932&ctype=news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.