Jump to content

ஒருநாள் யுத்த நிறுத்தமாம்..


Recommended Posts

 

20160413_195947.jpg

அருவி ஊற்றென
அழுது வடித்தவள்
அடங்கிக் கிடக்கிறாள்
பொருமி வெடித்திட
புழுங்கித் தவிக்கிறாள்
தழுவித் தகித்தவள்
தயங்கி நிற்கிறாள்

ஒற்றைநாள்
ஒருதலைப்பட்ச
யுத்த நிறுத்தமாம்
சத்தம்  இன்றி
சலனம் இன்றி
இப்போதான்
சற்று சிரித்துச்
சிவக்கிறாள்

சிவக்கிறாள்
சிரிக்கிறாள் இவளென
சிந்தை தெளிந்து
சிரிக்க முடியவில்லை
ஒருதலைப்பட்ச
ஒருநாள்
யுத்த நிறுத்தம் தானாம்

யுத்தம் எப்பவும்
சத்தத்தோடு வெடிக்கலாம்
பாதிப்பு முன்னதை விட
பலமாயும் இருக்கலாம்
யுத்த நிறுத்தம்
காலவரையற்று
நீடிக்கவும் படலாம்
எதற்கும் தயாராய்த்தான்
இருப்பை நிலை நிறுத்த
எடுத்தடி வைக்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
19.04.2016

 

http://inuvaijurmayuran.blogspot.ch/2016/04/blog-post_19.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகாக..ஆனால்..கொஞ்சம் பூடகமாக எழுதப்பட்டிருக்கின்றது!

நன்றி... தொடர்ந்தும் யாழுக்கு வருகை தாருங்கள்!

 

 

சற்றே சிரிக்கிறாள் தான்!

 

அந்தச் சிரிப்புக்கு உள்ளேயும்,

வெளியே சொல்ல முடியாத,

வேதனையின் சாயல்...,

புதைந்து கிடக்கின்றது போல..,

ஒரு பிரமை !

 

கொஞ்சம்...கொஞ்சமாக....

சோரம் போய்க் கொண்டிருக்கின்றாளா?

எங்கள் சொக்கத் தங்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுத் துப்பாகிகளுக்கு தீனி போடவும், ஆயுதக் கிடங்குகளை அள்ளி நிரப்பவும் அவர்களுக்கு...!

வெறும் வயிற்றுக்கு தீனி தேடவும், சிதைந்த பங்கரைச் சீரமைக்கவும் எங்களுக்கு....!

ஒருநாள் யுத்த நிறுத்தம்....!!

கவிதைக்கு நன்றி மயூரன்...!!

Link to comment
Share on other sites

On 19. April 2016 at 1:44 AM, புங்கையூரன் said:

கவிதை அழகாக..ஆனால்..கொஞ்சம் பூடகமாக எழுதப்பட்டிருக்கின்றது!

நன்றி... தொடர்ந்தும் யாழுக்கு வருகை தாருங்கள்!

 

 

சற்றே சிரிக்கிறாள் தான்!

 

அந்தச் சிரிப்புக்கு உள்ளேயும்,

வெளியே சொல்ல முடியாத,

வேதனையின் சாயல்...,

புதைந்து கிடக்கின்றது போல..,

ஒரு பிரமை !

 

கொஞ்சம்...கொஞ்சமாக....

சோரம் போய்க் கொண்டிருக்கின்றாளா?

எங்கள் சொக்கத் தங்கம்!

நன்றி புங்கையூரானே!

பாராட்டுக்கும் கருத்திடலுக்கும், கவிக்கும்.

ம் இது ஒரு பூடக்க்கவியே.

On 20. April 2016 at 0:36 PM, suvy said:

வெற்றுத் துப்பாகிகளுக்கு தீனி போடவும், ஆயுதக் கிடங்குகளை அள்ளி நிரப்பவும் அவர்களுக்கு...!

வெறும் வயிற்றுக்கு தீனி தேடவும், சிதைந்த பங்கரைச் சீரமைக்கவும் எங்களுக்கு....!

ஒருநாள் யுத்த நிறுத்தம்....!!

கவிதைக்கு நன்றி மயூரன்...!!

நன்றி சுவி தங்கள் வரவுக்கும் கருத்திடலுக்கும .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது, மயூரன்.

Link to comment
Share on other sites

வரவுக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழி தெரியாத ஏறிகணையே

வந்து பார்க்கவும் வாசல் இல்லா

வீடும் வகையிலா உடலும்

வழியிலா பாதையும் 

வரண்ட முகமும் கரைந்த விழியும்

கால் நடா இடமும் தேடி அலைகிறோம். கரைகள் தேடி

 மீண்டும் வராதா யுத்த நிறுத்தம் 

மயூரன் அண்ணா நன்றாக இருக்கிறது. 

 

Link to comment
Share on other sites

On 25. April 2016 at 7:50 AM, முனிவர் ஜீ said:

வழி தெரியாத ஏறிகணையே

வந்து பார்க்கவும் வாசல் இல்லா

வீடும் வகையிலா உடலும்

வழியிலா பாதையும் 

வரண்ட முகமும் கரைந்த விழியும்

கால் நடா இடமும் தேடி அலைகிறோம். கரைகள் தேடி

 மீண்டும் வராதா யுத்த நிறுத்தம் 

மயூரன் அண்ணா நன்றாக இருக்கிறது. 

 

வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி முனிஜீ :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.