Jump to content

தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும்(நிலாந்தன்)


Recommended Posts

 

1400297_10208724364295621_39277147973962
தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான
விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம்.
 
Link to comment
Share on other sites

இந்த நிகழ்விற்கு நான் செல்லவில்லை ஆனால் நேற்று ஒரு கலந்துரையாடல் வைத்து மனம விட்டு பேசினோம் .

நாட்டில் இருப்பதால் வெளிப்படையாக பேச சற்று தயங்கினாலும் கூட்டமைப்பு அரசியலில் நிலாந்தன் சற்றும் திருப்தியில்லை என்று அவர் பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது .

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்தபின் பாரிய மாற்றங்கள் நாட்டில் வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வு என்ற எதையும் வைக்கஅவர்களுக்கு விருப்பமில்லை ஆனால் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயல்களில் இறங்கி அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை குறைத்து தீர்வை இழுத்தடிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது என்றார் ,

அதனால் சர்வதேசத்தை எமக்கான தீர்வு வைக்க நாங்கள் தான் போராடவேண்டும் என்பதுதான் அவர் கருத்து .

பல விடயங்கள் சற்று குழப்பமாகத்தான் அவர் பதில் இருந்தது .எதிர்பார்த்த திருப்தி அந்த சந்திப்பில் எனக்கு ஏற்படவில்லை .

Link to comment
Share on other sites

11218800_1155286404502750_12747645141191

நிலாந்தன் ,ஷோபா ,ரகீம் முரளி எல்லோரும் நிற்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் உண்மையை உள்ளதை விபரித்துள்ளார். ஆனாலும் புலம்பெயர்ந்த ஒருசிலர் திருந்த வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Sakkaravarththi Jaffna said:

தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான

விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும்

இதை எல்லோரும் சொல்லி வகுப்பெடுக்கின்றார்கள் ,பூனைக்கு யார் மணிகட்டுவது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நிலாந்தன் உண்மையை உள்ளதை விபரித்துள்ளார். ஆனாலும் புலம்பெயர்ந்த ஒருசிலர் திருந்த வாய்ப்பில்லை.

இவர் சொல்லுறதைத்  தானே நாங்க எல்லாம் யாழ் களத்தில் பக்கம் பக்கமா சொல்லுறம்.. அதைக் கேட்க நாதியற்றவர்கள்.. போட்டோ பிடிக்க மட்டும் முன்னாடி போய் குந்திடுறார்கள். நானும் நானும் என்று ஊருக்கு விடுப்புக்காட்ட. வேற ஒரு மண்ணாங்கட்டி அரசியலும் தெரியாது.. உதுங்க சிலதுக்கு. எல்லாம் ஓசி விளம்பரத்துக்கு மட்டுமே.tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, arjun said:

நாட்டில் இருப்பதால் வெளிப்படையாக பேச சற்று தயங்கினாலும் கூட்டமைப்பு அரசியலில் நிலாந்தன் சற்றும் திருப்தியில்லை என்று அவர் பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது .

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்தபின் பாரிய மாற்றங்கள் நாட்டில் வந்தாலும் தமிழர்களுக்கான தீர்வு என்ற எதையும் வைக்கஅவர்களுக்கு விருப்பமில்லை ஆனால் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயல்களில் இறங்கி அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை குறைத்து தீர்வை இழுத்தடிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது என்றார் ,

என்னண்ணை செய்வது ...நாட்டில் இருந்து வந்திருக்கிறார் ...அரசியல் ஆய்வாளர் பெயர்  வேறு...... உண்மையை தானே சொல்லவேண்டும் .....
வெட்டுவோம் ....புடுங்குவோம் ...சிங்களவன் தீர்வை தட்டில் வைத்துகொண்டிருக்கிறான் எடுக்க எங்களுக்கு தான் மனசில்லை என்று கதையடிக்க 
முன்னாள் / இந்நாள் கூத்தமைப்பு எம்பீக்களை கூப்பிட்டிருக்க வேண்டும்..

9 hours ago, arjun said:

அதனால் சர்வதேசத்தை எமக்கான தீர்வு வைக்க நாங்கள் தான் போராடவேண்டும் என்பதுதான் அவர் கருத்து .

பல விடயங்கள் சற்று குழப்பமாகத்தான் அவர் பதில் இருந்தது .எதிர்பார்த்த திருப்தி அந்த சந்திப்பில் எனக்கு ஏற்படவில்லை

அதானே பார்த்தேன் ....சம்மும் சும்மும் பிரிச்சு மேய்கிறார்கள் ...தீர்வுக்கு இன்னும் ஒரு இன்ச் இடைவெளியில் தான் நிற்கிறோம் ....நாங்கள் கடப்பதா அவர்கள் கடப்பதா என்பதில் தான் பிரட்சினையே என்று கண்டபடிக்கு கப்சா விட்டு ...புலிகளையும் சகட்டுமேனிக்கு போட்டு தாக்கியிருந்தால்  இவரை போல ஒரு நல்ல, வல்ல ஆய்வாளரை வாழ்நாளிலேயே கண்டிருந்திருக்கமாட்டீர்கள். இந்தாள் உண்மையை பேசிப்போட்டுது  அதனால ஆளுமையும் குறைஞ்சிபோட்டுது  .....  எவ்வளவற்றை பார்த்துவிட்டோம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.