Jump to content

யாழ் கடலில்.... ஆயிரக் கணக்கில் கரை ஒதுங்கிய, "பென்குயின்" பறவைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

penquins

யாழ் கடலில்.... ஆயிரக் கணக்கில் கரை ஒதுங்கிய, "பென்குயின்" பறவைகள்.

இன்று காலை .... யாழ். பண்ணைக் கடல், அல்லைப்பிட்டி பகுதிகளில்..... பெருமளவில் வித்தியாசமான பறவைகள்  நடமாடித் திரிந்ததை அப் பகுதியில்  வசிக்கும் பலர் கண்டு அதிசயித்துப் போனார்கள். இப்படியான பறவைகள் யாழ்கடலில்..... முன்பு தென்பட்டதில்லை என்று அங்கு பல காலமாக  கடற் தொழில் செய்து அனுபவப் பட்டவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். 

இது என்ன பறவையாக இருக்கும் என்பதை அறிவதற்காக யாழ். பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரை அணுகிய போது... இது, "பென்குயின்" என்றும்,  குளிர் நாட்டில் வசிக்கும் பறவை, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை... இங்கு எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டார். 

பென்குயின்களில்.... பெண் பறவை முட்டை இட்டவுடன்  இரைதேட  ஆழ்கடலுக்கு  செல்லும். அதுவரைக்கும் ஆண்தான் வாரக் கணக்கில் அடைகாக்கும். அப்படிப் புறப்பட்ட பென்குயின்கள்... திசைமாறி யாழ்கடலில் ஒதுங்கியிருக்கலாம் என்று... அங்கிருந்த பலரும் தெரிவித்தார்கள். 

பென்குயின்கள்...  நள்ளிரவில் இருந்து.... கரை  ஒதுங்கும் போது... அங்கு சுற்றித்திரிந்த, கட்டாக்காலி நாய்கள்... சிலவற்றை  பிடித்து உண்டதற்கான அடையாளங்கள் தெரிவது,  அங்குள்ள பலரையும்...சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.

இவற்றை யார் பாதுகாப்பது என்ற கேள்விக்கு.... யாழ். மாவட்ட சுற்றுச் சூழல் அமைச்சர் திரு பொ. ஐங்கரநேசன்,  இதனை அப்படியே... அண்டார்டிகா பகுதியில் கொண்டு போய் விடுவது இயலாத காரியம் என்றும், அவை வந்த மாதிரி.... எம் ஊரிலேயே இருந்து விட்டுப் போகட்டும் என்று தெரிவித்தார். இவற்றை..... தெகிவளை, தமிழ்நாட்டு வண்டலூர்  மிருகக் காட்சிசாலைக்கு கொண்டு செல்ல, அங்குள்ள அதிகாரிகளும்  அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகின்றது. 

யாழ்கடலில் பென்குயின்கள் ஒதுங்கிய செய்தியை கேள்விப்பட்ட... ஆங்கில, சிங்கள, பத்திரிகையாளர்களுடன்... இந்தியாவிலிருந்து  பல கடல் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்களின் படையெடுப்பால்.... பலாலி விமானத் தளம், விமானாங்களால்...... நிரம்பி வழிகின்றது.

மேலதிக செய்திகளை... விரைவில் எதிர் பாருங்கள்.

நன்றி: Naddu kalandavan.Com.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவுடனேயே கலக்கத் தொடங்கியாச்சா  தலீவா?

இண்டைக்கு சித்திரை முட்டாள் தினம் எண்டு கேள்வி..!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tw_tounge_wink:: Naddu kalandavan.Com. நினைச்சன் இந்த இணையத்தின் வேலையாகத்தான் இருக்கும் என்று

Link to comment
Share on other sites

சுப்பர் கற்பனை தமிழ்சிறி  அண்ணா. 

இடையிடையே .... போடாமல் எழுதி இருந்தீங்கள் என்றால் இன்னும் நிறையப்பேர் நம்பி இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் தின வாழ்த்துக்கள். tw_blush:

ஆனால் இதுக்கெல்லாம் தமிழ்சிறீ அண்ணா இல்லைன்னா.. அது வேர்க் அவுட்டே ஆகாது.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை. அது யாழுக்குப் பெருமை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கற்பணை சிறியர்...!  tw_blush:

 தொடர்ந்து அசத்துங்கள்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம் உந்த நியூசை சீரியஸாய் வாசிச்சுப்போட்டு  சிலோனுக்கு ரெலிபோன் அடிச்சும் கேக்குங்கள்.....tw_tounge:

ஏனெண்டால் எழுத்து அப்பிடிtw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தமிழ் சிறி .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

penquins

யாழ் கடலில்.... ஆயிரக் கணக்கில் கரை ஒதுங்கிய, "பென்குயின்" பறவைகள்.

மேலதிக செய்திகளை... விரைவில் எதிர் பாருங்கள்.

நன்றி: Naddu kalandavan.Com.

வாங்க ராசா

இதுக்குத்தான் காத்துக்கிடந்தோம்....

6 hours ago, நந்தன் said:

புங்கையர் கெடுத்துப்போட்டார்.

புங்கையர்

பெண் குயினை கெடுத்துப்போட்டார் என வாசித்துவிட்டேன்..

நீங்க எங்கள வைச்சு காமடி ஒன்றும் செய்யலையே.....???:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

வந்தவுடனேயே கலக்கத் தொடங்கியாச்சா  தலீவா?

இண்டைக்கு சித்திரை முட்டாள் தினம் எண்டு கேள்வி..!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி...!

சித்திரை... 1´ம் திகதி,  முதல் ஏமாந்த ஆள்.... புங்கையூரான்  என்பதில், எனக்கு மட்டற்ற  மகிழ்ச்சி.
இந்தத் தலைப்பை, இதுவரை வாசித்து ஏமாந்த... 300´க்கு  மேற்பட்ட,  அன்பான யாழ்கள வாசகர்களுக்கும், "ஏப்பிரல் பூல்" வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

13 hours ago, புங்கையூரன் said:

வந்தவுடனேயே கலக்கத் தொடங்கியாச்சா  தலீவா?

இண்டைக்கு சித்திரை முட்டாள் தினம் எண்டு கேள்வி..!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி...!

முந்திரிக் கொட்டை, பழத்தையும் கொஞ்சம் சுவைக்க விட்டிருக்கலாமே புங்கையூரனே!! th?id=OIP.M24f2441178ec5fde3e863f173c570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வந்தியதேவன் said:

நம்பிட்டமல்லவா tw_blush:, வாங்க தலைவா

ஆகா....  உண்மையாகவா....  வந்தியத்தேவன்.
நீங்கள் கூறியதை... நான் நம்பவில்லை. 
ஏப்பிரல் பூல்... வாழ்த்துக்கள், வந்தி.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

..இந்தத் தலைப்பை, இதுவரை வாசித்து ஏமாந்த... 300´க்கு  மேற்பட்ட,  அன்பான யாழ்கள வாசகர்களுக்கும், "ஏப்பிரல் பூல்" வாழ்த்துக்கள். 

 

2e2drwh.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகலவன் said:

சுப்பர் கற்பனை தமிழ்சிறி  அண்ணா. 

இடையிடையே .... போடாமல் எழுதி இருந்தீங்கள் என்றால் இன்னும் நிறையப்பேர் நம்பி இருப்பினம்.

நன்றி... பகலவன்.
ஏனோ... எனக்குத் தெரியாமலே... அந்த தொடர் முற்றுப் புள்ளிகள் (........) வந்து விடுகின்றது.
(இந்த, தொடர் முற்றுப் புள்ளி பிழையை.... சில வருடங்களுக்கு முன், சாத்திரியாரும் குறிப்பிட்டது, இப்ப ஞாபகத்துக்கு வருகின்றது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

முட்டாள் தின வாழ்த்துக்கள். tw_blush:

ஆனால் இதுக்கெல்லாம் தமிழ்சிறீ அண்ணா இல்லைன்னா.. அது வேர்க் அவுட்டே ஆகாது.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை. அது யாழுக்குப் பெருமை. tw_blush:

நன்றி... நெடுக்ஸ்.
உங்களிடம் பாராட்டுப் பெறுவது என்பது....
"வசிட்டர் வாயால்... பிரம்மரிசி பட்டம்"  பெறுவது போன்றதை ஒட்டிய மகிழ்ச்சி.
(வசிட்டர் யார்... பிரம்மநிசி யார்  என்று... என்னிடம்  கேட்டுப் போடாதேங்கோ.. ப்ளீஸ்.)tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நல்ல கற்பணை சிறியர்...!  tw_blush:

 தொடர்ந்து அசத்துங்கள்...!!

நன்றி, சுவி அண்ணா.
உங்களுக்கும்.... "ஏப்பரல் பூல்" வாழ்த்துக்கள்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

புங்கையர் கெடுத்துப்போட்டார்.

நந்தன் ஜீ....

இந்த  முட்டாள் தின செய்திகளை, கடந்த ஐந்து வருடமாக செய்து வருகின்றேன்.
எனது அந்தச் செய்திகளுக்கு,  ஆப்பு.... அடிப்பவர்கள், அவுஸ்திரேலியா கங்காருகள் மட்டுமே.
போனமுறை இணைத்த, ஒரு செய்திக்கும்....  சுண்டல் ஜீ  வந்து, மற்றவர்களை... உசாரக்கி விட்டார்.
நான்... இந்தச் செய்தியை இணைக்கும் போது.... ஐரோப்பிய நேரத்தையே, கணக்கு எடுப்பதால் . அவுசில்... அது மத்தியானம்,  கனடாவில் அது நள்ளிரவு.

இதில் பகிடி என்னவென்றால்......  ஆரம்பத்தில் இப்படியான செய்தியை.... இணைத்த ஒரு ஆண்டில், ஒரு மட்டுறுத்தினர் ஒருவரும்... அதற்கு இசைவாக கருத்து எழுதினார். இனிய காலங்கள்... என்றும் மறக்க முடியாதவை.  வாழ்க்கையில்... பகிடியும், இருக்க வேணும்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எங்கடை சனம் உந்த நியூசை சீரியஸாய் வாசிச்சுப்போட்டு  சிலோனுக்கு ரெலிபோன் அடிச்சும் கேக்குங்கள்.....tw_tounge:

ஏனெண்டால் எழுத்து அப்பிடிtw_thumbsup:

எழுத்தின் பாராட்டுக்கு, நன்றி குமாரசாமி  அண்ணா....tw_blush:

 

5 hours ago, தமிழரசு said:

இதுதான் தமிழ் சிறி .....! 

நன்றி, தமிழரசு.

4 hours ago, விசுகு said:

வாங்க ராசா

இதுக்குத்தான் காத்துக்கிடந்தோம்....

விசுகு, நீங்கள் எம் நெஞ்சை... நிரப்பி விட்டீர்கள்.

2 hours ago, Paanch said:

முந்திரிக் கொட்டை, பழத்தையும் கொஞ்சம் சுவைக்க விட்டிருக்கலாமே புங்கையூரனே!! th?id=OIP.M24f2441178ec5fde3e863f173c570

யாழ். இந்துவில் கல்வி பயின்ற அனைவருக்கும்... முந்திரிக் கொட்டை தனம் இருப்பது, இயல்பு தானே.. பாஞ்ச் அண்ணை.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

2e2drwh.jpg

CommentPhotos.com_1406741563.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அட்ரா சக்கை...

அம்மன் கோயில், புக்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.