Jump to content

இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா


Recommended Posts

இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா
 

article_1461834181-TamilshanaeLEAD-2.jpgஇங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது.

தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, விக்கெட் காப்பாளர்களான குசால் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, கௌஷால் சில்வா ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கௌஷால் சில்வா, தலையில் பந்து தாக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளதால், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களாக தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், ஷமின்ட எரங்க, சுரங்க லக்மமால், துஷ்மந்த சமீர ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷமின்ட எரங்க, 16 மாதங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அவர், குணமடைந்து, உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக இருபதுக்கு-20 தொடரில் சிறப்பாகச் செயற்பட்ட ஜெப்றி வன்டர்சே மற்றும் தனக்குக் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயற்பட்ட தரிந்து கௌஷால் ஆகியோருக்கு இடங்கிடைக்கவில்லை.

இடதுகைத் துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன, இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 20 பேர் கொண்ட தற்காலிகக் குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத போதிலும், தற்போது 17 பேர் கொண்ட இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் பிரகாசித்திருக்காத நிலையிலேயே (இறுதி 25 இனிங்ஸ்களில் 19.26 என்ற சராசரி), அவரது உள்ளடக்கம் அமைந்துள்ளது.

இத்தொடரின் முதலாவது பயிற்சிப் போட்டி மே 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு, முதலாவது டெஸ்ட் போட்டி, மே 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது அமையவுள்ளது.
இருதரப்பு டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கை அணி இறுதியாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றிருந்த போது, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/170899#sthash.VdC4Cf5o.dpuf
Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாமில் பத்து துடுப்பாட்டக்காரர்கள், ஏழு பந்துவீச்சாளர்கள்
2016-04-29 10:29:45

(நெவில் அன்­தனி)

 

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஆங்­கி­லேய மண்ணில் நடை­ பெ­ற­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்­னிட்டு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள 17 வீரர்­களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் 10 துடுப்­பாட்­டக்­கா­ரர்­களும் 7 பந்­து­வீச்­சா­ளர்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

16312Untitled-2.jpg

 

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இங்­கி­லாந்தை அதன் சொந்த மண்ணில் முதல்  தட­வை­யாக டெஸ்ட் தொடரில் வெற்­றி­கொண்ட ஏஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை­யி­லான இலங்கை அணியில் இடம்­பெற்ற இரு­வரைத் தவிர மற்­றைய அனை­வரும் குழாமில் இடம்­பெ­று­கின்­றனர்.

 

மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார ஆகிய இரு­வரும் ஓய்வு பெற்­று­விட்ட நிலையில் இங்­கி­லாந்தை ஹெடிங்லே அரங்கில் வீழ்த்­திய அணியில் இடம்­பெற்ற தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், திமுத் கரு­ணா­ரட்ன, கௌஷால் சில்வா, லஹிரு திரி­மான்ன, தினேஷ் சந்­திமால், தம்­மிக்க பிரசாத், ரங்­கன ஹேரத், ஷமிந்த எரங்க, நுவன் பிரதீப் ஆகியோர் தற்­போ­தைய குழா­மிலும் இடம்­பெ­று­கின்­றனர்.

 

உபா­தை­யி­லி­ருந்து மீண்­டுள்ள லஹிரு திரி­மான்ன உத்­தேச குழாமில் இடம்­பெ­றாத நிலையில் பிர­தான குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

இது­வரை டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டாமல் இருக் கும் சக­ல­துறை வீரர்­க­ளான தனஞ்­செய டி சில்வா, தசுன் ஷானக்க ஆகியோர் புது­மு­கங்­க­ளாக குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 

இவ்வருடம் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் சம்­பி­ய­னான தமிழ் யூனியன் கழ­கத்­திற்­காக விளை­யா­டிய தனஞ்­செய டி சில்வா, பத்து போட்­டி­களில் 3 சதங்கள், 4 அரைச் சதங்கள் அடங்­க­லாக 868 ஓட்­டங்­களைக் குவித்­த­துடன் 34 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றி­யி­ருந்தார். 

 

இருவர் புதுமுகங்கள்

தமிழ் யூனியன் அணியில் இடம்­பெற்ற முன்னாள் இலங்கை வீரர் தரங்க பர­ண­வித்­தாரன 3 சதங்கள், 5 அரைச் சதங்­க­ளுடன் 953 ஓட்­டங்­களைக் குவித்­த­போ­திலும் துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக அவ­ருக்கு இடம்­ கி­டைக்­க­வில்லை.

 

அதே­வேளை ஐந்து ப்றீமியர் லீக் இன்­னிங்ஸ்­களில் மாத்­திரம் விளை­யா­டிய தசுன் ஷானக்­க­வுக்கு இடம் வழங்­கப்­பட்­டுள்­ளமை ஆச்­ச­ரியம் தரு­வ­தாக அமைந்­துள்­ளது.

 

தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இலங்கை கிரிக்கெட்  குழாமில் ஏஞ்­சலோ மெத்யூஸ், உதவித் தலைவர் தினேஷ் சந்­திமால், திமுத் கரு­ணா­ரட்ன, கொஷால் சில்வா, குசல் மெண்டிஸ். லஹிரு திரி­மான்ன, தனஞ்­செய டி சில்வா, மிலிந்த சிறி­வர்­தன, நிரோஷன் டிக்­வெல்ல, தசுன் ஷானக்க ஆகிய பத்து துடுப்­பாட்­டக்­கா­ரர்கள் இடம்­பெ­று­கின்­றனர். இவர்­களில் சந்­திமால், கௌஷால் சில்வா, டிக்­வெல்ல ஆகியோர் விக்­கெட் ­காப்­பா­ளர்­களும் ஆவர்.

 

தம்­மிக்க பிரசாத், நுவன் பிர­ரதீப், ஷமிந்த எரங்க, சுரங்க லக்மால், துஷ்­மன்த சமீர ஆகிய ஐந்த வேகப்­பந்து வீச்­சா­ளர்­களும் ரங்­கன ஹேரத், டில்­ருவன் பெரேரா ஆக இரண்டு சுழல்­பந்­து ­வீச்­சா­ளர்­களும் குழாமில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

 

இங்­கி­லாந்­துக்கு எதிர்­வரும் மே 4 ஆம் திகதி புறப்­பட்டுச் செல்லும் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடருக்கு முன்னர் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடும்.

 

முதலாவது இன்வெஸ்டெக் டெஸ்ட் ஹெடிங்லே (மே 19-–23)
இரண்டாவது இன்வெஸ்டெக் டெஸ்ட் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் (மே 27-–31)
மூன்றாவது இன்வெஸ்டெக் டெஸ்ட் லோர்ட்ஸ் (ஜூன் 9-–13)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16312#sthash.Cb1vI6Zy.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.