Jump to content

'அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை!' -மிரட்டிய விஜயகாந்த்


Recommended Posts

'அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை!' -மிரட்டிய விஜயகாந்த்

 

v3.jpg

மதுரை: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'அமைதியாக இருங்கள் அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை' என்று தொண்டர்களை எச்சரித்தார்.

v51.jpg

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அப்போது, ''இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் போர். தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவி ஆசை பிடித்தவர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பணத்தாசை பிடித்தவர்.

v21.jpg

மதுரையில் துணை நகரம் அமைப்பது உள்ளிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று. தேர்தல் பொதுக் கூட்டங்களுக்காக அ.தி.மு.க.வினர் மின் திருட்டில் ஈடுபடுவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை" என்றும் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.

v1.jpg

அப்போது, கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எரிச்சலடைந்த விஜயகாந்த், "என்னை வாழ்க என்று சொல்வது அப்புறம் இருக்கட்டும். ஓட்டு போடுறாங்களான்னு பார்ப்போம். யார்ரா அது டேய்ய்... உள்ளே யார்ரா அது கத்துறது. நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன் கேக்கல. அறிவு கெட்டவங்களா.

v4.jpg

இங்க இருக்கவங்க எல்லாம் சும்பப்பயலுங்களா... சொல்லிக்கிட்டே இருக்கேன் உங்களுக்கு அறிவு இல்ல. சும்மா இருக்கணும்... அப்புறம் இவங்கள விட்டே விரட்டுங்கன்னுடுவேன் பாத்துக்கோ, பேசாத இரு. ஒருத்தன் விஜயகாந்த் வாழ்கங்றான், ஒருத்தன் கத்துறான் என்ன இது" என்று ஆவேசம் அடைந்தார்.

அந்த நேரம் விஜயகாந்த் அருகில் ஒருவர் வந்து ஏதோ சொல்ல... ''பாத்தீங்களா அவர்தான் என்னோட அசிஸ்டெண்ட். டயம் ஆச்சு நாம போகணுமே... போகணுமே என்று சொல்கிறார். நான் பேசணும் பேசணும் என்கிறேன்" என்றார். அப்போது மீண்டும் கூட்டத்தில் கூச்சல் ஏற்பட்டது.

உடனே தனது பேச்சை நிறுத்திய விஜயகாந்த், மேடையை சுற்றி வந்துவிட்டு, ''நான் எல்லோருக்கும் டாடா காட்டிவிட்டேன். இனி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்குமேல் நான் கெஞ்ச முடியாது. வேறுவிதமாகதான் நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும். ஆகையினால் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

விஜயகாந்த் தொடர்ந்து தொண்டர்களை ஆவேசமாக எச்சரித்ததால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

http://www.vikatan.com/news/politics/63110-be-careful-otherwise-will-act-differently.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த்... தனது கூட்டத்துக்கு  வரும் மக்களை வெருட்டியும், நாக்கை கடித்து, அடித்தும்... வாக்குகளை அள்ளி விடுவார் போலுள்ளது. Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்டன்.. தன்னை ஒரு சினிமா கீரோவாகவே போற வாற இடமெல்லான் நினைச்சுக் கொள்ளுறார் போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விஜயகாந்த்... தனது கூட்டத்துக்கு  வரும் மக்களை வெருட்டியும், நாக்கை கடித்து, அடித்தும்... வாக்குகளை அள்ளி விடுவார் போலுள்ளது. Smiley

:grin:

 

55 minutes ago, nedukkalapoovan said:

கப்டன்.. தன்னை ஒரு சினிமா கீரோவாகவே போற வாற இடமெல்லான் நினைச்சுக் கொள்ளுறார் போல. tw_blush:

இது வேறயா?

அந்தாள் தண்ணில, எந்த தொகுதில நிக்கிறேன் என்றே தெரியாம நிக்கிறார்.

சீமான் சொல்லற மாதிரி, இந்தாள் முதல்வர் ஆனா, தமிழர்கள் நாண்டு கிட்டு சாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கே கண்ணில விரலை விட்டு ஆட்டின மனுசன். இந்தப் பேட்டை ரவுடிகள் எம்மாத்திரம்...!!

வாற மாதத்திலிருந்து வருகிற முதலமைச்சர் விஜயகாந்த் வாழ்க....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

:grin:

இது வேறயா?

அந்தாள் தண்ணில, எந்த தொகுதில நிக்கிறேன் என்றே தெரியாம நிக்கிறார்.

சீமான் சொல்லற மாதிரி, இந்தாள் முதல்வர் ஆனா, தமிழர்கள் நாண்டு கிட்டு சாகலாம்.

இதைப் பார்த்தால்.. தமிழ்நாட்டுத் தமிழரை சினிமா மோகத்தில் இருந்து விடுவிக்க.. இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தேவைப்படும் போல இருக்குது. நீங்க என்னடான்னா.... சீமானும் நாம் தமிழர் கட்சியினரும்.. மிகப் பெரிய சவாலை தான் கையில் எடுத்திருக்கிறார்கள். அதற்கு தேசிய தலைவர் உந்துதலாக அவர்களுக்கு அமைந்தது தமிழனுக்கு ஒரு உருப்படியான அரசியலையாவது உருவாக்கும் என்று நம்புவோமாக. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

இதைப் பார்த்தால்.. தமிழ்நாட்டுத் தமிழரை சினிமா மோகத்தில் இருந்து விடுவிக்க.. இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தேவைப்படும் போல இருக்குது. நீங்க என்னடான்னா.... சீமானும் நாம் தமிழர் கட்சியினரும்.. மிகப் பெரிய சவாலை தான் கையில் எடுத்திருக்கிறார்கள். அதற்கு தேசிய தலைவர் உந்துதலாக அவர்களுக்கு அமைந்தது தமிழனுக்கு ஒரு உருப்படியான அரசியலையாவது உருவாக்கும் என்று நம்புவோமாக. :rolleyes:tw_blush:

சீமான் கூட நடிகர் என்று சொல்லுவானுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சீமான் கூட நடிகர் என்று சொல்லுவானுங்கோ...

சீமான் திரைத்துறை சார்ந்தவர் தான். இயக்குனர் தான். ஆனால் படித்தவர்.. தமிழர்.. எம் ஜி ஆர்.. ஜெயலலிதா.. குஷ்பு.. போன்று.. பெரிய நடிகர் அல்ல. ஆனால் தமிழகத்தை திரைத்துறை அல்லாதோரும் ஆண்டிருக்கிறார்கள்.. இந்த வெளிமாநில.. நடிகர் பட்டாளம்.. தமிழக அரசியலை ஆக்கிரமிக்க முதல். தமிழக சினிமா.. தமிழர்களை அதிகம் உள்வாங்கின்.. தமிழர்களே.. தமிழகத்தை ஆளும் இன்னொரு வகையும் சாத்தியம். tw_blush:

Link to comment
Share on other sites

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை நல்ல பழமொழி .

சீமான் மூன்றாம் தர நடிகர் 

நாலாம் தர அரசியல்வாதி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.