Jump to content

ஏமாறும் அப்பாவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார்.

இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார்.

ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவனத்திடம் எடுத்து வைத்துக் கொண்டு தனக்கு பணத்தை தாருங்கள்.... ஏதாவது பிரிச்சனை எண்டால் என்னிடம் வாருங்கள் என்று சொல்லிவைத்துள்ளார். காருக்கு இருப்பதை போல இதுவும் சட்டப்படி கட்டாயம் தேவை, இல்லாவிடில் வீட்டைப் 'பறித்து' விடுவார்கள் என்று சொல்லிவைத்துள்ளாராம்.

சுத்துரார் உங்களை என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவரோ அசையவில்லை. எதுக்கு வில்லங்கம், அப்படியே இருக்கட்டுமே என்றார்.

பிறகு ஐபாட்டில் பிரவுஸ் பண்ணி உங்களுக்கு £168 வருகிறதே என்றேன். ஏதோ நான் சுத்த முனைவதாக நினைத்தாரோ, பார்ப்போம் என்றுவிட்டு நடையைக் கட்டினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம்..

லண்டனில்.. வாடகைக்கு வீடு விடும் எம்மவர்கள்.. அக்கிரீமென்டில்.. 1000 பவுன் என்று போட்டிட்டு கவுன்சில் காசை அப்படியே வாடகை விடுனருக்கு அனுப்பச் சொல்லிட்டு.. கையால மேலதிகமாக 400 பவுன் வேண்டினம். இதெல்லாம் கவுன்சில்களுக்கு தெரிவதில்லை.

3 வீட்டை வரி ஏய்ப்புச் செய்து.. வாங்கிறது.. அதுக்கு மேர்கேஜ் இப்படித்தான் கட்டுப்படுகுது + கூடுதல் வருமானம் வைக்கப்படுகிறது. வீட்டை வாடகைக்கு விட்டால்..அதனை ஒருபோதும் பழுது பார்ப்பதில்லை. குறித்த குடியிருப்பாளர் வீட்டை விட்டு எழும்பும் வரை அவரே வீட்டில் ஏற்படும் பழுதுகளுக்கும் பொறுப்பாம்.

இப்படி எத்தனையோ அநியாயங்கள்.. லண்டனில் எம்மவர்களால்.. எம்மவர்கள் மீதே நடத்தப்பட்டு வருகிறது. பாவங்கள் ஊரில் இருந்து ஆங்கில அறிவும் இன்றி இங்கு வந்து கஸ்டப்பட்டு உழைத்து.. இப்படி ஊரை அடிச்சு உலையில போடுபவர்கள் சிலருக்கு கொடுப்பது.

இப்படி வீடு விட்ட ஒருவர்.. இப்போ.. யாழ்ப்பாணத்தில் பெரிய ஹோட்டல் கட்டிட்டாராம்.  :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் அல்ல இப்படிப் பலர் இங்கே தமிழர் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு ஊரில் பவுசு காட்டுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் அதென்ன 7 வருடக்கணக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

நாதம் அதென்ன 7 வருடக்கணக்கு?

கிரெடிட் கார்டு, லோன் போன்ற கடன்களை வாங்கி காட்டாவிடில், கிரெடிட் ரெபரன்ஸ் ஏஜென்சி அந்த விபரங்களை வைத்திருக்கும். மேலும் கடன் எங்காவது கேட்டால், அவர்கள் இந்த அஜென்சி பைல் பார்த்து, அம்மா, தாயி, என்ன நக்கலா?  எண்டு கும்புடு போட்டு விடுவார்கள்.

இந்த விபரங்களை, ஏஜென்சி, சட்டப் படி 7 வருடங்களின் பின்னர் வைத்திருக்க முடியாது என்பது அரசு தரும் ஒரு சலுகை.

ஆகவே 7 வருடங்களின் பின்னர் கூட மீண்டு எழ முடியும்.

மேலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், கனடாவில் வழங்கிய காட்டின், கடன் கட்டாத ஒரே ஆளின் விபரங்களை, அந்த ஆள் ஐரோப்பாவில் இருப்பதாக அறிந்தாலும், தனது ஐரோப்பிய கிளைக்கு அனுப்ப முடியாது.  அதாவது வேறு நாட்டு (மோசடி அல்ல) கடனுக்கு, இன்னோர் நாட்டில் திரத்த முடியாது.

அதுதானோ சீட்டு காசு சுத்திப் போட்டு வேற நாடுகள் எங்கண்ட ஆக்கள் ஓடுறவை என்றோ கேளாதீங்கோ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன்?  தமிழனிடம் தான், தமிழன்  அல்வா கொடுக்க,  முனைகிறார்கள்?
மற்ற நாட்டவனிடம், அல்வா.... கொடுத்தால், வாங்க மாட்டார்களா? 
அல்லது.... முதுகு முறிய வாங்கிப் போடுவோம் ....என்ற, அச்சமா?
இதற்கான காரணத்தை... உங்களிடமிருந்து அறிய ஆவல்.

நான் பழகிய அளவில்... துருக்கியனோ, ரஷ்சியனோ.. தனது இனத்தவனை கண்டால்.... தனது நேரத்தையும், கைக்காசையும் போட்டு.... அந்த அப்பாவி மனிதனை ஆபத்தில்ருந்து காப்பாற்றி விடுவார்கள். இந்தக் குணம், தமிழரில் இல்லாமல் போனது... ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் Default ஐ சொல்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த உடன்பிறப்புக்களையே ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் தமிழர்கள் வாழும் நாடு இலண்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதமுனி ஒரு அப்பாவிகள் கூட்டம் என எழுதியுள்ளார். இங்கு கருத்து எழுதுபவர்கள் இலண்டனில் வாழும் தமிழர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர் என்பது போல எழுதுகின்றார்கள். இப்படி எழுதுவதன் மூலம் தாங்கள் சுத்தமானவர்கள் அறிவாளிகள் என காட்ட நினைக்கின்றார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து எல்லா இடத்திலையும் இருக்கு...நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் அவ்வளவுதான் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாசன் said:

நாதமுனி ஒரு அப்பாவிகள் கூட்டம் என எழுதியுள்ளார். இங்கு கருத்து எழுதுபவர்கள் இலண்டனில் வாழும் தமிழர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர் என்பது போல எழுதுகின்றார்கள். இப்படி எழுதுவதன் மூலம் தாங்கள் சுத்தமானவர்கள் அறிவாளிகள் என காட்ட நினைக்கின்றார்களா? 

இது எழுதுவதன் நோக்கம், அலெர்ட் ஆக இருங்கள் என்பது தான்.

சொல்வதால் நான் ஏதோ அலெர்ட் ஆன பேர்வழி கிடையாது. இரு வருடம் காண்ட்ராக் மொபைல் போன் எடுத்து இருந்தேன். மாதம் £44.

முடிந்து ஆறு மாதம் என்பதை கடந்த வாரம் உணர்ந்து, எவ்வாறு போன்  காசு கட்டி முடித்த பின்னும் அதே தொகை எடுப்பீர்கள் என்று கேட்டால், நீ தான் கவனமாக இருந்திருக்க வேண்டுமாம்.

எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் ஒவொருவருக்கும் ஒரு 'ஏமாறும் தருணம்' உண்டு. அது அடுத்தவருக்கு 'வாய்ப்பான தருணம்' ஆக இருக்கும்.

இதைத்தான், டார்வின், 'தக்கன பிழைக்கும்' என்று சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குத்தான் நான் வீடே வேன்டேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thirdeye said:

இதுக்குத்தான் நான் வீடே வேன்டேல்ல.

சோசல் கெல்ப்பிலை இருந்தால் என்னெண்டு வீடு வாங்கிறது????? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Thirdeye said:

இதுக்குத்தான் நான் வீடே வேன்டேல்ல.

கோசன், அர்ஜுண் அண்ணர், மாதிரி 24 மணித்தியாலமும் யாழ் திண்ணையில இருந்தால், வீடு எதுக்கு? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, குமாரசாமி said:

சோசல் கெல்ப்பிலை இருந்தால் என்னெண்டு வீடு வாங்கிறது????? :(

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு மூண்டுதரம் பெயிலியர். ஆபிரிக்கா ரஸ்யா எண்டு அழிச்சாகாசு எஜென்சிக்கு மூன்டுதரம் தாரவாத்தது வட்டிக்கு வட்டி கட்டினது என்டு விட்ட முதல் எல்லாம் இவங்களிட்ட எடுக்காம ஆரிட்ட எடுக்கிறதாம்?

9 hours ago, Nathamuni said:

கோசன், அர்ஜுண் அண்ணர், மாதிரி 24 மணித்தியாலமும் யாழ் திண்ணையில இருந்தால், வீடு எதுக்கு? :grin:

அதான. எனக்கு ஊரில நல்ல பெரிய வீடிருக்கு.போனா இந்த வெயிலுக்கு வாங்கை.இழுத்துப்போட்டு மல்லாந்து படுத்தா..அப்பப்பா, என்னா சுகம்.. என்ன மண்ணாங்கட்டிக்கு எனக்கு இஞ்ச வீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறவை கெதியா போங்கோ அங்கால இன்னொரு தமிழ் பேசும் இனம் பெருகிவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

போறவை கெதியா போங்கோ அங்கால இன்னொரு தமிழ் பேசும் இனம் பெருகிவருகிறது.

அப்ப நீங்கள் போக மாட்டியள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

போறவை கெதியா போங்கோ அங்கால இன்னொரு தமிழ் பேசும் இனம் பெருகிவருகிறது.

 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப நீங்கள் போக மாட்டியள்

 

ஒருக்கா போட்டு வரவேணும்... கத்திரி வெயிலைப் பத்தி கேள்விப்பட்டு பயமா இருக்கு. 30 - 40 டிகிரி.

முக்கியமா பெரிய சண்டை நடந்த பரந்தன், முல்லைத்தீவு ரோட்டில நமக்கு கொஞ்சம் காணிகள் இருந்தது. விசுவமடுவுக்கு கொஞ்சம் தள்ளி...

என்ன நிலைமை, புத்தர் வந்து குந்தி இருக்கிறாரோ எண்டு பார்க்க வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப நீங்கள் போக மாட்டியள்

 

அவபோகமாட்டா.. போனா பருப்போடுமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

ஒருக்கா போட்டு வரவேணும்... கத்திரி வெயிலைப் பத்தி கேள்விப்பட்டு பயமா இருக்கு. 30 - 40 டிகிரி.

முக்கியமா பெரிய சண்டை நடந்த பரந்தன், முல்லைத்தீவு ரோட்டில நமக்கு கொஞ்சம் காணிகள் இருந்தது. விசுவமடுவுக்கு கொஞ்சம் தள்ளி...

என்ன நிலைமை, புத்தர் வந்து குந்தி இருக்கிறாரோ எண்டு பார்க்க வேண்டும்...

சட்டுப் புட்டெண்டு  போயிறங்காமல்... லைக்கா எண்ட நாயை விண்வெளிக்கு அனுப்பிப் பாத்த மாதிரி..ஆரையும் முதல்ல அனுப்பி விசாரியுங்கோ!

என்ர அனுமானத்தின் படி..புத்தரும் இல்லை...வயிரவரும் இல்லை...ஹிஸபுல்லாவாக இருக்கும் சாத்தியங்கள் தான் அதிகம்!:love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப நீங்கள் போக மாட்டியள்

 

என்னிடம் இரட்டைக்குடியிருமை இல்லை. அதனால் நிரந்தரமாக போகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

2 hours ago, Nathamuni said:

 

ஒருக்கா போட்டு வரவேணும்... கத்திரி வெயிலைப் பத்தி கேள்விப்பட்டு பயமா இருக்கு. 30 - 40 டிகிரி.

முக்கியமா பெரிய சண்டை நடந்த பரந்தன், முல்லைத்தீவு ரோட்டில நமக்கு கொஞ்சம் காணிகள் இருந்தது. விசுவமடுவுக்கு கொஞ்சம் தள்ளி...

என்ன நிலைமை, புத்தர் வந்து குந்தி இருக்கிறாரோ எண்டு பார்க்க வேண்டும்...

2010, 2011, 2012, 2014 & 2015 என்று போய்வந்திருக்கிறேன். அடுத்த மாதமும் போவதற்கு ரிக்கெட் நவம்பர் மாதமே புக்பண்ணியாகிவிட்டது. 2010 சென்ற போது நிரந்தரமாக போவதற்காக வேலைக்கு முயற்சி செய்தேன். அரச உத்தியோகம் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கடினமாக இருந்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

என்னிடம் இரட்டைக்குடியிருமை இல்லை. அதனால் நிரந்தரமாக போகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

2010, 2011, 2012, 2014 & 2015 என்று போய்வந்திருக்கிறேன். அடுத்த மாதமும் போவதற்கு ரிக்கெட் நவம்பர் மாதமே புக்பண்ணியாகிவிட்டது. 2010 சென்ற போது நிரந்தரமாக போவதற்காக வேலைக்கு முயற்சி செய்தேன். அரச உத்தியோகம் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கடினமாக இருந்தது.  

முதலில் ஒரு பள்ளியைப் பிடித்து இலவசமாக ஆங்கிலம் படிப்பியுங்கோ....

அதிபருக்கும், பிள்ளையளுக்கும் பிடிச்சால், வேலை எடுப்பது தொடர்பான மிச்ச வேலையை அதிபர் பார்ப்பார். 

சட்டத்தில் இடமுன்று.

ஆங்கில ஆசிரியர்களுக்கு சரியான தட்டுப்பாடு.

1 hour ago, புங்கையூரன் said:

சட்டுப் புட்டெண்டு  போயிறங்காமல்... லைக்கா எண்ட நாயை விண்வெளிக்கு அனுப்பிப் பாத்த மாதிரி..ஆரையும் முதல்ல அனுப்பி விசாரியுங்கோ!

என்ர அனுமானத்தின் படி..புத்தரும் இல்லை...வயிரவரும் இல்லை...ஹிஸபுல்லாவாக இருக்கும் சாத்தியங்கள் தான் அதிகம்!:love:

ஆள் விட்டுப் பார்ப்பதா?

கதைச்சுப் பாருங்களன். 

ஒரு சொந்தக்காரர், அவனைப் பிடியுங்க, இப்ப சும்மாதானே இருக்கிறான் என்று சொல்லுவார்.

சும்மா வீட்டுக்குள படுத்து தெரு அளந்து கொண்டு திரிவினம்.

கதைச்சோன்ன, அப்படி பிசி, இப்படி பிடுங்கிறன்.... என்றும் லீவு எடுத்துத்தான் போகவேனும் எண்டு பீலா விடுவினம்.

கடைசில பார்த்தா, பெரிசா ஏதாவது பெயருமா என்ற எதிர்பார்பில் தான் கதை.

அனுப்பினாலும், இந்தா போறன், நாளைக்குப் போறன்.... பிறகு போனே எடுக்காகினம்.

பேசாம நாமலே போய்ப் பார்க்க வேண்டியது தான்...

ஹிஸபுல்லா என்ன செய்வது. அவரது ஆக்களுக்கு அல்லா வத வத என்று பிள்ளைகளை கொடுத்தால்...

உங்க இலண்டனில எத்தனை பிள்ளையள் பெறுகினமோ அத்தனை பிள்ளைகளுக்கும் தனிரூம் உள்ள வீடு கொடுபட்டது. சோமாலிகள் எல்லாம் 7 , 8 என்ற கணக்கில் பெத்து, மாதம் 10,000, 12,000 என்று வீட்டு வாடகை அரசு கட்டும்.

இப்ப மாதம் அதிகூடி 500 மட்டும் தான் வாடகை மான்யம் என்ற நிலையில், சோமாலிகள் பிள்ளைப்பெறு பிறேக்.. :unsure:

Link to comment
Share on other sites

On 4/16/2016 at 9:50 AM, Nathamuni said:

இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார்.

இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார்.

ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவனத்திடம் எடுத்து வைத்துக் கொண்டு தனக்கு பணத்தை தாருங்கள்.... ஏதாவது பிரிச்சனை எண்டால் என்னிடம் வாருங்கள் என்று சொல்லிவைத்துள்ளார். காருக்கு இருப்பதை போல இதுவும் சட்டப்படி கட்டாயம் தேவை, இல்லாவிடில் வீட்டைப் 'பறித்து' விடுவார்கள் என்று சொல்லிவைத்துள்ளாராம்.

சுத்துரார் உங்களை என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவரோ அசையவில்லை. எதுக்கு வில்லங்கம், அப்படியே இருக்கட்டுமே என்றார்.

பிறகு ஐபாட்டில் பிரவுஸ் பண்ணி உங்களுக்கு £168 வருகிறதே என்றேன். ஏதோ நான் சுத்த முனைவதாக நினைத்தாரோ, பார்ப்போம் என்றுவிட்டு நடையைக் கட்டினார்.

எல்லா இடங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது அதிலும் வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் கோட் சூட் போட்டவன் ஏமாற்றமாட்டான் என்று பலர் இப்பவும் நம்புகின்றார்கள் .

ஏமாற்று செய்பவர்கள்  தாம் பேசும்போது ஏமாளிகளின் முகத்தை வைத்தே பிடித்துவிடுவார்களும்  இவரிடம் தொடர்ந்து கறக்கலாம் என்று .

உண்மை என்றுதான் நம்புகின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.