Jump to content

தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி


Recommended Posts

தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி

13076617_512154805639845_521215542936333

 

தேவையானவை:


மட்டன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 150 மில்லி
பெரிய வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 400 கிராம்
பெரிய எலுமிச்சை - 1 சாறு எடுக்கவும்
இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 15 கிராம்
புதினா , கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு
எஅம்ப இலை - 4
தேங்காய் - அரை மூடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஆட்டுக்கறியை நன்றாக கழுவி குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 விசில் வரை வேகவிட்டு இறக்கவும்.


பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம், ரம்ப இலை சேர்த்து வதக்கவும். இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

இத்துடன் மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை மட்டும் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி புதினா கொத்தமல்லித்தழை உப்பு மிளகாய்த்தூள் தக்காளி எலுமிச்சைச் சாறூ சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும். இத்துடன் தேங்காய்ப்பால் கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலவையை வேக விடவும்.


மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி, தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வடித்துக் கொள்ளவும். பிரியாணி கலவையில் அரிசியை உடையாமல் சேர்த்துக் கிளறீ நெய் மர்று கொத்தமல்லித்தழை தூவி சமமாக கலக்கவும்.


அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு அதம் மேல் சோறு வடித்த கஞ்சியை வைத்து மூடி 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி ரெடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ...அதுவும் மண்சட்டியில் மணியாத்தான் இருக்கு....! tw_blush:

நவீன் ஒரு முடிவோடதான் இருக்கிறமாதிரித் தெரியுது , என்னைக் கவிழ்ப்பதற்கு...!

Link to comment
Share on other sites

On 23.4.2016 at 9:12 AM, suvy said:

 

நவீன் ஒரு முடிவோடதான் இருக்கிறமாதிரித் தெரியுது , என்னைக் கவிழ்ப்பதற்கு...!

அவ்வளவு இலகுவாக நீங்கள் மாறமாட்டீர்கள் என்ற திடமான நம்பிக்கை இருக்கு சுவிஅண்ணா..:)

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • 6 months later...

சூப்பரான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி

 

மட்டன் பிரியாணி செய்யும் போது அதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 150 மில்லி
பெரிய வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 400 கிராம்
பெரிய எலுமிச்சை பழம் - 1 சாறு எடுக்கவும்
இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 15 கிராம்
புதினா , கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு
தேங்காய் - அரை மூடி
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

* தேங்காயை மிக்சியில் போட்டு தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

* ஆட்டுக்கறியை நன்றாக கழுவி குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 விசில் போட்டு வேகவிட்டு இறக்கவும்.

* பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

* இத்துடன் மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை மட்டும் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

* இத்துடன் தேங்காய்ப்பால், கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலவையை வேக விடவும்.

* மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி, தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் சாதத்தை வடித்துக் கொள்ளவும்.

* பிரியாணி கலவையில் அரிசியை உடையாமல் சேர்த்துக் கிளறி நெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சமமாக கலக்கவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு அதன் மேல் சோறு வடித்த கஞ்சியை வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.