Jump to content

வீரதுங்கவை ராஜபக்ஷவே மறைத்து வைத்துள்ளார் : ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும்


Recommended Posts

வீர­துங்­கவை ராஜ­ப­க்ஷவே மறைத்து வைத்­துள்ளார் : ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும் 

 

Mara-thailand.jpg

சர்­வ­தேச பொலிஸ் அமைப்­பான இன்­டர்போல் வலை­வீசி தேடும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உத­யங்க வீர­துங்­கவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே மறைத்து வைத்­துள்ளார். அவ­ரது தாய்­லாந்து விஜ­யத்தின் போது குறித்த விட யம் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. எனவே இது தொடர்பில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­டமும் ஜீ.எல்.பீரி­ஸி­டமும் உட­ன­டி­யாக வாக்­கு­மூலம் பெற்று உத­யங்க வீர­துங்­கவை கைதுசெய்ய வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார்.

அத்­துடன் இலா­ப­மீட்டும் நிறு­வ­ன­மான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தை தனது சுய நல­னுத்­திற்­காக அர­சு­டை­மை­யாக்கி மைத்­துனர் மயப்­ப­டுத்­தி­யது மஹிந்த ராஜ­ப­க்ஷ­வாகும். மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­யிட்ட பணத்­தையே மே தினத்­திற்கு பொது எதி­ர­ணி­யினர் செல­வி­ட­வுள்­ளனர். தொகுதி அமைப்­பாளர் ஒரு­வ­ருக்கு ஒரு இலட்சம் ரூபா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடை­பெ­று­மானால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில விக்­கி­ர­சிங்­கவும் நேருக்கு நேர் மோத வேண்­டிய நிலைமை ஏற்­படும். அடுத்த தேர்­தல்கள் தொடர்பில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் இடை­யில எந்­த­வொரு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு நலின் பண்­டார எம்.பி மேலும் குறிப்­பி­டு­கையில்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தாய்­லாந்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போது முன்னாள் ரஷ்ய தூது­வ­ராக பதவி வகித்­தி­ருந்த உத­யங்க வீர­துங்­கவை சந்­தித்து பேசி­யுள்ளார். இதன்­போது முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரி­ஸூடன் இணைந்­தி­ருந்த எடுத்த புகைப்­படம் வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.

முன்னாள் ரஷ்ய தூது­வ­ராக பதவி வகித்­தி­ருந்த உத­யங்க வீர­துங்­க­விற்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. அவற்றில் ஆயுதம் பரி­மாற்றல் மோசடி பார­தூ­ர­மா­ன­தாக உள்­ளது. மேலும் கொலை வழக்கில் சந்­தேக நப­ரா­கவும் அவர் விளங்­கு­கின்றார். இவர் மீதான விசா­ர­ணை­களை புல­னாய்வு பிரி­வினர் முன்­னெ­டுத்து வரும் நிலையில் அவர் வெ ளிநாட்டில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து இலங்கை பொலிஸ் இன்­டர்­போலின் உத­வியை தற்­போது நாடி­யுள்ள தரு­வாயில் குறித்த புகைப்­படம் வெ ளியா­கி­யமை பெரும் பரப்­ப­ரபை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில் தனது உற­வி­ன­ரான உத­யங்க வீர­துங்­கவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே மறைத்து வைத்­துள்ளார். எனவே அவர் தொடர்­பி­லான அனைத்து தக­வல்கள் மஹிந்த ராஜ­பக்ஷ அறிந்­தி­ருப்பார். தற்­போது இடை­ந­டுவே நிறுத்­தப்­பட்­டி­ருக்கும் உதய வீர­துங்­கவின் விசா­ர­ணை­களை மீளவும் ஆரம்­பிக்கும் வகையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வி­டமும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரி­ஸி­டமும் உட­ன­டி­யாக வாக்­கு­மூ­லங்­களை பெற்று இன்­டர்­போலின் உத­வி­யுடன் உத­யங்க வீர­துங்­கவை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும்.

எயார் லைன்ஸ் மோசடி

46 ஆயி­ரத்து 127 கோடி ரூபா நஷ்­டத்தில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் இயங்­கு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்வே பிர­தான கார­ண­மாகும். அதி­க­ளவில் இலா­ப­மீ்ட்டும் நிறு­வ­ன­மாக செயற்­பட்ட விமான சேவை நிறு­வ­னத்தை மைத்­துனர் மயப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சு­டை­மை­யாக்­கினார். இதனால் தற்­போ­தைய அர­சாங்கம் பாரிய சிக்­க­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அத்­துடன் விமான தயா­ரிப்பு பணி­களை பொறுத்­த­மட்டில் எட்டு விமா­னங்­களில் நான்கு விமா­னங்­க­ளுக்­கான தயா­ரிப்பு பணி­களை அவ­ச­ர­மாக இடை­நி­றுத்­தி­யுள்ளோம். எனவே நாட்டு மக்­களின் சுமையை குறைக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சி்ங்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தை தனி­யா­ருடன் கைகோர்த்து இலா­ப­மீட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்ளார். எனினும் இதனை அர­சியல் கருப்­பொ­ரு­ளாக எடுத்து கொண்டு நாட்டின் உடை­மை­களை தனி­யா­ருக்கும் விற்­பனை செய்யும் திட்­டத்தை மீளவும் ஆரம்­பித்­துள்­ள­தாக பொது எதி­ர­ணி­யினர் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். நாட்டின் பொரு­ளா­தார சீர்­கு­லைப்­ப­தற்கு பிர­தான கார­ணங்­களில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் நட்டம் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றது.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தின் நஷ்டம் மற்றும் கடன் தொகை­களை கொண்டு கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லையை போன்று 10 நெடுஞ்­சா­லை­களை நிர்­மா­ணிக்க முடியும். மேலும் துறை­முக நகர் திட்டம் போன்று 2 நகர்­களை உரு­வாக்க முடியும். மத்­தள விமான நிலையம் போன்று 18 விமான நிலை­யங்­களை நிர்­மா­ணிக்க முடியும். எனவே இவை­ய­னைத்து முன்­னைய ஆட்­சி­யாளர் கொள்­ளை­யிட்­டுள்­ளனர்.

இத­னூ­டாக விமா­னத்தில் செல்­வ­தனை கன­விலும் நினைத்­தி­ராத சாதா­ரண மக்கள் எயார் லைன்ஸின் கடனை போக்­கு­வ­தற்கு 23 ஆயி­ரத்து 63 ரூபா செலுத்த வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் மக்­களே பெரிதும் பாதிக்­கப்­ப­டுவார்.

மே தினம்

திரு­டர்கள் ஒன்று கூடும் கள­மாக இம் முறை பொது எதி­ர­ணியின் மே தினம் மாறி­யுள்­ளது. நாடு முழு­வ­தி­லி­ருந்தும் மக்­களை திரட்­டு­வ­தற்கு ஒரு அமைப்­பா­ள­ருக்கு ஒரு இலட்சம் ரூபா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்தும் முன்­னைய அட்­சியின் கொள்­ளை­யி­டப்­பட்­ட­வை­யாகும். ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் போன்ற இலா­ப­மீட்டி கொண்­டி­ருந்த நிறு­வ­னத்தை மைத்­துனர் மயப்­ப­டுத்­தி­யமை ஊடாக கொள்­ளை­யி­டப்­பட்ட பணங்கள் மே தினத்தின் போது செலவிடப்படுகின்றது.

மைத்திரி்க்கும் ரணிலுக்கும் ஒப்பந்தமில்லை.

ஐந்து வருடங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை. அடுத்த தேர்தலின் போட்டியிட போவது தொடர்பில் இதுவரைக்கும் பேசவும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில விக்கிரசிங்கவும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

http://www.virakesari.lk/article/5742

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.