Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி

‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம்.

ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் லாபத்தில் 80% நமக்கும் 20% கம்பெனிக்கும் என பகிர்ந்தளிப்பதாகவும் அது சராசரியாக நமது முதலீட்டில் மாதத்திற்கு 30% குறையாமல் இருக்குமென்றும் நம்பவைத்து, காசுள்ளவனிடமும், பேராசைக்காரனிடமும் பணத்தைக் கறப்பதே இவர்கள் வேலை.

Binary_options_Average_Return_Deposit_Scores_Broker_Assets_Traders_Invest_Buy_Sell_ROI_Income

பைனரி ஆப்ஷன் என்பதை முழுதும் விவரிக்காவிட்டாலும் சுருங்கக்கூறின் இப்படிச் சொல்லலாம்.

உலகம் முழுக்க பண பரிவர்த்தனைகள் அதாவது ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் இன்னொரு நாட்டின் கரன்சியினை ஏதோ ஒரு காரணத்திற்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள். அதை வாங்கும்போதும், விற்கும்போதும் என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மானிப்பது கடைசியாய் இருக்கும் இரு எண்கள். எடுத்துக்காட்டாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்பது பேச்சு வழக்கில் நாம் சொல்வது. அதனை பண பரிவர்த்தனையின்போது 65.12864 என்றோ 64.98765 என்றோ இருக்கும். இந்த கடைசி இரு எண்கள் லட்சணக்கணக்கான டாலர்கள் பரிவர்த்தனையின்போது பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும். இந்த கடைசி இரு எண்களை மட்டும் வைத்து கிட்டத்தட்ட சூதாடுதலே “பைனரி ஆப்ஷன்” எனும் முறை. இதை சூதாட்டம் என ஒத்துக்கொள்ள மாட்டார்கள், இந்த துறையில் இருப்போர். இதே பைனரி ஆப்ஷன் வங்கிகளிலும், முறைப்படுத்தப்பட்ட பண பரிவர்த்தனைகளிலும் அர்த்தம் வேறு. அங்கு முறையான வகைப்படுத்தப்பட்ட பல நாட்டு கரன்சிகளை வாங்கினால் இந்த மதிப்பிற்கு எடுத்துக்கொள்வோம், விற்றால் இந்த விலைக்கு விற்போம் என எழுதியே வைத்திருப்பார்கள். பெரும்பாலான விமான நிலையங்களிலும், வங்கிகளிலும் காணலாம்.

இந்த பைனரி டிரேடிங் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவோ, ஒரு நாள் முழுக்க காத்திருந்து தீர்மானிப்பதாகவோ இருக்கலாம். நாம் அல்லது நமது சார்பாக விளையாடுபவன் ஒரு குறிப்பிட்ட கரன்சியோ, அல்லது கம்பெனிகளின் ஸ்டாக்கோ குறிப்பிட்ட அளவு விலை ஏறும் அல்லது குறையும் எனச் சொல்லி குறிப்பிட்ட தொகையை வைக்கலாம். நாம் சொன்னபடி நடந்தால் போட்ட பணம் இரட்டிப்பாகும். இல்லையெனில் முழுப்பணமும் போகும். பணம் இரட்டிப்பானால் 80% நமக்கும், 20% தளத்தை நடத்துபவனுக்கும் செல்லும். பணம் போனால், தளம் நடத்துபவனுக்கு 20%ம், மீதமுள்ளது நம்மைப்போல பணம் கட்டி சரியாகச் சொன்னவனுக்கும் போய்ச் சேரும் என்பது இம்மாதிரியான தளத்தை நடத்துபவர்கள் சொல்லும் விளக்கம். இதோடு நிறுத்த மாட்டார்கள். எங்கள் டிரேடர்கள் எல்லாம் பல ஆண்டுகள் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். உங்கள் பணம் 30%க்கு குறையாமல் வளர்வது உறுதி, அதுக்கு நாங்க கியாரண்ட்டி என முகத்தைக்கூட காட்டடாத ஒருவன் சொல்வான்.

இப்படிப்பட்ட வெப்சைட்டுகள், இவர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். இவர்களின் வெப்சைட்டில் எல்லாமே பக்காவாக இருக்கும். சந்தேகம் வராத அளவுக்கு வடிவமைத்திருப்பார்கள். கஸ்டமர் சப்போர்ட் என்ற பெயரில் இமெயில் ஐடி கொடுத்திருப்பார்கள். லைவ் சாட் இருக்கும். இது நீங்கள் பணம் போடும் வரையிலும் சிறப்பாக செயல்படும். அதன் பின்னர் ஒருபயலும் பதில் சொல்ல மாட்டான்.

இன்டர்நேஷனல் மணி லாண்டரிங் ( அதாவது தவறான வழியில் வந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டோம், முறையாக சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும் ) நடக்கவிட மாட்டோம் என்ற பீலாவெல்லாம் விட்டு நமது எல்லா தகவல்களையும் கறந்து விடுவார்கள்.

கறக்கும் தகவல்களில், குறிப்பாய் அடையாளம் காணும் சான்றிதழ்களில் முக்கியமானது நமது பாஸ்போர்ட். வெளிநாட்டில் வாழ்பவராக இருந்தால் அந்த நாடு வழங்கிய ஐடி கார்டுகள், (இந்தியாவில் இன்னும் நாங்கள் வர்த்தகம் தொடங்கவில்லை என்பார்கள் எல்லாப்பயல்களும்) தொலைபேசி எண் என கிட்டத்தட்ட நம்மைப் பற்றிய எல்லா விபரங்களையும் வாங்கிக் கொள்வார்கள்.
நமக்கு சராசரியாக 30 முதல் 40% வருமானம் மாதாமாதம் கிடைக்கும் என நம்மைச் சேர்த்துவிடுபவர் மூலம் நமக்குச் சொல்வார்கள்.

லாபத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் எனவும் அவர்களின் தளத்தில் எழுதி இருக்கும்.

சேர்த்துவிடுபவர் இப்படிப்பட்ட தளத்தின் விளம்பரங்கள் மூலம் கவரப்பட்டு நேரடியாக சேர்ந்தவராக இருப்பார், அல்லது யார்மூலமாகவோ கேள்விப்பட்டு அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு சேர்ந்தவராக இருப்பார். இதில் நல்ல லாபம் கிடைக்கிறதே, நாம் பெறப்போகும் பணத்தை நண்பர்களும் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்தில் சேர்த்து விடுவார்கள்.

குறைந்தபட்ச முதலீடு 100 டாலர் முதல் 250 டாலர் மட்டுமே என இணையத்தளத்துக்குத் தகுந்தாற்போல எழுதி இருக்கும். அது, நீங்கள் பணம் போடக்கூடிய ஆளா என்பதை அளக்கும் கருவி. அந்தப் பணத்தை போட்டதும் அதன் பின்னர் உங்களுக்கென ஒரு தனி ட்ரேடர் இருப்பதாகவும், உங்கள் பணத்தை அவர்தான் தினமும் நம் சார்பாக இணையத்தில் ஆன்லைனில் பண வர்த்தகம் செய்வார் எனவும் சொல்வார்கள். ஒரு ஸ்கைப் ஐடியைக் கொடுத்து இவரிடம் தொடர்பு கொள்ளுங்கள் எனச் சொல்லி விடுவார்கள்.

100 டாலர் முதலீட்டில் உங்களுக்கு 30 டாலர் மாதம் லாபம் கிடைக்கும். 1000 டாலர் முதலீடு செய்தால் 300 டாலர் மாதம் கிடைக்குமே என ஆசைகாட்டுவார்கள்.
உங்கள் கணக்கில் லாகின் செய்து பார்த்தால், தினமும் டிரேடிங் செய்ததாகவும், தினமும் இத்தனை லாபம் ஈட்டியதாகவும், சில நேரம் நஷ்டம் அடைந்ததாகவும், மொத்தத்தில் உங்களுக்கு 30% நிகர லாபம் மாதக்கணக்கில் வந்து சேர்ந்துவிட்டதாகவும் கணினித் திரையில் காண்பிப்பார்கள்.

1000 டாலர் போட்டோம், 300 டாலர் வந்திருக்கு. ஆஹா என மகிழ்ச்சியாய் இருக்கும் நேரத்தில் உங்களுக்கு இவன் பணத்தை நமக்குக் கொடுப்பானா என்ற லாஜிக்கல் சந்தேகம் வரும். அதை உடனே செயல்படுத்திப் பார்க்க 300 டாலரை எடுக்க ‘வித்ட்ராவல்’ அப்ளை செய்வீர்கள். உடனே உங்களுக்கெனவே அவதாரம் எடுத்த அந்த ட்ரேடர் ஸ்கைப்பில் உங்களுடன் பேச வேண்டும் என்பான். மிக மரியாதையாக, பணிவாக எப்போது உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றெல்லாம் கேட்பான். ‘நாம பணத்தை எடுக்க அப்ளை செஞ்சா, நம்ம பேங்க் அக்கவுண்ட்டுக்குப் பணம்தானே வரணும், இவன் ஏன் நம்மகிட்ட பேசுறான்’ என லேசாக, மிக லேசாக ஒரு பொறி தட்டினாலும், ‘இவன்ட்டதான நாம பேசணும், பேசிடுவோம்’ என ‘நமக்கு நாமே’ திட்டத்தில் சமாதானமாகி, அவனிடம் பேசத்தொடங்குவோம்.

ஊர் நிலவரம், மழைதண்ணி உண்டா, குடும்பம் குட்டி என்பனபோன்ற விஷயங்களுக்கிடையில் நாம் பேசும் பேச்சை வைத்து இன்னும் இவனை எத்தனை ஆயிரம் அல்லது நூறு டாலர்களை முதலீடு என்ற பெயரில் கறக்கலாம் எனக் கணக்கு போட்டுக்கொண்டிருப்பான். உரையாடலின் கடைசிவரை ‘வித்ட்ராவல் அப்ளை செய்திருந்தேனே, என்னாச்சி?’ என கேட்கக் கூச்சப்படும் அளவு நெருக்கமான நண்பன் போலப் பேசிக்கொண்டிருப்பான். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து அவனிடம் ‘ வித்ட்ராவலுக்கு அப்ளை செய்திருந்தேனே, இன்னும் வரவில்லையே’ எனக் கேட்டால், ‘பாத்தீங்களா… சொல்ல மறந்துபோச்சி. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்டுமெண்டுக்கு சொல்லி இருக்கிறேன்.வரும். ஆனால், உங்க பணம் உங்க கணக்கில் எவ்வளவு மீதி இருக்கோ அதுக்குத்தான் நான் டிரேடிங் செய்வேன். இப்ப 300 டாலரை எடுத்துட்டீங்கன்னா நான் 1000 டாலருக்குத்தான் டிரேடிங் செய்ய முடியும். பணம் அடிக்கடி எடுக்குற ஆளுக்கு நாங்க ரெகுலரா டிரேடிங் செய்றதில்லை’ எனச் சொல்லி ‘உங்களுக்கு என்ன, பணம் வருதான்னு செக் செய்யணும், அவ்வளவுதான?’ எனக்கேட்டுவிட்டு, ‘50 டாலரை அனுப்பி வைக்கிறேன் போதுமா?’ என உங்கள் கணக்கிற்கு 50 டாலரை அனுப்பி வைப்பான். நாம் முதலீடு செய்திருப்பது 1000 டாலராக இருக்கும்.

அடுத்த வலையை வீசுவான். ‘நீங்கள் இனிமேல் போடும் பணத்திற்கு நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து 50% கூடுதலாகப் போட்டு (போனஸ்) ஆன்லைன் பண வியாபாரம் செய்வோம். அதாவது கூடுதலாக போடும் பணம் உங்களுடையதில்லை. ஆனால் அதில் வரும் லாபம் முற்றிலும் உங்களுடையதே’ என ஆசைகாட்ட ஆரம்பிப்பான். அதாவது நீங்கள் 5000 டாலர் போட்டால் ‘கம்பெனி’ 2500 டாலரை கணக்கில் போடும். ஆக, 7500 டாலருக்கு உங்களுக்கு 30% வருமானம் கிடைக்கும். அசல் அப்படியே இருக்கும், டிரேடிங் கமிஷன் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கும். ஆக, அசலும், வட்டியும் சேர்ந்து கிட்டத்தட்ட 3 மாதத்திற்குள் உங்கள் பணம் 100%க்கு வளர்ந்து நிற்கும் – எங்கே? கம்ப்யூட்டர் திரையில்தான்.

இப்போது உங்களுக்குள் அபாய மணி வேகமாக அடிக்க ஆரம்பிக்கும். ‘இப்ப நாம போட்ட பணத்த முதல்ல எடுத்திருவோம். லாபமா வந்த பணத்தை வச்சி ஆன்லைன் பண வியாபாரம் செய்வோம்’ என நினைத்து ‘வித்ட்ராவல்’ அப்ளை செய்வீர்கள். முதலில் 50 டாலர் வந்த வேகத்தில் இந்தப் பணம் வராது. மயான அமைதி நிலவும். நமக்கென அவதாரம் எடுத்தவனிடம் ஸ்கைப்பில் பேச ஆரம்பிப்பீர்கள். இதுவரை நம்மை அழைத்து பேசிக்கொண்டிருந்தவன், இனி நாம் அழைத்தால் மட்டும் பதில் சொல்ல ஆரம்பிப்பான். மனசுக்குள், ‘மச்சி கடன் வாங்க இவ்ளோ அலையறோமேன்னு நினைக்காத, அவன் கடனை நம்ம கிட்ட இருந்து வாங்கும்போது அலைவான் பாரு’ என்ற வசனமெல்லாம் ஓடும்.

பொதுவாய் பணம் நம் கணக்குக்கு வர 3 முதல் 4 நாட்கள் எடுக்கலாம் எனச் சொல்வான். அதற்குள் அடுத்த சனி ஞாயிறு வந்துவிடும். எனவே அடுத்து ஒரு 3 நாள் என 10 நாள் ஓடி இருக்கும். மீண்டும் அவனைத் தொடர்புகொண்டு ‘என்னய்யா ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இப்ப ஏன் சார் எடுக்குறீங்க? ஒரு அருமையான திட்டம் வருது, அதுல போட்டீங்கன்னா ஒரே மாசத்துல 80% லாபம் கிடைக்கும், அதுக்குப் பிறகு எடுக்கலாமே’ என ஆரம்பிப்பான். ‘நீங்கள் முழுத்தொகையையும் போட வேண்டாம், அது ஹை ரிஸ்க் என்பதால் நாங்களே பாதிப்பாதியாக பிரித்து வழக்கமான மணி டிரேடிங்கில் 50% பணமும், கோல்ட் இன்வெஸ்ட்மெண்ட்டில் 50% எனவும் இடுவோம். ஒண்ணு போச்சின்னாகூட அசலுக்கு மோசமில்லை’ எனத் திட்டம் வகுத்து கொடுத்து நம் சபலத்தைக் கூட்டுவான்.

‘எப்பய்யா என் பணத்தை நான் எடுக்குறது?’ என நீங்கள் ‘அப்பன் மவனே சிங்கம்டா’ என லேசாக குரலுடைந்து கேட்க ஆரம்பித்திருப்பீர்கள். ‘இந்த கோல்ட் டிரேடிங் முடியட்டும், அப்புறமென்ன, நீங்கள் பெரிய பணக்காரர்தான்’ என்ற அளவில் பணம் போட்டவனை உசுப்பேற்றி விடுவான்.

‘இன்னும் ஒரு மாதம் தங்கத்துல போட்ட காசப்பத்தி மூச் காட்டக்கூடாது. டெய்லி கம்ப்யூட்டர்ல பாத்துக்கங்க. மணி ட்ரெடிங்க்குல போட்ட காசு வளர்றத பாத்துக்கலாம். ஆனா, தங்கத்துல போட்டது ஒரு மாசம் கழிச்சுதான் பாக்க முடியும். அடுத்த ஒரு மாசம் பாத்துட்டே இருந்தா உங்க மணி டிரேடிங் பணமே கிட்டத்தட்ட டபுள் ஆகி இருக்கும்.’
அதாகப்பட்டது, தங்கத்துல போட்ட காசு போனாக்கூட நம்ம காசு தப்பிச்சிருச்சி என்ற எண்ணம் நமக்கு வரும்.
தங்கத்தில் போட்ட பணத்தின் ரிசல்ட் வரும், சர்வ நிச்சயமாய் நீங்கள் போட்ட பணம் டபுள் ஆகி இருக்கும். ஆக, முதலும், வருமானமும் சேர்ந்து கிட்டத்தட்ட போட்ட பணத்தைவிட 3 மடங்கு ஆகி இருக்கும்.

‘அப்பாடா, இனி அசலை எடுத்துட்டு லாபமா வந்ததுல மீதிக்கதையை பாதுகாப்பாக ஓட்டுவோம்’ என மீண்டும் வித்ட்ராவல் அப்ளை செய்தால், நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டது தெரியும்.

அப்ளை செய்த அன்று கிட்டத்தட்ட 5000 டாலரில் இருந்த உங்க முதலீடு, மறுநாள் டிரேடிங்கில், 15 அல்லது 20 நிமிடங்களில் எல்லாப் பணத்தையும் உங்கள் ட்ரேடர் ஆன்லைன் டிரேடிங்கில் இழந்துவிட்டதாக உங்கள் கம்யுட்டர் திரை சொல்லும். கொஞ்சம் பிபி இல்லாத ஆளாய் இருந்தால் பிழைத்தான். இல்லையெனில் சஹஸ்ரநாமம் போல ‘என்ன, சேர் மார்கெட்டுல போட்ட ஒரு லட்சம் போச்சா?’ எனக் கேட்டக்கொண்டே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியதுதான்.
எந்த முட்டாளாவது முதல் தடவை போட்டு நஷ்டம் அடைந்ததும் அடுத்தடுத்து முழுப்பணத்தையும் தொலைப்பானா? ஆனால், அப்படித் தொலைத்ததாக கணக்கு காண்பித்துவிட்டால், அவன் உங்களை மோசடி செய்யவில்லை, ஆன்லைன் வியாபாரத்தில் நேர்ந்த இழப்பு என்றாகிவிடும். ‘இந்த ரிஸ்க் இதில் இருக்கே. அது தெரிந்துதானே போட்டீர்கள்’ என நம்மைத் திருப்பிக்கேட்க வசதியாக இப்படி கம்ப்யூட்டர் திரையில் காண்பிப்பார்கள்.

உண்மையில் இந்த பைனரி டிரேடிங்காரர்கள் செய்வது, அவர்களின் வலைத்தளத்தில் தினமும் வியாபாரம் நடப்பதாகக் காட்டும் ஒரு மென்பொருளை வைத்துக்கொள்வது மட்டுமே.

பணத்தை நம்மிடம் இருந்து வசூலிக்க ஒரு வங்கிக்கணக்கு. அது சைப்ரஸிலொ, அல்லது பிரிட்டனிலோ, அல்லது ஏதேனும் ஒரு அத்துவான காட்டிலோ இருக்கும். நம்மிடம் பணம் பிடுங்க முடிந்தவரை நம்மிடம் தொடர்பில் இருப்பார்கள். இந்த வியாபாரம் நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட ஒரு பயலும் தன்னுடைய புகைப்படத்தைக்கூட போட்டுக்கொள்ள மாட்டான். அவர்களின் ‘கம்பெனி’யின் படத்தை மட்டுமே ப்ரொபைல் படமாக வைத்துக்கொள்வார்கள்.
பணம் போனபின்னர் நீங்கள் ஸ்கைப்பில் அவனை 10 முறை அழைத்தால் ஒருமுறை வந்து ‘இன்ஷுரன்ஸ் ஆட்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம், மார்கெட் கிராஷ் ஆகிடுச்சி’ என்பார்கள். ‘எவண்டா ஆன்லைன் மணி ட்ரேடிங்குக்கு இன்ஷுரன்ஸ் தாரான்?’ எனக்கேட்டால் அதற்கும் ஒரு மொக்கை பதில் வைத்திருப்பார்கள். நீங்கள் மெயில் மேல் மெயில் போட்டு ‘ஒழுங்கா நான் போட்ட பணத்தை தரியா, இல்லை இன்டர்போலில் கம்ப்ளெய்ண்ட் செய்யட்டுமா?’ என நாம் எழுதும் மெயில்களை நமக்குத் தெரியாத ஏதோ ஒரு நாட்டில் இருந்து சிரித்துக்கொண்டே படித்துக் கொண்டிருப்பான்.
பேராசை பெரு நஷ்டம் என்பதை சில லட்சங்களை இழந்து கற்றுக்கொண்டிருப்பீர்கள்.

இப்படிப் பணத்தை இழந்தவர்களின் சோகக் கதையை இங்கே (http://www.forexpeacearmy.com/ ) படிக்கலாம். இதைப்பார்த்த பிறகாவது ‘ஆன்லைன் மணி ட்ரேடிங்க்கில் பணம் கொட்டுதாம்ல’ என விட்டில் பூச்சிகளாய் விழாமல் இருக்கலாம்.

- See more at: http://solvanam.com/?p=44376#sthash.XPTBY6za.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.