Jump to content

சென்னை ராயப்பேட்டை மட்டன் பிரியாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

   12321339_989518841095172_315517881831843

தேவையான பொருட்கள் :
மட்டன் கலவை:
மட்டன் – 400 கிராம்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்

* மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பாசுமதி அரிசி – 2 கப்
பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, அலசி பிறகு வடிகட்டவும்.
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி மற்றும் புதினா – கையளவு

தாளிக்க:
பட்டை – 1
கிராம்பு – 3
அன்னாசிபூ- 1
பிரியாணி இலை – 1
கல்பசி – கொஞ்சம்

செய்முறை:

1.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் கலந்து அடுப்பில் வைக்கவும்.

2.தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருட்களை 30 முதல் 40 நொடிகள் குக்கரில் தாளிக்கவும்.

3.இஞ்சி பூண்டு விழுதை வாசனை போகும் வரை வதக்கவும்.

4.பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

5.மிளகாய், மல்லி, கரம் மசாலா பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

7. இப்பொழுது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும்

8.பிரியாணி வாசனை கூட்டுவதற்காக தயிர் சேர்க்கவும்.

9.எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இக்கலவையை அடி பிடிகாமல் அடிகடி கிளறவும்.

10.இப்பொழுது மூன்று முக்கால் கப் தண்ணீர் ஊற்றவும்

11.இக்கலவையை 2 நிமிடம் சமைக்கவும்.

12.இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் போடவும்.

13.எண்ணெய் சூடான பிறகு, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

14.இந்த மட்டன் குக்கரில் சேர்க்கவும்.இத்துடன், பாசுமதி அரிசி சேர்த்து 15 நொடிகள் கிளறி குக்கரில் 3 விசில் வரும் வரை சமைக்கவும்.சூடாக பரிமாறவும்.

 

https://www.facebook.com/TASTYSAMAYAL/?fref=nf

Link to comment
Share on other sites

உண்மையிலேயே நல்லா இருக்கும். ராயபேட்டை பாய் கடையில் ஒரே ஒருமுறை சென்று சாப்பிட்டு பாருங்கள் சமீபத்தில் சென்னைக்கு செல்பவர்கள். அதுக்கு ஒரு தனி ருசி இருக்கு.

தலைப்பாகட்டு பிரியாணி 

ஆம்பூர் பிரியாணி 

ராயபேட்டை பிரியாணி 

இவை மூன்றும் சாப்பிட்டால் தான் சென்னைக்கு சென்றதுக்கே ஒரு பலன் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வீட்டில் கிட்ட தட்ட இதே முறையில் சிக்கன் பிரியாணி செய்வேன் ...நல்லாவே வரும். சாப்பிட்டு போவோரும் லைக் பண்ணிட்டு தான் போறாங்க.

இதுக்கு வேணும்னா சாம்பூர் புரியாணீ ண்ணு  பேரு வச்சிக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கல்பசி ???

இப்படி இருக்கும் இந்திய கடைகளில் கிடைக்கும். நான் இந்தியா சென்றிருந்த போது  கல் பாசி, கடல் பாசி வாங்கிவந்து வைத்திருக்கின்றேன் சால்னா செய்யும்போது தாளிக்கும் எண்ணையில் போட்டு தாளித்தால் வாசனை ம்ம் ..... அந்தமாதிரி இருக்கும்.  

Kalpasi-500x500-800x500.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

 

இப்படி இருக்கும் இந்திய கடைகளில் கிடைக்கும். நான் இந்தியா சென்றிருந்த போது  கல் பாசி, கடல் பாசி வாங்கிவந்து வைத்திருக்கின்றேன் சால்னா செய்யும்போது தாளிக்கும் எண்ணையில் போட்டு தாளித்தால் வாசனை ம்ம் ..... அந்தமாதிரி இருக்கும்.  

 

Kalpasi-500x500-800x500.jpg

ஆங்கிலப் பெயர் தெரியுமா, தமிழ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

ஆங்கிலப் பெயர் தெரியுமா, தமிழ்?

கூகுளில் தேடியபோது Stone moss என வருகின்றது ...... மன்னிக்கவும் நாதமுனி. எனக்கும் மிக சரியாக தெரியவில்லை. யாருக்காவது சரியாக தெரிகின்றத என்று பார்ப்போம்.   

Link to comment
Share on other sites

  • 8 months later...

மட்டன் பிரியாணி

mutton_3112027f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 2 கப

ஆட்டுக் கறி – அரை கில

வெங்காயம் – 3

தக்காளி – 1

இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் – சிறிதளவ

தயிர் - 2 ஸ்பூன

உப்பு – தேவையான அளவ

பிரியாணி மசாலா செய்ய:

காய்ந்த மிளகாய் – 10

தனியா – 2 டீஸ்பூன

பட்டை, ஏலக்காய் – தலா 1 துண்ட

கிராம்பு, ஜாதி பத்திரி – தலா 2

அன்னாசிப் பூ – 2

சீரகம், சோம்பு – அரை டீஸ்பூன

தாளிக்

பட்டை, பிரியாணி இலை, புதினா, மல்லித்தழை - சிறிதளவ

நெய் – 3 குழிக்கரண்ட

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊறவையுங்கள். ஆட்டுக்கறியைச் சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து கழுவி, கறியோடு தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கிவையுங்கள். பிரியாணி மசாலாவுக்குக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளியுங்கள். வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி அதனோடு மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள பிரயாணி மசாலா, தயிர், வேகவைத்த கறியைச் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வதக்குங்கள். அதில் அரிசியைப் போட்டு ஒரு கிளறு கிளறி மூன்றே முக்கால் கப் தண்ணீர் விட்டு, உப்பு சரிபார்த்து குக்கரில் போடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடிவைத்து, ஒரு விசில் வந்ததும் பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கிவையுங்கள். சுடச் சுட பரிமாறினால் மதிய விருந்து களைகட்டும்.

 

http://tamil.thehindu.com/society/recipes/புத்தாண்டு-புது-விருந்து-மட்டன்-பிரியாணி/article9454824.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

On 7.4.2016 at 7:46 PM, Nathamuni said:

ஆங்கிலப் பெயர் தெரியுமா, தமிழ்?

lichen (Patthar Ke Phool)

What is Kalpasi | What is dagad phool

http://cooking.jingalala.org/what-is-kalpasi-what-is-dagad-phool-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.