Jump to content

என்னங்க...


Recommended Posts

மனைவி "என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்!

பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.

வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.

கல்யாண வீட்டு கூட்டத்தில்”என்னங்க” என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால் பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்று அழைத்தால் டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள் என்று அர்த்தம்.

வெளியே எட்டி பார்த்தவண்ணம் ”என்னங்க” என்று அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால் பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ……..

இன்னும் உண்டு நிறைய ”என்னங்க” உள்ளது.

Thanks: FB

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வாங்க...

என்னங்க காணக்கிடைக்குதில்ல.....

நாற்சந்தியில் சிறி இருந்து அழுகுது  பாருங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இஞ்சேருங்கோவுக்கு என்னானது... பரினாம வளர்ச்சி அடைஞ்சிட்டோ.. tw_blush:

ஆண்களை ஏமாளிகளாக்க பெண்கள் பாவிக்கும் பசப்பு வார்த்தைகள் இவை. tw_yum:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான என்னங்கோவை அளவை மறந்து விட்டாரா இல்லை மறைத்து விட்டாரா...!

கிணற்றடியில் நின்டு என்னங்க என்றால்....

---  துணிகளைத் துவைத்துப் போடுங்கோ...!  tw_bawling: அல்லது  

--- தொட்டியை நிரப்பி விடுங்கோ...! tw_angry: அல்லது 

--- கை எட்டுதில்ல இந்த சோப்பை முதுகில ஹீ...ஹீ...ஹஈ...!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுக்கப் போகும் போது,  "என்னங்க....." என்று அழைத்தால், அதுக்கு என்ன அர்த்தம்.... 

Link to comment
Share on other sites

5 minutes ago, suvy said:

 

--- கை எட்டுதில்ல இந்த சோப்பை முதுகில ஹீ...ஹீ...ஹஈ...!!  tw_blush:

அண்ணை உங்கட கற்பனைத் திறனை என்னண்டு பாராட்றது.......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் வாசிக்கும்போது/TV பார்க்கும் போது என்னப்பா எனக் கூப்பிட்டு கால் ஒரே வலியாக இருக்கின்றது, அமத்தி விடுங்கள் என்பது.

Link to comment
Share on other sites

என்னங்க, போற போக்கைப் பார்த்தல் கனபேற்றை அனுபவங்கள் வெளிவரும் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி மனைவி கண்ணோடு பேசி பள்ளியில் கவிதை பாட அழைக்கும் அந்த இனிய "என்னங்க...சொல்லுங்க.. இப்போவா.." அழைப்பிற்கு ஈடும் உண்டா? vil2_cupidon.gif

மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்காதா?

வாழ்க்கையின் அர்த்தமும், அஸ்திவாரமும் அதுதானே?

அதைவிட்டு வளவளன்னு மற்றவற்றை பேசுகிறீர்களே?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

படுக்கப் போகும் போது,  "என்னங்க....." என்று அழைத்தால், அதுக்கு என்ன அர்த்தம்.... 

இதற்கு தெரியாத குறட்டை விட்டு சாகடிக்காதங்கோ என்று தான் நான் நினைக்கிறேன் ??

இன்னும் ஒன்று இருக்கிறது சொல்ல மாட்டேன் 

இப்ப எங்கே இஞ்சாருங்கோ, அப்பா, என்னங்க என்று கூப்பிட்டு கொள்கிறா சின்ன  பெயர் சொல்லி கூப்பிடுறாங்கள் இல்லை யென்றால் டாடி... டா.......... டி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாரும்....கேட்டுதேயப்பா நான் உந்த துவாயை கொண்டுவர மறந்து போனன்......பக்கெண்டு எடுத்துக்கொண்டு வாருமப்பா.....:love:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.